COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 15, 2014

நெல்லை நகர உள்ளூர் கமிட்டி மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நெல்லை நகர உள்ளூர்  மாநாடு 05.02.2014 அன்று நடைபெற்றது. கருப்பசாமி, சுந்தர்ராஜன், சேக்முகமது ஆகியோர் கொண்ட தலைமைக்குழு மாநாட்டை நடத்தியது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் டி.சங்கரபாண்டியன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ்,  மாவட்டக்குழு உறுப்பினர் கே.கணேசன் கிளைச் செயலாளர்கள் சிவகாமிநாதன், சங்கர், ஆவுடையப்பன், உரையாற்றினார்கள்.

மாநாட்டில் நெல்லை நகர உள்ளூர் கமிட்டியின் செயலாளராக தோழர் சுந்தர்ராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் :
கூடங்குளம் அணுஉலை  உடனடியாக மூடப்படவேண்டும்.

3, 4 அணுஉலைகள் திறக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்.

ஆதார் அட்டை, தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டு திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்.

44வது வார்டில் உள்ள தாய் சேய் நல விடுதி மேம்படுத்தப்பட வேண்டும்.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் செப்பனிடப்படவேண்டும்.

Search