COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, September 16, 2014

வேண்டுகோள் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு உதவுங்கள்

கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளத்தால் ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மடிந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து விட்டார்கள். வாழ்வாதாரங்களை இழந்துவிட்டார்கள்.  ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு நமது ஒருமைப்பாடும் ஆதரவும் தேவைப்படுகிறது.

உத்தர்கண்டில் ஏற்பட்ட பேரழிவை விட, மனம்போன போக்கிலான சுற்றுச்சூழல் அழிவு மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க எந்த எச்சரிக்கை பொறியமைவையும் நிறுவத் தவறியது ஆகியவற்றால்,  ஜம்மு - காஷ்மீரில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவின் அளவு மிகவும் கூடுதலாக உள்ளது.

இகக (மாலெ), நாடு முழுவதும், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கான வெள்ள நிவாரணப் பணிகளைத் துவக்கியுள்ளது. கட்சியின் அனைத்து மாநில அமைப்புக்களும், வெகுமக்கள் அமைப்புக்களும் நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பிரச்சனையில் அக்கறை கொண்ட அனைவரும், “CPIML” என்ற பெயரில் காசோலையாகவோ வரைவோலையாகவோ தங்கள் பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிவாரணம் என்று குறிப்பிடவும். உங்கள் நிதியை யு - 90, ஷகர்பூர், டில்லி - 110 092, இந்தியா (U - 90, SHAKARPUR, DELHI - 110 092, INDIA) என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மத்திய கமிட்டி
இகக (மாலெ) விடுதலை

Search