COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 30, 2018

தோழர் எஎம்கேவுக்கு செவ்வஞ்சலி

அறுபதுகளின் இறுதியில் இருந்து தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் முன்னோடியாக இருந்த, தோழர் எஎம்கே என்று பிரியமுடன் அழைக்கப்படுகிற தோழர் எ.எம்.கோதண்ட ராமன் உடல் நலக் குறைவால் தனது 84ஆவது வயதில் மரணமுற்றார்.
நக்சல்பாரி இயக்கத்தை, இககமாலெயை தமிழ்நாட்டில் உருவாக்கிய புரட்சியாளர்களில் ஒருவராக இருந்த தோழர் எஎம்கே 1977ல் பரோலில் சென்னை சிறையில் இருந்து விடுதலையானபோது, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பெரும்பகுதி சிம்சன் தோழர்கள் அவரை சிறை வாயிலுக்குச் சென்று வரவேற்றனர். அந்தத் தொழிலாளர் மத்தியில், இந்திய ஆளும் வர்க்கங்களை வங்கக் கடலில் வீசியெறிவோம் என்று அவர் முழங்கினார். அந்த முழக்கம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
தோழர் எஎம்கேவுக்கு இககமாலெ செவ்வஞ்சலி செலுத்துகிறது.

Search