சங்க முன்னோடிகளுக்கு கம்பல்சரி ரெஸ்ட், 21 நாட்கள் சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட தண்டனையை அமல்படுத்துகிற அய்க்கிய அமெரிக்க நிறுவனமான சான்மினா தொழிலாளர்கள், இந்த தண்டனை உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 21 முதல் நடத்த திட்டமிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு திரட்ட திருபெரும்புதூரில் நவம்பர் 17 அன்று நடத்திய கூட்டம்.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தோழர் சீதா எழுப்பியுள்ள புகாரில் நீதித்துறை விரைவாக விசாரணை நடத்தி குற்றம் சுமத்தப்பட்ட வழக்கறிஞர் ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகம் நவம்பர் 24 அன்று கூடுவாஞ்சேரியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி புதுக்கோட்டை மாவட்ட புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள், மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மாநாட்டுக்கான நிதி வசூல் செய்ய அவர்கள் சீருடைகளுடன் சென்றது மக்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.
குமரி மாவட்டம் ரீத்தாபுரத்தில் உள்ள பன்றிப் பண்ணையை அகற்றக் கோரி நவம்பர் 24 அன்று அனைத்து கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இககமாலெ தோழர்கள் கலந்து கொண்டனர்.