டில்லியில் சோனியா காந்தி வீடு இருக்கிற ஜன்பத் சாலையில் ஃபெராரி கார் ஷோரூம் ஒன்று உள்ளது. சமீபத்தில் ஒரு நாள் அரியானாவைச் சேர்ந்த 24 வயதான ஒருவர், பெரிய மூட்டையுடன் அந்த ஷோரூமுக்குள் நுழைந்தார். மூட்டைக்குள் பணம். தனது தந்தையின் பிறந்த நாளுக்கு பரிசாக அளிக்க உடனடியாக ஒரு ஃபெராரி கார் வேண்டும் என்று அவசரப் பட்டார். ஒரு ஃபெராரி காரை வடிவமைக்க ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் ஆறு மாதங்கள் கழித்து அவரை வரச் சொன்னார்கள். அவருக்கு சுருதி குறைந்து போனது. காரின் விலை ரூ.2,51,30,829. இரண்டரை கோடி ரூபாயை சர்வ சாதாரணமாக ஒருவர் பணமாக கைமாற்றத் தயாராக வைத்திருக்க முடிகிறது.
இந்தியாவின் முதல் பத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் சம்பளம் ஆண்டுக்கு மொத்தம் 74.26 மில்லியன் டாலர். அதாவது 497 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். மாதத்துக்கு ரூ.41 கோடியே 46 லட்சத்து 18 ஆயிரத்து 333. நாளொன்றுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 20 ஆயிரத்து 611. 8 மணி நேர வேலை எனக் கணக்கில் கொண்டால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 576. இவர்களுக்கு பீஸ்ரேட், டைம்ரேட் என்ற எந்த அளவீடும் கிடையாது. அவ்வப்போது அந்தந்த நிறுவனங்களின் போர்டுகள் கூடி லாபத்துக்கு ஏற்றவாறு சம்பளம் நிர்ணயிக்கும்.
மாதத்துக்கு ரூ.41 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் எண்ணிக்கை 2010ல் 19 ஆக இருந்ததில் இருந்து 2013ல் 48 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் யாரும் மரத்தை வெட்டவோ மண்ணைத் தோண்டவோ வேண்டியதில்லை.
2010ல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் மாற்றப்பட்டது. அதுவரை ரூ.16,000 சம்பளம் பெற்றவர்கள் உயர்த்தப்பட்ட பிறகு ரூ.50,000 பெற்றார்கள். படிகள், பிற சலுகைகள் எல்லாம் சேர்த்து அவர்கள் பெறும் தொகை ஆண்டொன்றுக்கு ஒருவருக்கு ரூ.32 லட்சம். 5 ஆண்டுகளுக்கு 534 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம், படிகள், சலுகைகள் என்றாகும் செலவு ரூ.855 கோடி. இவர்களுக்கும் டைம்ரேட், பீஸ்ரேட் என்று எதுவும் இல்லை.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி ஆட்சி காலத்தின் இறுதியில் ரூ.50,000 வரை மாதமொன்றுக்கு சம்பளம் பெற்றார்கள். ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் அதை ரூ.55,000 ஆக்கினார். இவர்களுக்கும் டைம்ரேட், பீஸ்ரேட் என்று எதுவும் இல்லை.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2006 - 2007ல் நிர்ணயிக்கப்பட்ட நாள் கூலி ரூ.69. 2013 - 2014ல் அது ரூ.174. இது முழுவதுமாக, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்த விவசாயத் தொழிலாளிக்கும் இதுவரை கிடைத்ததில்லை. இன்னும் கூட ரூ.40 நாள் கூலி பெறும் நிலை இருக்கிறது. இரண்டரை கோடி ரூபாயை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் கார் வாங்கச்சென்ற அதே அரியானாவில் நாள் முழுக்க உழைக்கும் ஒரு விவசாயத் தொழிலாளி ‘அளவீடுகளை பூர்த்தி செய்தால்’ அன்று ரூ.214 கூலி பெறுவார். வேலை உறுதித் திட்டத்தில் நாட்டில் விவசாயத் தொழிலாளி பெறும் கூலியில் அரியானாவில் தரப்படுவதே அதிகம். பிற மாநிலங்களில் இதைவிடக் குறைவு.
மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்பது பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலையும் அரசு வேலைதான். அரசு திட்டங்களைத்தான் அந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றுகிறார்கள். இங்கு மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் தரும் குறைந்தபட்ச ஊதியம் போல் ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கும் தர வேண்டுமென வலியுறுத்த வேண்டியுள்ளது.
தற்போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கூலி நுகர்வோர் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆயினும் 8 மாநிலங்களில் இது அங்குள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கூலியை விடக் குறைவாக உள்ளது. இவற்றில் அய்ந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கூலியையே மத்திய அரசு நிர்ணயித்தால் மாநில அரசுகள் அடிக்கடி குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்கும்போது அது மத்திய அரசுக்கு சுமையாக மாறிவிடுமென மத்திய அரசு தயங்குகிறது.
பிரதமர் வேட்பாளர் முதலமைச்சராக இருக்கிற குஜராத்தில், ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகமான 2006க்குப் பிறகு ஒரே ஒருமுறைதான் விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2005ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மாற்றியமைக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்க்கான குறைந்த பட்சக் கூலி, கருணாநிதி ஆட்சியில் 2009ல் மாற்றியமைக்கப்பட்டதற்குப் பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மாற்றியமைக்கப்படவில்லை.
அய்முகூ எதிர்ப்புப் போராளியாக அறிக்கைகள் விடுக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள கூலியை விட குறைவாகவே விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அய்முகூவை இடைவிடாமல் எதிர்ப்பதாகச் சொல்பவர்களின் செயல்பாடே இவ்வளவுதான் எனும்போது அய்முகூ சொல்வது வெறும் சாக்குதான்.
1983 (1) எல்எல்ஜே பக்கம் 220ல் குறிப்பிடப்பட்டுள்ள சஞ்சித் ராய் எதிர் ராஜஸ்தான் மாநில அரசாங்கம் வழக்கில் உச்சநீதிமன்றம், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் உற்பத்தி அளவை அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படாத எந்த வேலைக்கும், தேவையான அளவு வேலை செய்யப்படவில்லை என்பதால் மாநில அரசாங்கம், கூலியை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசாங்கம், பஞ்ச நிவாரண வேலை செய்த தொழிலாளர்களின் ஒரு பகுதி கூலியை பிடித்தம் செய்தபோது, அப்படி பிடித்தம் செய்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சொன்னது. அதேபோன்ற ஒரு தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.என்.பகவதி, அப்படி பிடித்தம் செய்வது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 23க்கு விரோதமானது என்றார். நீதிபதி ஆர்.எஸ்.பதக் அப்படி பிடித்தம் செய்வது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14க்கு விரோதமானது என்றார்.
இந்தச் சட்டங்கள், தீர்ப்புக்கள் எவற்றையும் மதிக்காமல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அளவீட்டின் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிர்ணயிக்கப்படுகிற இந்த அளவீட்டை, நிறைவேற்ற முடியாமல் முழு நாள் கூலி பெறுவது சாத்தியமற்ற நிலைமையே நிலவுகிறது. தமிழ்நாட்டில் ரூ.119, ரூ.132 என்று உயர்த்தப்பட்ட கூலியை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்தத் தொழிலாளியும் வாங்கவில்லை. இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள ரூ.148க்கும் அதே விதிதான்.
சோனியாவும் ராகுலும் பிற காங்கிரஸ் தலைவர்களும் மாறிமாறி பெருமை பேசுகிற தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 30.01.2013 அன்றைய நிலவரப்படி திட்டம் துவங்கியதில் இருந்து ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 44 நாட்கள் வேலை மட்டுமே தரப்பட்டுள்ளது. 2006 முதல் ஆறு ஆண்டுகளில் 12,000 கோடி வேலைநாட்கள் தரப்பட்டு, கூலி உட்பட பல்வேறு செலவினங்களும் சேர்த்து ரூ.1,66,760 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்த பட்ச கூலியில் மத்திய மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கூலியில் சமனிலை வேண்டும் என்று குரல் எழுப்பப்படும்போது, நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் பிரிவான விவசாயத் தொழிலாளர்கள் தொடர்பான ஒரு திட்டத்திற்கான ஒதுக்கீட்டையே குறைப்பது அய்முகூ அரசாங்கத்தின் பதிலாக இருக்கிறது.
நிதிப்பற்றாக் குறையை சமாளிக்க, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டில் ரூ.15,000 கோடி வரை குறைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசுகிறார். அதில் ரூ.2,000 கோடி ஊரக வேலை உறுதித் திட்ட ஒதுக்கீட்டில் குறைக்கப்படக்கூடும்.
தேசிய வேலை உறுதித் திட்டத்தில் கூலி அதிகமாக இருப்பதால் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயத்தில் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் குறைகிறது என்று சரத்பவாரும், திட்டத்தில் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை என்று சிதம்பரமும், ஒதுக்கீட்டுக் குறைப்புக்குக் காரணம் சொல்கிறார்கள்.
வேலை உறுதித்திட்டம் விவசாயத்துக்கும் நீட்டிக்கப்பட வேண்டும், பேரூராட்சிகளும் திட்டத்தின் கீழ் வரவேண்டும் என்று நாட்டிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் குரல் எழுப்புவது கேட்காததுபோல் நடிக்கிறார்கள்.
நான்கு மாநில மக்கள் காங்கிரஸ்காரர்களுக்கு குறைந்தபட்ச வாக்குகள் தராததால் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருத்தப்பட்டு பாரம் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் பத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் சம்பளம் ஆண்டுக்கு மொத்தம் 74.26 மில்லியன் டாலர். அதாவது 497 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். மாதத்துக்கு ரூ.41 கோடியே 46 லட்சத்து 18 ஆயிரத்து 333. நாளொன்றுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 20 ஆயிரத்து 611. 8 மணி நேர வேலை எனக் கணக்கில் கொண்டால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 576. இவர்களுக்கு பீஸ்ரேட், டைம்ரேட் என்ற எந்த அளவீடும் கிடையாது. அவ்வப்போது அந்தந்த நிறுவனங்களின் போர்டுகள் கூடி லாபத்துக்கு ஏற்றவாறு சம்பளம் நிர்ணயிக்கும்.
மாதத்துக்கு ரூ.41 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் எண்ணிக்கை 2010ல் 19 ஆக இருந்ததில் இருந்து 2013ல் 48 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் யாரும் மரத்தை வெட்டவோ மண்ணைத் தோண்டவோ வேண்டியதில்லை.
2010ல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் மாற்றப்பட்டது. அதுவரை ரூ.16,000 சம்பளம் பெற்றவர்கள் உயர்த்தப்பட்ட பிறகு ரூ.50,000 பெற்றார்கள். படிகள், பிற சலுகைகள் எல்லாம் சேர்த்து அவர்கள் பெறும் தொகை ஆண்டொன்றுக்கு ஒருவருக்கு ரூ.32 லட்சம். 5 ஆண்டுகளுக்கு 534 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம், படிகள், சலுகைகள் என்றாகும் செலவு ரூ.855 கோடி. இவர்களுக்கும் டைம்ரேட், பீஸ்ரேட் என்று எதுவும் இல்லை.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி ஆட்சி காலத்தின் இறுதியில் ரூ.50,000 வரை மாதமொன்றுக்கு சம்பளம் பெற்றார்கள். ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் அதை ரூ.55,000 ஆக்கினார். இவர்களுக்கும் டைம்ரேட், பீஸ்ரேட் என்று எதுவும் இல்லை.
(அப்புறம் ஏன்டா விவசாயத் தொழிலாளிக்கு தர மட்டும் அழுவுறீங்க... அளக்கறீங்க...?)
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2006 - 2007ல் நிர்ணயிக்கப்பட்ட நாள் கூலி ரூ.69. 2013 - 2014ல் அது ரூ.174. இது முழுவதுமாக, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்த விவசாயத் தொழிலாளிக்கும் இதுவரை கிடைத்ததில்லை. இன்னும் கூட ரூ.40 நாள் கூலி பெறும் நிலை இருக்கிறது. இரண்டரை கோடி ரூபாயை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் கார் வாங்கச்சென்ற அதே அரியானாவில் நாள் முழுக்க உழைக்கும் ஒரு விவசாயத் தொழிலாளி ‘அளவீடுகளை பூர்த்தி செய்தால்’ அன்று ரூ.214 கூலி பெறுவார். வேலை உறுதித் திட்டத்தில் நாட்டில் விவசாயத் தொழிலாளி பெறும் கூலியில் அரியானாவில் தரப்படுவதே அதிகம். பிற மாநிலங்களில் இதைவிடக் குறைவு.
மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்பது பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலையும் அரசு வேலைதான். அரசு திட்டங்களைத்தான் அந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றுகிறார்கள். இங்கு மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் தரும் குறைந்தபட்ச ஊதியம் போல் ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கும் தர வேண்டுமென வலியுறுத்த வேண்டியுள்ளது.
தற்போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கூலி நுகர்வோர் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆயினும் 8 மாநிலங்களில் இது அங்குள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கூலியை விடக் குறைவாக உள்ளது. இவற்றில் அய்ந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கூலியையே மத்திய அரசு நிர்ணயித்தால் மாநில அரசுகள் அடிக்கடி குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்கும்போது அது மத்திய அரசுக்கு சுமையாக மாறிவிடுமென மத்திய அரசு தயங்குகிறது.
பிரதமர் வேட்பாளர் முதலமைச்சராக இருக்கிற குஜராத்தில், ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகமான 2006க்குப் பிறகு ஒரே ஒருமுறைதான் விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2005ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மாற்றியமைக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்க்கான குறைந்த பட்சக் கூலி, கருணாநிதி ஆட்சியில் 2009ல் மாற்றியமைக்கப்பட்டதற்குப் பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மாற்றியமைக்கப்படவில்லை.
அய்முகூ எதிர்ப்புப் போராளியாக அறிக்கைகள் விடுக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள கூலியை விட குறைவாகவே விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அய்முகூவை இடைவிடாமல் எதிர்ப்பதாகச் சொல்பவர்களின் செயல்பாடே இவ்வளவுதான் எனும்போது அய்முகூ சொல்வது வெறும் சாக்குதான்.
1983 (1) எல்எல்ஜே பக்கம் 220ல் குறிப்பிடப்பட்டுள்ள சஞ்சித் ராய் எதிர் ராஜஸ்தான் மாநில அரசாங்கம் வழக்கில் உச்சநீதிமன்றம், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் உற்பத்தி அளவை அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படாத எந்த வேலைக்கும், தேவையான அளவு வேலை செய்யப்படவில்லை என்பதால் மாநில அரசாங்கம், கூலியை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசாங்கம், பஞ்ச நிவாரண வேலை செய்த தொழிலாளர்களின் ஒரு பகுதி கூலியை பிடித்தம் செய்தபோது, அப்படி பிடித்தம் செய்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சொன்னது. அதேபோன்ற ஒரு தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.என்.பகவதி, அப்படி பிடித்தம் செய்வது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 23க்கு விரோதமானது என்றார். நீதிபதி ஆர்.எஸ்.பதக் அப்படி பிடித்தம் செய்வது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14க்கு விரோதமானது என்றார்.
இந்தச் சட்டங்கள், தீர்ப்புக்கள் எவற்றையும் மதிக்காமல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அளவீட்டின் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிர்ணயிக்கப்படுகிற இந்த அளவீட்டை, நிறைவேற்ற முடியாமல் முழு நாள் கூலி பெறுவது சாத்தியமற்ற நிலைமையே நிலவுகிறது. தமிழ்நாட்டில் ரூ.119, ரூ.132 என்று உயர்த்தப்பட்ட கூலியை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்தத் தொழிலாளியும் வாங்கவில்லை. இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள ரூ.148க்கும் அதே விதிதான்.
சோனியாவும் ராகுலும் பிற காங்கிரஸ் தலைவர்களும் மாறிமாறி பெருமை பேசுகிற தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 30.01.2013 அன்றைய நிலவரப்படி திட்டம் துவங்கியதில் இருந்து ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 44 நாட்கள் வேலை மட்டுமே தரப்பட்டுள்ளது. 2006 முதல் ஆறு ஆண்டுகளில் 12,000 கோடி வேலைநாட்கள் தரப்பட்டு, கூலி உட்பட பல்வேறு செலவினங்களும் சேர்த்து ரூ.1,66,760 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்த பட்ச கூலியில் மத்திய மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கூலியில் சமனிலை வேண்டும் என்று குரல் எழுப்பப்படும்போது, நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் பிரிவான விவசாயத் தொழிலாளர்கள் தொடர்பான ஒரு திட்டத்திற்கான ஒதுக்கீட்டையே குறைப்பது அய்முகூ அரசாங்கத்தின் பதிலாக இருக்கிறது.
நிதிப்பற்றாக் குறையை சமாளிக்க, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டில் ரூ.15,000 கோடி வரை குறைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசுகிறார். அதில் ரூ.2,000 கோடி ஊரக வேலை உறுதித் திட்ட ஒதுக்கீட்டில் குறைக்கப்படக்கூடும்.
தேசிய வேலை உறுதித் திட்டத்தில் கூலி அதிகமாக இருப்பதால் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயத்தில் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் குறைகிறது என்று சரத்பவாரும், திட்டத்தில் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை என்று சிதம்பரமும், ஒதுக்கீட்டுக் குறைப்புக்குக் காரணம் சொல்கிறார்கள்.
வேலை உறுதித்திட்டம் விவசாயத்துக்கும் நீட்டிக்கப்பட வேண்டும், பேரூராட்சிகளும் திட்டத்தின் கீழ் வரவேண்டும் என்று நாட்டிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் குரல் எழுப்புவது கேட்காததுபோல் நடிக்கிறார்கள்.
நான்கு மாநில மக்கள் காங்கிரஸ்காரர்களுக்கு குறைந்தபட்ச வாக்குகள் தராததால் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருத்தப்பட்டு பாரம் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.