சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தி முடிப்பதை மக்கள் விடுதலைப்படை அறுதியிட்ட பின்பும் கூட, தேசிய முதலாளிகளின் ஒரு பிரிவினரும், குவாமின்டாங் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளின் மேல்தட்டு அறிவுஜீவிகளும் புரட்சியின் எதிர்காலம் பற்றி சந்தேகம் கொண்டிருந்தனர்.
அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் குவாமின்டாங் பற்றி இன்னும் மாயை கொண்டிருந்தனர். (அவர்களின் வகை மாதிரி பிரதிநிதிகளாக ஷங் போஷென் மற்றும் லோலுங்ஷி ஆகியோர் இருந்தனர்). அவர்கள் தங்களை ‘நடுநிலையாளர்கள், சுதந்திரமானவர்கள், மூன்றாம் கட்சி’ என்ற தோற்றம் காட்டி, புரட்சிக்கும் எதிர் புரட்சிக்குமிடையிலான சீர்திருத்தவாத மய்ய வழி என்று சொல்லி ‘சீன ஜனநாயக லீக்’ அமைப்பை ஏற்படுத்தினர்.
ஆனால் குவாமின்டாங்கின் வளர்ந்து வரும் பயங்கரவாத ஆட்சி ‘லீக்’ அமைப் பையும் கூட தடை செய்து தகர்த்தது. இது மூன்றாம் கட்சியின் திவால்தனத்தை அம்பலப்படுத்தியது. ஜனநாயக அமைப்பின் ஒரு பிரிவு குவாமின்டாங்கின் புரட்சிகர கமிட்டியாக மறு வடிவம் பெற்றது. இன்னொரு பிரிவு, குறிப்பாக ஜனநாயக லீக்கின் தலைமை (தலைமையகத்தை ஹாங்காங்குக்கு மாற்றி) சீன கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலை எடுத்தது.
மக்கள் விடுதலைப் படை தனது தாக்குதல் அழுத்தம் காரணமாக, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து, பல நகரங்கள் உட்பட பல பகுதிகளையும் கைப்பற்றி, 3 கோடி மக்கள் பிரிவினரை உள்ளடக்கிய மத்திய சீனத்தின் சமவெளி பகுதிகளில் பரந்த விடுதலை செய்யப்பட்ட பகுதியை உருவாக்கியது. அப்போது, விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் மொத்தமாக 16 கோடி பேர் இருந்தனர். பல நடுத்தர நகரங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டன.
ஏகபோக அதிகாரவர்க்க மூலதனத்தைக் கைப்பற்றுவது, தொழிற்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி முறையைத் தொடர்வது, கவுரவம் மற்றும் உயர் வாழ்நிலைகளை உறுதிப்படுத்த அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக சீர்திருத்தங்களை நகரங்களிலும், நகர்ப்புறத்திலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. குவாமின்டாங்குக்கு தீர்மானகரமான அடி கொடுக்க மக்கள் விடுதலைப்படையின் தாக்குதல் கட்டத்தில் லியோஷி - ஷென்யாங், ஹ÷வாய் - ஹாய், பெய்ஜிங் - டியன்சின் ஆகிய மூன்று பகுதிகளில் நடவடிக்கைகளை மக்கள் விடுதலைப்படை எடுத்தது.
வடகிழக்கு சீனத்தில் 1948 செப்டம்பர் 12 முதல் நவம்பர் 2 வரை லியோசி-ஷென்யாங் நடவடிக்கையை மக்கள் விடுதலைப்படை கட்டமைத்தது. ஷின்ஷயோவை கைப்பற்றியதன் மூலம், வடகிழக்கு பகுதிக்கும், பெருஞ்சுவரின் தெற்குப் பகுதி வரையிலான குவாமின் டாங்கின் தொடர்புகள் மொத்தமாக அழிக்கப்பட்டது. அதன் பின்னர் ஷான் ஷீங் முழுமையாக விடுவிக்கப்பட்டு, இறுதியாக மொத்த வடகிழக்கு சீனமும் விடுவிக்கப்பட்டது.
கிழக்கு சீனத்தில், ஷான்டங் பிராந்தியத்தின் தலைநகரான சினானில் 16 செப்டம்பர் 1948ல் மக்கள் விடுதலைப்படை தனது நடவடிக்கையைத் துவங்கியது. இது 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாகும். இது குவாமின்டாங் படையின் முக்கிய பிரிவுகளை ஒழித்துக்கட்ட பங்களித்ததுடன், பெரும் நகரங்களை சுற்றி வளைத்து விடுவிப்பதின் துவக்கமாகவும் அமைந்தது.
டிசம்பர் 5, 1948 முதல் ஜனவரி 31, 1949 வரை பெய்ஜிங் - டியன்சின் நடவடிக்கையை மக்கள் விடுதலைப் படை கட்டமைத்தது. முதலில் ஷன்ங்ஷியா கோ வை கைப்பற்றியதைத் தொடர்ந்து தொழில் மற்றும் வர்த்தகத்தின் முன்னணி நகரங்களில் ஒன்றான டியன்சின் சுற்றி வளைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1.3 லட்சம் குவாமின்டாங் படைகள் அழித்தொழிக்கப்பட்டன. மற்றும் 2 லட்சம் துருப்புகள் அமைதியான முறையில் மக்கள் விடுதலைப்படையில் உள்வாங்கப்பட்டனர். ஜனவரி 31, 1949 அன்று சீனத்தின் பழமை வாய்ந்த தலைநகர் பெய்ஜிங் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
3 பெரும் நடவடிக்கைகளின் முடிவில், 15 லட்சம் குவாமின்டாங் படைகள் தகர்க்கப்பட்டு, மொத்த வடகிழக்குப் பகுதி, வடக்கு சீனத்தின் பெரும் பரப்பு, யாங்க்சியின் வடக்கில் பெரும் பகுதி ஆகியவை மக்கள் விடுதலைப் படையால் விடுதலை செய்யப்பட்டன. இது மக்கள் விடுதலைப்படைக்குத் தலைமை தாங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானகரமான ராணுவ வெற்றியை குறிப்பதாக அமைந்தது.
பெரும் தொல்லைகளையும், சிக்கலான சூழ்நிலையையும் எதிர்கொண்ட சியாங்கே ஷெக் 1949, புத்தாண்டில் அமைதிக்கான செய்தி ஒன்றை வெளியிட்டார். இருக்கின்ற நிலையை தொடர்வது என்பதே முன்மொழிதலின் முக்கிய அம்சமாக இருந்தது. அமைதி நடவடிக்கை என்ற பெயரில் நேரத்தை கடத்தி, குவாமின்டாங் படைகளை மறு அமைப்பாக்கி, மக்கள் விடுதலைப்படைக்கு எதிராக புதிய தாக்குதல் தொடுப்பது என்பதுதான் அதன் உண்மையான நோக்கமாகும்.
போர் குற்றவாளிகளுக்கு தண்டனை, நடந்து கொண்டிருக்கும் போலியான ஆட்சியின் செல்லுபடித் தன்மையை நீக்குவது, போலி அரசியல் சாசனத்தை மாற்றுவது, ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த பிற்போக்கு ராணுவத்தையும் மறு அமைப்பாக்குவது, அதிகாரவர்க்க மூலதனத்தைக் கைப்பற்றுவது, விவசாயச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது, தேசவிரோத ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை ரத்து செய்வது, ஜனநாயக கூட்டு அரசை அமைப்பதற்காக, பிற்போக்கு சக்திகளைத் தவிர்த்து, தேசிய அரசியல் சாசன மாநாட்டைக் கூட்டுவது ஆகியவை அடங்கிய 8 பதில் நிபந்தனைகளை பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
ஜனவரி 21, 1949ல் அமெரிக்க எஜமானர்களின் அறிவுரைப்படி, ஷியாங்கே ஷெக் தனது பதவி ஓய்வை அறிவித்து, துணைத் தலைவரான லிஷசுங் ஷென்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்ட வேலைப் பிரிவினை தவிர வேறல்ல. லிஷசுங் ஷென்னை அமைதி தூதுவராக காண்பித்துவிட்டு, ஷியாங், குவாமின்டாங் படைகளை மறு அமைப்பாக்குவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
லிஷசுங் ஷென், அமைதிக்கான செயல் முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 8 அம்ச நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதுபோல் தோற்றம் காட்டினார். அப்படியிருந்தபோதும், சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைதிக்கான பேச்சு வார்த்தை துவங்க ஒப்புக்கொண்டதோடு குவாமின்டாங்கின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்த பிற்போக்கு நான்கிங் அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தையில் அனுமதித்தது. 15 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் அமைதி செயல்பாட்டிற்கென்று, திருத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்தது.
(தவறுக்கு வருத்தம் தெரிவித்து), விடுதலைப் போரின் நலனிலிருந்து தேசத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் பங்கு பெற தயாராக இருப்பவர்களை போர்க்குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்து தரப்பட்டது) ஷியாங்கே ஷெக் மற்றும் அவரின் நம்பகமான துரோகிகள் தவிர மற்ற பிற்போக்கு சக்திகளுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் நான்கிங் அரசாங்கம் இந்த புதிய முன்மொழிதலை முழுமையாக நிராகரித்தது. இது குவாமின்டாங், எதிர் புரட்சிகர யுத்தத்தைத் தொடர்ந்து எடுத்து செல்வதன் தீய உள்நோக்கத்தை குறிப்பதாக இருந்தது.
ஏப்ரல் 21, 1949 முதல், மக்கள் விடுதலைப்படை யான்ங்கி ஆற்றைக் கடந்து மொத்த நாட்டையும் விடுவிக்க வடக்கு சீனம் நோக்கி முன்னேறியது. இந்தக் கடைசி நடவடிக்கையின் இயக்கப் போக்கிலும், உள்ளூர் குவாமின்டாங் அரசு மற்றும் அதன் துருப்புகளின் கோரிக்கை அடிப்படையில் உள்ளூர்மட்ட அமைதிகரமான தீர்வுகளுக்கு மக்கள் விடுதலைப் படை தயக்கம் காட்டவில்லை. பிற்போக்கு குவாமின்டாங்கின் 22 ஆண்டுகால பழமை வாய்ந்த மய்யமான நான்கிங்கை, யான்ங்சி ஆற்றைக் கடந்து பிடிக்க மக்கள் விடுதலைப்படை 3 நாட்களே எடுத்துக் கொண்டது. இந்த தீர்மானகரமான தாக்குதலுக்குப் பிறகு மற்றதெல்லாம் மக்கள் விடுதலைப் படைக்கு வெற்றிகளே. அக்டோபர் 1949ல் சீன மக்களின் தேசிய அரசியல் சாசன மாநாடு கூட்டப்பட்டு புதிய ஜனநாயக அரசாங்கத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
இவ்வகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட ஜனநாயக புரட்சி நிறைவுற்று சோசலிச புரட்சிக்கான தடையற்ற பாதை திறந்துவிடப்பட்டது.
அடுத்த பகுதியில் சீன புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதன் பல்வேறு அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.
புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தி முடிப்பதை மக்கள் விடுதலைப்படை அறுதியிட்ட பின்பும் கூட, தேசிய முதலாளிகளின் ஒரு பிரிவினரும், குவாமின்டாங் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளின் மேல்தட்டு அறிவுஜீவிகளும் புரட்சியின் எதிர்காலம் பற்றி சந்தேகம் கொண்டிருந்தனர்.
அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் குவாமின்டாங் பற்றி இன்னும் மாயை கொண்டிருந்தனர். (அவர்களின் வகை மாதிரி பிரதிநிதிகளாக ஷங் போஷென் மற்றும் லோலுங்ஷி ஆகியோர் இருந்தனர்). அவர்கள் தங்களை ‘நடுநிலையாளர்கள், சுதந்திரமானவர்கள், மூன்றாம் கட்சி’ என்ற தோற்றம் காட்டி, புரட்சிக்கும் எதிர் புரட்சிக்குமிடையிலான சீர்திருத்தவாத மய்ய வழி என்று சொல்லி ‘சீன ஜனநாயக லீக்’ அமைப்பை ஏற்படுத்தினர்.
ஆனால் குவாமின்டாங்கின் வளர்ந்து வரும் பயங்கரவாத ஆட்சி ‘லீக்’ அமைப் பையும் கூட தடை செய்து தகர்த்தது. இது மூன்றாம் கட்சியின் திவால்தனத்தை அம்பலப்படுத்தியது. ஜனநாயக அமைப்பின் ஒரு பிரிவு குவாமின்டாங்கின் புரட்சிகர கமிட்டியாக மறு வடிவம் பெற்றது. இன்னொரு பிரிவு, குறிப்பாக ஜனநாயக லீக்கின் தலைமை (தலைமையகத்தை ஹாங்காங்குக்கு மாற்றி) சீன கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒத்துழைப்பது என்ற நிலை எடுத்தது.
மக்கள் விடுதலைப் படை தனது தாக்குதல் அழுத்தம் காரணமாக, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து, பல நகரங்கள் உட்பட பல பகுதிகளையும் கைப்பற்றி, 3 கோடி மக்கள் பிரிவினரை உள்ளடக்கிய மத்திய சீனத்தின் சமவெளி பகுதிகளில் பரந்த விடுதலை செய்யப்பட்ட பகுதியை உருவாக்கியது. அப்போது, விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் மொத்தமாக 16 கோடி பேர் இருந்தனர். பல நடுத்தர நகரங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டன.
ஏகபோக அதிகாரவர்க்க மூலதனத்தைக் கைப்பற்றுவது, தொழிற்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி முறையைத் தொடர்வது, கவுரவம் மற்றும் உயர் வாழ்நிலைகளை உறுதிப்படுத்த அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக சீர்திருத்தங்களை நகரங்களிலும், நகர்ப்புறத்திலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. குவாமின்டாங்குக்கு தீர்மானகரமான அடி கொடுக்க மக்கள் விடுதலைப்படையின் தாக்குதல் கட்டத்தில் லியோஷி - ஷென்யாங், ஹ÷வாய் - ஹாய், பெய்ஜிங் - டியன்சின் ஆகிய மூன்று பகுதிகளில் நடவடிக்கைகளை மக்கள் விடுதலைப்படை எடுத்தது.
வடகிழக்கு சீனத்தில் 1948 செப்டம்பர் 12 முதல் நவம்பர் 2 வரை லியோசி-ஷென்யாங் நடவடிக்கையை மக்கள் விடுதலைப்படை கட்டமைத்தது. ஷின்ஷயோவை கைப்பற்றியதன் மூலம், வடகிழக்கு பகுதிக்கும், பெருஞ்சுவரின் தெற்குப் பகுதி வரையிலான குவாமின் டாங்கின் தொடர்புகள் மொத்தமாக அழிக்கப்பட்டது. அதன் பின்னர் ஷான் ஷீங் முழுமையாக விடுவிக்கப்பட்டு, இறுதியாக மொத்த வடகிழக்கு சீனமும் விடுவிக்கப்பட்டது.
கிழக்கு சீனத்தில், ஷான்டங் பிராந்தியத்தின் தலைநகரான சினானில் 16 செப்டம்பர் 1948ல் மக்கள் விடுதலைப்படை தனது நடவடிக்கையைத் துவங்கியது. இது 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாகும். இது குவாமின்டாங் படையின் முக்கிய பிரிவுகளை ஒழித்துக்கட்ட பங்களித்ததுடன், பெரும் நகரங்களை சுற்றி வளைத்து விடுவிப்பதின் துவக்கமாகவும் அமைந்தது.
டிசம்பர் 5, 1948 முதல் ஜனவரி 31, 1949 வரை பெய்ஜிங் - டியன்சின் நடவடிக்கையை மக்கள் விடுதலைப் படை கட்டமைத்தது. முதலில் ஷன்ங்ஷியா கோ வை கைப்பற்றியதைத் தொடர்ந்து தொழில் மற்றும் வர்த்தகத்தின் முன்னணி நகரங்களில் ஒன்றான டியன்சின் சுற்றி வளைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1.3 லட்சம் குவாமின்டாங் படைகள் அழித்தொழிக்கப்பட்டன. மற்றும் 2 லட்சம் துருப்புகள் அமைதியான முறையில் மக்கள் விடுதலைப்படையில் உள்வாங்கப்பட்டனர். ஜனவரி 31, 1949 அன்று சீனத்தின் பழமை வாய்ந்த தலைநகர் பெய்ஜிங் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
3 பெரும் நடவடிக்கைகளின் முடிவில், 15 லட்சம் குவாமின்டாங் படைகள் தகர்க்கப்பட்டு, மொத்த வடகிழக்குப் பகுதி, வடக்கு சீனத்தின் பெரும் பரப்பு, யாங்க்சியின் வடக்கில் பெரும் பகுதி ஆகியவை மக்கள் விடுதலைப் படையால் விடுதலை செய்யப்பட்டன. இது மக்கள் விடுதலைப்படைக்குத் தலைமை தாங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானகரமான ராணுவ வெற்றியை குறிப்பதாக அமைந்தது.
பெரும் தொல்லைகளையும், சிக்கலான சூழ்நிலையையும் எதிர்கொண்ட சியாங்கே ஷெக் 1949, புத்தாண்டில் அமைதிக்கான செய்தி ஒன்றை வெளியிட்டார். இருக்கின்ற நிலையை தொடர்வது என்பதே முன்மொழிதலின் முக்கிய அம்சமாக இருந்தது. அமைதி நடவடிக்கை என்ற பெயரில் நேரத்தை கடத்தி, குவாமின்டாங் படைகளை மறு அமைப்பாக்கி, மக்கள் விடுதலைப்படைக்கு எதிராக புதிய தாக்குதல் தொடுப்பது என்பதுதான் அதன் உண்மையான நோக்கமாகும்.
போர் குற்றவாளிகளுக்கு தண்டனை, நடந்து கொண்டிருக்கும் போலியான ஆட்சியின் செல்லுபடித் தன்மையை நீக்குவது, போலி அரசியல் சாசனத்தை மாற்றுவது, ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த பிற்போக்கு ராணுவத்தையும் மறு அமைப்பாக்குவது, அதிகாரவர்க்க மூலதனத்தைக் கைப்பற்றுவது, விவசாயச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது, தேசவிரோத ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை ரத்து செய்வது, ஜனநாயக கூட்டு அரசை அமைப்பதற்காக, பிற்போக்கு சக்திகளைத் தவிர்த்து, தேசிய அரசியல் சாசன மாநாட்டைக் கூட்டுவது ஆகியவை அடங்கிய 8 பதில் நிபந்தனைகளை பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
ஜனவரி 21, 1949ல் அமெரிக்க எஜமானர்களின் அறிவுரைப்படி, ஷியாங்கே ஷெக் தனது பதவி ஓய்வை அறிவித்து, துணைத் தலைவரான லிஷசுங் ஷென்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்ட வேலைப் பிரிவினை தவிர வேறல்ல. லிஷசுங் ஷென்னை அமைதி தூதுவராக காண்பித்துவிட்டு, ஷியாங், குவாமின்டாங் படைகளை மறு அமைப்பாக்குவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
லிஷசுங் ஷென், அமைதிக்கான செயல் முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 8 அம்ச நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதுபோல் தோற்றம் காட்டினார். அப்படியிருந்தபோதும், சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைதிக்கான பேச்சு வார்த்தை துவங்க ஒப்புக்கொண்டதோடு குவாமின்டாங்கின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்த பிற்போக்கு நான்கிங் அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தையில் அனுமதித்தது. 15 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் அமைதி செயல்பாட்டிற்கென்று, திருத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்தது.
(தவறுக்கு வருத்தம் தெரிவித்து), விடுதலைப் போரின் நலனிலிருந்து தேசத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் பங்கு பெற தயாராக இருப்பவர்களை போர்க்குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்து தரப்பட்டது) ஷியாங்கே ஷெக் மற்றும் அவரின் நம்பகமான துரோகிகள் தவிர மற்ற பிற்போக்கு சக்திகளுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் நான்கிங் அரசாங்கம் இந்த புதிய முன்மொழிதலை முழுமையாக நிராகரித்தது. இது குவாமின்டாங், எதிர் புரட்சிகர யுத்தத்தைத் தொடர்ந்து எடுத்து செல்வதன் தீய உள்நோக்கத்தை குறிப்பதாக இருந்தது.
ஏப்ரல் 21, 1949 முதல், மக்கள் விடுதலைப்படை யான்ங்கி ஆற்றைக் கடந்து மொத்த நாட்டையும் விடுவிக்க வடக்கு சீனம் நோக்கி முன்னேறியது. இந்தக் கடைசி நடவடிக்கையின் இயக்கப் போக்கிலும், உள்ளூர் குவாமின்டாங் அரசு மற்றும் அதன் துருப்புகளின் கோரிக்கை அடிப்படையில் உள்ளூர்மட்ட அமைதிகரமான தீர்வுகளுக்கு மக்கள் விடுதலைப் படை தயக்கம் காட்டவில்லை. பிற்போக்கு குவாமின்டாங்கின் 22 ஆண்டுகால பழமை வாய்ந்த மய்யமான நான்கிங்கை, யான்ங்சி ஆற்றைக் கடந்து பிடிக்க மக்கள் விடுதலைப்படை 3 நாட்களே எடுத்துக் கொண்டது. இந்த தீர்மானகரமான தாக்குதலுக்குப் பிறகு மற்றதெல்லாம் மக்கள் விடுதலைப் படைக்கு வெற்றிகளே. அக்டோபர் 1949ல் சீன மக்களின் தேசிய அரசியல் சாசன மாநாடு கூட்டப்பட்டு புதிய ஜனநாயக அரசாங்கத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
இவ்வகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட ஜனநாயக புரட்சி நிறைவுற்று சோசலிச புரட்சிக்கான தடையற்ற பாதை திறந்துவிடப்பட்டது.
அடுத்த பகுதியில் சீன புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதன் பல்வேறு அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.