வெள்ளையர் வெளியேறி சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. வெங்காயம், டாலர், பெட்ரோல் மூன்றில் எது முதலில் நூறு என்ற எண்ணை எட்டும் எனக் காண வேண்டி உள்ளது. குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 15, 2013 உரையில் நாடு சந்திக்கும் சில பிரச்சனைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டினாலும், தீர்வுகள் பற்றிப் பேசாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்திரமான அரசாங்கம் வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜியின் விருப்பத்தை வரவேற்றுள்ள நரேந்திர மோடி, தம் தலைமையில் அப்படி ஒரு ஸ்திரமான அரசாங்கம் வரும் என நம்பிக்கை ஊட்டப் பார்க்கிறார். நரேந்திர மோடி பூச்சாண்டி காட்டியும், தகவல் அறியும் உரிமை, வேலை உறுதி சட்டம், கல்வி பெறும் உரிமை, உணவு பெறும் உரிமைச் சட்டங்கள் காட்டியும், கரை சேர முடியுமா எனக் காங்கிரஸ் பார்க்கிறது.
வளர்ச்சி, அனைவரையும் உள்ளே கொண்டு வரும் வாய் வீச்சுக்கள் எல்லாம் தாண்டி உண்மையில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை ஆகஸ்ட் 15, 2013 அன்று பீகாரிலும் குஜராத்திலும் நடந்த இரு சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.
யதார்த்தம் 1
நள்ளிரவில் கிடைத்து விடியாத சுதந்திரத்தை, பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டம் கில்சாகர் ஒன்றியம் பத்தி கிராமத்து தலித்துகள், ஆகஸ்ட் 15, 2013 அன்று அனுபவத்தில் உணர்ந்தனர். நாடெங்கும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் தயாரிப்புக்களும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது, அந்த கிராமத்து தலித்துகள், ரவிதாஸ் கோவிலில், முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவுப்படி, ஒன்றிய வளர்ச்சி அலுவலர் காலை 10 மணிக்கு கொடி ஏற்ற வருவார் எனக் காத்திருந்தனர். ஆனால் 9 மணி அளவிலேயே, நிலப்பிரபுக்கள், மேல்சாதி ஆதிக்க சக்திகள் தலைமையிலான குற்றக் கும்பல், தலித் கோவில் கண்ணை உறுத்துவதால், அதனைத் தரை மட்டமாக்கி, அந்த இடத்தைக் கைப்பற்ற வந்தது. நியாயம் கேட்ட தலித் மக்களை ஆயுதங்களால் தாக்கியது. துப்பாக்கியால் சுட்டது. விலாஸ் ராம் மரணமடைந்தார். மிகவும் வஞ்சகமாக 1857 முதல் சுதந்திரப் போரில் மடிந்த ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த நிஹாந்த் சிங் என்பவர் சிலையை, தலித் மக்கள் கோவிலை இடிக்கும் இடத்தில் நிறுவப் போவதாகச் சொல்கிறார்கள். இந்தக் கிராமம் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தொகுதியில் உள்ளது.
யதார்த்தம் 2
தொழிலாளர்கள் உரிமை கோரினால், அவர்கள் தொழிற்சாலைக்கு வெளியேயும் உள்ளேயும் சிறையில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் மாருதியை, நரவேட்டை நரேந்திர மோடி குஜராத்துக்கு வந்து அருள் புரிய அழைத்தார். மோடி, சிறப்பு முதலீட்டு பிராந்தியங்கள் அமைத்துள்ளார். டாடாவின் நானோ தொழிற்சாலை சிங்கூர் மக்களால் மேற்கு வங்கத்திலிருந்து விரட்டப்பட்டபோது, குஜராத்தில் சிங்கூர் நடக்காது என மோடி டாடாவை அழைத்துக் கொண்டார். மண்டல் - பெக்கராஜி சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் மாருதிக்கு நிலம் வழங்க மோடி திட்டமிட்டார். வருவாய் தரிசு நிலம் எனப் பயிர் நிலத்தைக் காட்டப் பார்த்தார்கள். ஆகஸ்ட் 15 அன்று ஹன்சால்பூரில் கூடிய விவசாயிகள் 5000 பேர் மாருதியே திரும்பிப் போ, சிறப்பு முதலீட்டு மண்டலம் வேண்டவே வேண்டாம் என முழங்கினார்கள். விடாப்பிடியான மக்கள் எதிர்ப்பால், 44 கிராமங்களில் 36 கிராமங்களில் நிலம் எடுக்க மாட்டோம் என இப்போது குஜராத் அரசாங்கம் பணிந்துள்ளது. மோடியின் செங்கோட்டை கனவுகள், குஜராத் மண்ணிலேயே சவாலுக்குள்ளாவது, நல்ல செய்திதான்.
பிரணாப் முகர்ஜியின் விருப்பத்தை வரவேற்றுள்ள நரேந்திர மோடி, தம் தலைமையில் அப்படி ஒரு ஸ்திரமான அரசாங்கம் வரும் என நம்பிக்கை ஊட்டப் பார்க்கிறார். நரேந்திர மோடி பூச்சாண்டி காட்டியும், தகவல் அறியும் உரிமை, வேலை உறுதி சட்டம், கல்வி பெறும் உரிமை, உணவு பெறும் உரிமைச் சட்டங்கள் காட்டியும், கரை சேர முடியுமா எனக் காங்கிரஸ் பார்க்கிறது.
வளர்ச்சி, அனைவரையும் உள்ளே கொண்டு வரும் வாய் வீச்சுக்கள் எல்லாம் தாண்டி உண்மையில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை ஆகஸ்ட் 15, 2013 அன்று பீகாரிலும் குஜராத்திலும் நடந்த இரு சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.
யதார்த்தம் 1
நள்ளிரவில் கிடைத்து விடியாத சுதந்திரத்தை, பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டம் கில்சாகர் ஒன்றியம் பத்தி கிராமத்து தலித்துகள், ஆகஸ்ட் 15, 2013 அன்று அனுபவத்தில் உணர்ந்தனர். நாடெங்கும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் தயாரிப்புக்களும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது, அந்த கிராமத்து தலித்துகள், ரவிதாஸ் கோவிலில், முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவுப்படி, ஒன்றிய வளர்ச்சி அலுவலர் காலை 10 மணிக்கு கொடி ஏற்ற வருவார் எனக் காத்திருந்தனர். ஆனால் 9 மணி அளவிலேயே, நிலப்பிரபுக்கள், மேல்சாதி ஆதிக்க சக்திகள் தலைமையிலான குற்றக் கும்பல், தலித் கோவில் கண்ணை உறுத்துவதால், அதனைத் தரை மட்டமாக்கி, அந்த இடத்தைக் கைப்பற்ற வந்தது. நியாயம் கேட்ட தலித் மக்களை ஆயுதங்களால் தாக்கியது. துப்பாக்கியால் சுட்டது. விலாஸ் ராம் மரணமடைந்தார். மிகவும் வஞ்சகமாக 1857 முதல் சுதந்திரப் போரில் மடிந்த ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த நிஹாந்த் சிங் என்பவர் சிலையை, தலித் மக்கள் கோவிலை இடிக்கும் இடத்தில் நிறுவப் போவதாகச் சொல்கிறார்கள். இந்தக் கிராமம் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தொகுதியில் உள்ளது.
யதார்த்தம் 2
தொழிலாளர்கள் உரிமை கோரினால், அவர்கள் தொழிற்சாலைக்கு வெளியேயும் உள்ளேயும் சிறையில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் மாருதியை, நரவேட்டை நரேந்திர மோடி குஜராத்துக்கு வந்து அருள் புரிய அழைத்தார். மோடி, சிறப்பு முதலீட்டு பிராந்தியங்கள் அமைத்துள்ளார். டாடாவின் நானோ தொழிற்சாலை சிங்கூர் மக்களால் மேற்கு வங்கத்திலிருந்து விரட்டப்பட்டபோது, குஜராத்தில் சிங்கூர் நடக்காது என மோடி டாடாவை அழைத்துக் கொண்டார். மண்டல் - பெக்கராஜி சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் மாருதிக்கு நிலம் வழங்க மோடி திட்டமிட்டார். வருவாய் தரிசு நிலம் எனப் பயிர் நிலத்தைக் காட்டப் பார்த்தார்கள். ஆகஸ்ட் 15 அன்று ஹன்சால்பூரில் கூடிய விவசாயிகள் 5000 பேர் மாருதியே திரும்பிப் போ, சிறப்பு முதலீட்டு மண்டலம் வேண்டவே வேண்டாம் என முழங்கினார்கள். விடாப்பிடியான மக்கள் எதிர்ப்பால், 44 கிராமங்களில் 36 கிராமங்களில் நிலம் எடுக்க மாட்டோம் என இப்போது குஜராத் அரசாங்கம் பணிந்துள்ளது. மோடியின் செங்கோட்டை கனவுகள், குஜராத் மண்ணிலேயே சவாலுக்குள்ளாவது, நல்ல செய்திதான்.