COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, August 4, 2020

தமிழக மக்களுக்காக, வழக்கறிஞர்களுக்காக
தொடர்ந்து குரல் எழுப்பும்
ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர்
தோழர் கு.பாரதி வீட்டின் முன்பு
காவல் துறையினர் குவிந்து அச்சுறுத்தல்!
கண்டிக்கின்றோம்!

கொரானா காலத்தில் தமிழக வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் கோருதல்,ம் நீதிமன்றங்கள் திறக்க  கோருதல், வறிய மக்களுக்கு நிவாரணம் கோருதல், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர் நலன்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவது என செயல்பட்டு வரும் ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் கு.பாரதி வீட்டின் முன், 02.08.2020, காலை சுமார் 10.00 மணியளவில் அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரமுருகேசன், உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், பரந்தாமன் மற்றும் உளவு பிரிவு போலீசார் உட்பட 25க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களுடன் திரண்டனர்.
மக்களுக்கான இளைஞர்கள் (வஊட), மக்களுக்கான மாணவர்கள் (நஊட), 02.08.2020 அன்று நடத்தும், உஐஅ வரைவு 2020, புதியக் கல்விக் கொள்கை ஆகியவற்றை திரும்பப் பெறுக என்ற கோரிக்கையோடு நடத்தும் போராட்டத்துக்கு தோழர் பாரதி ஆதரவு தெரிவித்து கலந்துகொள்ள இருப்பதாக செய்தி வந்ததாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்ததாகவும் தெரிவித்தனர். கைது செய்யும் நோக்கத்தோடு அவரது வீட்டிற்கு வந்து, வீட்டின் வாசலை மறித்து சூழ்ந்துகொண்டு விசாரணை செய்து விட்டு பின் கலைந்து சென்றுள்ளனர்.
தோழர் கு.பாரதி மற்றும் அவரோடு செயல்படும் முன்னணிகளை காவல்துறையினர் அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.
தமிழக அரசு, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்!
கருத்துரிமை,  அரசியலமைப்பு உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் தோழர் கு.பாரதி மீதான அச்சுறுத்தல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்!
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கின்றோம்.
கருத்துரிமை, அரசியலமைப்பு உரிமைகளுக்காக அச்சமின்றி குரல் எழும்புவோம்.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்
02 ஆகஸ்ட் 2020

Search