COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, September 16, 2014

இடிந்தகரையில் இகக(மாலெ)

இடிந்தகரை போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு மற்றும் இடிந்தகரை தியாகிகள் அந்தோணிஜான், சகாயம், ரோஸ்லின், ராஜசேகர் ஆகியோரின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 10.09.2014 அன்று இடிந்தகரையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இகக(மாலெ) உட்பட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் கலந்து கொண்டனர். தியாகிகள் நினைவுச் சுடர்களில் ஒன்றை, போராளிப் பெண்களிடம் இருந்து தோழர் பாலசுந்தரம் பெற்றுக்கொண்டார். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில், தோழர் பாலசுந்தரம் பேசினார். காங்கிரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்றப் போவதாகக் கூறி கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த நரேந்திரமோடி, 100 நாட்கள் ஆட்சியில் காங்கிரசின் கொள்கைகளை, ஆர்எஸ்எஸ்ஸின் மதவெறி நிகழ்ச்சிநிரலை அமல்படுத்துகிறார்.

தனது பதவி ஏற்பு விழாவிற்கு இலங்கையில் தமிழினத்தை அழித்த ராஜபக்சேவை பட்டுக் கம்பளம் விரித்து அழைத்து வந்தார். பிரதமராகப் பதவியேற்றபின் ரஷ்யா சென்ற மோடி, ரஷ்ய பிரதமர் புடினை கூடன்குளத்திற்கு வந்து பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறார். ஆஸ்திரேலியப் பிரதமருடன் அணுஉலை ஒப்பந்தம் போடுகிறார். தான் கார்ப்பரேட்டுகளின் நாயகன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். கார்ப்பரேட் மதவெறி ஆட்சிக்கு எதிராக முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். மக்கள் போராட்டங்கள் மகத்தானவை. இந்தப் போராட்டம் 1988ல் இருந்தே 27 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1, 2 அணு உலைகள் மூடப்பட வேண்டும். 3, 4 அணு உலைகளை துவங்கக் கூடாது. இதற்காகப் போராடும் மக்களுடன் எப்போதும் ஒன்றுபட்டு நிற்பதுடன், இந்தப் போராட்ட செய்தியை இகக (மாலெ) நாடு முழுவதும் கொண்டு செல்லும் என்றார். 

Search