கன்னியாகுமரி மாவட்ட இகக(மாலெ) ஊழியர் கூட்டம் 08.09.2014 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார். மாவட்டத் தலைமைக்குழு உறுப்பினர்கள் சுசீலா, சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் தோழர்கள் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, விலைவாசிகள் உயர்ந்து கொண்டே போகின்றன, இலவசங்கள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள், டாஸ்மாக் சாராயக் கடைகளால் எல்லா குடும்பங்களின் வாழ்க்கையும் நாசமாகிறது என்று தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக எத்தகைய போராட்டத்தையும் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக பெண் தோழர்கள் கூறினார்கள்.
முதற்கட்டமாக குளச்சல், ரீத்தாபுரம் போன்ற இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 5 சாராயக் கடைகளை மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்த முடிவானது. இதை ஏஅய்சிசிடியு 8ஆவது மாநில மாநாடு பிரச்சாரத்துடன் இணைத்து பல்லாயிரக்கணக்கான கையெழுத்துக்ளையும் பெறுவது என்றும் அந்தக் கையெழுத்துக்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தீர்ப்பையும் இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்து குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகளை உடனடியாக மூட வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. முடிவெடுத்த மறுநாளே பெண் தோழர்கள் தோழர் அந்தோணி முத்துவிடம் எப்போது கையெழுத்து இயக்கத்தைத் துவக்கலாம் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
நெல்லை குடியிருப்புப் பகுதிகளில் தமிழக உழைக்கும் மக்கள் சாசனத்தின் மீதான மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் சந்திப்பின் போது பெண்கள் சாராயக் கடையை மூடவேண்டும் அதற்கு நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் வருகிறோம் என்று தோழர்களிடம் தெரிவித்துள்ளார்கள். 10.09.2014 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் இகக(மாலெ) அரசியில் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார். அப்போது எல்லா குடும்பத்தில் உள்ள பெண்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
தமிழக மக்களின் தலையாய பிரச்சினையாக இப்போது இருப்பது டாஸ்மாக் கடைகள்தான். எங்களுக்கு இலவசப் பொருள்கள் வேண்டாம், உழைப்பதற்கு கூலி தர வேண்டும், அந்தக் கூலி ஒழுங்காக வீடு வந்த சேர டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது. குமரி, நெல்லை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே குரல்கள்தான் கேட்கின்றன. ஆனால், அது ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு மட்டும் கேட்கவில்லை.
குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இகக மாலெ, ஏஅய்சிசிடியு இணைந்து டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக் கோரி இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் தோழர்கள் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, விலைவாசிகள் உயர்ந்து கொண்டே போகின்றன, இலவசங்கள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள், டாஸ்மாக் சாராயக் கடைகளால் எல்லா குடும்பங்களின் வாழ்க்கையும் நாசமாகிறது என்று தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக எத்தகைய போராட்டத்தையும் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக பெண் தோழர்கள் கூறினார்கள்.
முதற்கட்டமாக குளச்சல், ரீத்தாபுரம் போன்ற இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 5 சாராயக் கடைகளை மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்த முடிவானது. இதை ஏஅய்சிசிடியு 8ஆவது மாநில மாநாடு பிரச்சாரத்துடன் இணைத்து பல்லாயிரக்கணக்கான கையெழுத்துக்ளையும் பெறுவது என்றும் அந்தக் கையெழுத்துக்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தீர்ப்பையும் இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்து குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகளை உடனடியாக மூட வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. முடிவெடுத்த மறுநாளே பெண் தோழர்கள் தோழர் அந்தோணி முத்துவிடம் எப்போது கையெழுத்து இயக்கத்தைத் துவக்கலாம் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
நெல்லை குடியிருப்புப் பகுதிகளில் தமிழக உழைக்கும் மக்கள் சாசனத்தின் மீதான மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் சந்திப்பின் போது பெண்கள் சாராயக் கடையை மூடவேண்டும் அதற்கு நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் வருகிறோம் என்று தோழர்களிடம் தெரிவித்துள்ளார்கள். 10.09.2014 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் இகக(மாலெ) அரசியில் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார். அப்போது எல்லா குடும்பத்தில் உள்ள பெண்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
தமிழக மக்களின் தலையாய பிரச்சினையாக இப்போது இருப்பது டாஸ்மாக் கடைகள்தான். எங்களுக்கு இலவசப் பொருள்கள் வேண்டாம், உழைப்பதற்கு கூலி தர வேண்டும், அந்தக் கூலி ஒழுங்காக வீடு வந்த சேர டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது. குமரி, நெல்லை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே குரல்கள்தான் கேட்கின்றன. ஆனால், அது ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு மட்டும் கேட்கவில்லை.
குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இகக மாலெ, ஏஅய்சிசிடியு இணைந்து டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக் கோரி இயக்கம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.