COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, June 16, 2018

தோழர் சங்கர் மற்றும் 
தோழர் நமசிவாயம் ஆகியோருக்கு செவ்வணக்கம்


இகக மாலெயின் சிவகங்கை மாவட்ட வேலைகளில் முக்கிய பங்காற்றிய, இந்திய மக்கள் முன்னணியின் மாநிலச் செயலாளராக பணியாற்றிய தோழர் நமசிவாயம் ஜுன் 10, 2018 அன்று காலமானார். ஜுன் 10 அன்று நடந்த கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டம் அவருக்கு அஞ்சலி செலுத்தியது. ஜுன் 11, 2018 அன்று இககமாலெ மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆசைத்தம்பி, வளத்தான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இகக மாலெயின் நீண்ட நாள் உறுப்பினரும் டெல்டா மாவட்ட வேலைகளில் முக்கிய பங்காற்றியவருமான தோழர் சங்கர் உடல் நலம் குன்றியதால் மே 28 அன்று காலமானார். அவரது நினைவாகஜுன் 12 அன்று மயிலாடுதுறையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இககமாலெ மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் கலந்துகொண்டார்.

Search