கார்ப்பரேட் நிறுவனங்களின் கைமாற்று விளையாட்டில், 7500 நோக்கியா தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். 7500 தமிழகக் குடும்பங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் துவங்க பல்வேறு வசதிகளை செய்து தந்து, சலுகைகள், விலக்குகள் பல தர, தொழிலாளர் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகக் கூட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் அரசாங்கங்கள், அந்த நிறுவனங்களில் வேலை செய்யப் போகிற தொழிலாளர் நலன்காக்க, அந்த நிறுவனங்களுக்கு சலுகைகளும் விலக்குகளும் வழங்கி உருவாக்கிய வேலை வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள, அந்த நிறுவனங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை.
மத்திய அரசுக்கு ரூ.22,000 கோடி வரி பாக்கி, மாநில அரசுக்கு ரூ.2,400 கோடி வரி பாக்கி என்று கடைசி நேர கணக்கு சொல்லி, திருபெரும்புதூர் நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மாற்றுவது முடியாமல் போனது.
நோக்கியாவின் இளம் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்ப நோக்கியா நிர்வாகம் முயற்சி செய்கிறது. 25 வயதே ஆகிற தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வா? 66 வயதாகிற ஜெயலலிதா பிரதமராகிவிட முயற்சி செய்கிறார். 90 வயதாகிற கருணாநிதி திமுகவுக்கு வாக்களித்தால் இன்னும் 50 ஆண்டுகள் அரசியலில் தொடர ஆசை என்கிறார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மூன்று மாதங்களுக்கும் மேலாக கொதித்துக் கொண்டிருக்கிற இந்தப் பிரச்சனை பற்றி, 7500 இளம் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பங்கள் பற்றி இன்னும் ஏதும் பேசவில்லை. நோக்கியா தொழிலாளர் வேலை வாய்ப்பு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசு இதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் ஏஅய்சிசிடியு மே 9 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
கோவை: பிரிக்கால் பிளாண்ட் 1, பிளாண்ட் 3 வாயில்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டங்களில் பிரிக்கால் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சுரேஷ்பாபு, சுவாமிநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் உரையாற்றினார்கள். சாந்தி கியர்ஸ் வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு நிர்வாகிகள் தோழர்கள் கோபால்சாமி, பாலமுருகன், ஆனந்தன் உரையாற்றினார்கள். 1000 தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
சென்னை: காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஏ.ஆர்.பாலகிருஷ்ணன், உரையாற்றினார். திருபெரும்புதூர் ஏசியன் பெயின்ட்ஸ் ஆலை வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர்கள் ராஜேஷ், மகேஷ், ராஜன், உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த ஆர்ப்பட்டத்தில் ஓஎல்ஜி, சாய்மீரா, டிஜேபி, இன்னோவேட்டர்ஸ், கிளைமேக்ஸ், மெர்குரிபிட்டிங்க்ஸ், ஜெய் இஞ்சினியரிங் தொழிற்சாலைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர், ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் கே.வேணுபோபால், எஸ்.பாலகிருஷணன், ஜி.முனுசாமி, ஆர்.மோகன், பகுதி நிர்வாகிகள் தோழர்கள் ஜோசப், வீரராகவன், சுந்தரராஜ், ஆனந்தன், வரதராஜன், தனசேகர் கண்டன உரையாற்றினர்.
நெல்லை: ஆர்ப்பாட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கா.கணேசன் தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், மாநில துணைத் தலைவர் தோழர் ஜி.ரமேஷ் கோரிக்கையை விளக்கிப் பேசினார்கள். ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் அன்புச்செல்வி, சுந்தர்ராஜ், சேக்முகமது, திலகவதி, சுப்பிரமணியன், ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
நாமக்கல்: குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் கே.கோவிந்தராஜ், நாமக்கல் மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் தோழர்கள் எஸ்.சுப்பிரமணியன், பொன்.கதிரவன், கே.ஆர்.குமாரசாமி, ஆர்.எம்.ராஜ÷ ஆகியோர் உரையாற்றினார்கள்.
கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஜி.ரமேஷ்
மத்திய அரசுக்கு ரூ.22,000 கோடி வரி பாக்கி, மாநில அரசுக்கு ரூ.2,400 கோடி வரி பாக்கி என்று கடைசி நேர கணக்கு சொல்லி, திருபெரும்புதூர் நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மாற்றுவது முடியாமல் போனது.
நோக்கியாவின் இளம் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்ப நோக்கியா நிர்வாகம் முயற்சி செய்கிறது. 25 வயதே ஆகிற தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வா? 66 வயதாகிற ஜெயலலிதா பிரதமராகிவிட முயற்சி செய்கிறார். 90 வயதாகிற கருணாநிதி திமுகவுக்கு வாக்களித்தால் இன்னும் 50 ஆண்டுகள் அரசியலில் தொடர ஆசை என்கிறார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மூன்று மாதங்களுக்கும் மேலாக கொதித்துக் கொண்டிருக்கிற இந்தப் பிரச்சனை பற்றி, 7500 இளம் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பங்கள் பற்றி இன்னும் ஏதும் பேசவில்லை. நோக்கியா தொழிலாளர் வேலை வாய்ப்பு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசு இதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் ஏஅய்சிசிடியு மே 9 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
கோவை: பிரிக்கால் பிளாண்ட் 1, பிளாண்ட் 3 வாயில்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டங்களில் பிரிக்கால் சங்க நிர்வாகிகள் தோழர்கள் சுரேஷ்பாபு, சுவாமிநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் உரையாற்றினார்கள். சாந்தி கியர்ஸ் வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு நிர்வாகிகள் தோழர்கள் கோபால்சாமி, பாலமுருகன், ஆனந்தன் உரையாற்றினார்கள். 1000 தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
சென்னை: காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஏ.ஆர்.பாலகிருஷ்ணன், உரையாற்றினார். திருபெரும்புதூர் ஏசியன் பெயின்ட்ஸ் ஆலை வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர்கள் ராஜேஷ், மகேஷ், ராஜன், உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த ஆர்ப்பட்டத்தில் ஓஎல்ஜி, சாய்மீரா, டிஜேபி, இன்னோவேட்டர்ஸ், கிளைமேக்ஸ், மெர்குரிபிட்டிங்க்ஸ், ஜெய் இஞ்சினியரிங் தொழிற்சாலைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர், ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் கே.வேணுபோபால், எஸ்.பாலகிருஷணன், ஜி.முனுசாமி, ஆர்.மோகன், பகுதி நிர்வாகிகள் தோழர்கள் ஜோசப், வீரராகவன், சுந்தரராஜ், ஆனந்தன், வரதராஜன், தனசேகர் கண்டன உரையாற்றினர்.
நெல்லை: ஆர்ப்பாட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கா.கணேசன் தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், மாநில துணைத் தலைவர் தோழர் ஜி.ரமேஷ் கோரிக்கையை விளக்கிப் பேசினார்கள். ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் அன்புச்செல்வி, சுந்தர்ராஜ், சேக்முகமது, திலகவதி, சுப்பிரமணியன், ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
நாமக்கல்: குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் கே.கோவிந்தராஜ், நாமக்கல் மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் தோழர்கள் எஸ்.சுப்பிரமணியன், பொன்.கதிரவன், கே.ஆர்.குமாரசாமி, ஆர்.எம்.ராஜ÷ ஆகியோர் உரையாற்றினார்கள்.
கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஜி.ரமேஷ்