COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, September 16, 2014

நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம்

கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமை சங்கம், பிரிக்கால் நிர்வாகத்துடன் வெற்றிகரமாக ஒப்பந்தம் எட்டியதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 05.09.2014 அன்று நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சுரேஷ் பாபு தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் குமாரசாமி, ஒப்பந்தத்தின் வரலாற்று பின்னணியை விளக்கிப் பேசினார். மோடி மற்றும் ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி  உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக அக்டோபர் 28 அன்று நடக்கவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் துடியலூரிலும், சின்னியம்பாளையத்திலும் பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்களுடன் பகுதி மக்களும் ஆயிரக்கணக்கில் பங்கு பெற வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், மாவட்டத் துணைத் தலைவர் தோழர் தா.சந்தரன், சிபிஅய் (எம்எல்) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் ஆர்.தாமோதரன், மாவட்டச் செயலாளர் தோழர் குருசாமி, புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி, கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமை சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுவாமிநாதன், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பாலமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.  கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமை சங்கத்தின் பொருளாளர் கூட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார். கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.                            

Search