ஜார்க்கண்டின் இடதுசாரி தலைவர்களில் ஒருவரான தோழர் எ.கே.ராய் பாஜக குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டுள்ள நேரத்தில் கூட அவரை பாஜகவினர் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இகக மாலெ இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது. தோழர் எ.கே.ராயை தாக்கியவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடி தர மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்த உறுதியேற்கிறது.