COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 15, 2014

புரட்சிகர இளைஞர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட முதல் மாநாடு

புரட்சிகர இளைஞர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட முதல் மாநாடு திருபெரும்புதூரில் 08.02.2014ல் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.

கோவை மாவட்ட ஏஅய்சிசிடியு சிறப்புத் தலைவர் தோழர் த.சந்திரன், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, சிபிஅய் (எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சொ.இரணியப்பன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.பழனிவேல், கடலூர் மாவட்ட ஆர்ஒய்எவின் அமைப்பாளர் தோழர் தனவேல், திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமச்சந்திரன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா உரையாற்றினர். ஹூண்டாய் சங்க முன்னணித் தொழிலாளர் தோழர் ராஜவேலு கொடியேற்றினார்.

Search