ராபர்ட் வதேராவின் நிழல் நிறுவனங்கள் நிலம் பறித்த பிரச்சனை பற்றி மன்மோகனும் சோனியாவும் பதில் சொல்ல வேண்டியிருந்த சூழலில், நிலக்கரி ஊழல் தொடர்பான கோப் புக்கள் காணாமல் போனது பற்றி மன்மோகன் விளக்கம் தர வேண்டியிருந்த வேளையில் இந்த காத்திரமான பிரச்சனைகள் பற்றி எதிர்க் கட்சிகள் சம்பிரதாய கூக்குரல் எழுப்பிக் கொண் டிருக்க மக்களவையில் 16 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட மசோ தாக்களில் முக்கியமானவை நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்ப டுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத் தன்மை மசோதா 2012 என்ற பெய ரிலான நிலப்பறி மசோதா, ஓய்வூதிய ஒழுங்கு முறை மசோதா என்கிற ஓய்வூதிய பறிப்பு மசோதா, உணவுப் பாதுகாப்பு என்கிற உணவுப் பறிப்பு மசோதா ஆகியவை.
நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத் தன்மை மசோதா 2012 என்று அது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தோற்ற மாற்றம் உள்ளடக்கத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட் டதைப் போல் மற்றொரு சுற்று நிலம் கையகப்படுத்துதலை இந்தச் சட்டம் உறுதி செய்யும். நிலப்பறி இன்னும் ஒரு முறை சட்ட பூர்வமாகும். மக்கள் எதிர்ப்புக்களால் முடங்கிய நிலப் பறி திட்டங்களை விரைவுபடுத்தும்.
சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டால் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலம் பறித்துத் தருவது சட்டபூர்வமாக நடக்கும். கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு நிலச்சொந்தக்காரர்கள் வெளியேற வேண்டும். அய்க்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் சில அய்ரோப்பிய யூனியன் நாடுகளில் கூட தனியார் பயன்பாட்டுக்கு அரசு நிலம் பறித்துத் தர சட்டத்தில் இடமில்லை. இந்திய ஆட்சியாளர்கள் இந்த விசயத்தில் மொத்த உலகுக்கும் வழிகாட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மாநில அரசாங்கமே நில வங்கிகள் அமைத்து தனியார் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க நிலம் தருகின்றன. யாருக்கு என்ன விலையில் நிலம் தரப்படுகிறது என்று இந்த அரசாங்கங்கள் யாருக்கும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. விவசாயத்தை விட தொழிலில்தான் வேலை வாய்ப்பு அதிகம், அதனால் நிலப்பறிப்புக்கு முன்னுரிமை என்ற கருணாநிதியின் கொள்கையில் ஜெயலலிதாவுக்கு பிரச்சனை இல்லை.
எல்லா அரசுத் திட்டங்களும் அரசு - தனி யார் கூட்டு மாதிரியின் மூலம் நிறைவேற்றப் படும் காலம் இது. எனவே, அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுவதும் தனியாருக்கே ஆதாயமாக முடியும்.
பாஜக மசோதாவை ஆதரித்து வாக்களிக்க, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இகக, இககமா, அஇஅதிமுக கட்சிகள் வெளி நடப்பு செய்தன.
தனியாருக்கு நிலம் வேண்டுமென்றால் அவர்கள் சந்தை விலைக்கு நேரடியாக நிலச் சொந்தக்காரர்களிடம் வாங்கிக் கொள்ளும்படி மசோதா திருத்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியது கணக்கில் கொள்ளப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் தாங்கள் வாங்கும் நிலத்துக்கு முன்னர் செலுத்தியதை விட கூடுதல் விலை செலுத்த வேண்டும், கூடுதல் ஒப்புதல் வேண்டும் என்பதைத் தவிர, பெரிய மாற்றம் ஏதும் சட்டத்தில் இல்லை.
ஆனாலும், ராபர்ட் வதேரா போன்ற சிறு விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட இந்தச் சட்டத்தில் வாய்ப்புக்கள் அதிகம். அதனால் தான் இந்திய முதலாளிகள் தரப்பு, சட்டம் பல திட்டங்களை முடக்கிவிடும் என்று கவலைப்படுகிறது.
நிலம் விலை உயர்ந்துவிடும் என்று புலம்புகிறது. நகர்ப்புறத்தில் நிலம் வேண்டும் என்றால், புதிய சட்டப்படி சந்தை விலையைப் போல் இரண்டு மடங்கு விலை தர வேண்டும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் தொழில் செய்வது சிரமம் என்கிறது. கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங் கள் திணறிப் போகும் என்கிறது. (நாட்டில் 100 கோடி பேர் பல்வேறு விதங்களில் திணறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்).
அரியானாவில் ராபர்ட் வதேரா முறைகேடாக நிலம் வாங்கியது பற்றி கேட்டபோது, அரியானா முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹ÷டா, ராபர்ட் வதேரா ஒரு சிறுவிவசாயி என்றும், நகர்ப்புற வளர்ச்சியில் சிறுவிவசாயிகளும் பயன் பெறும் விதம் மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் அடிப்படையில்தான் அவருக்கு உரிமம் வழங்கப்பட்டது என்றும் சொல்கிறார்.
ராபர்ட் வதேரா என்ற மூன்றரை ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான சிறுவிவசாயி தனது நிலத்தை மேம்படுத்த உரிமம் பெற்றார் என்றும் பிறகு அந்த நிலத்தை வேறொரு நிறுவனத் துக்கு விற்றார் என்றும் இதில் என்ன தவறு என்றும் ஹ÷டா கேட்கிறார். அரியானா அர சாங்கம் டிஎல்எஃப் நிறுவனத்துக்கு 350 ஏக்கர் நிலம் தர ஒப்பந்தம் செய்திருப்பதற்கும் ராபர்ட் வதேரா நிலம் விற்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பிப்ரவரி 2008ல் ரூ.7.5 கோடிக்கு வதேராவின் நிறுவனம் வாங்கிய நிலம் ஜ÷ன் 2008ல் ரூ.58 கோடிக்கு விற்கப்படுவதில் முறைகேடு எதுவும் இல்லை என்றும் நாம் நம்ப வேண்டும்.
வாமனன் தனது இரண்டு அடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்தது போல் ராபர்ட் வதேரா தனது இரண்டு கண்களால் நாட்டின் நிலப் பகுதிகளை அளந்துவிடுகிறார். ராஜஸ்தான் முதல் அரியானா வரை கிட்டத்தட்ட 800 ஹெக்டேர் நிலங்களை அவர் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூன்றரை ஏக்கர் நிலத்தில் நான்கு மாதங்களில் ரூ.50 கோடி பார்க்க முடியும் என்றால், 800 ஹெக்டேர் நிலம் என்ன வருமானம் தரும் என்று மதிப்பிட்டுக் கொள்ளலாம். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இந்த 800 ஹெக்டேர் நிலத்துக்கு என்ன விலை கிடைக்கும் என்றும் அல்லது நிலம் மேம்படுத்துவது, தொழில் துவங்குவது என்ற பெயரில் ராபர்ட் வதேரா என்ற சிறுவிவசாயி எந்த அளவுக்கு வளம் பெறுவார் என்றும் நாம் பொறுத் திருந்து பார்க்க வேண்டியுள்ளது. எப்படியாயினும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ராபர்ட் வதேரா போன்ற சிறுவிவசாயிகள் மற்றும் டிஎல்எஃப் போன்ற தொழில் முனைவோர் வாழ்வில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். சீனா இந்திய எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த ராபர்ட் வதேராவை பொறுப்பாக்க வேண்டும் என்றும் சீனா ஊடுருவி இருப்பதாக சொல்லப்படும் அந்த நிலப் பகுதியை சீனாவே வியக்கும் வண்ணம் அவர் மேம்படுத்திக் காட்டுவார் என்றும் இணைய தளங்கள் கேலிக் கதைகள் எழுதும்.
நிறைவேற்றப்பட்ட மசோ தாக்களில் முக்கியமானவை நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்ப டுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத் தன்மை மசோதா 2012 என்ற பெய ரிலான நிலப்பறி மசோதா, ஓய்வூதிய ஒழுங்கு முறை மசோதா என்கிற ஓய்வூதிய பறிப்பு மசோதா, உணவுப் பாதுகாப்பு என்கிற உணவுப் பறிப்பு மசோதா ஆகியவை.
நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத் தன்மை மசோதா 2012 என்று அது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தோற்ற மாற்றம் உள்ளடக்கத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட் டதைப் போல் மற்றொரு சுற்று நிலம் கையகப்படுத்துதலை இந்தச் சட்டம் உறுதி செய்யும். நிலப்பறி இன்னும் ஒரு முறை சட்ட பூர்வமாகும். மக்கள் எதிர்ப்புக்களால் முடங்கிய நிலப் பறி திட்டங்களை விரைவுபடுத்தும்.
சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டால் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலம் பறித்துத் தருவது சட்டபூர்வமாக நடக்கும். கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு நிலச்சொந்தக்காரர்கள் வெளியேற வேண்டும். அய்க்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் சில அய்ரோப்பிய யூனியன் நாடுகளில் கூட தனியார் பயன்பாட்டுக்கு அரசு நிலம் பறித்துத் தர சட்டத்தில் இடமில்லை. இந்திய ஆட்சியாளர்கள் இந்த விசயத்தில் மொத்த உலகுக்கும் வழிகாட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மாநில அரசாங்கமே நில வங்கிகள் அமைத்து தனியார் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க நிலம் தருகின்றன. யாருக்கு என்ன விலையில் நிலம் தரப்படுகிறது என்று இந்த அரசாங்கங்கள் யாருக்கும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. விவசாயத்தை விட தொழிலில்தான் வேலை வாய்ப்பு அதிகம், அதனால் நிலப்பறிப்புக்கு முன்னுரிமை என்ற கருணாநிதியின் கொள்கையில் ஜெயலலிதாவுக்கு பிரச்சனை இல்லை.
எல்லா அரசுத் திட்டங்களும் அரசு - தனி யார் கூட்டு மாதிரியின் மூலம் நிறைவேற்றப் படும் காலம் இது. எனவே, அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுவதும் தனியாருக்கே ஆதாயமாக முடியும்.
பாஜக மசோதாவை ஆதரித்து வாக்களிக்க, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இகக, இககமா, அஇஅதிமுக கட்சிகள் வெளி நடப்பு செய்தன.
தனியாருக்கு நிலம் வேண்டுமென்றால் அவர்கள் சந்தை விலைக்கு நேரடியாக நிலச் சொந்தக்காரர்களிடம் வாங்கிக் கொள்ளும்படி மசோதா திருத்தப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியது கணக்கில் கொள்ளப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் தாங்கள் வாங்கும் நிலத்துக்கு முன்னர் செலுத்தியதை விட கூடுதல் விலை செலுத்த வேண்டும், கூடுதல் ஒப்புதல் வேண்டும் என்பதைத் தவிர, பெரிய மாற்றம் ஏதும் சட்டத்தில் இல்லை.
ஆனாலும், ராபர்ட் வதேரா போன்ற சிறு விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட இந்தச் சட்டத்தில் வாய்ப்புக்கள் அதிகம். அதனால் தான் இந்திய முதலாளிகள் தரப்பு, சட்டம் பல திட்டங்களை முடக்கிவிடும் என்று கவலைப்படுகிறது.
நிலம் விலை உயர்ந்துவிடும் என்று புலம்புகிறது. நகர்ப்புறத்தில் நிலம் வேண்டும் என்றால், புதிய சட்டப்படி சந்தை விலையைப் போல் இரண்டு மடங்கு விலை தர வேண்டும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் தொழில் செய்வது சிரமம் என்கிறது. கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங் கள் திணறிப் போகும் என்கிறது. (நாட்டில் 100 கோடி பேர் பல்வேறு விதங்களில் திணறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்).
அரியானாவில் ராபர்ட் வதேரா முறைகேடாக நிலம் வாங்கியது பற்றி கேட்டபோது, அரியானா முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹ÷டா, ராபர்ட் வதேரா ஒரு சிறுவிவசாயி என்றும், நகர்ப்புற வளர்ச்சியில் சிறுவிவசாயிகளும் பயன் பெறும் விதம் மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் அடிப்படையில்தான் அவருக்கு உரிமம் வழங்கப்பட்டது என்றும் சொல்கிறார்.
ராபர்ட் வதேரா என்ற மூன்றரை ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான சிறுவிவசாயி தனது நிலத்தை மேம்படுத்த உரிமம் பெற்றார் என்றும் பிறகு அந்த நிலத்தை வேறொரு நிறுவனத் துக்கு விற்றார் என்றும் இதில் என்ன தவறு என்றும் ஹ÷டா கேட்கிறார். அரியானா அர சாங்கம் டிஎல்எஃப் நிறுவனத்துக்கு 350 ஏக்கர் நிலம் தர ஒப்பந்தம் செய்திருப்பதற்கும் ராபர்ட் வதேரா நிலம் விற்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பிப்ரவரி 2008ல் ரூ.7.5 கோடிக்கு வதேராவின் நிறுவனம் வாங்கிய நிலம் ஜ÷ன் 2008ல் ரூ.58 கோடிக்கு விற்கப்படுவதில் முறைகேடு எதுவும் இல்லை என்றும் நாம் நம்ப வேண்டும்.
வாமனன் தனது இரண்டு அடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்தது போல் ராபர்ட் வதேரா தனது இரண்டு கண்களால் நாட்டின் நிலப் பகுதிகளை அளந்துவிடுகிறார். ராஜஸ்தான் முதல் அரியானா வரை கிட்டத்தட்ட 800 ஹெக்டேர் நிலங்களை அவர் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூன்றரை ஏக்கர் நிலத்தில் நான்கு மாதங்களில் ரூ.50 கோடி பார்க்க முடியும் என்றால், 800 ஹெக்டேர் நிலம் என்ன வருமானம் தரும் என்று மதிப்பிட்டுக் கொள்ளலாம். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இந்த 800 ஹெக்டேர் நிலத்துக்கு என்ன விலை கிடைக்கும் என்றும் அல்லது நிலம் மேம்படுத்துவது, தொழில் துவங்குவது என்ற பெயரில் ராபர்ட் வதேரா என்ற சிறுவிவசாயி எந்த அளவுக்கு வளம் பெறுவார் என்றும் நாம் பொறுத் திருந்து பார்க்க வேண்டியுள்ளது. எப்படியாயினும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ராபர்ட் வதேரா போன்ற சிறுவிவசாயிகள் மற்றும் டிஎல்எஃப் போன்ற தொழில் முனைவோர் வாழ்வில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். சீனா இந்திய எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த ராபர்ட் வதேராவை பொறுப்பாக்க வேண்டும் என்றும் சீனா ஊடுருவி இருப்பதாக சொல்லப்படும் அந்த நிலப் பகுதியை சீனாவே வியக்கும் வண்ணம் அவர் மேம்படுத்திக் காட்டுவார் என்றும் இணைய தளங்கள் கேலிக் கதைகள் எழுதும்.