COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 16, 2019

தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த ஏவுகணை
அணுக்கழிவுக் கிட்டங்கி


கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரானப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது
, கன்னட மக்கள் கூடங்குளம் கழிவுகளை அவர்கள் மாநிலத்தில் புதைக்க விடமாட்டோம் என்று ஒரு மூன்று நாள் போராட்டத்தை நடத்தி அதைத் தடுத்தார்கள். அப்போது மத்திய இணை அமைச்சர் திரு.நாராயணசாமி கூடங்குளம் அணு உலைக் கழிவுகள் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்று அறிவித்தார்.
ஒவ்வொரு உலையிலும் எரிகோல் சேமிப்புத் தேக்கம் (ஸ்பென்ட் ஃபுயல் பூல்) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏழு இயங்கு வருடங்களில் (ஆப்பரேஷன் இயர்ஸ்) எரிக்கப்பட்ட எரிகோல்களை மட்டுமே சேமித்து வைக்கமுடியும். பின்னர் அந்தக் கழிவுகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும். அந்த எரிகோல் கழிவுகளை பாதுகாத்து வைப்பதற்கு ஏஎஃப்ஆர் (அவே ஃப்ரம் ரியாக்டர்) எனும் ‘அணு உலையிலிருந்து அகலே’ எனும் அமைப்பு கட்டப்படுகிறது.
அணுக்கழிவுகளின் அளவு அதிகரிக்கும்போது, அவற்றை சேமித்து வைக்கும் கிட்டங்கிகளின் தேவையும் அதிகரிக்கிறது. அணுக்கழிவுகளை மறுசுழற்சி (ரீப்ரோசசிங்) செய்தாலும் கழிவு கிட்டங்கிகளின் தேவை அதிகரிக்கத்தான் செய்யும். அணு உலை வளாகங்களுக்குள் கட்டப்படும் இந்த ஏஎஃப்ஆர் (அவே ஃப்ரம் ரியாக்டர்) எனும் அணு உலையிலிருந்து அகலே அமைப்பை அரசே கட்டி நிர்வகிக்கும்.
பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மீது வழக்கு தொடுத்தபோது, உச்சநீதிமன்றம் 02.07.2018 அன்று ஒரு தீர்ப்பளித்தது. அதாவது ஏப்ரல் 30, 2022 தேதிக்குள் ஏஎஃப்ஆர் எனும் அணு உலையிலிருந்து அகலே கூடங்குளம் அணு உலையில் கட்டப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.
அதற்கான ஆயத்த வேலைகளை மத்திய அரசும், அணு சக்தித் துறையும் தற்போது துவங்குகின்றன. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் யூலை 10 அன்று இராதாபுரத்தில் அரசுப் பள்ளியில் வைத்து நடக்கவிருக்கிறதாம், இது பற்றிய தகவல் மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர் அலுவலகங்களில் இருக்கின்றனவாம். டிஜிட்டல் இந்தியா இவற்றை இணையத்தில் பதிவேற்றாதது ஏன் என்று தெரியவில்லை.
கூடங்குளம் அணு உலை வளாகம் 5.40 கி.மீ. நீளமும் 2.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த 13.5 சதுர கி.மீ பரப்பில் ஆறு முதல் எட்டு அணு உலைகள் அணுக்கழிவு, மறுசுழற்சி ஆலை (ரிப்ரோசசிங் பிளாண்ட்), உப்பகற்றி ஆலைகள் (டிசேலினேஷன் ப்ளாண்ட்ஸ்) நிர்வாக அலுவலகங்கள் என அனைத்தையும் சேர்த்து அடர்த்தியாகக் கட்டுவது மிகவும் ஆபத்தானது.
1 - 2 அணு உலைகளுக்கும் 3 - 4 அணு உலைகளுக்கும் இடையே வெறும் 804 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. அதேபோல 3 - 4 அணு உலைகளுக்கும் 5 - 6 அணு உலைகளுக்கும் இடையே அதைவிடக் குறைவாக 344 மீட்டர் தூரம்தான் உள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் ஏஎஃப்ஆர் (அவே ஃப்ரம் ரியாக்டர்) எனும் அணு உலையிலிருந்து அகலே எனும் அமைப்பை இதே வளாகத்தில் எப்படி கட்ட முடியும்? அப்படியேக் கட்டினாலும், அது உள்ளூர் மக்களுக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் பெரும் கேடுகளை ஆபத்துக்களை உருவாக்கும் என்பது திண்ணம்.
எனவே, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இதற்கு எதிராகவும் கூடங்குளம் அணு உலையின் விரிவாக்கத்துக்கு எதிராகவும் நவம்பர் 19, 2018 முதல் மே 19, 2019 ஆறு மாதங்களாக மூடிக்கிடந்த முதல் அணு உலை இன்று மீண்டும் மூடப்பட்டிருப்பதன் பின்னாலுள்ள மாபெரும் ஊழல்கள், பித்தலாட்டங்கள், ஆபத்துக்கள் பற்றியெல்லாம் மக்களிடம் பரப்புரைகளை மேற்கொள்ளும் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரானப் போராட்டம் இறுதி வெற்றி கிட்டும் வரைத் தொடரும்.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
யூன் 4, 2019
எங்கள் குழந்

Search