COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, December 15, 2013

சக்திவாய்ந்த மாற்று முயற்சிக்கு மக்கள் காத்திருக்கின்றனர் - தா.சந்திரன்

கோவை மாவட்ட கமிட்டிக் கட்சிக் கூட்டம் நவம்பர் 25 அன்று நடைபெற்றது.  தொழிலாளர் வேலையிழப்புக்குக் காரணமான கடுமையான மின்வெட்டை கண்டித்து துடியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

கோவையில் 4 லட்சம் தொழிலாளர்கள், 30.000க்கும் மேற்பட்ட சிறுசிறு தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இந்த  சிறு நிறுவனங்கள் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்தும் ஆற்றல் அற்றவை. அந்தப் பொருட்செலவை சமாளிக்க முடியாத பட்டறைகளும் தொழிற்சாலைகளும் வேலையில்லா காலத்திற்கு லேஆஃப் சம்பளம் வழங்குவதில்லை. வேலை செய்த நாட்களுக்கான கூலியைக் கூட வழங்காமல் இழுத்தடிக்கும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

20 கிலோ விலையில்லா அரிசியாலும் தீர்க்க முடியாமல் கடும் விலைவாசியேற்றம் எல்லை கடந்து விட்டது. இலவச மின்விசிறி, டிவி, மிக்சி, கிரைண்டர் ஆகியவை மின்வெட்டால் ஓடாது. அவற்றை அடகு வைத்து உப்பு, புளி, மிளகாய் வாங்கவும் முடியாது. இந்த நிலைமைகளில் ‘ஆண்டிற்கு ரூ.5 லட்சம் கோடி கார்ப்ரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை  வழங்கும் மத்திய மாநில அரசுகளே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5000 மாதம் நிவாரணம்’ என்ற கோரிக்கை மாலெ கட்சி ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது

கோவையில் மேலோங்கிய சிறுவீத உற்பத்தியாளர்களின் சங்கங்கள் மின்வெட்டிற்கு எதிராக  தங்கள் தொழிலாளர்களையும் திரட்டி போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டங்கள் விளிம்பு நிலை உற்பத்தியாளர்களின் குரலாக ஓர் எல்லைக்குள் நிற்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சிகளால் உள்வாங்கப்படுகின்றன.

மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் 4 லட்சம் தொழிலாளர்களின் குரலாக எழுந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்ரமணியம், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சக்திவேல், ஏஅய்சிசிடியு மாவட்ட சிறப்பு தலைவர் தோழர் சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

டிசம்பர் 18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தின உறுதியேற்பு பொதுக்கூட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 19 அன்று ஒண்டிபுதூர் சுங்கம் திடலில் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் முன்முயற்சியில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்துக்கான தயாரிப்பு வேலைகள் சூடுபிடித்துள்ளன. கோவிலூர் பொதுக்கூட்ட தயாரிப்பு வேலைகள் மக்கள் சந்திப்பு இயக்கங்களோடு நடக்கின்றன.

பெரும்எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் முன்முயற்சி, உள்ளூர்கமிட்டி மாநாடுகள், கிளைக் கூட்டங்கள், ஏஅய்சிசிடியுவில் இணைந்துள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் துறை நிர்வாகிகள் கூட்டங்கள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

புரட்சிகர இளைஞர் கழகம், டிசம்பர் 29 அன்று ‘மதவாத சாதீய சக்திகளுக்கு எதிரான மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்’ என்ற பொருளில் கருத்தரங்கம் நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளை துவக்கிவிட்டது.


Search