‘ஒருவருக்காக 6 பேர் சாக வேண்டுமா?’ அதிர்ச்சி தரும் இந்தக் கேள்வியை டில்லி கூட்டுப் பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரின் சகோதரி கேட்கிறார். கேள்வி கேட்டது ஒரு பெண். இது இன்னும் அதிர்ச்சி தருகிறது.
அதிசயிக்கத்தக்க விதத்தில் இந்தியாவில் ஒரு பாலியல் வன்முறை குற்றச்சாட்டு எட்டரை மாத காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது என்ற நிலையை எட்டியுள்ளது. கொலை, பாலியல் வன்முறை, கடத்தல், சாட்சிகள் அழிப்பு உட்பட அவர்கள் மீது போடப்பட்ட 13 குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டு செப்டம்பர் 10 அன்று அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டார்கள். தண்டனை செப்டம்பர் 13 அன்று அறிவிக்கப்பட உள்ளது.
நீதிமன்ற வளாகம் போராட்டக்காரர்களால் நிறைந்துள்ளது. அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும் என்று நாடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் வழக்கமான குற்றவாளிகள் அல்ல, விளைவுகள் தெரியாமல் செய்துவிட்டார்கள், திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்கள் என்று உறவினர்களும் வழக்கறிஞர்களும் கேட்கிறார்கள். ஒரு பெண்ணின் பிறப்புறுப்பின் வழியாக இரும்புக் கம்பியைச் செலுத்தி உடல் உறுப்புக்களை கிழித்துப் போட்டவர்கள் தெரியாமல் செய்தார்கள் என்று சொல்வதில் பொருள் இல்லை.
தலைநகரிலும் நாடு முழுவதும் எழுந்த தீவிர எதிர்ப்பின் நிர்ப்பந்தத்தாலேயே இன்று அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எதிர்ப்பு இல்லையென்றால் இது நடந்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. பாலியல் வன்முறைக்கெதிராக தீவிரமான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோதே, இன்று வரையிலும் நாட்டின் பல மூலைகளிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மும்பை பத்திரிகையாளர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின் சாட்சிகளை அழிக்கவும் சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் செய்யவும் பாலியல் வன்முறையாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார். டில்லியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அய்ந்து வயது சிறுமி, அந்த ‘மாமா’ கடுமையாக அடிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் சொல்கிறாள்.
ஒரு வேளை டிசம்பர் 16 வழக்கு இன்னும் விரைவாக முடிக்கப்பட்டு, தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தால் மும்பையும் மீண்டுமொரு முறை டில்லியும் நடக்காமல் தடுத்திருக்கக் கூடும். டிசம்பர் 16 அன்று நடந்த கொடுமையின் தீவிரத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது எட்டரை மாத காலம் மிகவும் நீண்டதே. இடையில் அவசரச் சட்டம் என்ற பெயரில் ஒப்பீட்டு ரீதியில் கறாரான வர்மா கமிட்டி பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்வது கூட நடந்துவிட்டது.
இந்த விசயத்தில் இன்னும் ஒரு முறை தாமதமோ, அலட்சியமோ சற்றும் அனுமதிக்கப்படக் கூடாது. ஆறு பேரில் ஒருவர், மிகவும் மூர்க்கமாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர், சிறுவர் என்று சொல்லி ஏற்கனவே தப்பிவிட்டார். இன்னொருவர் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.
எஞ்சியிருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதே நாட்டில் உள்ள பெண்களுக்கு ஜனநாயக இயக்கப்போக்கின் மீது ஓரளவு நம்பிக்கையையாவது உருவாக்கும்.
இன்றைய நிலைமைகளிலேயே, சிறுவன் என்று சொல்லி ஒரு குற்றவாளி தப்பிவிட்ட நிலையில், இந்த வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்படுமா, குற்றவாளிகளை ஏதாவது காரணம் சொல்லி தப்பவிட்டுவிடுவார்களா, நிர்பயாவுக்கு உண்மையில் நியாயம் கிடைக்குமா என்ற கேள்விகள் உள்ளன. மரண தண்டனையா, ஆயுள் தண்டனையா என்ற விவாதத்தை விட தண்டனையை உறுதி செய்வது முக்கியம். நல்லெண்ணம் கொண்ட பலர் பெண்கள் மீதான குற்றங்கள் குறைவதில் ஆண்களின் மனமாற்றம், பெண்கள் ஆண்களை வளர்ப்பதில் மாற்றம் ஆகியவற்றுக்கு அழுத்தம் வேண்டும் என்கின்றனர். நரகத்துக்கான பாதை நல்லெண்ணங்களால் போடப்படுகிறது.
தன் சகோதரன் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் அந்த சகோதரியும் ஆணாதிக்கத்தின் கைதியே. நடந்திருப்பது இந்திய சட்டங்களின்படி குற்றம். குற்றம் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கடுமையான குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டுமே குற்றங்களைத் தடுக்கும். மனமாற்றம் ஏற்படுவதில் இந்தத் தண்டனைகள் மிக மிக முக்கிய பங்காற்றும்.
அதிசயிக்கத்தக்க விதத்தில் இந்தியாவில் ஒரு பாலியல் வன்முறை குற்றச்சாட்டு எட்டரை மாத காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது என்ற நிலையை எட்டியுள்ளது. கொலை, பாலியல் வன்முறை, கடத்தல், சாட்சிகள் அழிப்பு உட்பட அவர்கள் மீது போடப்பட்ட 13 குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டு செப்டம்பர் 10 அன்று அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டார்கள். தண்டனை செப்டம்பர் 13 அன்று அறிவிக்கப்பட உள்ளது.
நீதிமன்ற வளாகம் போராட்டக்காரர்களால் நிறைந்துள்ளது. அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும் என்று நாடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் வழக்கமான குற்றவாளிகள் அல்ல, விளைவுகள் தெரியாமல் செய்துவிட்டார்கள், திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்கள் என்று உறவினர்களும் வழக்கறிஞர்களும் கேட்கிறார்கள். ஒரு பெண்ணின் பிறப்புறுப்பின் வழியாக இரும்புக் கம்பியைச் செலுத்தி உடல் உறுப்புக்களை கிழித்துப் போட்டவர்கள் தெரியாமல் செய்தார்கள் என்று சொல்வதில் பொருள் இல்லை.
தலைநகரிலும் நாடு முழுவதும் எழுந்த தீவிர எதிர்ப்பின் நிர்ப்பந்தத்தாலேயே இன்று அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எதிர்ப்பு இல்லையென்றால் இது நடந்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. பாலியல் வன்முறைக்கெதிராக தீவிரமான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோதே, இன்று வரையிலும் நாட்டின் பல மூலைகளிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மும்பை பத்திரிகையாளர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின் சாட்சிகளை அழிக்கவும் சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் செய்யவும் பாலியல் வன்முறையாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார். டில்லியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அய்ந்து வயது சிறுமி, அந்த ‘மாமா’ கடுமையாக அடிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் சொல்கிறாள்.
ஒரு வேளை டிசம்பர் 16 வழக்கு இன்னும் விரைவாக முடிக்கப்பட்டு, தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தால் மும்பையும் மீண்டுமொரு முறை டில்லியும் நடக்காமல் தடுத்திருக்கக் கூடும். டிசம்பர் 16 அன்று நடந்த கொடுமையின் தீவிரத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது எட்டரை மாத காலம் மிகவும் நீண்டதே. இடையில் அவசரச் சட்டம் என்ற பெயரில் ஒப்பீட்டு ரீதியில் கறாரான வர்மா கமிட்டி பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்வது கூட நடந்துவிட்டது.
இந்த விசயத்தில் இன்னும் ஒரு முறை தாமதமோ, அலட்சியமோ சற்றும் அனுமதிக்கப்படக் கூடாது. ஆறு பேரில் ஒருவர், மிகவும் மூர்க்கமாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர், சிறுவர் என்று சொல்லி ஏற்கனவே தப்பிவிட்டார். இன்னொருவர் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.
எஞ்சியிருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதே நாட்டில் உள்ள பெண்களுக்கு ஜனநாயக இயக்கப்போக்கின் மீது ஓரளவு நம்பிக்கையையாவது உருவாக்கும்.
இன்றைய நிலைமைகளிலேயே, சிறுவன் என்று சொல்லி ஒரு குற்றவாளி தப்பிவிட்ட நிலையில், இந்த வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்படுமா, குற்றவாளிகளை ஏதாவது காரணம் சொல்லி தப்பவிட்டுவிடுவார்களா, நிர்பயாவுக்கு உண்மையில் நியாயம் கிடைக்குமா என்ற கேள்விகள் உள்ளன. மரண தண்டனையா, ஆயுள் தண்டனையா என்ற விவாதத்தை விட தண்டனையை உறுதி செய்வது முக்கியம். நல்லெண்ணம் கொண்ட பலர் பெண்கள் மீதான குற்றங்கள் குறைவதில் ஆண்களின் மனமாற்றம், பெண்கள் ஆண்களை வளர்ப்பதில் மாற்றம் ஆகியவற்றுக்கு அழுத்தம் வேண்டும் என்கின்றனர். நரகத்துக்கான பாதை நல்லெண்ணங்களால் போடப்படுகிறது.
தன் சகோதரன் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் அந்த சகோதரியும் ஆணாதிக்கத்தின் கைதியே. நடந்திருப்பது இந்திய சட்டங்களின்படி குற்றம். குற்றம் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கடுமையான குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டுமே குற்றங்களைத் தடுக்கும். மனமாற்றம் ஏற்படுவதில் இந்தத் தண்டனைகள் மிக மிக முக்கிய பங்காற்றும்.