தமிழ்நாட்டில், அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில் 2 லட்சம் உறுப்பினர்கள் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் 70,000 உறுப்பினர்கள் என்ற நிலையை எட்டிய பிறகும், கட்சி என்ற விதத்தில் சென்னையில் மட்டுமே ஆயிரம் உறுப்பினர் இலக்கைத் தாண்டி இருந்தோம்.
டிசம்பர் 18, தோழர் வினோத் மிஸ்ரா நினைவு உறுதி ஏற்பு நாளில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கட்சியில் ஆயிரம் உறுப்பினர்கள் என்ற நிலை நிச்சயம் இருக்கும்.
கட்சி உறுப்பினர்களை ஒருவர் விடாமல் சந்திக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர்கள், உள்ளூர் கமிட்டி உறுப்பினர்களை, கிளை செயலர்களை, கிளை தலைமைக்குழு உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு, கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். லெவி வசூலை உறுப்பினர் புதுப்பித்தலை, முறைப்படி செய்ய முடிந்தது. கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் நெருக்கம் என்பதை, அமைப்புரீதியாக ஒரு குறைந்தபட்ச பொருளில், அதாவது உறுப்பினர் சந்திப்பு என்ற பொருளில், சாதிக்க முடிந்தது.
ஆனால் கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கத்தை, அரசியல் கருத்தியல்ரீதியாக பலபடுத்தி உயர்த்தி, அதன் மூலம், கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கம் என்பதைச் சாதிப்பதில், மிகுந்த பலவீனம் இருப்பதால், கடுமையான விடாப்பிடியான தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டி உள்ளது.
2012ஆம் ஆண்டு கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 826 ஆக இருந்தது. கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை, குன்றாண்டார்கோவில் மற்றும் ஆவுடையார்கோவி லில் 750க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை நேரில் சந்திக்க முடிந்தது. மீதம் உள்ளவர் களையும் டிசம்பருக்குள் சந்தித்து விட முடியும். சந்தித்தவர்கள் சந்திக்கப்பட்டவர்கள் என்ற இரு தரப்பினருமே உற்சாகப்பட்டனர். நம்பிக்கை பெற்றனர். வேலைகள் பற்றி விவாதித்தனர்.
கிளைகள் கூடுதல், தலைமைக் குழு போடுதல், செயலர் தேர்வு என்ற விதத்தில் 60 கிளைகள் அமைப்பாக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்திலேயே பழைய பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதும் நடந்தது. 10 உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடந்துள்ளன. இன்னமும் 4 உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடக்க உள்ளன. 10 புதிய கிளைகள் போட வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் குளந்திராம்பட்டு 100 பேர் வெட்டன்விடுதி 19 பேர் நரங்கிப் பட்டு 56 பேர் கருப்புடையான்பட்டி 17 பேர் மல்லிகை நத்தத்தில் சிலர் என புது உறுப்பினர்கள் சேர, கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை நான்கு இலக்கத்திற்கு வந்துவிட்டது.
குளந்திராம்பட்டு ஊராட்சியில் இணைப்பு விழா கூட்டம் 18.11.2013 அன்று நடைபெற்றது. கறம்பக்குடியைச் சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கலைச்செல்வன் விஜயன் முருகதாஸ் மற்றும் இதர மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலர் தோழர் பழ.ஆசைத்தம்பியும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமியும் உரையாற்றினர்.
இககமா மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவரும், குளந்திராம்பட்டு ஊராட்சிமன்றத் தலைவராக இருமுறை இருந்தவருமான தோழர் தங்கப்பா நிகழ்ச்சியை கட்டமைத்து ஒருங்கிணைத்தார். ஊராட்சித் தலைவராக இககமாவில் செயல்பட்ட தோழர் சாவித்திரி, முதலில் இககவில் பிறகு இககமாவில் முன்னணி தோழராக இருந்த தோழர் துரைச்சாமி ஆகியோரோடு கணிசமான பெண்களும் இளைஞர்களும் கட்சியில் சேர்ந்தனர்.
இடதுசாரி முகாமில், இந்நிகழ்ச்சியும், இந்நிகழ்ச்சிக்கு பின்னால் உள்ள இககமாலெ விரிவடைவது என்ற அரசியல் போக்கும், கவன ஈர்ப்பு பெற்றன.
திருச்சி நாடளுôமன்ற தொகுதிக்குள், திருச்சி நகரத்தில், தோழர் தேசிகன் ஏற்பாடு செய்திருந்த கட்சியின் தொழிலாளர் வர்க்க இயக்கம் தொடர்பான காங்கிரஸ் ஆவணத்தின் மீதான கல்வி வகுப்பு, தோழர்களிடம் ஆர்வத்தை தூண்டியது.
“இப்போதைய அதிமுக்கிய பிரச்சனை கட்சி நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களின் சீரான பங்கேற்பை உறுதி செய்வதாகும். மக்களுடன் நெருக்கமான உறவு, செயலூக்கமான கிளைகள், கட்சி பத்திரிகையின் அதிகரித்த விநியோகம், உரிய நேர லெவி வசூல் போன்றவற்றிற்கு, இதுவே திறவுகோல். சாதாண மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பாத்திரம் வேறுபடுகிற விசயங்கள், வர்க்க உணர்வு மற்றும் கட்டமைக்கப்பட்ட செயலூக்கம் என்பது சொல்லாமலே விளங்கும்.
ஆனால் நம்முடைய கணிசமான உறுப்பினர்களிடம், இந்த வேறுபாட்டைக் காண முடிவதில்லை. எல்லா மட்டங்களிலும் உள்ள கட்சி அமைப்புக்கள், கட்சி நடவடிக்கைகளில் பொதுவான உறுப்பினர்களின் பங்கேற்பு வீதத்தையும் மட்டத்தையும் முன்னேற்ற கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நாம் பெரிய அளவிலான, வெகுமக்கள் அணிதிரட்டலுக்குச் செல்லும் போதெல்லாம், நாம் எல்லா உறுப்பினர்களையும் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும்.”
(இககமாலெ 9 ஆவது அகில இந்திய மாநாட்டு அமைப்பு தொடர்பான தீர்மானத்திலிருந்து) இந்த சவாலை புதுக்கோட்டை கட்சியும் எதிர்கொள்கிறது.
19.11.2013 கூடிய கட்சி மாவட்டக்குழு, அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க சுதந்திர செயல்பாட்டை உறுப்பினர் சேர்ப்பைப் பலப்படுத்துவது, பெண்கள் இளைஞர்கள் மத்தியில் கவனம் செலுத்துவது, உள்ளூர் கமிட்டிகள் கிளைகள் மூலம் ஊராட்சிகளுக்கு இலக்குக்குகள் வைத்து 2014 ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி துவக்கத்தில் நடைபெறும் மக்கள் கோரிக்கை பேரணிக்கு அணிதிரட்டுவது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தியது.
டிசம்பர் 18, தோழர் வினோத் மிஸ்ரா நினைவு உறுதி ஏற்பு நாளில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கட்சியில் ஆயிரம் உறுப்பினர்கள் என்ற நிலை நிச்சயம் இருக்கும்.
கட்சி உறுப்பினர்களை ஒருவர் விடாமல் சந்திக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர்கள், உள்ளூர் கமிட்டி உறுப்பினர்களை, கிளை செயலர்களை, கிளை தலைமைக்குழு உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு, கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். லெவி வசூலை உறுப்பினர் புதுப்பித்தலை, முறைப்படி செய்ய முடிந்தது. கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் நெருக்கம் என்பதை, அமைப்புரீதியாக ஒரு குறைந்தபட்ச பொருளில், அதாவது உறுப்பினர் சந்திப்பு என்ற பொருளில், சாதிக்க முடிந்தது.
ஆனால் கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கத்தை, அரசியல் கருத்தியல்ரீதியாக பலபடுத்தி உயர்த்தி, அதன் மூலம், கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கம் என்பதைச் சாதிப்பதில், மிகுந்த பலவீனம் இருப்பதால், கடுமையான விடாப்பிடியான தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டி உள்ளது.
2012ஆம் ஆண்டு கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 826 ஆக இருந்தது. கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை, குன்றாண்டார்கோவில் மற்றும் ஆவுடையார்கோவி லில் 750க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை நேரில் சந்திக்க முடிந்தது. மீதம் உள்ளவர் களையும் டிசம்பருக்குள் சந்தித்து விட முடியும். சந்தித்தவர்கள் சந்திக்கப்பட்டவர்கள் என்ற இரு தரப்பினருமே உற்சாகப்பட்டனர். நம்பிக்கை பெற்றனர். வேலைகள் பற்றி விவாதித்தனர்.
கிளைகள் கூடுதல், தலைமைக் குழு போடுதல், செயலர் தேர்வு என்ற விதத்தில் 60 கிளைகள் அமைப்பாக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்திலேயே பழைய பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதும் நடந்தது. 10 உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடந்துள்ளன. இன்னமும் 4 உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடக்க உள்ளன. 10 புதிய கிளைகள் போட வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் குளந்திராம்பட்டு 100 பேர் வெட்டன்விடுதி 19 பேர் நரங்கிப் பட்டு 56 பேர் கருப்புடையான்பட்டி 17 பேர் மல்லிகை நத்தத்தில் சிலர் என புது உறுப்பினர்கள் சேர, கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை நான்கு இலக்கத்திற்கு வந்துவிட்டது.
குளந்திராம்பட்டு ஊராட்சியில் இணைப்பு விழா கூட்டம் 18.11.2013 அன்று நடைபெற்றது. கறம்பக்குடியைச் சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கலைச்செல்வன் விஜயன் முருகதாஸ் மற்றும் இதர மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலர் தோழர் பழ.ஆசைத்தம்பியும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமியும் உரையாற்றினர்.
இககமா மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவரும், குளந்திராம்பட்டு ஊராட்சிமன்றத் தலைவராக இருமுறை இருந்தவருமான தோழர் தங்கப்பா நிகழ்ச்சியை கட்டமைத்து ஒருங்கிணைத்தார். ஊராட்சித் தலைவராக இககமாவில் செயல்பட்ட தோழர் சாவித்திரி, முதலில் இககவில் பிறகு இககமாவில் முன்னணி தோழராக இருந்த தோழர் துரைச்சாமி ஆகியோரோடு கணிசமான பெண்களும் இளைஞர்களும் கட்சியில் சேர்ந்தனர்.
இடதுசாரி முகாமில், இந்நிகழ்ச்சியும், இந்நிகழ்ச்சிக்கு பின்னால் உள்ள இககமாலெ விரிவடைவது என்ற அரசியல் போக்கும், கவன ஈர்ப்பு பெற்றன.
திருச்சி நாடளுôமன்ற தொகுதிக்குள், திருச்சி நகரத்தில், தோழர் தேசிகன் ஏற்பாடு செய்திருந்த கட்சியின் தொழிலாளர் வர்க்க இயக்கம் தொடர்பான காங்கிரஸ் ஆவணத்தின் மீதான கல்வி வகுப்பு, தோழர்களிடம் ஆர்வத்தை தூண்டியது.
“இப்போதைய அதிமுக்கிய பிரச்சனை கட்சி நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களின் சீரான பங்கேற்பை உறுதி செய்வதாகும். மக்களுடன் நெருக்கமான உறவு, செயலூக்கமான கிளைகள், கட்சி பத்திரிகையின் அதிகரித்த விநியோகம், உரிய நேர லெவி வசூல் போன்றவற்றிற்கு, இதுவே திறவுகோல். சாதாண மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பாத்திரம் வேறுபடுகிற விசயங்கள், வர்க்க உணர்வு மற்றும் கட்டமைக்கப்பட்ட செயலூக்கம் என்பது சொல்லாமலே விளங்கும்.
ஆனால் நம்முடைய கணிசமான உறுப்பினர்களிடம், இந்த வேறுபாட்டைக் காண முடிவதில்லை. எல்லா மட்டங்களிலும் உள்ள கட்சி அமைப்புக்கள், கட்சி நடவடிக்கைகளில் பொதுவான உறுப்பினர்களின் பங்கேற்பு வீதத்தையும் மட்டத்தையும் முன்னேற்ற கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நாம் பெரிய அளவிலான, வெகுமக்கள் அணிதிரட்டலுக்குச் செல்லும் போதெல்லாம், நாம் எல்லா உறுப்பினர்களையும் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும்.”
(இககமாலெ 9 ஆவது அகில இந்திய மாநாட்டு அமைப்பு தொடர்பான தீர்மானத்திலிருந்து) இந்த சவாலை புதுக்கோட்டை கட்சியும் எதிர்கொள்கிறது.
19.11.2013 கூடிய கட்சி மாவட்டக்குழு, அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க சுதந்திர செயல்பாட்டை உறுப்பினர் சேர்ப்பைப் பலப்படுத்துவது, பெண்கள் இளைஞர்கள் மத்தியில் கவனம் செலுத்துவது, உள்ளூர் கமிட்டிகள் கிளைகள் மூலம் ஊராட்சிகளுக்கு இலக்குக்குகள் வைத்து 2014 ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி துவக்கத்தில் நடைபெறும் மக்கள் கோரிக்கை பேரணிக்கு அணிதிரட்டுவது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தியது.