சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
1946ல் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் நாடு முழுவதும் மக்கள் மீது சியாங்கே ஷெக் சிவில் யுத்தம் தொடுத்தார்.
வெளிப்படையாகவே, ‘விடுதலை செய்யப்பட்ட பகுதிகளை’ ஒடுக்குமுறை மூலம் தகர்ப்பது என்பது அதன் நோக்கமாகும். யுத்தத்தின் துவக்க காலத்தில் சியாங்கே ஷெக், 43 லட்சம் துருப்புகள், பெரிய மாநகரங்கள் மற்றும் நகரங்களிலுள்ள 30 கோடி மக்கள் மீது கட்டுப்பாடு, பெரிய ரயில்வே வழித்தடங்கள், மிகப்பெரும் சொத்து என சக்திமிக்கவராகவும் வலிமையானவராகவும் இருந்தார். இதன் கூடவே 10 லட்சம் ஜப்பானிய துருப்புகளின் ராணுவ வளங்களையும் அவர் பிடித்து வைத்திருந்தார். இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு உலகை ஆளுமை செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக எழுந்திருக்கிற அய்க்கிய அமெரிக்க ஆதரவு மிகவும் முக்கியமான விசயமாகும்.
இன்னொருபுறம் சீன மக்கள் விடுதலைப் படையின் வலு என்பது கிட்டத்தட்ட 12 லட்சம் தான். விடுதலை செய்யப்பட்ட பகுதியின் மக் கள் தொகை 13 கோடி ஆகும். இது குவாமின்டாங் செல்வாக்கு பகுதியோடு ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பகுதியே. மேலும், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சக்திகளை துடைத்தெறிவதற்கான விவசாய சீர்திருத்தங்களும் இப்பகுதியில் நிறைவடையவில்லை. இந்தப் பின்னணியில் தான் சியாங்கே ஷெக் 16 லட்சம் துருப்புகளையும் ஓரணியில் திரட்டி அனைத்தும் தழுவிய தாக்குதல் நடத்தி ஒரே அடியில் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளை தகர்ப்பது என்ற யுத்தியை கையாண்டார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பரிசோதிக்கப்பட்ட போர்த்தந்திரமான செயல்துடிப்புள்ள ‘தற்காப்பு நடவடிக்கைக்கு அழுத்தம்’ என்பதை கையாண்டது. தங்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளிலும் நகரங்களிலும் குவாமின்டாங் சக்திகள் உள்ளே நுழைய அனுமதித்தது. பிறகு தனிமைப்பட்டு, சோர்வடைந்து, பலவீனமாக இருந்த எதிரிப் படைகள் மீது பெரும் எண்ணிக்கையில் தனது சக்திகளை திரட்டி தாக்குதல் தொடுத்தது. ஜ÷லை 1946க்கும் பிப்ரவரி 1947க் குமிடையில் குவாமின்டாங் சக்திகள் தங்கள் அனைத்தும்தழுவிய தாக்குதலை நிறுத்தின. மற்றும் மக்கள் விடுதலைப் படை பெரும் எண்ணிக்கையிலான எதிரிப் படையினரைக் கொன்றொழித்தது. மக்கள் விடுதலைப்படை பெருமளவிலான ஆயுதங்களை, குண்டுகளை எதிரிப்படையிடமிருந்து கைப்பற்றியதோடல் லாமல் அதன் ஒரு பிரிவினரை அரசியல் கல்வி மூலம் தன் பக்கம் சுவீகரித்துக் கொண்டது. குவாமின்டாங் துவக்கிய இந்தத் தாக்குதல் நடவடிக்கை மக்கள் விடுதலைப் படை வளர்வதிலும் குவாமின்டாங் சக்திகள் பலவீனமாவதிலும் போய் முடிந்தது.
1946 மார்ச்சுக்குப் பிறகு, அனைத்தும் தழுவிய தாக்குதல் என்ற தாக்குதல் நடவடிக்கை ‘சீசா’ போன்றதொரு யுத்தத்தால் எதிர்கொள்ளப்பட்டதால் குவாமின்டாங் தன் செயல்தந்திரத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குவாமின்டாங்கின் முக்கிய இலக்கு சான்தெர்ன் மற்றும் வடக்கு ஷென்சியாக இருந்தது. புதிய உத்தியின்படி மஞ்சள் ஆற்றின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியத்திலுள்ள மக்கள் விடுதலைப் படையின் செயல்பாட்டை கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலிருந்து இரு பிரிவு படைகளை அணிதிரட்டி ராணுவ நடவடிக்கை மூலம் அகற்றுவது என்பதாகும். இதன் பிரத்தியேகமான நோக்கம் என்பது மக்கள் விடுதலைப்படையை அப்புறப்படுத்தி அதன் பிரிவுகளை சிதறடிப்பது, அப்படி சிதறடிக்கப்பட்ட பின் கு சென் டுங்கின் உத்தர வின்படி அதை நசுக்குவது என்பதாகும். குவா மின்டாங்கின் 2/3 பங்கு சக்திகளை (4,50,000க்கு நெருக்கமாக) சான்டங் விடுதலைப் பகுதியில் அணிதிரட்டுவது மற்றும் கு சுங் நன் தலைமை யில் 2,30,000 படையை (மக்கள் விடுதலைப் படையை விட 10 மடங்கு அதிகம்) கொண்டு வடக்கு ஷென்சி பகுதியைக் குறிவைப்பது.
சான்பாப் விடுதலைப் பகுதிக்கு எதிரான இயக்கம் என்பது 1947 ஏப்ரல் 6 முதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் குவாமின்டாங்கின் முக்கிய துருப்புகள் எய்மங்க், மென்கின், லைமெங்க் பகுதிகளில் தகர்க்கப்பட்டன. குவாமின்டாங் சக்திகளின் முன்னேறிய பிரிவினர் நசுக்கப்பட்டனர்; தலைசிறந்த போர் பிரிவுகள் பலவும் அப்புறப்படுத்தப்பட்டன. இது கிழக்கு சீனத்தில் சக்திகளின் சமநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்து மக்கள் விடுதலைப் படை நாடு தழுவிய எதிர்த்தாக்குதல் நடத்த வழியை திறந்துவிட்டது.
இது போலவே, வடக்கு ஷென்சியில் 1947, மார்ச் 13லிருந்து நடத்தப்பட்ட குவாமின்டாங் சக்திகளின் தாக்குதல், மக்கள் விடுதலைப் படையின் தொடர் யுத்தம் மற்றும் விரைந்து முடிவெடுத்தல் ஆகியவற்றால் முறியடிக்கப்பட்டது.
இந்த சமயத்தில் மக்கள் விடுதலைப்படை சான்சி - சாகர் - கோபே, சான்சி - கோபே -சான்டங் பிராந்தியங்களில் எதிர்த் தாக்குதலை துவக்கியது மற்றும் குவாமின்டாங் தற்காப்பு உத்தியை கடைபிடிக்கும்படி தள்ளப்பட்டது. இது யுத்த இயங்காற்றலில் அடிப்படை மாற்றங்களை குறிப்பதாக அமைந்தது.
ஒரு வருட காலத்தில் 11,20,000 முறையான மற்றும் முறைசாரா குவாமின்டாங் சக்திகளை மக்கள் விடுதலைப் படை வலுவிழக்கச் செய்துவிட்டது. மறுபுறம் மக்கள் விடுதலைப் படையின் எண்ணிக்கை 12 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்ந்தது. இதன் மூலம், குவாமின்டாங்கின் போர்த்தந்திர முன்முயற்சி மக்கள் விடுதலைப் படையால் கைப்பற்றப்பட்டது.
எல்லா யுத்தகளங்களிலும் குவாமின்டாங் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இது பிற்போக்கு குவாமின்டாங்கின் வகை மாதிரி அராஜகத்துக்கு பலத்த அடி கொடுத்தது. இறுதி ஆராய்ச்சியில், குவாமின்டாங், கம்யூனிஸ்ட்டுக ளால் தலைமை தாங்கப்படும் மக்கள் விடுதலைப் படையின் ஆற்றல் மற்றும் போர்த்தந்திரத்தை புரிந்து கொள்ள படுமோசமாக தவறிவிட்டது.
குவாமின்டாங்கின் ராணுவரீதியான நெருக்கடி, தீவிரமான பொருளாதார நெருக்கடியோடும் இணைந்து கொண்டது. குவாமின்டாங் செல்வாக்கு பகுதிகள் அய்க்கிய அமெரிக்காவின் காலனியாக வளர்ந்து வருவதோடு இணைந்து, கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சிவில் யுத்தத்தின் தாக்கமும் இதற்கு பங்களிப்பு செய்திருந்தது.
ஜப்பான் அடிபணிந்த பிறகு, குவாமின்டாங், பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியதோடு, அய்க்கிய அமெரிக்காவின் கடன் மற்றும் நிவாரணத்தையும் பெற்றது. இதன் கூடவே, ஜப்பான் மற்றும் அதன் அடிமை நாடுகளின் ராணுவ தளவாடங்களையும் பெரு மளவில் கைப்பற்றியது. இந்த அர்த்தத்தில் இது குவாமின்டாங்குக்கு பொற்காலமாகும். ஜூலை 1947 வரை, அய்க்கிய அமெரிக்கா, கிட்டத்தட்ட 4000 அமெரிக்க டாலர் பெறுமான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை அளித்தது. மேலும் குவாமின்டாங் அரசாங்கம் ஜப்பானின் பெரும்தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களையும் கையகப்படுத்தியது.
அய்க்கிய அமெரிக்க புள்ளிவிவரப்படி இதன் மதிப்பு 1800 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஜப்பான் சரணடைந்த பின் குவாமின்டாங் ஆட்சி மூலம் சீன தொழிற்சாலைகளிலிருந்து 70 - 80% அதிகாரத்துவ மூலதனம் கைப்பற்றப்பட்டு, அதை 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். குவாமின்டாங் செல்வாக்குப் பகுதிகளிலிருந்து அமெரிக்காவின் தீர்மானகரமான ஆதரவு பெற்ற சீன அதிகாரத்துவ மூலதனம் சீனாவை அதன் காலனியாக மாற்ற முயற்சித்ததோடு, சோவியத் யூனியனுக்கு எதிரான ராணுவ தளமாகவும் பயன்படுத்திக் கொண்டது. மேலும் சீனாவில் கம்யூனிச எதிர்ப்பு சிவில் யுத்தத்தை ஆதரிப்பதும் அதன் நோக்கமாக இருந்தது.
ஜப்பான் சரணடைந்த பிறகு, வெளிப் படையாகவும், செயல்தந்திரரீதியாகவும் அய்க்கிய அமெரிக்காவோடு பல்வேறு துரோக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டது. சீனாவில் அமெரிக்க இறக்குமதி 1946ல் 51.2%. (இது 1936ல் 22.6% இருந்தது) அமெரிக்காவுக்கு சீனத்தின் ஏற்றுமதி 1946ல் 57.2% (1937ல் 19.7%ஆக இருந்தது) என்ற அளவுக்கு சென்றது.
சிவில் யுத்தத்தால் விளைந்த கடுமையான நெருக்கடி காரணமாக மக்கள் மீது கொடிய முறையில் வரி விதிப்பு செய்யப்பட்டது. 1947ல் விலைவாசி உயர்வு, ஜப்பான் யுத்தத்திற்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது 60,000 மடங்கு ஊதி பெருகியிருந்தது.
குவாமின்டாங் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சிவில் யுத்தத்தில் இருந்ததால், தேசிய தொழில் மற்றும் வர்த்தகத்தில் பலத்த அடி விழுந்தது. ஷாங்காய் பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் 5400 என்ற அளவில் இருந்த தொழிற்சாலைகள், 1947ல் 582 ஆக குறைந்துவிட்டது. குவாமின்டாங் ஆளுகை பகுதிகளில் விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளாகி பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் குவாமின்டாங் அரசியல் கருத்துப் பரிமாற்ற மாநாட்டு முடிவுகளை நிராகரிப்பது என்ற தனது நிலைப்பாட்டை மறுஉறுதி செய்து, 1946, நவம்பரில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் போலியான அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது. இந்த அரசியலமைப்பில் மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மொத்த அதிகாரமும் அரசாங்கத்துக்குத்தான். அதுவும் உள்ளாட்சிகளுக்கல்ல, மத்திய அரசுக்கு மட்டும்தான்.
சமூக நிலைத்தன்மையை பராமரிப்பதில் ஆர்வம் என்று சொல்லி ‘அவசரநிலை’ காலத்தில் மக்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. உள்ளூர் மட்டத்தில் சுயாட்சி மற்றும் சிறுபான்மையினருக்கான சுயாட்சி ஆகிய கொள்கைகள் அரசியலமைப்பு சட்டத்தால் நிராகரிக்கப்பட்டன. இந்தப் போலி அரசியல மைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே, 1947 ஏப்ரல் 18 அன்று குவாமின்டாங் அரசாங்க மறு சீரமைப்பை அறிவித்தது.
சியாங்கே ஷெக் இந்த அரசு ‘தாராளமான’ அரசு என வெட்கக்கேடாக அறிவித்தது அரசியலமைப்பு சட்ட அரசாங்கத்தின் துவக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது. பல கட்சி அரசாங்கத்தில் இளைஞர் கட்சி மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி (சீன ஜனநாயக லீக் கட்சியிலிருந்து பிரிந்தது) ஆகிய இரண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டன. குவாமின்டாங் அரசாங்கத்தில் ராணுவ சர்வாதிகாரிகளும், கட்சி தலைவர்களும், பணக்காரர்கள் மற்றும் மில்லியனர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். சியாங்கின் சர்வாதிகாரத்தை மறைக்க, விலை கொடுத்து வாங்கப்பட்ட, உடைந்த குழுக்களான இளைஞர் கட்சி மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி ஆகியவை திரையாக பயன்படுத்தப்பட்டன.
1947 செப்டம்பரில் குவாமின்டாங்கில் பதவி பெறும் பிரச்சனையில் ஜனநாயக சோசலிச கட்சி மீண்டும் பிளவு பெற்றது. குவாமின்டாங் எல்லா பிரிவுகளையும் அரசாங்கத்தில் அனுசரித்தது. 1947, நவம்பரில் குவாமின்டாங் அரசாங்கம் அய்க்கிய அமெரிக்காவிடம் 4 வருட தவணையில் நிதி கேட்டு கோரிக்கை வைத்தது. உதவியை உத்தரவாதம் செய்ய, மொத்த பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் அய்க்கிய அமெரிக்க ஆலோசகர் ஒருவரை நியமிக்கவும் குவாமின்டாங் ஒப்புதல் தந்தது. 1948 மார்ச்சில் குவாமின்டாங் அரசாங்கத்துக்கு 570 மில்லியன் டாலர் உதவி அளிப்பதற்கான தீர்மானத்தை அய்க்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியது.
இன்னொருபுறம், 1946 – 1947, கால கட்டத்தில் குவாமின்டாங்கின் அரசியல் திவால் தனம் மற்றும் அய்க்கிய அமெரிக்காவுக்கு சரண டையும் சியாங்கின் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக தேசபக்த இயக்கங்களின் அலையையும் சீனம் கண்டது.
1946ல் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் நாடு முழுவதும் மக்கள் மீது சியாங்கே ஷெக் சிவில் யுத்தம் தொடுத்தார்.
வெளிப்படையாகவே, ‘விடுதலை செய்யப்பட்ட பகுதிகளை’ ஒடுக்குமுறை மூலம் தகர்ப்பது என்பது அதன் நோக்கமாகும். யுத்தத்தின் துவக்க காலத்தில் சியாங்கே ஷெக், 43 லட்சம் துருப்புகள், பெரிய மாநகரங்கள் மற்றும் நகரங்களிலுள்ள 30 கோடி மக்கள் மீது கட்டுப்பாடு, பெரிய ரயில்வே வழித்தடங்கள், மிகப்பெரும் சொத்து என சக்திமிக்கவராகவும் வலிமையானவராகவும் இருந்தார். இதன் கூடவே 10 லட்சம் ஜப்பானிய துருப்புகளின் ராணுவ வளங்களையும் அவர் பிடித்து வைத்திருந்தார். இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு உலகை ஆளுமை செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக எழுந்திருக்கிற அய்க்கிய அமெரிக்க ஆதரவு மிகவும் முக்கியமான விசயமாகும்.
இன்னொருபுறம் சீன மக்கள் விடுதலைப் படையின் வலு என்பது கிட்டத்தட்ட 12 லட்சம் தான். விடுதலை செய்யப்பட்ட பகுதியின் மக் கள் தொகை 13 கோடி ஆகும். இது குவாமின்டாங் செல்வாக்கு பகுதியோடு ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பகுதியே. மேலும், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சக்திகளை துடைத்தெறிவதற்கான விவசாய சீர்திருத்தங்களும் இப்பகுதியில் நிறைவடையவில்லை. இந்தப் பின்னணியில் தான் சியாங்கே ஷெக் 16 லட்சம் துருப்புகளையும் ஓரணியில் திரட்டி அனைத்தும் தழுவிய தாக்குதல் நடத்தி ஒரே அடியில் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளை தகர்ப்பது என்ற யுத்தியை கையாண்டார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பரிசோதிக்கப்பட்ட போர்த்தந்திரமான செயல்துடிப்புள்ள ‘தற்காப்பு நடவடிக்கைக்கு அழுத்தம்’ என்பதை கையாண்டது. தங்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளிலும் நகரங்களிலும் குவாமின்டாங் சக்திகள் உள்ளே நுழைய அனுமதித்தது. பிறகு தனிமைப்பட்டு, சோர்வடைந்து, பலவீனமாக இருந்த எதிரிப் படைகள் மீது பெரும் எண்ணிக்கையில் தனது சக்திகளை திரட்டி தாக்குதல் தொடுத்தது. ஜ÷லை 1946க்கும் பிப்ரவரி 1947க் குமிடையில் குவாமின்டாங் சக்திகள் தங்கள் அனைத்தும்தழுவிய தாக்குதலை நிறுத்தின. மற்றும் மக்கள் விடுதலைப் படை பெரும் எண்ணிக்கையிலான எதிரிப் படையினரைக் கொன்றொழித்தது. மக்கள் விடுதலைப்படை பெருமளவிலான ஆயுதங்களை, குண்டுகளை எதிரிப்படையிடமிருந்து கைப்பற்றியதோடல் லாமல் அதன் ஒரு பிரிவினரை அரசியல் கல்வி மூலம் தன் பக்கம் சுவீகரித்துக் கொண்டது. குவாமின்டாங் துவக்கிய இந்தத் தாக்குதல் நடவடிக்கை மக்கள் விடுதலைப் படை வளர்வதிலும் குவாமின்டாங் சக்திகள் பலவீனமாவதிலும் போய் முடிந்தது.
1946 மார்ச்சுக்குப் பிறகு, அனைத்தும் தழுவிய தாக்குதல் என்ற தாக்குதல் நடவடிக்கை ‘சீசா’ போன்றதொரு யுத்தத்தால் எதிர்கொள்ளப்பட்டதால் குவாமின்டாங் தன் செயல்தந்திரத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குவாமின்டாங்கின் முக்கிய இலக்கு சான்தெர்ன் மற்றும் வடக்கு ஷென்சியாக இருந்தது. புதிய உத்தியின்படி மஞ்சள் ஆற்றின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியத்திலுள்ள மக்கள் விடுதலைப் படையின் செயல்பாட்டை கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலிருந்து இரு பிரிவு படைகளை அணிதிரட்டி ராணுவ நடவடிக்கை மூலம் அகற்றுவது என்பதாகும். இதன் பிரத்தியேகமான நோக்கம் என்பது மக்கள் விடுதலைப்படையை அப்புறப்படுத்தி அதன் பிரிவுகளை சிதறடிப்பது, அப்படி சிதறடிக்கப்பட்ட பின் கு சென் டுங்கின் உத்தர வின்படி அதை நசுக்குவது என்பதாகும். குவா மின்டாங்கின் 2/3 பங்கு சக்திகளை (4,50,000க்கு நெருக்கமாக) சான்டங் விடுதலைப் பகுதியில் அணிதிரட்டுவது மற்றும் கு சுங் நன் தலைமை யில் 2,30,000 படையை (மக்கள் விடுதலைப் படையை விட 10 மடங்கு அதிகம்) கொண்டு வடக்கு ஷென்சி பகுதியைக் குறிவைப்பது.
சான்பாப் விடுதலைப் பகுதிக்கு எதிரான இயக்கம் என்பது 1947 ஏப்ரல் 6 முதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் குவாமின்டாங்கின் முக்கிய துருப்புகள் எய்மங்க், மென்கின், லைமெங்க் பகுதிகளில் தகர்க்கப்பட்டன. குவாமின்டாங் சக்திகளின் முன்னேறிய பிரிவினர் நசுக்கப்பட்டனர்; தலைசிறந்த போர் பிரிவுகள் பலவும் அப்புறப்படுத்தப்பட்டன. இது கிழக்கு சீனத்தில் சக்திகளின் சமநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்து மக்கள் விடுதலைப் படை நாடு தழுவிய எதிர்த்தாக்குதல் நடத்த வழியை திறந்துவிட்டது.
இது போலவே, வடக்கு ஷென்சியில் 1947, மார்ச் 13லிருந்து நடத்தப்பட்ட குவாமின்டாங் சக்திகளின் தாக்குதல், மக்கள் விடுதலைப் படையின் தொடர் யுத்தம் மற்றும் விரைந்து முடிவெடுத்தல் ஆகியவற்றால் முறியடிக்கப்பட்டது.
இந்த சமயத்தில் மக்கள் விடுதலைப்படை சான்சி - சாகர் - கோபே, சான்சி - கோபே -சான்டங் பிராந்தியங்களில் எதிர்த் தாக்குதலை துவக்கியது மற்றும் குவாமின்டாங் தற்காப்பு உத்தியை கடைபிடிக்கும்படி தள்ளப்பட்டது. இது யுத்த இயங்காற்றலில் அடிப்படை மாற்றங்களை குறிப்பதாக அமைந்தது.
ஒரு வருட காலத்தில் 11,20,000 முறையான மற்றும் முறைசாரா குவாமின்டாங் சக்திகளை மக்கள் விடுதலைப் படை வலுவிழக்கச் செய்துவிட்டது. மறுபுறம் மக்கள் விடுதலைப் படையின் எண்ணிக்கை 12 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்ந்தது. இதன் மூலம், குவாமின்டாங்கின் போர்த்தந்திர முன்முயற்சி மக்கள் விடுதலைப் படையால் கைப்பற்றப்பட்டது.
எல்லா யுத்தகளங்களிலும் குவாமின்டாங் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இது பிற்போக்கு குவாமின்டாங்கின் வகை மாதிரி அராஜகத்துக்கு பலத்த அடி கொடுத்தது. இறுதி ஆராய்ச்சியில், குவாமின்டாங், கம்யூனிஸ்ட்டுக ளால் தலைமை தாங்கப்படும் மக்கள் விடுதலைப் படையின் ஆற்றல் மற்றும் போர்த்தந்திரத்தை புரிந்து கொள்ள படுமோசமாக தவறிவிட்டது.
குவாமின்டாங்கின் ராணுவரீதியான நெருக்கடி, தீவிரமான பொருளாதார நெருக்கடியோடும் இணைந்து கொண்டது. குவாமின்டாங் செல்வாக்கு பகுதிகள் அய்க்கிய அமெரிக்காவின் காலனியாக வளர்ந்து வருவதோடு இணைந்து, கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சிவில் யுத்தத்தின் தாக்கமும் இதற்கு பங்களிப்பு செய்திருந்தது.
ஜப்பான் அடிபணிந்த பிறகு, குவாமின்டாங், பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியதோடு, அய்க்கிய அமெரிக்காவின் கடன் மற்றும் நிவாரணத்தையும் பெற்றது. இதன் கூடவே, ஜப்பான் மற்றும் அதன் அடிமை நாடுகளின் ராணுவ தளவாடங்களையும் பெரு மளவில் கைப்பற்றியது. இந்த அர்த்தத்தில் இது குவாமின்டாங்குக்கு பொற்காலமாகும். ஜூலை 1947 வரை, அய்க்கிய அமெரிக்கா, கிட்டத்தட்ட 4000 அமெரிக்க டாலர் பெறுமான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை அளித்தது. மேலும் குவாமின்டாங் அரசாங்கம் ஜப்பானின் பெரும்தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களையும் கையகப்படுத்தியது.
அய்க்கிய அமெரிக்க புள்ளிவிவரப்படி இதன் மதிப்பு 1800 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஜப்பான் சரணடைந்த பின் குவாமின்டாங் ஆட்சி மூலம் சீன தொழிற்சாலைகளிலிருந்து 70 - 80% அதிகாரத்துவ மூலதனம் கைப்பற்றப்பட்டு, அதை 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். குவாமின்டாங் செல்வாக்குப் பகுதிகளிலிருந்து அமெரிக்காவின் தீர்மானகரமான ஆதரவு பெற்ற சீன அதிகாரத்துவ மூலதனம் சீனாவை அதன் காலனியாக மாற்ற முயற்சித்ததோடு, சோவியத் யூனியனுக்கு எதிரான ராணுவ தளமாகவும் பயன்படுத்திக் கொண்டது. மேலும் சீனாவில் கம்யூனிச எதிர்ப்பு சிவில் யுத்தத்தை ஆதரிப்பதும் அதன் நோக்கமாக இருந்தது.
ஜப்பான் சரணடைந்த பிறகு, வெளிப் படையாகவும், செயல்தந்திரரீதியாகவும் அய்க்கிய அமெரிக்காவோடு பல்வேறு துரோக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டது. சீனாவில் அமெரிக்க இறக்குமதி 1946ல் 51.2%. (இது 1936ல் 22.6% இருந்தது) அமெரிக்காவுக்கு சீனத்தின் ஏற்றுமதி 1946ல் 57.2% (1937ல் 19.7%ஆக இருந்தது) என்ற அளவுக்கு சென்றது.
சிவில் யுத்தத்தால் விளைந்த கடுமையான நெருக்கடி காரணமாக மக்கள் மீது கொடிய முறையில் வரி விதிப்பு செய்யப்பட்டது. 1947ல் விலைவாசி உயர்வு, ஜப்பான் யுத்தத்திற்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது 60,000 மடங்கு ஊதி பெருகியிருந்தது.
குவாமின்டாங் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சிவில் யுத்தத்தில் இருந்ததால், தேசிய தொழில் மற்றும் வர்த்தகத்தில் பலத்த அடி விழுந்தது. ஷாங்காய் பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் 5400 என்ற அளவில் இருந்த தொழிற்சாலைகள், 1947ல் 582 ஆக குறைந்துவிட்டது. குவாமின்டாங் ஆளுகை பகுதிகளில் விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளாகி பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் குவாமின்டாங் அரசியல் கருத்துப் பரிமாற்ற மாநாட்டு முடிவுகளை நிராகரிப்பது என்ற தனது நிலைப்பாட்டை மறுஉறுதி செய்து, 1946, நவம்பரில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் போலியான அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது. இந்த அரசியலமைப்பில் மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மொத்த அதிகாரமும் அரசாங்கத்துக்குத்தான். அதுவும் உள்ளாட்சிகளுக்கல்ல, மத்திய அரசுக்கு மட்டும்தான்.
சமூக நிலைத்தன்மையை பராமரிப்பதில் ஆர்வம் என்று சொல்லி ‘அவசரநிலை’ காலத்தில் மக்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. உள்ளூர் மட்டத்தில் சுயாட்சி மற்றும் சிறுபான்மையினருக்கான சுயாட்சி ஆகிய கொள்கைகள் அரசியலமைப்பு சட்டத்தால் நிராகரிக்கப்பட்டன. இந்தப் போலி அரசியல மைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே, 1947 ஏப்ரல் 18 அன்று குவாமின்டாங் அரசாங்க மறு சீரமைப்பை அறிவித்தது.
சியாங்கே ஷெக் இந்த அரசு ‘தாராளமான’ அரசு என வெட்கக்கேடாக அறிவித்தது அரசியலமைப்பு சட்ட அரசாங்கத்தின் துவக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது. பல கட்சி அரசாங்கத்தில் இளைஞர் கட்சி மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி (சீன ஜனநாயக லீக் கட்சியிலிருந்து பிரிந்தது) ஆகிய இரண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டன. குவாமின்டாங் அரசாங்கத்தில் ராணுவ சர்வாதிகாரிகளும், கட்சி தலைவர்களும், பணக்காரர்கள் மற்றும் மில்லியனர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். சியாங்கின் சர்வாதிகாரத்தை மறைக்க, விலை கொடுத்து வாங்கப்பட்ட, உடைந்த குழுக்களான இளைஞர் கட்சி மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி ஆகியவை திரையாக பயன்படுத்தப்பட்டன.
1947 செப்டம்பரில் குவாமின்டாங்கில் பதவி பெறும் பிரச்சனையில் ஜனநாயக சோசலிச கட்சி மீண்டும் பிளவு பெற்றது. குவாமின்டாங் எல்லா பிரிவுகளையும் அரசாங்கத்தில் அனுசரித்தது. 1947, நவம்பரில் குவாமின்டாங் அரசாங்கம் அய்க்கிய அமெரிக்காவிடம் 4 வருட தவணையில் நிதி கேட்டு கோரிக்கை வைத்தது. உதவியை உத்தரவாதம் செய்ய, மொத்த பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் அய்க்கிய அமெரிக்க ஆலோசகர் ஒருவரை நியமிக்கவும் குவாமின்டாங் ஒப்புதல் தந்தது. 1948 மார்ச்சில் குவாமின்டாங் அரசாங்கத்துக்கு 570 மில்லியன் டாலர் உதவி அளிப்பதற்கான தீர்மானத்தை அய்க்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியது.
இன்னொருபுறம், 1946 – 1947, கால கட்டத்தில் குவாமின்டாங்கின் அரசியல் திவால் தனம் மற்றும் அய்க்கிய அமெரிக்காவுக்கு சரண டையும் சியாங்கின் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக தேசபக்த இயக்கங்களின் அலையையும் சீனம் கண்டது.