காதல்
ஈ.வெ.ராமசாமி
(பெரியார்
மண்ணில் பெண்கள் ஆணாதிக்க கொடுமைகளுக்கு
உட்படுத்தப்படுவது புதிதாக நடக்கவில்லை.
ஆனால் சமீபத்திய ஆணாதிக்க தாக்கு தல்கள் நவீன உலகில் பிறந்து வளர்ந்து படித்த, நவீன தொழில்நுட்பத்தில் உழலுகிற இளைஞர்களால் நடத்தப்படுகின்றன. கொலையே செய்து விடுகிறார்கள். அவர்கள் இந்தத் தாக்குதல்களுக்கு காதல் என்று பெயர் சொல்கிறார்கள். தமிழ்நாட்டை வன்முறைக்கு வளம் நிறைந்த பூமியாக்கிவிட்ட, ஜனநாயக விழுமியங்களின் வெளியை அகற்றிவிட்ட ஆட்சியாளர்களை தப்பவிட்டுவிட்டு, திரைப்படங்களின் தாக்கம், வளர்ப்பு என்று நுனிப்புல் விவாதம் நடத்தப்படுகிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள வலதுசாரி பிற்போக்கு சக்திகள், இருண்மை கருத்துக்களை முன்னகர்த்தும் சூழலில், தமிழ்நாட்டில் பெரியாருடன் சேர்ந்து அவரது கருத்துக்களையும் குழிதோண்டி புதைத்து விட்டவர்கள் ஆட்சியில் இருக்கும் சூழலில், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் முன்னெப்போதையும் விட இப்போது பெரியார் அவசியமாகிறார். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் காதல் பற்றி பெரியார் எழுதியுள்ள கருத்துக்கள் இங்கு வெளியிடப்படுகின்றன).
ஆனால் சமீபத்திய ஆணாதிக்க தாக்கு தல்கள் நவீன உலகில் பிறந்து வளர்ந்து படித்த, நவீன தொழில்நுட்பத்தில் உழலுகிற இளைஞர்களால் நடத்தப்படுகின்றன. கொலையே செய்து விடுகிறார்கள். அவர்கள் இந்தத் தாக்குதல்களுக்கு காதல் என்று பெயர் சொல்கிறார்கள். தமிழ்நாட்டை வன்முறைக்கு வளம் நிறைந்த பூமியாக்கிவிட்ட, ஜனநாயக விழுமியங்களின் வெளியை அகற்றிவிட்ட ஆட்சியாளர்களை தப்பவிட்டுவிட்டு, திரைப்படங்களின் தாக்கம், வளர்ப்பு என்று நுனிப்புல் விவாதம் நடத்தப்படுகிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள வலதுசாரி பிற்போக்கு சக்திகள், இருண்மை கருத்துக்களை முன்னகர்த்தும் சூழலில், தமிழ்நாட்டில் பெரியாருடன் சேர்ந்து அவரது கருத்துக்களையும் குழிதோண்டி புதைத்து விட்டவர்கள் ஆட்சியில் இருக்கும் சூழலில், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் முன்னெப்போதையும் விட இப்போது பெரியார் அவசியமாகிறார். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் காதல் பற்றி பெரியார் எழுதியுள்ள கருத்துக்கள் இங்கு வெளியிடப்படுகின்றன).
அன்பு,
ஆசை, நட்பு என்பனவற்றின் பொருளைத்
தவிர, வேறு பொருளைக் கொண்டதென்று
சொல்லும்படியான காதல் என்னும் ஒரு
தனித்தன்மை ஆண் - பெண் சம்பந்தத்தில்
இல்லையென்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி,
அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று
தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு
வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து
காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தி யில்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே ஆகும்.
ஆனால்,
காதலென்றாலென்ன? அதற்கு உள்ள சக்தி
என்ன? அது எப்படி உண்டாகிறது?
அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்தெந்த சமயத்தில்
உண்டாவது? அது எவ்வப்போது மறைகின்றது?
அப்படி மறைந்து போய்விடுவதற்குக் காரணம்
என்ன? என்பதைப் போன்ற விஷயங்களைக் கவனித்து
ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதலென்பதன் சத்தற்ற தன்மை, உண்மையற்ற
தன்மை, நிச்சயமற்ற தன்மை, அதை (காதலை)
பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனம் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால்,
அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதலென்கின்ற
வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில்
பிரயோ கிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அதெப்படி
பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கென்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து
ஒரு முடிவு கட்டிக் கொள்ள
வேண்டியது அவசியமாகும்.
இன்றைய
தினம் காதலைப்பற்றிப் பேசுகிறவர்கள், ‘காதலென்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல’ என்றும், ‘அன்பு, நேசம், ஆசை,
காமம், மோகம் என்பவை வேறு,
காதல் வேறு’ என்றும், ‘அது
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல
முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக
ஏற்படுவதாகும்’ என்றும், அதுவும் ‘இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்’ என்றும், ‘அக் காதலுக்கு இணையானது
உலகத்தில் வேறு ஒன்றுமில்லை’ என்றும்,
‘அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு
பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு
ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்’ என்றும்,
அந்தப்படி ‘ஒருவரிடம் ஒருவருக்குமாக - இருவருக்கும் ஒரு காலத்தில் காதல்
ஏற்பட்டுவிட்டால் பிறகு எந்தக் காரணங்கொண்டும்
எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே
மாறாது’ என்றும், ‘பிறகு வேறொருவரிடம் காதல்
ஏற்பட்டுவிட்டால், அது காதலாயிருக்க முடியாது;
அதை விபச்சாரம் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய, அது ஒருக்காலும்
காதலாகாது’ என்றும், மற்றும் ‘ஒரு இடத்தில் உண்மைக்காதல்
ஏற்பட்டுவிட்டால், பிறகு யாரிடமும் காமமோ
விரகமோ மோகமோ ஏற்படாது’ என்றும்
சொல்லப்படுகின்றன.
மேலும்,
இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு
புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு
மனைவி ஒரே ஒரு புருஷனுடனும்
மாத்திரமிருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.
இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி
சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள்
தன்மையின் அனுபவ ஞானமுமில்லாதவர்களென்றோ, அல்லது இயற்கைத்
தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மையறிந்தும்
வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள்
என்றோதான் கருத வேண்டியிருக்கின்றது.
அன்றியும்,
இம்மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும்
மற்றொரு விஷயமென்னவென்றால், இன்று பெரும்பான்மை மக்கள்
‘காதலின் - காதலியாக’ வாழ்வதன் தன்மையெல்லாம் வேறு ஒருவர் ஜோடி
பார்த்துச் சேர்ந்ததும், பிள்ளைகளைப் பெறுவதற்கென்றும், வீட்டு வாழ்க்கையின் உதவிக்கென்றும்,
இயற்கை உணர்ச்சிக்கும், பரிகாரத்திற்கென்றும் சேர்க்கப்படுகின்ற ஜோடிகளாகத்தான் இருந்து வருகிறதே தவிர,
தாங்களாகத் தங்கள் காதல் மிகுதியால்,
காதல் தெய்வத்தால் கூட்டுவித்ததைக் காணுவது அருமையாக இருக்கிறது.
இது எப்படி இருந்தாலும் எந்தக்
காரணத்திற்கு ஆனாலும், ஒரு ஆணின் அல்லது
ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல்,
காமம், நட்பு, நேசம், மோகனம்,
விரகம் முதலியவைப் பற்றி மற்றொரு பெண்ணோ,
ஆணோ மற்றும் மூன்றாமவர்கள் யாராயினும்
பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே
கிடையாது என்றும் சொல்லுகிறோம்.
இன்னும்
சிறிது வெளிப்படையாய், தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும்,
சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவையெல்லாம்
ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான
ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில்
பலகாரம் வாங்குவது போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும்,
மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசியமாய்
ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுந்தான் சொல்ல வேண்டும்.
இப்படிச்
சொல்லப்படுவது கூட இவ்வளவு பெருமையையும்,
அணியையும், அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன்
குறிப்பிட்டபடி, அதென்ன? அதெப்படி உண்டாகி
மறைகின்றது? என்பதை யோசித்துப் பார்த்தால்
யாவருக்கும் சரியென்று விளங்கி விடும். காதல்
என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது
ஒருபுறமிருந்தாலும், தமிழ்மொழியாகவே வைத்துக் கொண்டாலும் அதற்கு ஆண், பெண்
கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல்,
நட்பு, நேசம், விரசம் என்பவைகளைத்
தவிர, வேறு பொருள்கள் எங்கும்
எதிலும் காணப்படவில்லை.
அன்றியும்,
அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருள்களைத் தவிர வடமொழி மூலத்தை
அனுசரித்தால் காதலென்பதற்குக் கொலை, கொல்லல், வெட்டுதல்,
முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின் றன. மற்றபடி, தனித்
தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் - பெண் சேர்க்கை,
கூட்டு முதலாகியவை சம்பந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு,
நேசம் என்பவைகளுக்கும் தவிர, வேறு தமிழ்
மொழியிலும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதலென்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துகளையேதான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு
மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர, காதலுக்கென்று
வேறு பொருள் காணப்படவில்லை.
ஆதலால்,
இவைகளன்றிக் காதலென்பதற்கு வேறு தனி அர்த்தம்
சொல்லுகிறவர்கள், அதை எதிலிருந்து, எந்தப்
பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள்ளென்பது நமக்கு விளங்கவில்லை.
நிற்க,
இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ
எப்படியுண்டாகிறது? இது தானாகவே உண்டாகின்றதா,
அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு
சமயம் தானாவே உண்டாவதென்றால், எந்தச்
சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத்தின் மீது
என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ, ஆண்
பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும்,
அல்லது தான் மூன்றாவது மனிதர்களால்
கேள்விப்படுவதாலும், உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க
நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே
தவிர, இவைகளல்லாமல் வேறு வழியாகவென்று சுலபத்தில்
சொல்லிவிட முடியாது.
இந்தப்படியும்
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணிடத்தில் காதலேற்பட்டு,
அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதலேற்படாமல்
போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு
ஆணிடத்தில் காதலேற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப்
பெண்ணிடம் காதலேற்படாமலும்
போகலாம். ஆகவே, எப்படி ஒரு
மனிதன் ஒரு வஸ்துவைப்
பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த
மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கிருக்கலாம்
- தனக்கு வேண்டும் என்பதற்காக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கின்றானோ அது
போலவேதான் இந்தக் காதலென்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே
தவிர, வேறு எந்த வழியிலாவது
ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.
எப்படிப்பட்ட
காதலும் ஒரு சுய லட்சியத்தை
அதாவது தனதிஷ்டத்தை திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும்,
காதலர்களென்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது,
அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ
அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ,
கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ,
சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக்
கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப்
பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்ற
ஏதோவொரு திருப்தியையோ அல்லது தனக்குத் தேவையான
ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும்,
ஆணிடமும் காதல் கொள்ள முடியும்.
அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன்
காதல் கொள்ளும்போது அவன் அறிந்தது உண்மையாகவுமிருக்கலாம்
- அல்லது அங்கிருப்பதாக அவன் நினைத்துக் காதல்
கொண்டிருந்தாலுமிருக்கலாம்
- அல்லது வேஷமாத்திரத்தால் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலுமிருக்கலாம்.
உதாரணமாக
ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய்
உலவுவதை ஒரு ஆண் பார்க்கிறான்.
பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கிறாள்.
இரண்டு பேருக்கும் இயற்கையாய் கவனிப்புண்டாகிவிட்டது. பிறகு நீ யார்
என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்
கள். பெண் தன்னை ஒரு
அரசன் குமாரத்தி என்று சொல்லுகிறாள். உடனே
ஆண் காதல் கொண்டு விடுகிறான்.
இவனை யாரென்று கேட்கிறாள். இவன் தானொரு சேவகனுடைய
மகனென்று சொல்கிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு
வெறுப்பேற்பட்டுப் போய் விடுகிறது. இது
சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு
ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க,
அவன் தன்னைச் சேவகன் மகனென்று
சொல்லாமல், தானும் ஒரு பக்கத்துத்
தேசத்து ராஜகுமாரùன்று சொல்லி விட்டால்
அவளுக்கு அதிகக் காதலேற்பட்டு, ‘மறு
ஜென்மத்திலும்’ இவனைவிட்டுப் பிரியக் கூடாதென்று கருதிவிடுகிறாள்.
4 நாள் பொறுத்த பின்பு, தான்
காதல் கொண்டவன் அரச குமாரனல்ல என்றும்,
சேவகன் மகனென்றும் அறிந்தாளென்றும் வைத்துக் கொள்ளு வோம். இந்த
நிலையில் அந்தக் காதல் அப்ப
டியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்
டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால்
காதலேற்படும் தன்மையும், மறுக்குந்தன்மையும் விளங்கும். இந்தப்படியே ஒரு பெண்ணை நோயில்லாதவளென்று
கருதி ஒருவன் காதல் கொண்ட
பின் நோயுடையவள் என்று தெரிந்து, அல்லது
ஒரு தாசி என்று தெரிந்து
அல்லது தன்னை மோசம் செய்து
தன்னிடம் உள்ள பொருளை அபகரிப்பவள்
என்று தெரிந்து, இது போலவே இன்னமும்தான்
முதலில் நினைத் ததற்கு அல்லது
தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாகவோ, தான் எதிர்பார்க்காத கெட்ட
காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டதாய்த் தெரிந்துவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா?
அதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது மாற்றமடையாமல் இருக்க
முடியுமா? என்பவைகளை யோசித்தால், ‘உண்மைக் காதலின் நிலையற்ற
தன்மை’ விளங்காமல் போகாது.
நிற்க,
உண்மைக் காதல் என்பது ஒருவரை
ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது
பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா?
அல்லது சிறிது நாள் பழகிய
பின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்
கூடச் சரியாய்த் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே
ஏற்படும் காதல் நல்லதா? அல்லது
சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து,
திருப்தியடைந்த காதல் நல்லதா? என்பவைகளைக்
கவனிக்கும்போது, சரீர மாறுபாட்டாலும் பொருத்தமின்மையாலும்
ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற
முடியாது என்பதற்கு என்ன விடை பகர
முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன்
ஒருத்தியுடன் காதல் கொண்டுவிட்டால், ஒருத்தி
தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம்
காதல் கொண்டுவிட்டதாகக் கருத நேர்ந்தால் அது
பொய்யாகவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படியாய்
விட்டால், அப்போது கூட காதல்
மாறாமல் இருந்தால்தான் உண்மைக் காதலா? அல்லது
தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி
அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான
காதலா என்பதற்கு என்ன மறுமொழி பகர
முடியும்?
காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப்பான்மை, பக்குவம்,
லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம்.
பிறகு, கொஞ்ச காலம் கழிந்த
பின்பு இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லட்சியம் மாறலாம்.
இந்தச் சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சதா அதிருப்தியில் - துன்பத்தில்
அழுந்த வேண்டியதுதானா என்று பார்த்தால் அப்போதும்
காதலுக்கு வலுவில்லாததையும், அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும்
ஞானிகளாய் - துறவிகளாய்விட்டவர்களானால், இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரையொருவர்
பிரிவதும், வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமாகுமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோதமில்லையானால்
ஒருவர் ஞானியாகித் துறவியாகிவிட்டதால், மற்றவரை
விட்டுப் பிரிந்து செல்வது காதலுக்கு விரோதமாகுமா?
என்பதும் கவனித்தால், காதலின் யோக்கியதை விளங்காமல்
போகாது. பொதுவாக மனித ஜீவன்
ஒன்றைப் பார்த்து, நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றிடம் பலவற்றினிடம் அன்பு வைப்பதும், நேசம்
காட்டுவதும் இயற்கையேயாகும்.
அதுபோலவே,
மனிதனுக்கு தானாகவே எதிலும் விரக்தி
வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையாகும். பலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும், உறுதி
ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக்
கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும்,
அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை
செய்துகொள்ள முயல்வதும் இயற்கையல்லவா?
உதாரணமாக
ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு
தாசியிடம் காதல் கொண்டு சொத்துகளையெல்லாம்
கொடுத்து விடுவதைப் பார்க்கிறோம். அந்த வாலிபனுக்கு அந்தத்
தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது
காமம் என்பதா? அறிவீனத்தால் அடைந்த
ஏமாற்றம் என்பதா? அதே தாசி
சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல்,
இந்த வாலிப னிடமே நிரந்தரமாயிருந்து
காலத்தை கழிக்கலாம் என்று கருதி விடுவதைப்
பார்க்கின்றோம். ஆகவே, இந்தத் தாசி
கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு
ஒரு சவுகரியமான வழியா? இதை வாலிபன்
அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே
வந்தால் ஒத்த காதலாகிவிடுமா? இப்படியெல்லாம்
பார்த்தால் காதல் என்பது ஆசை,
காமம், நேசம், மோகம், நட்பு,
அறிவீனம், அனுபவமின்மை, ஏமாற்றம் என்பவைகளைவிடச் சிறிது கூட சிறந்தது
அல்ல என்பது விளங்கிவிடும். அதற்கு
ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து, ஆண் - பெண்களுக்குள் புகுத்திவிட்டதால்,
ஆண், பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள்
என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்று கருதி - எப்படிப் பக்திமானென்றால்,
இப்படி இப்படி யெல்லாமிருப்பான் என்று
சொல்லப்பட்டதால், அநேகர் தங்களைப் பக்திமான்கள்
என்று பிறர் சொல்ல வேண்டுமென்று
கருதிச் சாம்பல் பூச்சுப் போடுவதும்,
சதா கோயிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடிக் கண்ணீர் விட்டு
அழுவ தும், வாயில் சிவ
சிவ, ராம ராம என்று
கூறிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து, பக்திமான்களாகக் காட்டிக்
கொள்ளுகிறார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவதுபோல் வேஷம் போட்டுக் கண்களை
மூடிக் கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று
சொன்னால், அந்தக் குழந்தை தன்னைத்
தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதி,
காலைச் சிறிது ஆட்டுமே அதுபோலும்
எப்படிப் பெண்கள் தங்கள் கால்
விரல்களைப் பார்த்து நடப்பதுதான் கற்பு என்றால், பெண்கள்
அதுபோலெல்லாம் நடப்பது போல் நடித்துத்
தங்களைக் கற்பு உள்ளவர்களென்று காட்டிக்
கொள்ளுகிறார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால், அல்லது
அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால், அதுபோலவே காதலர்கள் என்பவர்களும் நடந்து, தங்கள் காதலைக்
காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம்
போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால்
மிகவும் பெருகிவிடும்.
ஆகவே, ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல் என்பதற்காக வேறு
ஒன்று இல்லை என்றும், அந்த
அன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள்
கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள் இடத்திலும், மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும்
ஏற்படுவதுபோல்தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும்
ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து,
யோக்கிதையிலிருந்து, மனப்பான்மையிலிருந்து, தேவையிலிருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும்;
அவ்வறிவும், நடவடிக்கையும், யோக்கியதையும், மனப்பான்மை யும், தேவையும், ஆசையும்
மாறக் கூடியதென்றும்; அப்படி மாறும்போது அன்பும்,
நட்பும் மாறவேண்டியதுதான் என்றும் - மாறக் கூடியதுதான் என்றும்
நாம் கருதுகின்றோம். ஆகவே, இதிலிருந்து நாம்,
யாரிடமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட
காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.
ஆனால்,
அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவாகினாலும்
மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய, மனத்திற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாகக் காட்டுவதற்காக
அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே
இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுத
வேண்டியதாயிற்று என்றால், மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு, தொட்டதற்கெல்லாம் ‘இது
காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’,
‘அது காம இச்சை’, ‘இது
விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப்
பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள்
கூற்றையும், கூறும் காதலையும் சற்றுப்
பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி
எழுதலானோம்.