தலைமை நிர்வாக அதிகாரியான
ஒரு பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம்
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை அமர்வுக்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கூட்டம் நடத்தினார். நாடு எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரதமர் ஓர் எளிமையான விளக்கம் வைத்திருந்தார்: கூட்டணி அரசியல் நிர்ப்பந்தங்கள். ஓர் எளிமையான ஆலோசனையும் வைத்திருந்தார்: ஊடகங்கள் ஊழல்கள் பற்றி, பிற பிரச்சனைகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தக் கூடாது; ஏனென்றால் அது மக்களின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது; நாட்டின் சர்வதேச அளவிலான தோற்றத்தை பாதிக்கிறது. பொருளாதார அறிஞரான பிரதமர், ஸ்பெக்ட்ரம் கொள்ளையை உணவுக்கு, எரிபொருளுக்கு, உரத்துக்கு வழங்கப்படும் மான்யத்துடன் ஒப்பிட்டு மொத்த 2 ஜி அலைக்கற்றை பிரச்சனையையும் புறந்தள்ளினார். தன் அரசாங்கத்துக்கு நிறைவுபெறாத கடமைகள் இன்னும் நிறைய இருப்பதால் அது தனது பதவிக்காலம் முழுதும் இருக்கும் என்றும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மறந்துவிடாமல் நினைவுபடுத்தினார்.
பசித்தவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியின் கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதாகச் சொல்லி மே 2009ல் அய்முகூ மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அய்முகூவின் இரண்டாவது அத்தியாயத்தில் உணவுப் பாதுகாப்பும், உள்ளடக்கிய வளர்ச்சியும் கொடுமையான நகைச்சுவைகளாகவே உள்ளன; விலைஉயர்வும் மெகா ஊழல்களும் நாட்டை விடாமல் தாக்குகின்றன. வாக்காளர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று அரசாங்கத்துக்குத் தெரியும்; எனவேதான் ஊழல்கள் மீது கவனம் செலுத்தி மக்களின் ‘தன்னம்பிக்கையை’ பலவீனப்படுத்த வேண்டாம் என்று ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறது. ஊடகங்களும் இந்தப் பந்தை ஆடத் தயாராக உள்ளன என்பதையே பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பும் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் ரூ.240 கோடி மதிப்பிலான இந்திய செல்வம் முறைகேடாக நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி கேள்வி ஏதும் கேட்கப்படவில்லை. ஊழல் கறை படிந்த ஓர் அதிகாரி மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட பிரச்சனை பற்றியும் பிரதமரிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை.
ஸ்பெக்ட்ரம் கொள்ளையால் நாட்டின் கருவூலத்துக்கு ஏற்பட்ட இழப்பை வறிய மக்களுக்கான மான்யத்துடன் ஒப்பிடும் துணிச்சல் பிரதமருக்கு இருந்தது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் கொள்ளை பெருந்தொழில் குழுமங்களின் பணப்பெட்டிகளை நிரப்பியது; மான்யங்கள் சந்தையின் தாக்குதலைத் தாங்க வறிய மக்களுக்கு தரப்படுவது. இந்த இரண்டு விஷயங்களிலும் பயனாளிகளுக்கிடையேயுள்ள இந்தமுக்கியமான வேறுபாட்டை விட்டுவிட்டால் கூட, ஒதுக்கீடு செய்யப்பட்ட மான்யத்தை, ஒரு முக்கியமான செல்வாதாரத்தை ஏலத்துக்கு விடாததால் ஏற்பட்ட இழப்புடன் ஒரு பிரதமர் எப்படி ஒப்பிடலாம்? ஏல முறையில் அல்லாமல் முதலில் வருபவருக்கு முதலில் தரப்படும் என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதுதான் அரசாங்கத்தின் கொள்கை என்றால் அரசாங்கம் ஏன் அதை அறிவிக்கவில்லை? பின் 3 ஜி அலைக்கற்றை விஷயத்தில் கிடைத்த வருவாய்க்கு தானே காரணம் என்று பெருமை பேசும் அரசாங்கம் ஏன் ஏல முறையை கையாண்டது? தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் கிடைக்க வேண்டும் என்று தொலைதொடர்பு அமைச்சர் ராசா கருதினால் அதை ஏல முறையில் தரவேண்டும் என்று ஏன் 2007 கடிதத்தில் மன்மோகன் சிங் எழுதினார்?
அல்அஜிரா செய்தித் தொடர்பாளர் அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்துவரும் மாற்றங்கள் மீது பிரதமரின் கவனத்தைத் திருப்பி, அதுபோன்ற வெகுமக்கள் எழுச்சிகள் இந்தியாவிலும் ஏற்படுமா என்று கேட்டார். எகிப்து மக்கள் விரும்பினால் ஜனநாயகம் நோக்கிச் செல்லலாம் என்று, அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை ஆர்வமின்றி தெரிவிக்கும் முன்பு, தனது அரசியலுக்கு உண்மையானவராக, அரபு நாடுகளில் நடப்பவை பற்றி தனது கவலையை முதலில் தெரிவித்தார். இந்தியா, ‘மக்கள் ஆட்சிகளை மாற்றும் உரிமை பெற்ற ஒரு செயல்படும் ஜனநாயகம்’ என்பதால், எகிப்து, இந்தியாவில் நடக்கும் ஆபத்து ஏதும் இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அந்த உரிமையை அவரது அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்று அவர் உறுதியாக இருந்ததுபோலவும் தெரிந்தது. ‘நான் எடுக்கும் முடிவுகளில் 10ல் 7 சரியானதாகவே இருக்கிறது. ஒரு சாதாரணமான பெருந்தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் வேலை சிறப்பாக செய்யப்பட்டது என்றே சொல்வார்கள்’ என்றார் சிங்.
இதுதான் ஜனநாயகம் பற்றியும் தனது பாத்திரம் பற்றியும் சிங்கின் சாரமான பார்வை: அவர் ஒரு ‘சாதாரண பெருந்தொழில் நிறுவனத்தின்’ தலைமை நிர்வாக அதிகாரி. மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளிகளும் பெருந்தொழில் நிறுவனங்களின் கண்ணாடி வழியாக மட்டுமே அரசியலைப் பார்க்க முடியும். அதன்படி அரசாங்கம் ஒரு சேவையை வாங்கும் சக்தி படைத்தவர்க்கு சேவை அளிப்பவர் மட்டுமே. ஓர் ‘இயங்காத பங்குதாரராகக்’ கூட இல்லாமல், ஒரு குடிமகன் பற்றிய கருத்து கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர் என்று சுருக்கப்பட்டுவிட்டது. கட்டணம் செலுத்த முடியாதவர்கள் ஒரு பொருட்டே இல்லை! ஆனால் இந்தியா ஒரு ‘சாதாரண பெருந்தொழில் நிறுவனம்’ அல்ல. அது நூறு கோடி மக்கள் கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு நாளும் ரூ.240 கோடி முறைகேடாக அந்நிய வங்கிகளின் பாதுகாப்பான கரைகளுக்கு இடம்பெயரும்போது, அதன் 77% பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவான செலவில் வாழ்பவர்கள். மன்மோகன் சிங் ஒரு நெருக்கடி மேலாளர். அவர் நெருக்கடியை சமாளிக்கும் வழி நெருக்கடியை ஆழப்படுத்துகிறது. நாட்டின் கடன் நெருக்கடியை தீர்ப்பதாகச் சொல்லி 1991ல் அவர் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்கினார். இருபது வருடங்கள் கழித்து இப்போது ஒவ்வோர் அரங்கிலும் நெருக்கடி உள்ளது. ஆனால் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளிகளும் தங்கள் தொழிலை சுறுசுறுப்பாக செய்து கொண்டுள்ளனர்.
மன்மோகன் சிங் முன்வைத்துள்ள சவாலை மக்கள் எதிர்கொண்டாக வேண்டும். வெறுமனே அரசாங்கத்தை மாற்றுவது என்பதற்கு அப்பால், பேரழிவுமிக்க கொள்கைகளில் மாற்றம் காண இந்திய மக்கள் எழ வேண்டும். பொருளாதார நெருக்கடி, பெரும்பண ஊழல்கள், ஜனநாயகத்தின் மீதான அரசு - பெருந்தொழில் நிறுவன தாக்குதல் ஆகியவற்றை அடையாள விளைபொருட்களாகக் கொண்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற மொத்த கொள்கை நிறுவனமும் தகர்க்கப்பட வேண்டும். மன்மோகன் சிங் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவருடைய சாதாரண பெருந்தொழில் நிறுவனம் தொழிலில் இருந்து விரட்டப்பட வேண்டும். அதற்கு இந்தியாவில் எகிப்தின் மறுஉருவம் தேவை என்றால், இந்திய மக்கள் அதற்காக தயாராக வேண்டும்; உண்மையான மாற்றத்தை முன்னகர்த்த வேண்டும்.
ஒரு பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம்
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை அமர்வுக்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கூட்டம் நடத்தினார். நாடு எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரதமர் ஓர் எளிமையான விளக்கம் வைத்திருந்தார்: கூட்டணி அரசியல் நிர்ப்பந்தங்கள். ஓர் எளிமையான ஆலோசனையும் வைத்திருந்தார்: ஊடகங்கள் ஊழல்கள் பற்றி, பிற பிரச்சனைகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தக் கூடாது; ஏனென்றால் அது மக்களின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது; நாட்டின் சர்வதேச அளவிலான தோற்றத்தை பாதிக்கிறது. பொருளாதார அறிஞரான பிரதமர், ஸ்பெக்ட்ரம் கொள்ளையை உணவுக்கு, எரிபொருளுக்கு, உரத்துக்கு வழங்கப்படும் மான்யத்துடன் ஒப்பிட்டு மொத்த 2 ஜி அலைக்கற்றை பிரச்சனையையும் புறந்தள்ளினார். தன் அரசாங்கத்துக்கு நிறைவுபெறாத கடமைகள் இன்னும் நிறைய இருப்பதால் அது தனது பதவிக்காலம் முழுதும் இருக்கும் என்றும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மறந்துவிடாமல் நினைவுபடுத்தினார்.
பசித்தவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியின் கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதாகச் சொல்லி மே 2009ல் அய்முகூ மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அய்முகூவின் இரண்டாவது அத்தியாயத்தில் உணவுப் பாதுகாப்பும், உள்ளடக்கிய வளர்ச்சியும் கொடுமையான நகைச்சுவைகளாகவே உள்ளன; விலைஉயர்வும் மெகா ஊழல்களும் நாட்டை விடாமல் தாக்குகின்றன. வாக்காளர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று அரசாங்கத்துக்குத் தெரியும்; எனவேதான் ஊழல்கள் மீது கவனம் செலுத்தி மக்களின் ‘தன்னம்பிக்கையை’ பலவீனப்படுத்த வேண்டாம் என்று ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறது. ஊடகங்களும் இந்தப் பந்தை ஆடத் தயாராக உள்ளன என்பதையே பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பும் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் ரூ.240 கோடி மதிப்பிலான இந்திய செல்வம் முறைகேடாக நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி கேள்வி ஏதும் கேட்கப்படவில்லை. ஊழல் கறை படிந்த ஓர் அதிகாரி மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட பிரச்சனை பற்றியும் பிரதமரிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை.
ஸ்பெக்ட்ரம் கொள்ளையால் நாட்டின் கருவூலத்துக்கு ஏற்பட்ட இழப்பை வறிய மக்களுக்கான மான்யத்துடன் ஒப்பிடும் துணிச்சல் பிரதமருக்கு இருந்தது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் கொள்ளை பெருந்தொழில் குழுமங்களின் பணப்பெட்டிகளை நிரப்பியது; மான்யங்கள் சந்தையின் தாக்குதலைத் தாங்க வறிய மக்களுக்கு தரப்படுவது. இந்த இரண்டு விஷயங்களிலும் பயனாளிகளுக்கிடையேயுள்ள இந்தமுக்கியமான வேறுபாட்டை விட்டுவிட்டால் கூட, ஒதுக்கீடு செய்யப்பட்ட மான்யத்தை, ஒரு முக்கியமான செல்வாதாரத்தை ஏலத்துக்கு விடாததால் ஏற்பட்ட இழப்புடன் ஒரு பிரதமர் எப்படி ஒப்பிடலாம்? ஏல முறையில் அல்லாமல் முதலில் வருபவருக்கு முதலில் தரப்படும் என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதுதான் அரசாங்கத்தின் கொள்கை என்றால் அரசாங்கம் ஏன் அதை அறிவிக்கவில்லை? பின் 3 ஜி அலைக்கற்றை விஷயத்தில் கிடைத்த வருவாய்க்கு தானே காரணம் என்று பெருமை பேசும் அரசாங்கம் ஏன் ஏல முறையை கையாண்டது? தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் கிடைக்க வேண்டும் என்று தொலைதொடர்பு அமைச்சர் ராசா கருதினால் அதை ஏல முறையில் தரவேண்டும் என்று ஏன் 2007 கடிதத்தில் மன்மோகன் சிங் எழுதினார்?
அல்அஜிரா செய்தித் தொடர்பாளர் அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்துவரும் மாற்றங்கள் மீது பிரதமரின் கவனத்தைத் திருப்பி, அதுபோன்ற வெகுமக்கள் எழுச்சிகள் இந்தியாவிலும் ஏற்படுமா என்று கேட்டார். எகிப்து மக்கள் விரும்பினால் ஜனநாயகம் நோக்கிச் செல்லலாம் என்று, அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை ஆர்வமின்றி தெரிவிக்கும் முன்பு, தனது அரசியலுக்கு உண்மையானவராக, அரபு நாடுகளில் நடப்பவை பற்றி தனது கவலையை முதலில் தெரிவித்தார். இந்தியா, ‘மக்கள் ஆட்சிகளை மாற்றும் உரிமை பெற்ற ஒரு செயல்படும் ஜனநாயகம்’ என்பதால், எகிப்து, இந்தியாவில் நடக்கும் ஆபத்து ஏதும் இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அந்த உரிமையை அவரது அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்று அவர் உறுதியாக இருந்ததுபோலவும் தெரிந்தது. ‘நான் எடுக்கும் முடிவுகளில் 10ல் 7 சரியானதாகவே இருக்கிறது. ஒரு சாதாரணமான பெருந்தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் வேலை சிறப்பாக செய்யப்பட்டது என்றே சொல்வார்கள்’ என்றார் சிங்.
இதுதான் ஜனநாயகம் பற்றியும் தனது பாத்திரம் பற்றியும் சிங்கின் சாரமான பார்வை: அவர் ஒரு ‘சாதாரண பெருந்தொழில் நிறுவனத்தின்’ தலைமை நிர்வாக அதிகாரி. மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளிகளும் பெருந்தொழில் நிறுவனங்களின் கண்ணாடி வழியாக மட்டுமே அரசியலைப் பார்க்க முடியும். அதன்படி அரசாங்கம் ஒரு சேவையை வாங்கும் சக்தி படைத்தவர்க்கு சேவை அளிப்பவர் மட்டுமே. ஓர் ‘இயங்காத பங்குதாரராகக்’ கூட இல்லாமல், ஒரு குடிமகன் பற்றிய கருத்து கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர் என்று சுருக்கப்பட்டுவிட்டது. கட்டணம் செலுத்த முடியாதவர்கள் ஒரு பொருட்டே இல்லை! ஆனால் இந்தியா ஒரு ‘சாதாரண பெருந்தொழில் நிறுவனம்’ அல்ல. அது நூறு கோடி மக்கள் கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு நாளும் ரூ.240 கோடி முறைகேடாக அந்நிய வங்கிகளின் பாதுகாப்பான கரைகளுக்கு இடம்பெயரும்போது, அதன் 77% பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவான செலவில் வாழ்பவர்கள். மன்மோகன் சிங் ஒரு நெருக்கடி மேலாளர். அவர் நெருக்கடியை சமாளிக்கும் வழி நெருக்கடியை ஆழப்படுத்துகிறது. நாட்டின் கடன் நெருக்கடியை தீர்ப்பதாகச் சொல்லி 1991ல் அவர் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்கினார். இருபது வருடங்கள் கழித்து இப்போது ஒவ்வோர் அரங்கிலும் நெருக்கடி உள்ளது. ஆனால் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளிகளும் தங்கள் தொழிலை சுறுசுறுப்பாக செய்து கொண்டுள்ளனர்.
மன்மோகன் சிங் முன்வைத்துள்ள சவாலை மக்கள் எதிர்கொண்டாக வேண்டும். வெறுமனே அரசாங்கத்தை மாற்றுவது என்பதற்கு அப்பால், பேரழிவுமிக்க கொள்கைகளில் மாற்றம் காண இந்திய மக்கள் எழ வேண்டும். பொருளாதார நெருக்கடி, பெரும்பண ஊழல்கள், ஜனநாயகத்தின் மீதான அரசு - பெருந்தொழில் நிறுவன தாக்குதல் ஆகியவற்றை அடையாள விளைபொருட்களாகக் கொண்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற மொத்த கொள்கை நிறுவனமும் தகர்க்கப்பட வேண்டும். மன்மோகன் சிங் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவருடைய சாதாரண பெருந்தொழில் நிறுவனம் தொழிலில் இருந்து விரட்டப்பட வேண்டும். அதற்கு இந்தியாவில் எகிப்தின் மறுஉருவம் தேவை என்றால், இந்திய மக்கள் அதற்காக தயாராக வேண்டும்; உண்மையான மாற்றத்தை முன்னகர்த்த வேண்டும்.