எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய உள்சுவர்களால்
துண்டாடப்படாமல் இருக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையில் ஆழத்தில்
இருந்து வருகின்றனவோ
எங்கே விடாப்பிடியான முயற்சி
கச்சித நிலை நோக்கி
தன் கைகளைச் செலுத்துகிறதோ
எங்கே பண்டைய பழக்கம் என்ற
வறண்ட பாலை மண்ணில்
அறிவின் தெளிவான நீரோட்டம்
வழி தவறாமல் இருக்கிறதோ
எங்கே மனம் எப்போதும் விரிவடையும்
சிந்தனையை செயலை நோக்கி
முன்னகர்த்தி வழிநடத்தப்படுகிறதோ
எந்தையே, அந்த சுதந்திரத்தின் சொர்க்கத்தில்
எனது நாடு விழித்துக் கொள்ளட்டும்
ரவீந்திரநாத் தாகூர்
எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய உள்சுவர்களால்
துண்டாடப்படாமல் இருக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையில் ஆழத்தில்
இருந்து வருகின்றனவோ
எங்கே விடாப்பிடியான முயற்சி
கச்சித நிலை நோக்கி
தன் கைகளைச் செலுத்துகிறதோ
எங்கே பண்டைய பழக்கம் என்ற
வறண்ட பாலை மண்ணில்
அறிவின் தெளிவான நீரோட்டம்
வழி தவறாமல் இருக்கிறதோ
எங்கே மனம் எப்போதும் விரிவடையும்
சிந்தனையை செயலை நோக்கி
முன்னகர்த்தி வழிநடத்தப்படுகிறதோ
எந்தையே, அந்த சுதந்திரத்தின் சொர்க்கத்தில்
எனது நாடு விழித்துக் கொள்ளட்டும்
ரவீந்திரநாத் தாகூர்