2014க்கான பெரிய போருக்கு முன் நடந்த சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களின்
முடிவுகள், ஒரு வார்த்தையில் சொல்வதானால், திகைப்பூட்டுகிறது.
தேர்தல்களில் வெளிப்பட்ட போக்குகளை அரசியல் நோக்கர்கள் சில காலமாகவே பார்க்க முடிந்தது. பல தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்களும் இதை போதுமான அளவு காட்டியிருந்தன.
ஆனால், முடிவுகளின் தீவிரம் பல விசயங்களை சொல்கிறது.
ராஜஸ்தானிலும் டில்லியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களின் பங்கு 10% அல்லது அதற்கும் குறைவாக சரிந்தது. தேர்தலுக்கு முன் தேர்தல்கள் நடந்த மூன்று மாநிலங்களில் காங்கிரசும் இரண்டு மாநிலங்களில் பாஜகவும் ஆட்சியில் இருந்தன. இந்த அய்ந்து மாநிலங்க ளில் இப்போது மிசோரம் மட்டுமே காங்கிரசுக்கு மிஞ்சியுள்ளது. பாஜக இன்னும் ஒரு மாநிலத்தில் கூடுதலாக வெற்றி பெற்று மூன்று மாநிலங்களை கைப்பற்றியுள்ளது.
டில்லியில், கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல், தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி வடிவமைப்பாளர்கள், 36 என்ற மந்திர எண்ணிக்கையுடன் ஒரு தேர்தலுக்குப் பிந்தைய ஏற்பாட்டை உருவாக்குவதில் சிரமம் எதிர்கொள்கின்றனர்.
சட்டிஸ்கர் மற்றும் மிசோரத்துக்கு அப்பால், காங்கிரஸ் இந்தத் தேர்தல்களில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற மோடியின் மூர்க்கமான அழைப்பு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிந்தாலும், அது பாஜகவின் சவாலுக்கு உட்படுத்தப்படாத மேலோங்கிய நிலையாக மிகச்சரியாக மாறவில்லை. பாஜக மூன்றில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மத்தியபிரதேசத்திலும் பல அமைச்சர்கள் தோற்றுப் போயுள்ளனர்.
சட்டிஸ்கரில் இறுதி வரை அது நெருக்கமான போட்டியாகவே இருந்தது. டில்லியில் முதல்முறையாக தேர்தல் களம் காணும் ஆம் ஆத்மி கட்சியை விட சில இடங்களே கூடுதலாக பாஜக பெற்றுள்ளது. பெரும்பான்மை எண்ணிக்கைக்கு 5 இடங்கள் குறைவாகவே பெற்றுள்ளது.
பாஜக தனது வெற்றிகளுக்கு மோடிதான் காரணம் என்று சொல்லலாம். ஆனால் மோடியின் மின்சார தாக்கம் தேர்தல்களில் உண்மையில் எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றி தீர்ப்பு இன்னும் எழுதப்பட வேண்டியுள்ளது. மோடி பேரணி நடத்திய ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிதான் உண்மையில் ஆகப்பெரிய கதையாக இருக்கிறது. சாதி, மதம், தேசியம், அல்லது பிராந்திய அடையாளம் போன்ற எந்த வழமையான காரணங்களாலும் உந்தித்தள்ளப்படாத ஒரு கட்சி, அதன் முதல் தேர்தல் பங்கேற்பிலேயே ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவது, தேசத்தின் தலைநகரத்தில் அரசியல் பரப்புவெளியை மீண்டும் எழுதுவது என்பது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வே.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக் கதைக்குள் ஆய்வுக்குட்படுத்த பல விசயங்கள் உள்ளன என்றாலும், ஆம் ஆத்மி கட்சியின் கண்கவர் எழுச்சி, இன்றைய இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிற கடைசல் பற்றிய ஓர் இன்னும் பெரிய சித்திரத்தையும் தருகிறது. இந்தியாவின் மாறுகிற நகர்ப்புற மக்கள் தொகையியல், அதிகரித்து வருகிற அமைப்புக்குள் இருக்கிற அழுகலுக்கான ஒரு பதிலுக்கான வெகுமக்கள் வேட்கை ஆகியவற்றின் அரசியல் பிரதிபலிப்பைத்தான் நாம் இன்று பார்க்கிறோம்.
ஆயினும் மாற்றம் பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் கருத்து, அடிப்படை சமூக - பொருளாதார மாற்றம் என்பதற்கு மேல், சட்டரீதியான மாற்றத்தை, ஒரு வகை ‘ஆட்சிமுறை நவீனமயம்’ என்று ஒருவர் சொல்ல விரும்புவதை முன்னுரிமைப்படுத்துவதாக தெரிகிறது; பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஜனநாயகம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பால்நீதி ஆகிய முக்கிய பிரச்சனைகளில் ஆம் ஆத்மி கட்சி எப்படி உருவாகப் போகிறது என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஊழலுக்கெதிராக, காங்கிரசுக்கு எதிராக இருந்த வெகுமக்கள் சீற்றத்தை தட்டியெழுப்புவதில் துவங்கிய ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பெற்றது மட்டுமின்றி, பிரதானமாக, முன்னாள் அல்லது மரபுரீதியான காங்கிரஸ் ஆதரவு வாக்குகளையும் பெற்றிருக்கக் கூடும் என்பது சுவாரசியமானது.
ஆம் ஆத்மி கட்சி, ஆகக் கூடுதலாக, 29.3% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் தனது வாக்குகளில் 17%அய் இழந்தது. பாஜகவும் 5% வாக்குகளை இழந்தது. மரபுரீதியான அல்லது கருவான காங்கிரஸ் வாக்காளர்களின் பல பிரிவினர் - மறுகுடியமர்வு காலனிகளிலோ, இசுலாமியர்கள் கூடுதலாக இருக்கிற பகுதிகளிலோ அல்லது அரசு ஊழியர்கள் மத்தியிலோ - ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்ததன் மூலம் காங்கிரஸ் சரிந்து போவதை துவக்கி வைத்து, ஆம் ஆத்மி கட்சியை, புறநிலைரீதியாக, பாஜகவுக்கு போட்டியாக நிறுத்தினர் என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
போட்டியின் இந்த புதிய கட்டத்தை ஆம் ஆத்மி கட்சி எப்படி கையாளப் போகிறது என்பது சுவாரசியமானதாக இருக்கப் போகிறது. எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளபோது, ஆம் ஆத்மி கட்சியின் ஒரு மூத்த தலைவர் பாஜகவுக்கு நிபந்தனை அடிப்படையிலான ஆதரவு தரும் கருத்தை முன்நகர்த்தியதாக சொல்லப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்குள் நடந்த ஓர் ஆய்வு, ஆம் ஆத்மி கட்சியின் 31% ஆதரவாளர்கள், மோடியை பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று காட்டுவதாக தெரிகிறது.
2014 பெரிய இறுதிப் போட்டிக்கு முந்தைய அரையிறுதிப் போட்டி என ஊடகங்கள் இந்தத் தேர்தல்களை பரவலாக விவரிக்கின்றன. ஓர் இறுதிப் போட்டிக்கு முன் எப்போதும் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் இருக்கும்.
காங்கிரஸ் - பாஜக இருதுருவப் போக்கால், அரசியல் முறை மேலோங்கிய விதத்தில் குறிக்கப்படுகிற மாநிலங்களுக்கு அப்பால், பாஜகவின் இருத்தல் குறைவான, காங்கிரசின் இருத்தலும் கடந்த சில ஆண்டுகளில் ஓரஞ்சாரத்துக்கு தள்ளப்பட்டுள்ள பகுதிகளை உள்ளடக்கிய பல்துருவப் போக்குகள் கொண்ட, மிகப் பரந்த பகுதிகள் உள்ளன.
வழமையான இருதுருவ கோட்டைகளுள் ஒன்று கூட, மூன்று துருவங்கள் கொண்டதாக மாறி, டில்லியில் தொங்கு சட்டமன்றம் உருவாவதற்கு இட்டுச் செல்லும் என்பது, இந்தத் தேர்தல்கள் சொல்லும் பெரிய செய்தி.
அனைத்து சமிக்கைகளின்படியும், 2014க்கான போர், நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமான போட்டி இருக்கும் பல்துருவ போராக இருக்கும். ஊழல் மற்றும் பெருநிறுவனச் சூறையாடல், மதவெறி மற்றும் ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் செல்வாதாரங்கள் ஆகிய முக்கிய பிரச்சனைகள் பெரிதாக எழும்.
ஆபத்தான கார்ப்பரேட் - மதவெறி கூட்டுக்கு எதிரான, மக்களின், மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் போராக இந்தப் போரை நாம் மாற்ற வேண்டும்.
தேர்தல்களில் வெளிப்பட்ட போக்குகளை அரசியல் நோக்கர்கள் சில காலமாகவே பார்க்க முடிந்தது. பல தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்களும் இதை போதுமான அளவு காட்டியிருந்தன.
ஆனால், முடிவுகளின் தீவிரம் பல விசயங்களை சொல்கிறது.
ராஜஸ்தானிலும் டில்லியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களின் பங்கு 10% அல்லது அதற்கும் குறைவாக சரிந்தது. தேர்தலுக்கு முன் தேர்தல்கள் நடந்த மூன்று மாநிலங்களில் காங்கிரசும் இரண்டு மாநிலங்களில் பாஜகவும் ஆட்சியில் இருந்தன. இந்த அய்ந்து மாநிலங்க ளில் இப்போது மிசோரம் மட்டுமே காங்கிரசுக்கு மிஞ்சியுள்ளது. பாஜக இன்னும் ஒரு மாநிலத்தில் கூடுதலாக வெற்றி பெற்று மூன்று மாநிலங்களை கைப்பற்றியுள்ளது.
டில்லியில், கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல், தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி வடிவமைப்பாளர்கள், 36 என்ற மந்திர எண்ணிக்கையுடன் ஒரு தேர்தலுக்குப் பிந்தைய ஏற்பாட்டை உருவாக்குவதில் சிரமம் எதிர்கொள்கின்றனர்.
சட்டிஸ்கர் மற்றும் மிசோரத்துக்கு அப்பால், காங்கிரஸ் இந்தத் தேர்தல்களில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற மோடியின் மூர்க்கமான அழைப்பு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிந்தாலும், அது பாஜகவின் சவாலுக்கு உட்படுத்தப்படாத மேலோங்கிய நிலையாக மிகச்சரியாக மாறவில்லை. பாஜக மூன்றில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மத்தியபிரதேசத்திலும் பல அமைச்சர்கள் தோற்றுப் போயுள்ளனர்.
சட்டிஸ்கரில் இறுதி வரை அது நெருக்கமான போட்டியாகவே இருந்தது. டில்லியில் முதல்முறையாக தேர்தல் களம் காணும் ஆம் ஆத்மி கட்சியை விட சில இடங்களே கூடுதலாக பாஜக பெற்றுள்ளது. பெரும்பான்மை எண்ணிக்கைக்கு 5 இடங்கள் குறைவாகவே பெற்றுள்ளது.
பாஜக தனது வெற்றிகளுக்கு மோடிதான் காரணம் என்று சொல்லலாம். ஆனால் மோடியின் மின்சார தாக்கம் தேர்தல்களில் உண்மையில் எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றி தீர்ப்பு இன்னும் எழுதப்பட வேண்டியுள்ளது. மோடி பேரணி நடத்திய ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிதான் உண்மையில் ஆகப்பெரிய கதையாக இருக்கிறது. சாதி, மதம், தேசியம், அல்லது பிராந்திய அடையாளம் போன்ற எந்த வழமையான காரணங்களாலும் உந்தித்தள்ளப்படாத ஒரு கட்சி, அதன் முதல் தேர்தல் பங்கேற்பிலேயே ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவது, தேசத்தின் தலைநகரத்தில் அரசியல் பரப்புவெளியை மீண்டும் எழுதுவது என்பது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வே.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக் கதைக்குள் ஆய்வுக்குட்படுத்த பல விசயங்கள் உள்ளன என்றாலும், ஆம் ஆத்மி கட்சியின் கண்கவர் எழுச்சி, இன்றைய இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிற கடைசல் பற்றிய ஓர் இன்னும் பெரிய சித்திரத்தையும் தருகிறது. இந்தியாவின் மாறுகிற நகர்ப்புற மக்கள் தொகையியல், அதிகரித்து வருகிற அமைப்புக்குள் இருக்கிற அழுகலுக்கான ஒரு பதிலுக்கான வெகுமக்கள் வேட்கை ஆகியவற்றின் அரசியல் பிரதிபலிப்பைத்தான் நாம் இன்று பார்க்கிறோம்.
ஆயினும் மாற்றம் பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் கருத்து, அடிப்படை சமூக - பொருளாதார மாற்றம் என்பதற்கு மேல், சட்டரீதியான மாற்றத்தை, ஒரு வகை ‘ஆட்சிமுறை நவீனமயம்’ என்று ஒருவர் சொல்ல விரும்புவதை முன்னுரிமைப்படுத்துவதாக தெரிகிறது; பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஜனநாயகம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பால்நீதி ஆகிய முக்கிய பிரச்சனைகளில் ஆம் ஆத்மி கட்சி எப்படி உருவாகப் போகிறது என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஊழலுக்கெதிராக, காங்கிரசுக்கு எதிராக இருந்த வெகுமக்கள் சீற்றத்தை தட்டியெழுப்புவதில் துவங்கிய ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பெற்றது மட்டுமின்றி, பிரதானமாக, முன்னாள் அல்லது மரபுரீதியான காங்கிரஸ் ஆதரவு வாக்குகளையும் பெற்றிருக்கக் கூடும் என்பது சுவாரசியமானது.
ஆம் ஆத்மி கட்சி, ஆகக் கூடுதலாக, 29.3% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் தனது வாக்குகளில் 17%அய் இழந்தது. பாஜகவும் 5% வாக்குகளை இழந்தது. மரபுரீதியான அல்லது கருவான காங்கிரஸ் வாக்காளர்களின் பல பிரிவினர் - மறுகுடியமர்வு காலனிகளிலோ, இசுலாமியர்கள் கூடுதலாக இருக்கிற பகுதிகளிலோ அல்லது அரசு ஊழியர்கள் மத்தியிலோ - ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்ததன் மூலம் காங்கிரஸ் சரிந்து போவதை துவக்கி வைத்து, ஆம் ஆத்மி கட்சியை, புறநிலைரீதியாக, பாஜகவுக்கு போட்டியாக நிறுத்தினர் என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
போட்டியின் இந்த புதிய கட்டத்தை ஆம் ஆத்மி கட்சி எப்படி கையாளப் போகிறது என்பது சுவாரசியமானதாக இருக்கப் போகிறது. எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளபோது, ஆம் ஆத்மி கட்சியின் ஒரு மூத்த தலைவர் பாஜகவுக்கு நிபந்தனை அடிப்படையிலான ஆதரவு தரும் கருத்தை முன்நகர்த்தியதாக சொல்லப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்குள் நடந்த ஓர் ஆய்வு, ஆம் ஆத்மி கட்சியின் 31% ஆதரவாளர்கள், மோடியை பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று காட்டுவதாக தெரிகிறது.
2014 பெரிய இறுதிப் போட்டிக்கு முந்தைய அரையிறுதிப் போட்டி என ஊடகங்கள் இந்தத் தேர்தல்களை பரவலாக விவரிக்கின்றன. ஓர் இறுதிப் போட்டிக்கு முன் எப்போதும் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் இருக்கும்.
காங்கிரஸ் - பாஜக இருதுருவப் போக்கால், அரசியல் முறை மேலோங்கிய விதத்தில் குறிக்கப்படுகிற மாநிலங்களுக்கு அப்பால், பாஜகவின் இருத்தல் குறைவான, காங்கிரசின் இருத்தலும் கடந்த சில ஆண்டுகளில் ஓரஞ்சாரத்துக்கு தள்ளப்பட்டுள்ள பகுதிகளை உள்ளடக்கிய பல்துருவப் போக்குகள் கொண்ட, மிகப் பரந்த பகுதிகள் உள்ளன.
வழமையான இருதுருவ கோட்டைகளுள் ஒன்று கூட, மூன்று துருவங்கள் கொண்டதாக மாறி, டில்லியில் தொங்கு சட்டமன்றம் உருவாவதற்கு இட்டுச் செல்லும் என்பது, இந்தத் தேர்தல்கள் சொல்லும் பெரிய செய்தி.
அனைத்து சமிக்கைகளின்படியும், 2014க்கான போர், நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமான போட்டி இருக்கும் பல்துருவ போராக இருக்கும். ஊழல் மற்றும் பெருநிறுவனச் சூறையாடல், மதவெறி மற்றும் ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் செல்வாதாரங்கள் ஆகிய முக்கிய பிரச்சனைகள் பெரிதாக எழும்.
ஆபத்தான கார்ப்பரேட் - மதவெறி கூட்டுக்கு எதிரான, மக்களின், மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் போராக இந்தப் போரை நாம் மாற்ற வேண்டும்.