தமிழக அரசே, டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்து!
டெங்குக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 12 அன்று இகக மாலெவும் புரட்சிர இளைஞர் கழகமும் கரம்பக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத் தின. தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட வேண்டும், சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனை உடனடியாக திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு வரத்து வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கரம்பக்குடி பேருந்து நிலையத்தை உடனடியாக செப்பனிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
டெங்குக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 12 அன்று இகக மாலெவும் புரட்சிர இளைஞர் கழகமும் கரம்பக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத் தின. தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட வேண்டும், சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனை உடனடியாக திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு வரத்து வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கரம்பக்குடி பேருந்து நிலையத்தை உடனடியாக செப்பனிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.