COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, September 16, 2014

ஏஅய்சிசிடியு 10 லட்சம் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் விசைத்தறி தொழிலாளர்கள்

நாமக்கல் - ஈரோடு மாவட்ட வேலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மக்கள் சந்திப்பு இயக்கம் உதவியுள்ளது. இயக்கத்தின் 15 அம்ச கோரிக்கைகள் மீது ஜ÷லை 15 முதல் ஆகஸ்ட் 31 வரை, குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு, பெருந்துறை, பவானி, வெப்படை, தட்டாங்குட்டை ஆகிய பகுதிகளில் 25,000க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ரூ.25,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. விசைத்தறி, கைத்தறி, கட்டுமானம், டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளர்கள் என இந்த இயக்கத்தில் 200 பேர் ஈடுபட்டு உள்ளனர். மக்களை நேரடியாகவும், மினிடோர் வாகனம், தெருமுனை பிரச்சார கூட்டங்கள், ஊர்வலம் ஆகியவற்றின் மூலமும் சந்தித்து பிரச்சாரம் நடத்தப்பட்டது.

இந்த இயக்கத்தின் ஊடே வெப்படை பகுதியில் கட்டுமான சங்க கிளை துவக்கப்பட்டது. கட்டுமான தொழிலாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவேரி நகர், சி.என்.பாளையம் பகுதியில் 100 பேர் கலந்து கொண்ட கைத்தறி நெசவாளர்கள் சங்க கிளை துவக்கப்பட்டு ஊர்வலம், தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏஅய்சிசிடியு மாவட்ட கமிட்டியும் செயற்குழுவும் முழுமையாக இயங்கியது. அக்டோபர் 4 - 5 தேதிகளில் திருப்பூரில் நடக்கவுள்ள ஏஅய்சிசிடியு மாநில மாநாட்டுக்குள் இன்னும் 25 ஆயிரம் மக்கள் மத்தியில் செல்லவும் ரூ.75,000 நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 28ல் நடக்க உள்ள சிறை நிரப்பும் போராட்டத்திற்கு 500 பேரை அணி திரட்டுவதற்கான வழி தெரிகிறது.  
                 

Search