அய்எஸ்அய்எஸ் மீது தாக்குதல் தொடரும் என்று ஒபாமா அறிவித்துக் கொண்டிருந்த போது, லைபீரியாவில் இருந்த அய்க்கிய அமெரிக்காவுக்கு வந்த அய்க்கிய அமெரிக்க குடிமகன் ஒருவர் எபோலா வைரஸ் தாக்கிச் செத்துப் போனார். அய்க்கிய அமெரிக்காவில் எபோலா நுழைந்துவிட்டது என்று உலக வங்கியின் தலைவர் பதறுகிறார்.
எபோலாக்கான தடுப்புப் பூசி, 30 ஆண்டுகளாக அய்க்கிய அமெரிக்காவின் பென்டகன் விஞ்ஞானிகளிடம் உள்ளது. அந்த மருந்துக்கான மொத்த உரிமையும் அய்க்கிய அமெரிக்காவிடமே உள்ளது. எபோலா அயக்கிய அமெரிக்கா கண்டுபிடித்துள்ள ஓர் உயிரியல் ஆயுதம். (http://
english.pravda.ru/science/earth/11-08-2014/128247-ebola_biological_weapon-0/). பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலை திட்டமிட்டு பரப்பிவிட்டு அதற்கு தடுப்பு மருந்து கொடுத்து காசு பார்த்த அய்க்கிய அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது தங்கள் வியாபாரத்திற்கு எபோலாவைக் கையில் எடுத்துள்ளன. மைக்ரோசாஃப்ட் மன்னன் பில்கேட்சும் எபோலாவை கட்டுப்படுத்துவது பற்றி அக்கறையோடு பேசுகிறார். அதற்காக அவர் 50 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளாராம். ஆடு நனைய ஓநாய் அழுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை பில்கேட்ஸ÷ம் அவர் மனைவி மெலிண்டாவும் எங்குபோனாலும் எய்ட்ஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது எய்ட்ஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு. எய்ட்ஸ், எபோலா வைரஸ்கள், காடுகளில் தனித்துவிடப்பட்ட குரங்குகளால் உருவானவையல்ல. அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை. அவை அய்க்கிய அமெரிக்க சோதனைக் கூடங்களில் உயிரியல் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்டவை என்கிறார் (http://www.lightparty.com/Health/AidsEbola.html) ஹார்வேர்டைச் சேர்ந்த டாக்டர். லியோனர்ட் ஜி. ஹோராவிட்ச்.
கலிபோர்னியாவில் உள்ள அய்க்கிய அமெரிக்க மருந்து நிறுவனமான மாப் பார்மசுடிகல்ஸ் (Mapp Biopharmaceutical) தயாரித்த ஸ்செட்மாப் (ZMapp) என்ற எபோலா தடுப்பூசியை முதல் முதலாக இரண்டு ஆப்பிரிக்க மருத்துவர்களுக்குப் போட்டு பரிசோதிக்கப்பட்டது. அந்த மருந்தும் இப்போது கையிருப்பில் இல்லை. அடுத்து மருந்து வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று அலட்டிக் கொள்கிறது அந்த நிறுவனம். அக்டோபர் 9 அன்று லைபீரியா மக்கள் மோன்ரோவியாவில் திரண்டு எபோலாவைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
மோடி தூய்மை இந்தியா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அர்விந்த் கேஜ்ரிவால் கையில் இருந்த துடைப்பத்தையும் பறித்துக் கொண்டார். எல்லையில் பாகிஸ்தான் படைகள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன. டில்லி மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், நம்மிடம் எபோலாவை கண்டுபிடிக்க, கட்டுப்படுத்த போதுமான வசதிகள் இல்லை என்று சொல்லியுள்ளார். நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைகளில் தண்ணீர் கூட இருப்பதில்லை என்று மோடிக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால், அவர் சாமான்யர் குடும்பத்தில் பிறந்து பிரதமர் ஆனவர் என்று சொல்லிக் கொள்பவர்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு ஒரு நோய் போனால், இன்னொரு நோய் வந்துவிட, நோயாளியை கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு புதிய நோய் வந்துவிட வாய்ப்புக்கள் அதிகம். நாட்டில் இன்னும் எபோலா வைரசைக் கண்டுபிடிக்கும் வசதி கூட முழுமையாக உருவாக்கப்படாத நிலையில், அது நுழைந்து விட்டால்....? மோடியைப் பார்த்து அஞ்சி ஓடிவிடாதா?
சென்னையைச் சேர்ந்த ஒருவர் கூட எபோலா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் இப்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். மயிலாடுதுறையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களை தனிமை அறைகளில் வைக்கக் கூட அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்பதால், மற்ற நோயாளிகளுடன் அதே அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். டெங்குவையே கட்டுப்படுத்த முடியாதவர்கள் நமது ஆட்சியாளர்கள். ஒரு வேளை எபோலா வந்தால் அவர்கள் நாட்டை விட்டு ஓடிவிடுவார்களோ?
எபோலாக்கான தடுப்புப் பூசி, 30 ஆண்டுகளாக அய்க்கிய அமெரிக்காவின் பென்டகன் விஞ்ஞானிகளிடம் உள்ளது. அந்த மருந்துக்கான மொத்த உரிமையும் அய்க்கிய அமெரிக்காவிடமே உள்ளது. எபோலா அயக்கிய அமெரிக்கா கண்டுபிடித்துள்ள ஓர் உயிரியல் ஆயுதம். (http://
english.pravda.ru/science/earth/11-08-2014/128247-ebola_biological_weapon-0/). பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலை திட்டமிட்டு பரப்பிவிட்டு அதற்கு தடுப்பு மருந்து கொடுத்து காசு பார்த்த அய்க்கிய அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது தங்கள் வியாபாரத்திற்கு எபோலாவைக் கையில் எடுத்துள்ளன. மைக்ரோசாஃப்ட் மன்னன் பில்கேட்சும் எபோலாவை கட்டுப்படுத்துவது பற்றி அக்கறையோடு பேசுகிறார். அதற்காக அவர் 50 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளாராம். ஆடு நனைய ஓநாய் அழுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை பில்கேட்ஸ÷ம் அவர் மனைவி மெலிண்டாவும் எங்குபோனாலும் எய்ட்ஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது எய்ட்ஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு. எய்ட்ஸ், எபோலா வைரஸ்கள், காடுகளில் தனித்துவிடப்பட்ட குரங்குகளால் உருவானவையல்ல. அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை. அவை அய்க்கிய அமெரிக்க சோதனைக் கூடங்களில் உயிரியல் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்டவை என்கிறார் (http://www.lightparty.com/Health/AidsEbola.html) ஹார்வேர்டைச் சேர்ந்த டாக்டர். லியோனர்ட் ஜி. ஹோராவிட்ச்.
கலிபோர்னியாவில் உள்ள அய்க்கிய அமெரிக்க மருந்து நிறுவனமான மாப் பார்மசுடிகல்ஸ் (Mapp Biopharmaceutical) தயாரித்த ஸ்செட்மாப் (ZMapp) என்ற எபோலா தடுப்பூசியை முதல் முதலாக இரண்டு ஆப்பிரிக்க மருத்துவர்களுக்குப் போட்டு பரிசோதிக்கப்பட்டது. அந்த மருந்தும் இப்போது கையிருப்பில் இல்லை. அடுத்து மருந்து வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று அலட்டிக் கொள்கிறது அந்த நிறுவனம். அக்டோபர் 9 அன்று லைபீரியா மக்கள் மோன்ரோவியாவில் திரண்டு எபோலாவைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
மோடி தூய்மை இந்தியா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அர்விந்த் கேஜ்ரிவால் கையில் இருந்த துடைப்பத்தையும் பறித்துக் கொண்டார். எல்லையில் பாகிஸ்தான் படைகள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன. டில்லி மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், நம்மிடம் எபோலாவை கண்டுபிடிக்க, கட்டுப்படுத்த போதுமான வசதிகள் இல்லை என்று சொல்லியுள்ளார். நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைகளில் தண்ணீர் கூட இருப்பதில்லை என்று மோடிக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால், அவர் சாமான்யர் குடும்பத்தில் பிறந்து பிரதமர் ஆனவர் என்று சொல்லிக் கொள்பவர்.
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு ஒரு நோய் போனால், இன்னொரு நோய் வந்துவிட, நோயாளியை கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு புதிய நோய் வந்துவிட வாய்ப்புக்கள் அதிகம். நாட்டில் இன்னும் எபோலா வைரசைக் கண்டுபிடிக்கும் வசதி கூட முழுமையாக உருவாக்கப்படாத நிலையில், அது நுழைந்து விட்டால்....? மோடியைப் பார்த்து அஞ்சி ஓடிவிடாதா?
சென்னையைச் சேர்ந்த ஒருவர் கூட எபோலா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் இப்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். மயிலாடுதுறையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களை தனிமை அறைகளில் வைக்கக் கூட அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்பதால், மற்ற நோயாளிகளுடன் அதே அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். டெங்குவையே கட்டுப்படுத்த முடியாதவர்கள் நமது ஆட்சியாளர்கள். ஒரு வேளை எபோலா வந்தால் அவர்கள் நாட்டை விட்டு ஓடிவிடுவார்களோ?