COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 1, 2013

கிராமப்புற வறியவர் வாழ்வுரிமை கோரி அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம்


ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.148 சட்டக் கூலி வழங்கு!

ஊரக வேலை உறுதி திட்டத்தில் அளவு முறையை ரத்து செய்!

ஊரக வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிப் பகுதிக்கும்,
சிறு, குறு விவசாயத்துக்கும் விரிவுபடுத்து!

கோவில், மடம், புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்டோர் வன்னியர் மற்றும் முத்தரையர் சமூக ஏழைகளுக்கு அந்த நிலங்களை சொந்தமாக்கு!

ஜ÷ன் 27, 28 தேதிகளில் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் கூடிய அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தேசிய செயற்குழு, விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை, அரசியல் உரிமை கோரிக்கை மீது தேசந் தழுவிய இயக்கம் நடத்த அறைகூவல் விடுத்தது. ஜ÷லை 15 முதல் ஆகஸ்ட் 19 வரை கிராமப்புற வறிய மக்கள் மத்தியில் ஆழமான பிரச்சார இயக்கம் நடத்தவும் முடிவு செய்தது.

தமிழகத்தில் ஜ÷லை 7 அன்று விழுப்புரத்தில் கூடிய மாநில நிர்வாகக் குழு தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களின் ஜீவாதாரமான கோரிக்கைகளான ஊரக வேலை உறுதி திட்டத்தில் சட்டக் கூலியான ரூ.148, மாநில அரசு அறிவித்துள்ள வருடத்தில் 150 நாட்கள் வேலை, வீடில்லாத வறிய மக்களுக்கு 5 சென்ட் வீட்டுமனைப் பட்டா, நூறுநாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிக்கும், சிறு, குறு விவசாயத்துக்கும் விரிவுபடுத்துவது, 100 நாள் வேலை திட்டத்தில் அளவு முறையை ரத்து செய்வது, கோவில், மடம், புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்டோர் வன்னியர் மற்றும் முத்தரையர் சமூக ஏழைகளுக்கு அந்த நிலங்களை சொந்தமாக்குவது, மற்றும் சுகாதாரம், மருத்துவ வசதி, கல்வி ஆகியவற்றின் மீது செயல்துடிப்புள்ள பிரச்சார இயக்கத்தை கட்டமைக்க முடிவு செய்தது.

ஊராட்சிகள் தோறும் கூடுவோம், உரிமைகளுக்காக போராடுவோம் என முழங்கி ஊராட்சிமட்ட கூட்டங்கள் கட்டமைக்கப்பட்டன.

புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை - நாகை, விழுப்புரம், மதுரை, நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் 20 ஊராட்சிகளில் 2300 பேர் பங்கேற்ற கூட்டங்கள் நடத்தப்பட்டன. 50 பெண் ஊழியர்கள் உட்பட 200 செயல் வீரர்கள் உற்சாகமாக செயல்பட்டனர். துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஊர்க் கூட்டங்கள் என ஒரு மாத கால பிரச்சார இயக்கத்தில் மக்களை அணி திரட்ட தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 19 அன்று மாநிலம் முழுவதும் 11 புள்ளிகளில் 1500 பெண்கள் உட்பட 2500 பேர் பங்கேற்ற எழுச்சி மிகு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் தோழர் ஜோதிவேல் தலைமையில், தோழர்கள் வளத்தான், ராஜாங்கம், ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்க 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. தாலுகா அலுவலகம், வட்டாட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஊராட்சி வாரியாக கொடுக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இகக(மாலெ) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தேசிகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
குன்றாண்டார் கோவில் ஒன்றியம் கீரனூரில் 130 பேர் கலந்து கொண்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும்  நடைபெற்றது. தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் தோழர் செல்லையா முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன் உரையாற்றினார்.
கறம்பக்குடி ஒன்றியம் கறம்பக்குடியில் 100 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் தோழர் விஜயன் தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் கலைச்செல்வன், மூக்கையன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

விழுப்புரம்

அவிதொச மாவட்டத் தலைவர் தோழர் கலியமூர்த்தி தலைமையில் ஆணும், பெண்ணுமாக 500 பேர் பங்கேற்ற பேரணி நீதி மன்றத்திலிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றது. 15 பேர் கொண்ட குழு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து பேச்சுவார்த்தை நடத்தியது. கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சித் தலைவர் உத்தரவாதம் அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர் களை 144 தடை உத்தரவு இருப்பதாக கூறி காவல்துறை கைது செய்தது. நிகழ்ச்சியில் இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், அயாலா மாநில துணைப் பொதுச் செய லாளர் தோழர் வெங்கடேசன், முற்போக்கு பெண்கள் கழக மாநிலச் செயலாளர் தோழர் செண்பக வள்ளி கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலையில் விடுதலையாகினர்.

திருவள்ளூர்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் சில நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன் உரையாற்றினார். தோழர் ஜானகிராமன் தலைமையிலான குழு ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தியது. நூறுநாள் வேலைத் திட்டக் கூலியை வங்கியில் பெறுவதில் தொழிலாளர்களுக்கு இருக்கும் சிரமங்கள் எடுத்துச் சொல்லப்பட்டு வேலை செய்யும் இடத்திலேயே கூலி வழங்கப்பட வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது. ஆட்சியர் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

தஞ்சை

கும்பகோணத்தில் தோழர் கண்ணையன் தலைமையிலும் தோழர்கள் குருசாமி, செல்லத்துரை முன்னிலையிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அவிதொச மாநிலத் தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் உரை நிகழ்த்தினார்.

நாகை

மயிலாடுதுறையில் தோழர் ஆனந்தன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக தோழர் கார்த்திக், இகக(மாலெ) மாவட்ட செயலாளர் தோழர் இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். 175 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை

தோழர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு தோழர் மணிராஜ், அய்சா தோழர் சத்ய கிருஷ்ணன், அவிதொச முத்தம்மாள், இகக(மாலெ) மாவட்ட பொறுப்பாளர் தோழர் மதிவாணன் உரையாற்றினர்.

நாமக்கல்

ராசிபுரத்தில் தோழர் கணேசன் தலைமையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200 பேர் பங்கெடுத்தனர். தோழர்கள் வேல்முருகன், மோகனசுந்தரம் சிறப்புரையாற்றினர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவிலில், ராமாபுரம் ஊராட்சியில் 100 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாநில குழு உறுப்பினர் தோழர் அம்மையப்பன் உரையாற்றினார்.

வறுமைக் கோட்டுப் பட்டியல் தில்லுமுல்லு, உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மோசடி ஆகியவை கிராமப்புற வறியவர் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற வறியவர்களை பெரும் அரசியல் சக்தியாக எழ வைக்கும் வாய்ப்பும் கடமையும் அவிதொசவுக்கு உள்ளது.
                                                                                                                              

Search