கடுமையான வெயிலில் தமிழ்நாடு முழுவதும் பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரம் செய்த களைப்பு நீங்க கொடநாடு சென்றாலும், பாழாய்ப்போன அரசியல் ஜெயலலிதாவை ஓய்வு எடுக்கவிடவில்லை. முல்லைப்பெரியாறு தீர்ப்பு மீது அவர் தனது பாத்யதையை நிறுவ வேண்டியதாயிற்று. தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட, கருணாநிதியை ஆட்ட அரங்கில் இருந்து விலக்கி வைக்கும் முயற்சியில், வரலாற்றுக் காரணங்கள் பல சொல்லி ஜெயலலிதா அறிக்கை விட, அஇஅதிமுகவினர், இந்த முறை பொன்னியின் செல்வி ஜெயலலிதாவுக்கு புதிதாக என்ன பட்டம் சூட்டுவது என்று தெரியாமல், குழப்பத்துடனேயே, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடித் தீர்த்தனர்.
அதையும் முழுமையாக ஜெயலலிதாவால் கொண்டாட முடியாமல் போனது. தேர்தல் முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த குறுகிய காலத்தில், தமிழ்நாட்டில், கருணைக் கொலைகள் செய்துவிடுங்கள் என்ற கோரும் இரண்டு மனுக்கள், ஜெயலலிதாவின் முகத்தின் முன் யதார்த்த ஆட்டம் ஆடின.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, குழித்துறை அரசு மருத்துவமனையில் தவறாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் கோமா நிலைக்குச் சென்றுவிட்ட தனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் அரசு செலவில் சிகிச்சை தர வேண்டும், இல்லையேல் அவரை கருணைக் கொலை செய்துவிட வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக் கொடுத்துள்ளார். குழித்துறையில் செய்யப்பட்ட சிகிச்சை முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செய்யப்பட்டது. இந்த செய்தி தமிழ்நாட்டு பத்திரிகைகளில் மே 9 அன்று வெளியானது.
மனைவிக்கு டான்சில்ஸ் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனை கேட்ட ரூ.60,000 ஏற்பாடு செய்ய முடியாததால், அரசு மருத்துவமனையை நாடினார். இப்போது, கோமாவில் இருக்கும் மனைவியைக் காப்பாற்றும் தவிப்பில் ரூ.3.5 லட்சம் வரை கடனாளியாகிவிட்டார். மனைவி மீது அளவுகடந்த அன்பு கொண்ட அந்தக் கணவன், மேலும் கடன் வாங்க வழியின்றி, இன்னும் அலைந்துதிரிய தெம்பின்றி, கருணை கொலை செய்து விடுங்கள் என்று கோருகிறார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற 17 வயது இளைஞருக்கு தொண்டையில் புற்றுநோய் முற்றி, அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை கைவிட்டுவிட்டது. கருணைக் கொலை வேண்டுமென மனு கொடுத்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சென்னையில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு, ஏப்ரல் 30 அன்று சக்திவேல் அங்கு அனுமதிக்கப்பட்டார்.
வேலூரில் சிகிச்சை துவங்கி கடைசியாக சென்னைக்கு வந்து சேர்ந்ததற்கு இடைபட்ட காலத்தில் அவரும் தமிழ்நாட்டில் வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைப் பார்த்துவிட்டார். அதுதான் அந்த இளைஞரை சாவைப் பார்க்கத் தூண்டியிருக்க வேண்டும்.
ஜெயலலிதா, திடீரென்று தொலைக் காட்சியில் தோன்றி கருணைக் கொலை கேட்ட சுப்ரமணியத்தின் மனைவி சீதாலஷ்மிக்கு சிறப்பு மருத்துவம் உறுதி செய்ய சிறப்புக் குழுவும் குடும்பத்துக்கு உதவித் தொகையாக ரூ.5 லட்சமும் அறிவித்தார். குழுவைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சி காமிராக்கள் முன் அந்த நோயாளியைச் சந்தித்தார்கள்.
2012 ஜூலையில் கும்பகோணத்தில் இருந்து பிழைப்புக்கு ஈரோட்டுக்கு வந்து சேர்ந்த ஜெயா, தனது மகள் மதுமிதாவுக்கு சிகிச்சை தர முடியாததால் கருணைக்கொலை கேட்டார். அதற்கு முன்பு மதுரை, திருச்சி, தஞ்சை என பல மருத்துவமனைகளை பார்த்துவிட்டார். பிறகு மறுவாழ்வு இல்லத்தில் அந்தச் சிறுமியை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பொருளுள்ள மருத்துவம் வேண்டும் என்றால், கருணைக் கொலைக்கு மனு தர வேண்டும் என்பது விதியாகிவிடுமா? மனுதரக் கூட முடியாமல் சாவுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்காக, வந்த நோய் என்ன என்றே தெரியாமல் கரைந்து கொண்டிருப்பவர்களுக்காக யார் நடவடிக்கை எடுப்பார்கள்? அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் உபகரணங்கள் பழுதானதால் உயிர் விட்டவர் குடும்பத்துக்கு என்ன பதில்? ஜெயலலிதாவின் மூன்றாண்டு கால ஆட்சியில், திராவிடக் கட்சிகளின் 54 ஆண்டு கால ஆட்சியில் மிஞ்சுவது கருணைக் கொலை மனுதானா?
2011 முதல் 2013 மார்ச் வரை, தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் 5,02,53,049 பேர். இதே காலகட்டத்தில் உள் நோயாளிகள் 1,72,01,656 பேர். தமிழக அரசு தரும் விவரங்கள், தமிழ்நாட்டின் ஏகப் பெரும்பான்மை மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் இருக்கின்றனர் என்று தெளிவாகச் சொல்கின்றன. அப்படியானால் அங்கு அலங்காரமாக அம்மா உணவகம் அமைத்தால் மட்டும் போதாது. அனைத்து அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு, உள்கட்டுமான வசதிகளுக்கு எந்தக் குறைவும் இருக்கக் கூடாது.
இவ்வளவு நோயாளிகளையும் பார்த்துக் கொள்ளும் பணியில், மருத்துவர், செவிலியர், மருத்துவம் சார்ந்த பிற பணியாளர் என அனைத்து வகைகளுக்குமாகச் சேர்த்து வெறும் 22,375 பேரை அமர்த்தியிருக்கிறது தமிழக அரசு. ஜெயலலிதா கார் ஓட்ட ஒருவர், அவர் செல் போனை வைத்துக் கொள்ள ஒருவர், அவருக்கு தரப்படும் பூங்கொத்துக்களை வாங்க ஒருவர் என சாதாரண நடமாட்டத்துக்கே அவருடன் ஒரு நாளில் சில பத்து பேர் தேவைப்படும் போது, கோடிக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை தர இந்த ஊழியர்களால் எப்படி முடியும்?
ஆரம்ப சுகாதார மய்யங்களில் செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் கல்லூரி செவிலியர்களுக்கு அரசுப் பணி தொடர்பான பிரச்சனை வந்தபோது, அரசு செவிலியர் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி என்ற பெயரில் எவ்வளவு கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று தமிழ்நாடு தெரிந்து கொண்டது. அரசுப் பணிகளில் உள்ள செவிலியர்கள் கடுமையான வேலைப் பளுவால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சென்று விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பயிற்சி மருத்துவர்கள் கடுமையான வேலைப் பளுவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று சென்ற ஆண்டில் அவர்கள் நடத்திய போராட்டங்கள் வெளிப்படுத்தின. அரசு மருத்துவமனைகளில் பணிகளில் ஈடுபடுத்தப்படும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை பாக்கி கூட தமிழக அரசு வைத்திருக்கிறது. தூய்மைப் பணி ஒப்பந்தக்காரரிடத்தில். ஒப்பந்தத்தில் தூய்மை இல்லாததால் அரசு மருத்துவ மனைகள் தூய்மைக் கேட்டில் உள்ளன.
கட்டணமில்லா, விலையில்லா என்ற அரிய சொற்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை படைத்த ஜெயலலிதா, அந்தச் சொற்களை தரமான மருத்துவத்துக்கும் விரிவுபடுத்த மறுக்கிறார். மூன்று ஆண்டுகளாக அவரது ஆட்சி பற்றி அவர் கட்டி எழுப்புகிற பிம்பங்கள் உடனுக்குடன் சிதறிவிடுகின்றன.
அனைத்தும் தழுவிய மக்கள் விரோத நடவடிக்கைகள், அலட்சியம் என்ற அதிதீவிரமான, தீராத நோயால் பீடிக்கப்பட்டிருக்கிற ஜெயலலிதா அரசாங்கத்துக்கு உயர் சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. தமிழக மக்களே இந்த விசயத்தில் சிறப்பு மருத்துவர்கள்.
அதையும் முழுமையாக ஜெயலலிதாவால் கொண்டாட முடியாமல் போனது. தேர்தல் முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த குறுகிய காலத்தில், தமிழ்நாட்டில், கருணைக் கொலைகள் செய்துவிடுங்கள் என்ற கோரும் இரண்டு மனுக்கள், ஜெயலலிதாவின் முகத்தின் முன் யதார்த்த ஆட்டம் ஆடின.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, குழித்துறை அரசு மருத்துவமனையில் தவறாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் கோமா நிலைக்குச் சென்றுவிட்ட தனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் அரசு செலவில் சிகிச்சை தர வேண்டும், இல்லையேல் அவரை கருணைக் கொலை செய்துவிட வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக் கொடுத்துள்ளார். குழித்துறையில் செய்யப்பட்ட சிகிச்சை முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செய்யப்பட்டது. இந்த செய்தி தமிழ்நாட்டு பத்திரிகைகளில் மே 9 அன்று வெளியானது.
மனைவிக்கு டான்சில்ஸ் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனை கேட்ட ரூ.60,000 ஏற்பாடு செய்ய முடியாததால், அரசு மருத்துவமனையை நாடினார். இப்போது, கோமாவில் இருக்கும் மனைவியைக் காப்பாற்றும் தவிப்பில் ரூ.3.5 லட்சம் வரை கடனாளியாகிவிட்டார். மனைவி மீது அளவுகடந்த அன்பு கொண்ட அந்தக் கணவன், மேலும் கடன் வாங்க வழியின்றி, இன்னும் அலைந்துதிரிய தெம்பின்றி, கருணை கொலை செய்து விடுங்கள் என்று கோருகிறார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற 17 வயது இளைஞருக்கு தொண்டையில் புற்றுநோய் முற்றி, அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை கைவிட்டுவிட்டது. கருணைக் கொலை வேண்டுமென மனு கொடுத்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சென்னையில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு, ஏப்ரல் 30 அன்று சக்திவேல் அங்கு அனுமதிக்கப்பட்டார்.
வேலூரில் சிகிச்சை துவங்கி கடைசியாக சென்னைக்கு வந்து சேர்ந்ததற்கு இடைபட்ட காலத்தில் அவரும் தமிழ்நாட்டில் வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைப் பார்த்துவிட்டார். அதுதான் அந்த இளைஞரை சாவைப் பார்க்கத் தூண்டியிருக்க வேண்டும்.
ஜெயலலிதா, திடீரென்று தொலைக் காட்சியில் தோன்றி கருணைக் கொலை கேட்ட சுப்ரமணியத்தின் மனைவி சீதாலஷ்மிக்கு சிறப்பு மருத்துவம் உறுதி செய்ய சிறப்புக் குழுவும் குடும்பத்துக்கு உதவித் தொகையாக ரூ.5 லட்சமும் அறிவித்தார். குழுவைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சி காமிராக்கள் முன் அந்த நோயாளியைச் சந்தித்தார்கள்.
2012 ஜூலையில் கும்பகோணத்தில் இருந்து பிழைப்புக்கு ஈரோட்டுக்கு வந்து சேர்ந்த ஜெயா, தனது மகள் மதுமிதாவுக்கு சிகிச்சை தர முடியாததால் கருணைக்கொலை கேட்டார். அதற்கு முன்பு மதுரை, திருச்சி, தஞ்சை என பல மருத்துவமனைகளை பார்த்துவிட்டார். பிறகு மறுவாழ்வு இல்லத்தில் அந்தச் சிறுமியை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பொருளுள்ள மருத்துவம் வேண்டும் என்றால், கருணைக் கொலைக்கு மனு தர வேண்டும் என்பது விதியாகிவிடுமா? மனுதரக் கூட முடியாமல் சாவுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்காக, வந்த நோய் என்ன என்றே தெரியாமல் கரைந்து கொண்டிருப்பவர்களுக்காக யார் நடவடிக்கை எடுப்பார்கள்? அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் உபகரணங்கள் பழுதானதால் உயிர் விட்டவர் குடும்பத்துக்கு என்ன பதில்? ஜெயலலிதாவின் மூன்றாண்டு கால ஆட்சியில், திராவிடக் கட்சிகளின் 54 ஆண்டு கால ஆட்சியில் மிஞ்சுவது கருணைக் கொலை மனுதானா?
2011 முதல் 2013 மார்ச் வரை, தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் 5,02,53,049 பேர். இதே காலகட்டத்தில் உள் நோயாளிகள் 1,72,01,656 பேர். தமிழக அரசு தரும் விவரங்கள், தமிழ்நாட்டின் ஏகப் பெரும்பான்மை மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் இருக்கின்றனர் என்று தெளிவாகச் சொல்கின்றன. அப்படியானால் அங்கு அலங்காரமாக அம்மா உணவகம் அமைத்தால் மட்டும் போதாது. அனைத்து அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு, உள்கட்டுமான வசதிகளுக்கு எந்தக் குறைவும் இருக்கக் கூடாது.
இவ்வளவு நோயாளிகளையும் பார்த்துக் கொள்ளும் பணியில், மருத்துவர், செவிலியர், மருத்துவம் சார்ந்த பிற பணியாளர் என அனைத்து வகைகளுக்குமாகச் சேர்த்து வெறும் 22,375 பேரை அமர்த்தியிருக்கிறது தமிழக அரசு. ஜெயலலிதா கார் ஓட்ட ஒருவர், அவர் செல் போனை வைத்துக் கொள்ள ஒருவர், அவருக்கு தரப்படும் பூங்கொத்துக்களை வாங்க ஒருவர் என சாதாரண நடமாட்டத்துக்கே அவருடன் ஒரு நாளில் சில பத்து பேர் தேவைப்படும் போது, கோடிக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை தர இந்த ஊழியர்களால் எப்படி முடியும்?
ஆரம்ப சுகாதார மய்யங்களில் செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் கல்லூரி செவிலியர்களுக்கு அரசுப் பணி தொடர்பான பிரச்சனை வந்தபோது, அரசு செவிலியர் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி என்ற பெயரில் எவ்வளவு கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று தமிழ்நாடு தெரிந்து கொண்டது. அரசுப் பணிகளில் உள்ள செவிலியர்கள் கடுமையான வேலைப் பளுவால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சென்று விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பயிற்சி மருத்துவர்கள் கடுமையான வேலைப் பளுவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று சென்ற ஆண்டில் அவர்கள் நடத்திய போராட்டங்கள் வெளிப்படுத்தின. அரசு மருத்துவமனைகளில் பணிகளில் ஈடுபடுத்தப்படும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை பாக்கி கூட தமிழக அரசு வைத்திருக்கிறது. தூய்மைப் பணி ஒப்பந்தக்காரரிடத்தில். ஒப்பந்தத்தில் தூய்மை இல்லாததால் அரசு மருத்துவ மனைகள் தூய்மைக் கேட்டில் உள்ளன.
கட்டணமில்லா, விலையில்லா என்ற அரிய சொற்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை படைத்த ஜெயலலிதா, அந்தச் சொற்களை தரமான மருத்துவத்துக்கும் விரிவுபடுத்த மறுக்கிறார். மூன்று ஆண்டுகளாக அவரது ஆட்சி பற்றி அவர் கட்டி எழுப்புகிற பிம்பங்கள் உடனுக்குடன் சிதறிவிடுகின்றன.
அனைத்தும் தழுவிய மக்கள் விரோத நடவடிக்கைகள், அலட்சியம் என்ற அதிதீவிரமான, தீராத நோயால் பீடிக்கப்பட்டிருக்கிற ஜெயலலிதா அரசாங்கத்துக்கு உயர் சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. தமிழக மக்களே இந்த விசயத்தில் சிறப்பு மருத்துவர்கள்.