நெல்சன் மண்டேலா நேற்று உயிர்நீத்தார். பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான, விடுதலை மற்றும் நீதிக்கான உறுதியான போராட்டத்தின் நிலைத்திருக்கும் வழிமரபை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
ஆப்பிரிக்கா சூறையாடப்பட்டதும் அடிமைப்படுத்தப்பட்டதும், ஒரு பொருளில், இன்று நாம் பார்க்கிற நவீன முதலாளித்துவ உலகின் அடிப்படைகளை நிறுவின. தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான தனது போராட்டத்தை நெல்சன் மண்டேலா நடத்தியபோது, ஜனநாயகம் மற்றும் விடுதலை என்ற பெயரில் போர் தொடுக்கும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அதே நாடுகளின் ஆதரவுதான், நிறவெறி ஆட்சிக்கும் இருந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானது.
நீதி, சமத்துவம் மற்றும் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தின் திருவுருவாகவும், எதிர்ப்பின் இறவா உணர்வின் திருவுருவாகவும் மண்டேலா முதன்மையாக நினைவுகூரப்படுவார். உலகம் முழுவதும், பல நூற்றாண்டு கால ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கெதிராக போராடுகிற மக்கள், நெல்சன் மண்டேலாவிடம் இருந்து உற்சாகம் பெறுவார்கள். டிசம்பர் 5 அன்று மண்டேலா மறைந்தார். அதற்கு அடுத்த நாள், ஆழப்பரவியுள்ள ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கெதிரான போராட்டத்தின் இன்னொரு திருவுருவான பாபாசாஹேப் பிஆர் அம்பேத்கர் மறைந்த நாள்.
மண்டேலா மற்றும் அம்பேத்கரின் போராட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை. இனவெறி, நிறவெறி, சமூக ஒடுக்குமுறை ஆகியவை நவதாராளவாத உலகமயத்துடன் கைகோர்த்துக் கொண்டு மக்களை அடிமைச் சங்கிலியில் பிணைத்துள்ளன. அவர்களுடைய வழிமரபில் இருந்து உற்சாகம் பெற்று, விடுதலைக்கான போராளிகள், இனவெறியும் சமூக ஒடுக்குமுறையும் முழுமையாக ஒழிக்கப்படும் வரை உறுதியுடன் துணிச்சலுடன் தொடர்ந்து போராடுவார்கள்.
திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர், இகக (மாலெ)
06.12.2013, புதுதில்லி
ஆப்பிரிக்கா சூறையாடப்பட்டதும் அடிமைப்படுத்தப்பட்டதும், ஒரு பொருளில், இன்று நாம் பார்க்கிற நவீன முதலாளித்துவ உலகின் அடிப்படைகளை நிறுவின. தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான தனது போராட்டத்தை நெல்சன் மண்டேலா நடத்தியபோது, ஜனநாயகம் மற்றும் விடுதலை என்ற பெயரில் போர் தொடுக்கும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அதே நாடுகளின் ஆதரவுதான், நிறவெறி ஆட்சிக்கும் இருந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானது.
நீதி, சமத்துவம் மற்றும் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தின் திருவுருவாகவும், எதிர்ப்பின் இறவா உணர்வின் திருவுருவாகவும் மண்டேலா முதன்மையாக நினைவுகூரப்படுவார். உலகம் முழுவதும், பல நூற்றாண்டு கால ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கெதிராக போராடுகிற மக்கள், நெல்சன் மண்டேலாவிடம் இருந்து உற்சாகம் பெறுவார்கள். டிசம்பர் 5 அன்று மண்டேலா மறைந்தார். அதற்கு அடுத்த நாள், ஆழப்பரவியுள்ள ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கெதிரான போராட்டத்தின் இன்னொரு திருவுருவான பாபாசாஹேப் பிஆர் அம்பேத்கர் மறைந்த நாள்.
மண்டேலா மற்றும் அம்பேத்கரின் போராட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை. இனவெறி, நிறவெறி, சமூக ஒடுக்குமுறை ஆகியவை நவதாராளவாத உலகமயத்துடன் கைகோர்த்துக் கொண்டு மக்களை அடிமைச் சங்கிலியில் பிணைத்துள்ளன. அவர்களுடைய வழிமரபில் இருந்து உற்சாகம் பெற்று, விடுதலைக்கான போராளிகள், இனவெறியும் சமூக ஒடுக்குமுறையும் முழுமையாக ஒழிக்கப்படும் வரை உறுதியுடன் துணிச்சலுடன் தொடர்ந்து போராடுவார்கள்.
திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர், இகக (மாலெ)
06.12.2013, புதுதில்லி