உயர்கல்வியில் மேற்கொள்ளப்படும்
மக்கள் விரோத மாற்றங்கள்
அ.மார்க்ஸ்
உயர்கல்வி என்பது அம்பானி - பிர்லா அறிக்கை தொடங்கி மிகமிக வேகமாக முழுக்க ஒரு லாபம் ஈடடும் தொழிலாக மாறி விட்டது.
கல்வி என்பது ஒரு சந்தைக்குரிய வணிகப் பொருளாக இப்படி மாற்றமடையும் எனச் சென்ற நூற்றாண்டில் யாரும் நினைத்திருக்க மாட்டோம்.
இந்த அறிக்கைகளின் மீது பெரிய விளக் கங்கள் ஏதும் தேவையில்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போதே, இதன் ஆபத்துகள் விளங்கும். முழுக்க முழுக்க உயர்கல்வி என்பது இன்று ஏழை எளிய மக்களுக்கு எளிதில் எட்ட முடியாத ஒன்றாகிவிட்டது.
இது உலகளாவிய ஒரு போக்காக உள்ளது. இதற்கு இன்றைய அரசை நாம் குறை சொல்லி என்ன பயன் என ஒருவருக்குத் தோன்றலாம். ஒரு வகையில் இது உண்மைதான். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும், இதைத்தான் செய்திருக்கும். அதனால்தான் எதிர்க் கட்சியாக உள்ள காங்கிரசோ, இதர கட்சிகளோ பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை.
உலகமயம் என்பதற்குள் நாம் தலையைக் கொடுத்துவிட்டோம், பின் என்ன செய்வது என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டுவிட இயலாது. இந்த உலகம் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய ஒன்று. இந்தியா மக்கள் தொகை மிகமிக அதிகமாக உள்ள, பெரும் ஏற்றத்தாழ்வுகள்மிக்க, சாதி, தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகள் மிகுந்த, பெரும்பான்மை மதத்தினர், சிறுபான்மையினர் என்ற முரண்பாடுகள் கூர்மைப்பட்டுள்ள ஒரு நாடு. அதனால்தான் இங்கு பாதுகாப்புகள் முதலியவற்றை நாம் இழக்கவோ அல்லது ஒத்தி வைக்கும் நிலையிலோ நாம் இல்லை.
காங்கிரஸ் முதலான கட்சிகளும் கூட உலகமயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கட்சிகளாயினும் அவற்றுக்கு இல்லாத சில திட்டங்களையும் அணுகுமுறைகளையும் உள்நோக்கங்களையும் கொண்ட கட்சி பாஜக. அது இதை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் வேகமும் ஆர்வமும் மக்களுக்கு தெரிவிக்காமலேயே இவற்றை நடைமுறைக்கு கொண்டு வரும் வஞ்சமும் அச்சமூட்டுவனவாக உள்ளன.
குறிப்பான சில ஆபத்துகளை மட்டும் சுட்டி இக்கட்டுரையை முடிக்கலாம்.
1. உயர்கல்வி இப்போது தரப்படுத்தப்பட்டுவிட்டது. முதல் தரக் கல்லூரிகளில் இனி ஏழை எளிய மக்கள் இடம் பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. இனிமேல் ஒரு வேலைக்குச் செல்வதானால் உரிய தகுதி வாய்ந்தவர்களுக்குள்ளும் அவர் முதல் தரக் கல்லூரியில் பயின்றவரா, இல்லை மூன்றாம் தரக் கல்லூரியில் பயின்றவரா என்பதும் ஒரு முக்கிய தகுதியாக அமையப்போகிறது. இப்படியாக உருவாகும் இந்தப் புதிய ஏற்றத்தாழ்வு ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மிகுதிப்படுத்திவிட்டது.
2. மாணவர் சேர்க்கையில் ‘மெரிட்’ ஒன்றே இனி தகுதியாகக் கருதப்படும் என வெளிப்படையாகச் சொல்வதும், இட ஒதுக்கீடு குறித்து இந்த அறிக்கைகளும், கல்விக் கொள்கைகளும் காட்டும் மவுனமும் ஆபத்தானவை.
3. பேராசிரியர்கள் தேர்வு, பேராசிரியர்கள் ஊதியம், பணிப்பாதுகாப்பு, மேல்முறையீடு எதிலும் அரசுக் கட்டுப்பாட்டிற்கு இனி இடம் இல்லை. வெளிநாட்டுப் பேராசிரியர்களின் ஊதியம் 20 மணி நேரத்திற்கு 5 இலட்சத்துக்கு குறையக் கூடாது எனச் சொல்லும் இந்த அறிக்கைகள் உள்ளூர்ப் பேராசிரியர்களின் ஊதியம், பணித் தேர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியன பற்றி ஒன்றும் சொல்வதில்லை. இனி ஆசிரியர்கள் அனைவருமே ஒப்பந்தக் கூலிகளாகவும் நிரந்தரமற்றவர்களாகவும் மட்டுமே இருக்கப்போவது உறுதி.
4. மாணவர் கட்டணத்திற்கும் எந்தக் கட்டுப்பாடும் கூறப்படவில்லை.
5. பாடத்திட்டங்களில் பூரண சுதந்திரம் என்பதும் ஆபத்தானதே, இப்படியான சுதந்திரங்கள் இல்லாதபோதே பாடத் திட்டத்தில் இத்தனை மாற்றங்கள் செய்பவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் என்னென்ன செய்வார்கள் என நினைக்கும்போதே அச்ச மாக இருக்கிறது.
இப்போதே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம், புரோகிதம் முதலியன பாடங்களாக உள்ளன. இனி பல்லி விழும் பலனிலிருந்து மாட்டு மூத்திர ஆராய்ச்சி உட்படப் பாடங்களாக்கப்படலாம். மதவெறுப்பை இளம் மனங்களில் ஊட்டலாம். சிந்துவெளி நாகரிகம் ஆரியர்களுடையதே, தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்தே பிறந்தது என்றெல்லாம் பாடத் திட்டங்கள் அமையலாம்.
ஏற்கனவே கலைத்துறைப் பாடங்கள், (Humanities), Inter Disciplinary Subjects, Linguistics, Comparative Grammer முதலான பாடங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் நீக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் கருத்தாளர்கள் சொல்லிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி என்பது ஏற்கனேவ கருப்புப் பண முதலீடுகளுக்கான களம் ஆகியுள்ளது.
இப்போது அம்பானி, ஏர்டெல், அனில் அகர்வாலின் வேதாந்தா, ஷிவ் நாடார், ஓ.பி.ஜிண்டால், அசிம் பிரேம்ஜி, KREA முதலான கார்ப்பரேட் முதலைகள் உயர்கல்வியில் கண் பதித்துள்ள நிலையில் இன்றைய இந்த முடிவுகள் எங்கு கொண்டுவிடும்?
இனி உயர்கல்வித் துறைத் தலைவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் காட்டிலும் கல்லாவை நிரப்புவது எப்படி, ஊதியம் முதலான செலவுகளுக்காகவும் HEFAவில் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டுவதற்காகவும் எவ்வாறு சம்பாதிக்கலாம் என யோசிப்பதற்கே அதிக நேரம் செலவிட நேரிடும். ஏற்கனவே இந்தக் கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் கல்விக் கட்டணம் 30% உயர்த்தப்பட்டுவிட்டது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் கட்டணம் 1000% உயர்த்தப் பட்டுள்ளது. இனி முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் ‘ஸ்கைப்’ முறையில் நடத்தப்படுமாம். தேர்வாளருக்குப் பயணப் படி கொடுப்பதை நிறுத்த இப்படியெல்லாம் திட்டமிடும் நிலை பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பட்டுவிட்டன.
கடந்த இருபதாண்டுகளில் உயர்கல்வி தொடர்பான பல குழுக்கள் அமைக்கப்பட் டன.சாம் பிட்ரோடா தலைமையில் தயாரிக்கப்பட்ட Knowledge Commisssion Report, யஷ்பால் குழு அறிக்கை (2009) ஆகியவை இக் கட்டுரையில் விவாதிக்கப்படவில்லை.மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்ட டி.ஆர்.சுப்பிரமணியம் குழு அறிக்கையைப் பல மாதங்கள் வெளியிடாமலேயே வைத்திருந்து பிறகு அதை அவர் தானே வெளியிடப் போவதாக மிரட்டியவுடன் வெளியிட்டனர். அதற்குச் சில மாதங்களுக்குப் பின் முன்னாள் ISRO தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் தேசிய கல்விக் கொள்கைக்கான ஏழு பேர் கொண்ட குழு ஒன்று (2017) அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இங்கு விவாதிக்கப்படாமலேயே இன்று நாம் இந்தக் கட்டுரையில் விவரித்துள்ள முக்கிய உயர் கல்வித்துறை மாற்றங்கள் நடை முறைக்கு வந்துவிட்டன.
என்ன செய்யப் போகிறோம் நாம்?
மக்கள் விரோத மாற்றங்கள்
அ.மார்க்ஸ்
(தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
தலைப்புகளில் மட்டும்தான் இனி
ஆய்வுப் படிப்பு மேற்கொள்ள முடியும் என்றும்
பல்கலை கழகம் முடிவு
செய்யும் தலைப்புகளில் இருந்து மாணவர்கள் தேர்ந்தெடுத்துக்
கொள்ள வேண்டும் என்றும்
கேரள மத்திய பல்கலை
கழகம் மார்ச் 13 தேதிய தனது
சுற்றறிக்கையில் சொல்லியுள்ளது. இதற்கு
எதிராக கல்வியாளர்கள்
மத்தியில் எதிர்ப்பு
எழுந்த பின்னணியில் மத்திய
மனிதவள அமைச்சகம், தான்
அது போன்ற
உத்தரவு எதையும்
பிறப்பிக்கவில்லை என்று மார்ச்
25 அன்று சொல்லியுள்ளது. கல்வித்
துறையில் மேற்கொள்ளப்படும்
மக்கள் விரோத மாற்றங்கள்
பற்றி கல்வியாளர் அ.மார்க்ஸ் ஆற்றிய உரை
தொடர்பான அவரது முகநூல்
பதிவு இந்தப் பின்னணியில்
வெளியிடப்படுகிறது)
உயர்கல்வி என்பது அம்பானி - பிர்லா அறிக்கை தொடங்கி மிகமிக வேகமாக முழுக்க ஒரு லாபம் ஈடடும் தொழிலாக மாறி விட்டது.
கல்வி என்பது ஒரு சந்தைக்குரிய வணிகப் பொருளாக இப்படி மாற்றமடையும் எனச் சென்ற நூற்றாண்டில் யாரும் நினைத்திருக்க மாட்டோம்.
இந்த அறிக்கைகளின் மீது பெரிய விளக் கங்கள் ஏதும் தேவையில்லை. மேலோட்டமாகப் பார்க்கும்போதே, இதன் ஆபத்துகள் விளங்கும். முழுக்க முழுக்க உயர்கல்வி என்பது இன்று ஏழை எளிய மக்களுக்கு எளிதில் எட்ட முடியாத ஒன்றாகிவிட்டது.
இது உலகளாவிய ஒரு போக்காக உள்ளது. இதற்கு இன்றைய அரசை நாம் குறை சொல்லி என்ன பயன் என ஒருவருக்குத் தோன்றலாம். ஒரு வகையில் இது உண்மைதான். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும், இதைத்தான் செய்திருக்கும். அதனால்தான் எதிர்க் கட்சியாக உள்ள காங்கிரசோ, இதர கட்சிகளோ பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை.
உலகமயம் என்பதற்குள் நாம் தலையைக் கொடுத்துவிட்டோம், பின் என்ன செய்வது என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டுவிட இயலாது. இந்த உலகம் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய ஒன்று. இந்தியா மக்கள் தொகை மிகமிக அதிகமாக உள்ள, பெரும் ஏற்றத்தாழ்வுகள்மிக்க, சாதி, தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகள் மிகுந்த, பெரும்பான்மை மதத்தினர், சிறுபான்மையினர் என்ற முரண்பாடுகள் கூர்மைப்பட்டுள்ள ஒரு நாடு. அதனால்தான் இங்கு பாதுகாப்புகள் முதலியவற்றை நாம் இழக்கவோ அல்லது ஒத்தி வைக்கும் நிலையிலோ நாம் இல்லை.
காங்கிரஸ் முதலான கட்சிகளும் கூட உலகமயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கட்சிகளாயினும் அவற்றுக்கு இல்லாத சில திட்டங்களையும் அணுகுமுறைகளையும் உள்நோக்கங்களையும் கொண்ட கட்சி பாஜக. அது இதை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் வேகமும் ஆர்வமும் மக்களுக்கு தெரிவிக்காமலேயே இவற்றை நடைமுறைக்கு கொண்டு வரும் வஞ்சமும் அச்சமூட்டுவனவாக உள்ளன.
குறிப்பான சில ஆபத்துகளை மட்டும் சுட்டி இக்கட்டுரையை முடிக்கலாம்.
1. உயர்கல்வி இப்போது தரப்படுத்தப்பட்டுவிட்டது. முதல் தரக் கல்லூரிகளில் இனி ஏழை எளிய மக்கள் இடம் பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது. இனிமேல் ஒரு வேலைக்குச் செல்வதானால் உரிய தகுதி வாய்ந்தவர்களுக்குள்ளும் அவர் முதல் தரக் கல்லூரியில் பயின்றவரா, இல்லை மூன்றாம் தரக் கல்லூரியில் பயின்றவரா என்பதும் ஒரு முக்கிய தகுதியாக அமையப்போகிறது. இப்படியாக உருவாகும் இந்தப் புதிய ஏற்றத்தாழ்வு ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மிகுதிப்படுத்திவிட்டது.
2. மாணவர் சேர்க்கையில் ‘மெரிட்’ ஒன்றே இனி தகுதியாகக் கருதப்படும் என வெளிப்படையாகச் சொல்வதும், இட ஒதுக்கீடு குறித்து இந்த அறிக்கைகளும், கல்விக் கொள்கைகளும் காட்டும் மவுனமும் ஆபத்தானவை.
3. பேராசிரியர்கள் தேர்வு, பேராசிரியர்கள் ஊதியம், பணிப்பாதுகாப்பு, மேல்முறையீடு எதிலும் அரசுக் கட்டுப்பாட்டிற்கு இனி இடம் இல்லை. வெளிநாட்டுப் பேராசிரியர்களின் ஊதியம் 20 மணி நேரத்திற்கு 5 இலட்சத்துக்கு குறையக் கூடாது எனச் சொல்லும் இந்த அறிக்கைகள் உள்ளூர்ப் பேராசிரியர்களின் ஊதியம், பணித் தேர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியன பற்றி ஒன்றும் சொல்வதில்லை. இனி ஆசிரியர்கள் அனைவருமே ஒப்பந்தக் கூலிகளாகவும் நிரந்தரமற்றவர்களாகவும் மட்டுமே இருக்கப்போவது உறுதி.
4. மாணவர் கட்டணத்திற்கும் எந்தக் கட்டுப்பாடும் கூறப்படவில்லை.
5. பாடத்திட்டங்களில் பூரண சுதந்திரம் என்பதும் ஆபத்தானதே, இப்படியான சுதந்திரங்கள் இல்லாதபோதே பாடத் திட்டத்தில் இத்தனை மாற்றங்கள் செய்பவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் என்னென்ன செய்வார்கள் என நினைக்கும்போதே அச்ச மாக இருக்கிறது.
இப்போதே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடம், புரோகிதம் முதலியன பாடங்களாக உள்ளன. இனி பல்லி விழும் பலனிலிருந்து மாட்டு மூத்திர ஆராய்ச்சி உட்படப் பாடங்களாக்கப்படலாம். மதவெறுப்பை இளம் மனங்களில் ஊட்டலாம். சிந்துவெளி நாகரிகம் ஆரியர்களுடையதே, தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்தே பிறந்தது என்றெல்லாம் பாடத் திட்டங்கள் அமையலாம்.
ஏற்கனவே கலைத்துறைப் பாடங்கள், (Humanities), Inter Disciplinary Subjects, Linguistics, Comparative Grammer முதலான பாடங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் நீக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் கருத்தாளர்கள் சொல்லிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி என்பது ஏற்கனேவ கருப்புப் பண முதலீடுகளுக்கான களம் ஆகியுள்ளது.
இப்போது அம்பானி, ஏர்டெல், அனில் அகர்வாலின் வேதாந்தா, ஷிவ் நாடார், ஓ.பி.ஜிண்டால், அசிம் பிரேம்ஜி, KREA முதலான கார்ப்பரேட் முதலைகள் உயர்கல்வியில் கண் பதித்துள்ள நிலையில் இன்றைய இந்த முடிவுகள் எங்கு கொண்டுவிடும்?
இனி உயர்கல்வித் துறைத் தலைவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் காட்டிலும் கல்லாவை நிரப்புவது எப்படி, ஊதியம் முதலான செலவுகளுக்காகவும் HEFAவில் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டுவதற்காகவும் எவ்வாறு சம்பாதிக்கலாம் என யோசிப்பதற்கே அதிக நேரம் செலவிட நேரிடும். ஏற்கனவே இந்தக் கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் கல்விக் கட்டணம் 30% உயர்த்தப்பட்டுவிட்டது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் கட்டணம் 1000% உயர்த்தப் பட்டுள்ளது. இனி முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் ‘ஸ்கைப்’ முறையில் நடத்தப்படுமாம். தேர்வாளருக்குப் பயணப் படி கொடுப்பதை நிறுத்த இப்படியெல்லாம் திட்டமிடும் நிலை பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பட்டுவிட்டன.
கடந்த இருபதாண்டுகளில் உயர்கல்வி தொடர்பான பல குழுக்கள் அமைக்கப்பட் டன.சாம் பிட்ரோடா தலைமையில் தயாரிக்கப்பட்ட Knowledge Commisssion Report, யஷ்பால் குழு அறிக்கை (2009) ஆகியவை இக் கட்டுரையில் விவாதிக்கப்படவில்லை.மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்ட டி.ஆர்.சுப்பிரமணியம் குழு அறிக்கையைப் பல மாதங்கள் வெளியிடாமலேயே வைத்திருந்து பிறகு அதை அவர் தானே வெளியிடப் போவதாக மிரட்டியவுடன் வெளியிட்டனர். அதற்குச் சில மாதங்களுக்குப் பின் முன்னாள் ISRO தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் தேசிய கல்விக் கொள்கைக்கான ஏழு பேர் கொண்ட குழு ஒன்று (2017) அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இங்கு விவாதிக்கப்படாமலேயே இன்று நாம் இந்தக் கட்டுரையில் விவரித்துள்ள முக்கிய உயர் கல்வித்துறை மாற்றங்கள் நடை முறைக்கு வந்துவிட்டன.
என்ன செய்யப் போகிறோம் நாம்?