காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இகக (மாலெ) சார்பாக வெள்ள நிவாரண நிதி நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் மத்தியில் வெள்ள நிவாரண நிதி பெறப்பட்டது. நெல்லையில் 10.09.2014 அன்று மூன்று மணி நேரத்தில் மக்கள் மத்தியில் ரூ.5,200 திரட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், ஏஅய்சிசிடியு நிர்வாகிகள் கே.கணேசன், சுந்தர்ராஜ் உட்பட 30 பேர் கலந்துகொண்டனர்.