இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுடன்
அஜாஸ் அஷ்ரஃப் நடத்திய நேர்காணல், லைவ் மின்ட், மே 5 2014.
கேஜ்ரிவாலை ஆதரிப்பது என்ற முடிவை இகக மாலெ ஏன் எடுத்தது? வாரணாசி தேர்தல் எந்த விதத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது?
வாரணாசியில் கேஜ்ரிவாலை ஆதரிப்பது என்ற எங்கள் முடிவு, 2014 வாரணாசி தேர்தல் தொடர்பாக உள்ள குறிப்பான அரசியல் பின்னணியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அதிகாரத்தை பிடிப்பதற்கான பாஜகவின் முயற்சி, தற்போதைய தேர்தலில், முழுக்க முழுக்க மோடியை மய்யங்கொண்ட பிரச்சாரமாக வடிவெடுத்துள்ளது.
தேசிய அளவில் தேர்தல்ரீதியான அங்கீகாரம் மற்றும் தலைமைக்கான தனது பாத்யதையை முன்னிறுத்த மோடி வாரணாசியை தேர்ந்தெடுத்துள்ளார். எனவே மோடியின் வாரணாசி பயணத்தை எதிர்ப்பதும் மோடி வகைப்பட்ட, கார்ப்பரேட்டுகளால் செலுத்தப்படுகிற மதவெறி அரசியலை அம்பலப்படுத்துவதும் சவாலுக்கு உட்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.
மோடி வாரணாசியை தேர்ந்தெடுத்திருப்பது அரசியல்ரீதியான அடையாளவாதம் நிறைந்ததும் ஆகும். இந்தியாவின் பல்கலாச்சார, பன்மைவாத மரபை மிகவும் நெகிழ்ச்சியுடன் தட்டியெழுப்பச் செய்யும் விதம் முன்வைப்பதன் முழுவடிவமாக இருக்கிற நகரம் வாரணாசி. இந்த மரபை சிதைவுக்கு உள்ளாக்கி அதற்கு மதவெறி திருப்பம் தர சங் பரிவார் முயற்சி செய்கிறது. சங் பரிவாரின் அயோத்தி நோக்கிய பயணத்தின்போது, அயோத்தி, காசி மற்றும் மதுராவின் முன்னோட்டம் மட்டுமே என்ற முழக்கத்தை நாம் அடிக்கடி கேட்டோம்.
மோடி வேட்பு மனு தாக்கல் செய்ததை ஒட்டி நடந்த பேரணியில் நாம் இன்னும் ஓர் ஆபத்தான கூக்குரலை கேட்டோம். உத்தரபிரதேசத்தில் குஜராத் நிகழ்த்தப்படும். அது காசியில் இருந்து துவங்கும். முசாபர்நகர் படுகொலைகள் நடந்துள்ள பின்னணியில், இது போன்ற முழக்கங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி ஆபத்தான் அதிர்வலைகள் கொண்டுள்ளன.
எல்லா விசயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, ஜனநாயகம் விரும்பும் அனைவரும், மக்கள் இயக்கங்களும், வாரணாசியில் மோடியின் மதவெறி எதேச்சதிகார பிரச்சாரத்துக்கு எதிராக துணிச்சலான போராட்டத்தை முன்நிறுத்தியாக வேண்டும். வாரணாசியில் போட்டியிடவுள்ளதாக கேஜ்ரிவால் அறிவித்தபோது, ஜனநாயகத்தை, நமது பன்மைவாத மரபை பாதுகாப்பது என்ற நோக்குநிலையில் இருந்து அவரை ஆதரிப்பது என்று முடிவு செய்தோம்.
கேஜ்ரிவால் வாரணாசியில் போட்டியிடாமல் இருந்திருந்தால் இகக மாலெ அங்கு போட்டியிட்டு இருக்குமா?
வாரணாசி எங்கள் பட்டியலில் இல்லை. சந்தோலி, ராபர்ட்ஸ்கஞ்ச் மற்றும் மீர்சாபூர் போன்ற, இந்த பிராந்தியத்தின் வேறு தொகுதிகளில் நாங்கள் கவனம் குவித்துள்ளோம். ஆனால், கேஜ்ரிவால் வாரணாசியில் போட்டியிடாமல் இருந்திருந்தால், நாங்கள் எங்கள் வேட்பாளரை நிறுத்துவது பற்றியோ அல்லது மோடிக்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரிப்பது பற்றியோ நாங்கள் யோசித்திருக்கலாம்.
இககமாவும் வாரணாசியில் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. இககமா போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
வாரணாசியில் போட்டியிடும் இககமாவின் முடிவை நான் மதிக்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு இககமாவின் ஆதரவு வேண்டும் என்றால் அதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைமைதான் இககமா தலைமையை அணுக வேண்டும். ஆனால் இப்போது அதற்கு காலம் கடந்துவிட்டதாக நான் கருதுகிறேன். இது ஆம் ஆத்மி கட்சி சந்திக்கும் முதல் மக்களவை தேர்தல். எனவே எத்தனை வேட்பாளர்களை நிறுத்த முடியுமோ அத்தனை வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் இருத்தலை பரவலாக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஒரு கட்சியையோ, ஓர் இயக்கத்தையோ கட்டியெழுப்புவதற்கான காத்திரமான முயற்சியை இது உண்மையில் பிரதிபலிக்கவில்லை. தேர்தல்கள் முடிந்த பிறகு ஆம் ஆத்மி கட்சி கூட சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான நிறைய விசயங்களை பெற்றிருக்கும் என்று நான் உறுதியாக சொல்ல முடியும்.
ஆம் ஆத்மி கட்சி போன்ற ஒரு கட்சி வெகுமக்கள் கற்பனையை பற்றிக்கொண்டது போல், இடதுசாரிகள் செய்ய முடியவில்லையே, ஏன்?
டில்லியில் அதன் முதல் முயற்சியிலேயே ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் கண்கவர் வெற்றி பெற்றது உண்மைதான். பிற இடங்களிலும் வெகுமக்கள் கற்பனையை பற்றிக் கொள்ள இது உதவியது. கடந்த காலத்திலும், இப்போதும், பல்வேறு கட்டங்களில், டில்லியின் பெருநகர சூழலை விட சிக்கலான, கடினமான தளங்களில், இடதுசாரிகளின் பல்வேறு பிரிவினரும் மக்கள் கற்பனையை பற்றிக்கொண்டுள்ளனர். மக்கள் கற்பனையை பற்றிக் கொள்வது, அவர்கள் நம்பிக்கையை, விருப்பங்களை தட்டியெழுப்புவது ஆகியவற்றை, மக்கள் நலன்களுக்காக சேவை செய்வது, அவர்கள் உரிமைகளைப் பெறுவது, விரிவாக்குவது என்ற இன்னும் பெரிய தளத்தில் இருந்து பார்க்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் பயணம் இப்போதுதான் துவங்கியுள்ளது. மக்கள் நலன்களுக்காக சேவை செய்யும் அதன் ஆற்றல், மிகவும் முக்கியமாக, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் அநீதியின் ஆழப்பரவியுள்ள கட்டமைப்புகள் மற்றும் வடிவங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் அதன் ஆற்றல் மற்றும் தயார்நிலை ஆகியவை இன்னும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
மேற்கு வங்கத்திலோ, தேசிய அரசியலிலோ, இககமா தலைமையிலான மாதிரி சரிந்துவிட்டதைத் தொடர்ந்து, நாட்டின் இடதுசாரி இயக்கம் ஒரு சவால்மிக்க மாறிச்செல்கிற, மறுதிசை வழியிலான கட்டத்தின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த சூழலிலும் பின்னணியிலும், இககமாலெயும் அதனுடன் இணைந்துள்ள பல்வேறு வெகுமக்கள் அமைப்புக்களும் ஜனநாயக இயக்கத்தை முன்னகர்த்துவதில், புரட்சிகர பதாகையை உயர்த்திப் பிடிப்பதில் ஒரு முக்கியமான பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த கட்டத்தில் நிகழ்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி, உண்மையில் ஒரு சுவாரசியமான நிகழ்வே. இது பலப்பல சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளது. கார்ப்பரேட் சூறையாடல், ஜனநாயகம் கார்ப்பரேட்டுகளால் சீர்குலைக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரானப் போராட்டம் தீவிரமடையும்போது, புரட்சிகர இடதுசாரிகளும் ஆம் ஆத்மி கட்சியும் தங்கள் நிலைகளை மதிப்பிட்டுக் கொண்டு, பொருளுள்ள ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகளை கண்டறிய வேண்டும்.
தங்கள் இயல்பான சமூக அடித்தளம் என்று இடதுசாரிகள் கருதும் மக்கள் மத்தியில் உள்ள நுகர்வுவாத கலாச்சாரத்தை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?
உலகமயமாகிக் கொண்டிருக்கிற இந்திய பொருளாதாரம், தகுதிபெற்ற நுகர்வாளர்கள் என்று கருதாத கிராமப்புற வறியவர்களும் உழைக்கும் மக்களின் அமைப்புசாரா பிரிவினரும்தான் இன்னும் கூட இடதுசாரி இயக்கத்தின் மேலோங்கிய சமூக அடித்தளம். அவர்களுடைய நுகர்வு தேவைகள் அடிப்படை தேவைகளால் செலுத்தப்படுபவையே தவிர, ஆடம்பரத்தாலோ, பேராசையாலோ செலுத்தப்படுபவை அல்ல.
எப்போதும் விரிவடைந்து கொண்டே இருக்கிற நடுத்தர வர்க்கத்தின் செழிப்பு என்ற புனைவை முன்னகர்த்துவதற்கு மாறாக, ஆடம்பர மேட்டுக்குடி வாழ்க்கை முறைகள் கொண்ட உச்சியில் இருக்கிற ஒரு சிறு பிரிவு அதிபணக்காரர்கள் ஒருபுறமும், தேவைக்கு நுகர முடியாத நிலை தீவரப்படுவது, திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்கிற அரசின், சந்தையின் கிடுக்கிப்பிடி தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிற உழைக்கும் மக்களின் மேலோங்கிய பெரும்பான்மை மறுபுறமும் என சமூகத்தை மூலதனம் இன்று துருவப்படுத்துகிறது.
நாம் எதிர்கொள்கிற அதீத சமத்துவமின்மையும், பெருமளவிலான சுற்றப்புறச் சூழல் பேரழிவும், நிச்சயம், ஒரு பெரிய சமூக, அரசியல், கலாச்சார கடைதலை உருவாக்கும். நுகர்வாத ஆபத்துக்களைப் பற்றி கவலைப்படுவதைவிட, இந்த கடைதலில் இருந்து பெருமளவில் ஆதாயம் அடைவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
அஜாஸ் அஷ்ரஃப் நடத்திய நேர்காணல், லைவ் மின்ட், மே 5 2014.
கேஜ்ரிவாலை ஆதரிப்பது என்ற முடிவை இகக மாலெ ஏன் எடுத்தது? வாரணாசி தேர்தல் எந்த விதத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது?
வாரணாசியில் கேஜ்ரிவாலை ஆதரிப்பது என்ற எங்கள் முடிவு, 2014 வாரணாசி தேர்தல் தொடர்பாக உள்ள குறிப்பான அரசியல் பின்னணியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அதிகாரத்தை பிடிப்பதற்கான பாஜகவின் முயற்சி, தற்போதைய தேர்தலில், முழுக்க முழுக்க மோடியை மய்யங்கொண்ட பிரச்சாரமாக வடிவெடுத்துள்ளது.
தேசிய அளவில் தேர்தல்ரீதியான அங்கீகாரம் மற்றும் தலைமைக்கான தனது பாத்யதையை முன்னிறுத்த மோடி வாரணாசியை தேர்ந்தெடுத்துள்ளார். எனவே மோடியின் வாரணாசி பயணத்தை எதிர்ப்பதும் மோடி வகைப்பட்ட, கார்ப்பரேட்டுகளால் செலுத்தப்படுகிற மதவெறி அரசியலை அம்பலப்படுத்துவதும் சவாலுக்கு உட்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.
மோடி வாரணாசியை தேர்ந்தெடுத்திருப்பது அரசியல்ரீதியான அடையாளவாதம் நிறைந்ததும் ஆகும். இந்தியாவின் பல்கலாச்சார, பன்மைவாத மரபை மிகவும் நெகிழ்ச்சியுடன் தட்டியெழுப்பச் செய்யும் விதம் முன்வைப்பதன் முழுவடிவமாக இருக்கிற நகரம் வாரணாசி. இந்த மரபை சிதைவுக்கு உள்ளாக்கி அதற்கு மதவெறி திருப்பம் தர சங் பரிவார் முயற்சி செய்கிறது. சங் பரிவாரின் அயோத்தி நோக்கிய பயணத்தின்போது, அயோத்தி, காசி மற்றும் மதுராவின் முன்னோட்டம் மட்டுமே என்ற முழக்கத்தை நாம் அடிக்கடி கேட்டோம்.
மோடி வேட்பு மனு தாக்கல் செய்ததை ஒட்டி நடந்த பேரணியில் நாம் இன்னும் ஓர் ஆபத்தான கூக்குரலை கேட்டோம். உத்தரபிரதேசத்தில் குஜராத் நிகழ்த்தப்படும். அது காசியில் இருந்து துவங்கும். முசாபர்நகர் படுகொலைகள் நடந்துள்ள பின்னணியில், இது போன்ற முழக்கங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி ஆபத்தான் அதிர்வலைகள் கொண்டுள்ளன.
எல்லா விசயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, ஜனநாயகம் விரும்பும் அனைவரும், மக்கள் இயக்கங்களும், வாரணாசியில் மோடியின் மதவெறி எதேச்சதிகார பிரச்சாரத்துக்கு எதிராக துணிச்சலான போராட்டத்தை முன்நிறுத்தியாக வேண்டும். வாரணாசியில் போட்டியிடவுள்ளதாக கேஜ்ரிவால் அறிவித்தபோது, ஜனநாயகத்தை, நமது பன்மைவாத மரபை பாதுகாப்பது என்ற நோக்குநிலையில் இருந்து அவரை ஆதரிப்பது என்று முடிவு செய்தோம்.
கேஜ்ரிவால் வாரணாசியில் போட்டியிடாமல் இருந்திருந்தால் இகக மாலெ அங்கு போட்டியிட்டு இருக்குமா?
வாரணாசி எங்கள் பட்டியலில் இல்லை. சந்தோலி, ராபர்ட்ஸ்கஞ்ச் மற்றும் மீர்சாபூர் போன்ற, இந்த பிராந்தியத்தின் வேறு தொகுதிகளில் நாங்கள் கவனம் குவித்துள்ளோம். ஆனால், கேஜ்ரிவால் வாரணாசியில் போட்டியிடாமல் இருந்திருந்தால், நாங்கள் எங்கள் வேட்பாளரை நிறுத்துவது பற்றியோ அல்லது மோடிக்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரிப்பது பற்றியோ நாங்கள் யோசித்திருக்கலாம்.
இககமாவும் வாரணாசியில் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. இககமா போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
வாரணாசியில் போட்டியிடும் இககமாவின் முடிவை நான் மதிக்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு இககமாவின் ஆதரவு வேண்டும் என்றால் அதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைமைதான் இககமா தலைமையை அணுக வேண்டும். ஆனால் இப்போது அதற்கு காலம் கடந்துவிட்டதாக நான் கருதுகிறேன். இது ஆம் ஆத்மி கட்சி சந்திக்கும் முதல் மக்களவை தேர்தல். எனவே எத்தனை வேட்பாளர்களை நிறுத்த முடியுமோ அத்தனை வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் இருத்தலை பரவலாக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஒரு கட்சியையோ, ஓர் இயக்கத்தையோ கட்டியெழுப்புவதற்கான காத்திரமான முயற்சியை இது உண்மையில் பிரதிபலிக்கவில்லை. தேர்தல்கள் முடிந்த பிறகு ஆம் ஆத்மி கட்சி கூட சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான நிறைய விசயங்களை பெற்றிருக்கும் என்று நான் உறுதியாக சொல்ல முடியும்.
ஆம் ஆத்மி கட்சி போன்ற ஒரு கட்சி வெகுமக்கள் கற்பனையை பற்றிக்கொண்டது போல், இடதுசாரிகள் செய்ய முடியவில்லையே, ஏன்?
டில்லியில் அதன் முதல் முயற்சியிலேயே ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் கண்கவர் வெற்றி பெற்றது உண்மைதான். பிற இடங்களிலும் வெகுமக்கள் கற்பனையை பற்றிக் கொள்ள இது உதவியது. கடந்த காலத்திலும், இப்போதும், பல்வேறு கட்டங்களில், டில்லியின் பெருநகர சூழலை விட சிக்கலான, கடினமான தளங்களில், இடதுசாரிகளின் பல்வேறு பிரிவினரும் மக்கள் கற்பனையை பற்றிக்கொண்டுள்ளனர். மக்கள் கற்பனையை பற்றிக் கொள்வது, அவர்கள் நம்பிக்கையை, விருப்பங்களை தட்டியெழுப்புவது ஆகியவற்றை, மக்கள் நலன்களுக்காக சேவை செய்வது, அவர்கள் உரிமைகளைப் பெறுவது, விரிவாக்குவது என்ற இன்னும் பெரிய தளத்தில் இருந்து பார்க்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் பயணம் இப்போதுதான் துவங்கியுள்ளது. மக்கள் நலன்களுக்காக சேவை செய்யும் அதன் ஆற்றல், மிகவும் முக்கியமாக, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் அநீதியின் ஆழப்பரவியுள்ள கட்டமைப்புகள் மற்றும் வடிவங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் அதன் ஆற்றல் மற்றும் தயார்நிலை ஆகியவை இன்னும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
மேற்கு வங்கத்திலோ, தேசிய அரசியலிலோ, இககமா தலைமையிலான மாதிரி சரிந்துவிட்டதைத் தொடர்ந்து, நாட்டின் இடதுசாரி இயக்கம் ஒரு சவால்மிக்க மாறிச்செல்கிற, மறுதிசை வழியிலான கட்டத்தின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த சூழலிலும் பின்னணியிலும், இககமாலெயும் அதனுடன் இணைந்துள்ள பல்வேறு வெகுமக்கள் அமைப்புக்களும் ஜனநாயக இயக்கத்தை முன்னகர்த்துவதில், புரட்சிகர பதாகையை உயர்த்திப் பிடிப்பதில் ஒரு முக்கியமான பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த கட்டத்தில் நிகழ்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி, உண்மையில் ஒரு சுவாரசியமான நிகழ்வே. இது பலப்பல சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளது. கார்ப்பரேட் சூறையாடல், ஜனநாயகம் கார்ப்பரேட்டுகளால் சீர்குலைக்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரானப் போராட்டம் தீவிரமடையும்போது, புரட்சிகர இடதுசாரிகளும் ஆம் ஆத்மி கட்சியும் தங்கள் நிலைகளை மதிப்பிட்டுக் கொண்டு, பொருளுள்ள ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகளை கண்டறிய வேண்டும்.
தங்கள் இயல்பான சமூக அடித்தளம் என்று இடதுசாரிகள் கருதும் மக்கள் மத்தியில் உள்ள நுகர்வுவாத கலாச்சாரத்தை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?
உலகமயமாகிக் கொண்டிருக்கிற இந்திய பொருளாதாரம், தகுதிபெற்ற நுகர்வாளர்கள் என்று கருதாத கிராமப்புற வறியவர்களும் உழைக்கும் மக்களின் அமைப்புசாரா பிரிவினரும்தான் இன்னும் கூட இடதுசாரி இயக்கத்தின் மேலோங்கிய சமூக அடித்தளம். அவர்களுடைய நுகர்வு தேவைகள் அடிப்படை தேவைகளால் செலுத்தப்படுபவையே தவிர, ஆடம்பரத்தாலோ, பேராசையாலோ செலுத்தப்படுபவை அல்ல.
எப்போதும் விரிவடைந்து கொண்டே இருக்கிற நடுத்தர வர்க்கத்தின் செழிப்பு என்ற புனைவை முன்னகர்த்துவதற்கு மாறாக, ஆடம்பர மேட்டுக்குடி வாழ்க்கை முறைகள் கொண்ட உச்சியில் இருக்கிற ஒரு சிறு பிரிவு அதிபணக்காரர்கள் ஒருபுறமும், தேவைக்கு நுகர முடியாத நிலை தீவரப்படுவது, திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்கிற அரசின், சந்தையின் கிடுக்கிப்பிடி தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிற உழைக்கும் மக்களின் மேலோங்கிய பெரும்பான்மை மறுபுறமும் என சமூகத்தை மூலதனம் இன்று துருவப்படுத்துகிறது.
நாம் எதிர்கொள்கிற அதீத சமத்துவமின்மையும், பெருமளவிலான சுற்றப்புறச் சூழல் பேரழிவும், நிச்சயம், ஒரு பெரிய சமூக, அரசியல், கலாச்சார கடைதலை உருவாக்கும். நுகர்வாத ஆபத்துக்களைப் பற்றி கவலைப்படுவதைவிட, இந்த கடைதலில் இருந்து பெருமளவில் ஆதாயம் அடைவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.