COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 1, 2013

சீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரம்

புரட்சிக்கு முந்தைய இயங்காற்றல் பற்றி ஒரு பார்வை

(சென்ற இதழில் புரட்சிக்கு முந்தைய இயங்காற்றல் பற்றி ஒரு பார்வை
என்ற தலைப்பில் வெளியான பகுதியின் தொடர்ச்சி)

டாக்டர்.சன் யாட் சென்

டாக்டர்.சன் யாட் சென் சீனாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு தனிச் சிறப்பான முன்னோடி. வர்க்க இயல்பைப் பொறுத்தவரை, டாக்டர்.சன் யாட் சென் சீன தேசிய முதலாளித்துவத்தின் ஒரு வகைமாதிரி பிரதிநிதி. அந்நிய மூலதனம் மற்றும் ஏகாதி பத்திய சக்திகளின் தலையீடு என்ற வரையறைக்குள் சீனாவில் முதலாளித்துவ வளர்ச்சி என்ற பின்னணியில், தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சி இயக்கப்போக்கு, சுமுகமானதாக இல்லை. அது மெதுவாக வளர்ந்தது. ஒரு வரலாற்று பொருளில் தேசிய முதலாளித்துவம் ஒரு பலவீனமான வர்க்கமாக இருந்தது. டாக்டர் சன் யாட்சென் இந்த குறைபாடுகளில், பலவீனத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஆனால், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவது ஆகியவற்றில் அவர் உறுதியானவராக இருந்தார். நடைமுறையின் போக்கில், குறைபாடுகளை, பலவீனங்களை களைய, சரிசெய்ய அறிந்து கொண்டார்.

டாக்டர் சன் யாட் சென்னின் பாத்திரமும் நடைமுறையும் வளர்ந்தது பற்றி

    1894ல் டாக்டர் சன் யாட்சென் ஹோனு லுலுவில் மக்கள் மத்தியில் இருந்த ரகசிய குழுக்களின் ஆதரவுடன் ஹிசிங் சுங் ஹய் (சீன புத்துயிர்ப்புக்கான சமூகம்) என்ற சிறிய புரட்சிகர அமைப்பை நிறுவினார். 1895ல் சீன - ஜப்பானியப் போரில் சிங் அரசாங்கம் தோல்வியுற்ற பிறகு, குவாங்டேங் மாகாணத் தில் 1895ல் கேன்டனிலும் 1900ல் ஹ÷யிசோ விலும், சிங் அரசாங்கத்துக்கு எதிராக இரண்டு ஆயுதந்தாங்கிய எழுச்சிகளை நடத்தினார்.

    அதே நேரத்தில், முதலாளித்துவத்தார், குட்டி முதலாளித்துவத்தார் மற்றும் நிலப்பிரபு கோமான்களின் ஒரு பிரிவினர் ஆகியோர் கொண்ட அய்க்கிய முன்னணியான துங் மேங் ஹியுயி அல்லது சீன புரட்சிகர முன்னணி, ஹிசுன் சங் ஹய் மற்றும் சீன புத்துயிர்ப்புக் கான குழு, அந்நிய நுகத்தடியை நொறுக்கும் குழு என்ற இரண்டு குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. அது முதலாளித்துவ புரட்சிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தது. த்ராத்தர்களை (மன்சு இனத்தவர்) வெளியேற்றுவது, சீனாவை மீட்டெடுப்பது, குடியரசை உருவாக்குவது, நில உடைமையை சமமான தாக்குவது ஆகியவற்றை திட்டம் வலியுறுத்தியது. சீன புரட்சிகர முன்னணி காலத்தில், டாக்டர் சன்  யாட் சென், ரகசிய குழுக்களுடன் இணைந்தும் சிங் அரசாங்கத்தின் புதிய படையின் ஒரு படையுடனும் சிங் அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு ஆயுதந்தாங்கிய எழுச்சிகளை கட்டமைத்தார். 1906ல், காங்சி மாகாணத்தின் பிங்ஹியாங் மற்றும் ஹ÷னான் மாகாணத்தின் லியுங் மற்றும் லினின், 1907ல் குவாங்துங் மாகாணத்தின்  ஹ÷வாங்லாங், சன்சோவ் மற்றும் சின்சோவ், குவாங்சி மாகாணத்தின் சென்னன் கீன், 1908ல் யூனன் மாகாணத்தின் ஹோகோ, 1911ல் கேன்டன் ஆகிய இடங்களில் நடந்த புரட்சிகள் குறிப்பிடத்தக்கவை. 1911ல் நடந்த வுசேங் எழுச்சி, சிங் ஆட்சியை தூக்கியெறிந்தது.

    1912ல் சீன புரட்சிகர முன்னணி குவாமின்டானாக மாற்றியமைக்கப்பட்டது. யுவான் சி காய் தலைமையிலான வடக்கு யுத்த பிரபுக்களின் ஆட்சியுடன் ஒரு சமரசம் செய்தது. 1911 புரட்சியின் இயக்கப்போக்கில் உருவான சியாங்சி, அன்வாய், குவாங்டாங் ஆகிய மாகாணங்களில் உருவான சக்திகளை ஒடுக்க 1913ல் யுவானின் படைகள், தெற்கு நோக்கி நகர்ந்தன. டாக்டர் சன் யாட்சென் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பைக் கட்டியமைத்தார். அதுவும் நசுக்கப்பட்டது. 1914ல், குவாமின்டாங்குடன் ஏற்பட்ட சமரசக் கொள்கையின் தவறை உணர்ந்து கொண்ட சன் யாட்சென் அப்போதைய குவாமின்டாங்கில் இருந்து பிரித்து நிறுத்திக் கொள்ள ஜப்பானின் டோக்கியோ வில் சுங் ஹ÷வா கி மிங் டேங் (சீனப் புரட்சிகரக் கட்சி) உருவாக்கினார். இந்த புதிய கட்சி, யுவான் ஷி காய்க்கு எதிரான குட்டி முதலாளித்துவத்தார் மற்றும் முதலாளித்துவத்தாரின் ஒரு பிரிவினர் கொண்ட அரசியல் அமைப்பின் கூட்டணியாகும். இந்தக் கூட்டணி மூலம் 1914ல் ஷாங்காயில் ஒரு சிறிய எழுச்சியை வழி நடத்தினார். 1915ல் யுவான் ஷி - காய் தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டபோது, சாய் நிகோவும் மற்றவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். யுவான் ஷி -காய்க்கு எதிரான ஆயுதந்தாங்கிய எதிர்ப்புக்களை பரப்புவதில் முன்னகர்த்துவதில் டாக்டர் சன் யாட்சென்னும் செயலூக்கமிக்கவராக இருந்தார்.

    1917ல் சென் ஷாங்காயில் இருந்து கப்பல் படையின் தலைவராக கேன்டன் சென்றார். குவாங்துங்கை தளமாகக் கொண்டு, தெற்கு யுத்த பிரபுக்களுடன் இணைந்து, துவான் சி ஜ÷யி யுத்த பிரபுக்களுக்கு எதிராக ஒரு ராணுவ அரசாங்கத்தை நிறுவினார். 1921ல் டாக்டர் சென் வடக்கு நோக்கிய பயணத்தைத் திட்டமிட்டார். ஆனால் வடக்கு யுத்தப் பிரபுக்களுடன் சேர்ந்து கொண்டு அவருக்குக் கீழ் இருந்த சென் சியான் மிங் செய்த கலகத்தால் அவரது திட்டம் முறியடிக்கப்பட்டது.

    1923ல் டாக்டர் சென் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் குவாமின்டாங்கை புனரமைப்பு செய்வதெனவும் குவாமின்டாங் - கம்யூனிஸ்ட் ஒத்துழைப்பை உருவாக்குவ தெனவும், குவாமின்டாங்கில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை இணைப்பது எனவும் முடிவு செய்தார். 1924ல் டாக்டர் சென் கேன்டனில் குவாமிங்டானின் முதல் தேசிய காங்கிரசை நடத்தினார்.

ரஷ்யாவுடன் கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைப்பு, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவி என்ற மூன்று மகத்தான கொள்கைகளை முன் வைத்தார். தோழர் மாவோ, லி தாவோ - சாவோ, லியு போ - சூ, சூ சின் - பாய் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சில தோழர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட னர். அவர்களில் சிலர் குவாமின்டாங்கின் மத்திய செயற்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    1924ல் குவாமின்டாங் புனரமைப்பு செய்யப்பட்ட பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் யூனியனின் உதவியுடன்  கேன்டனுக்கு அருகில், டாக்டர் சென் வாம்போவா ராணுவ அகாதமியை நிறுவினார். 1927 வரை, குவாமின்டாங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அகாதமியை நடத்தின. தோழர் சூ இன் - லாய், யே சென்னிங், யுன் தய் - யிங் ஆகியோர் அகாதமியின் பொறுப்பாளர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் கம்யூனிஸ்ட் இளைஞர் அணியிலும் இருந்தனர். கட்டமைக்கப்பட்ட பயிற்சியுடனான புரட்சிக்கு முந்தைய ராணுவத்தின் புதிய வீரர்களை வடிவமைப்பதில் அகாதமி பங்காற்றியது.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மேலோங்கியதாக இருந்த, கட்சியின் செல் வாக்கில் இருந்த, புரட்சிகரப் படை வடக்கு யுத்தப் பிரபுக்களுக்கு எதிராக நடத்திய தண்டிக்கிற போரான வடக்கு நோக்கிய பயணம், கம்யூனிஸ்ட் - கோமின்டாங் ஒத்துழைப் பின் விளைபொருளே. 1926 மே - ஜ÷லை மாதங்களில் ராணுவம் குவாமின்டாங்கில் இருந்து வடக்கு நோக்கி அணிவகுத்தது. பரந்த தொழிலாளர் மற்றும் விவசாய வெகுமக்களின் ஆதரவைப் பெற்றது. 1926ன் இரண்டாவது பாதி மற்றும் 1927ன் முதல் பாதியில் யங்சே மற்றும் மஞ்சள் ஆற்றங்கரையின் பல மாகாணங்களை அது ஆக்கிரமித்து வடக்கு யுத்தப்பிரபுக்களை முறியடித்தது.

ஆனால், டாக்டர் சன் யாட்-சென்னின் மறைவுக்குப் பிறகு, புரட்சிகரப் படைக்குள் இருந்த சியாங் கே - ஷேக்கின் தலைமையில் இருந்த பிற்போக்குக் குழுவின் துரோகத்தின் விளைவால் இந்த புரட்சிகரப் போர் தோல்வியுற்றது. கம்யூனிஸ்ட் கட்சி - குவாமின்டாங் ஒத்துழைப்பு மோதலாக மாறியது. வடக்கு பயணத்தின் முக்கியமான வெற்றி வியப்புதரும் பின்னடைவாக, தோல்வியாக மாறியது.

ஆயினும் இந்தப் பின்னடைவு மாற்று வடிவில் இருந்த வரமாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கான சுதந்திரமான முன்னேற்றப் பாதையை உருவாக்கியது.

சீன சமூகத்தில் வர்க்கங்கள்.....
அடுத்த இதழில்.....

Search