ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி தந்த மகிழ்ச்சியில், இந்த வெற்றி தந்த மக்கள் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி தர வேண்டும் என்று ஜெயலலிதா தமிழக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆளும்கட்சி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது புதிதில்லை என்றாலும் மக்கள் நலத்திட்டங்களால் தமிழ்நாட்டை நிரப்பியுள்ளதாகச் சொல்கிற ஜெயலலிதா, அந்த நலத்திட்டங்கள் ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தரும் என்ற உறுதியான நிம்மதியுடன் சென்னையிலேயே இருந்துவிட முடியவில்லை.
இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்ததும் செய்யாததும் தமிழக மக்களைபோல் ஜெயலலிதாவுக்கும் நன்கு தெரியும் என்பதால் ஒரேநாளில் ஒன்பது கூட்டங்களில் மக்களை சந்தித்தார். நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார். இதற்கு முந்தைய இடைத்தேர்தல்கள் போலவே அமைச்சர்கள் இறக்கப்பட்டனர். அனைத்துவிதமான முறைகேடுகளும் அரங்கேறின.
ஏற்காடு தேர்தல் பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஜெயலலிதா, அதே நாளில் வெளியான நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி இன்னும் தனது கருத்தை வெளியிடவில்லை. அவருடைய மவுனம் பொருள் நிறைந்தது. அவருடைய மவுனம் நிச்சயம் மூன்றாவது அணிக்கானது அல்ல. 2014ல் தனக்கு ஆதாயம் தரக்கூடிய எந்த வாய்ப்பையும் விட்டுவிட, அல்லது கெடுத்துக்கொள்ள அவர் தயாராக இல்லை.
தமிழக மக்களின், ஏற்காடு தொகுதி மக்களின் எந்த வாழ்வாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படாத நிலையில், இந்தத் தளத்தில் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டில் வலுவான எதிர்ப்பும் இல்லாமல் போனதால்தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
ஜெயலலிதா அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லும்போது கூடவே அஇஅதிமுகவுடன் இககவும் இககமாவும் மட்டுமே நின்றன, மற்ற அனைத்து கட்சிகளும் எதிரணியில் இருந்தன, இருந்தபோதும் மகத்தான வெற்றி என்று சொல்லி வெற்றியில் பங்கு பெற தோழர் டி.கே.ரங்கராஜன் முயற்சி செய்கிறார். இந்த வெற்றி 2014 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர வேண்டும் என்ற மதச்சார்பற்ற அணி பற்றிய தனது விருப்பத்தை சுற்றி வளைத்து தெரிவிக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு தனியாக பாஜக தேவையில்லை. ஜெயலலிதாவே அந்தப் பொறுப்பையும் நிறைவேற்றிவிடுவார். இந்த உண்மையை எந்தத் திரைபோட்டும் மறைக்க முடியாது என்பதை இககவும் இககமாவும் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றன.
கூலி கூட கேட்டார்கள், கூடவே சமத்துவமும் சமூகநீதியும் கவுரமும் கேட்டார்கள், கொஞ்சம் போனால் அதிகாரம் கேட்பார்கள், வர்க்கமாக எழுவார்கள் என்பதால் அன்று வெண்மணி எரிந்தது. தலித் மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். அன்று அவர்கள் ஏற்றிய விடுதலை தீ பரவியது. அவர்கள் எரிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தவர்கள் கூட சமத்துவம், சமூகநீதி என்று பேச வேண்டி வந்தது.
அது யதார்த்தமானபோது ஆதிக்கவெறி மீண்டும் தலைதூக்க கொடியன்குளம், தருமபுரி என, ஓரளவு மேல்நிலை எட்டிய தலித் மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எப்படி நீ சமமாவாய் என்று தாக்குதல். அதிகாரம் கேட்டால் தாக்குதல். எட்டிய நிலையை தக்க வைக்க நினைத்தால் தாக்குதல். தலித் மக்கள் மீது தாக்குதல்கள் ஓயவில்லை. வெண்மணி தீ இன்னும் சுடுகிறது.
இககமாவே இன்று வீதிகளில் இறங்கி தலித் மக்கள் பிரச்சனைகள் மீது போராட்டங்கள் நடத்துகிறது. சம்பத் கமிசன் அறிக்கை, மலக்குழி சாவுகள், தலித் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்கள், தமிழ்நாட்டில் எஸ்சி/எஸ்டி ஆணையம் ஆகியவற்றில் (அனுமதி பெற்று) சன்னமான குரல் எழுப்புகிறது.
தேசிய குற்றப்பதிவு அமைப்பு தரும் விவரங்கள்படி 2012ல் தமிழகச் சிறைகளில் தண்டனை அனுபவிப்பவர்கள் 4,678 பேரில் தலித்துகள் 1,748 பேர். பழங்குடியினர் 322 பேர். இசுலாமியர்கள் 642 பேர். கிறித்துவர்கள் 673 பேர். கிட்டத்தட்ட 72% பேர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர்.
மொத்த முள்ள விசாரணைக் கைதிகள் 7,994 பேரில் தலித்துகள் 3,442 பேர். பழங்குடியினர் 898 பேர். இசுலாமியர்கள் 663 பேர். கிறித்துவர்கள் 637 பேர். கிட்டத்தட்ட 70% பேர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர். இந்த இரண்டரை ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி இந்தப் பிரச்சனையில் ஏன் ஏதும் செய்ய வில்லை? அல்லது ஏற்காட்டில் கூட நின்று ஜெயிக்க வைத்ததுபோல், இந்த விசயத்தில் ஏன் எதுவும் செய்ய வைக்க முடியவில்லை?
திண்டுக்கல் அருகில் உள்ள நடுப்பட்டியில் கோயில் திருவிழாவில் தலித் இளைஞர்கள் ஒண்டிவீரன் படம் போட்ட டி சர்ட் போட்டதால் துவங்கிய பிரச்சனை, தலித் மக்கள் வீடுகள் மீது வன்னிய சாதியைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் போடுவது வரை தீவிரமடைந்துள்ளது. தலித் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. பிரச்சனை உண்மையில் தலித் மக்களுக்குச் சொந்தமான நிலம் தொடர்பானது என்றும் சொல்லப்படுகிறது.
சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவதரித்துள்ள ஜெயலலிதா ஏன் இதை முளையிலேயே கிள்ளியெறியவில்லை? கூட இருந்தவர்களும் ஏன் சுட்டிக் காட்டவில்லை? இந்தத் தாக்குதல் நடந்தது அக்டோபர் மாதம். நவம்பரில் முதலமைச்சர் தொகுதியான சிறீரங்கத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல். அதே மாதத்தில் அரக்கோணம் அருகில் ஷோலிங்கூரில் தலித் மக்கள் மீது தாக்குதல். டிசம்பரில் தருமபுரி அருகே வேப்பமருதூர் தலித்துகள் மீது தாக்குதல்.
தமிழ்நாடு தலித் விரோத நாடாகி விட்டதா? பணக்காரர்கள் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று வெண்மணி வழக்கில் தீர்ப்பு வந்ததுபோல் மேல்சாதிக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று ஜெயலலிதா முடிவுக்கு வந்துவிட்டாரா? மோடிக்கு இசுலாமியர்கள் போல் ஜெயலலிதாவுக்கு தலித் மக்கள் மாறி விட்டார்களா?
தமிழ்நாட்டின் இசுலாமியர்களையும் ஜெயலலிதா மோடி மகிழ்ச்சி அடையும் விதத்தில்தான் நடத்துகிறார். தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது, எங்கோ குண்டு வெடித்தால் எங்கிருப்பவரையோ கைது செய்வது, கைது செய்தவுடனேயே, விசாரணை துவங்கும் முன்பே அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிப்பது என தமிழ்நாட்டில் பாசிச நடவடிக்கைகள் தொய்வின்றி நடக்கின்றன.
மதச்சார்பற்ற அணியுடனோ, மதச்சார்பற்ற சக்தி என்றோ எந்த அடிப்படையிலும் ஜெயலலிதாவை அடையாளப்படுத்த முடியாத நிலை தமிழ்நாட்டில் இருக்கும்போது, அவருக்கு வலுக்கட்டாயமாக மதச்சார்பின்மை முகம் தரும் முயற்சிகள் மக்கள் சீற்றத்தில் இருந்து ஜெயலலிதாவைத்தான் பாதுகாக்குமே தவிர, வேறு யாரும் விரும்பும் எந்த விளைவும் ஏற்படாது.
இன்றைய நிலைமைகளில் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் தொடர்புடையது. ஜெயலலிதா ஜனநாயகத்துக்கு ஆதரவானவர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சொல்வார்களானால் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்வதை பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவின் ஜனநாயக விரோத செயல்பாடு, ஏகாதிபத்திய சார்பு என்றும் திருப்பித் தாக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் செல்வது மட்டும் எரிந்து போனவர்களை திருப்திப்படுத்தாது. இறுதி நியாயம் கிடைக்கும்வரை அவர்கள் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஆளும்கட்சி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது புதிதில்லை என்றாலும் மக்கள் நலத்திட்டங்களால் தமிழ்நாட்டை நிரப்பியுள்ளதாகச் சொல்கிற ஜெயலலிதா, அந்த நலத்திட்டங்கள் ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தரும் என்ற உறுதியான நிம்மதியுடன் சென்னையிலேயே இருந்துவிட முடியவில்லை.
இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்ததும் செய்யாததும் தமிழக மக்களைபோல் ஜெயலலிதாவுக்கும் நன்கு தெரியும் என்பதால் ஒரேநாளில் ஒன்பது கூட்டங்களில் மக்களை சந்தித்தார். நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார். இதற்கு முந்தைய இடைத்தேர்தல்கள் போலவே அமைச்சர்கள் இறக்கப்பட்டனர். அனைத்துவிதமான முறைகேடுகளும் அரங்கேறின.
ஏற்காடு தேர்தல் பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஜெயலலிதா, அதே நாளில் வெளியான நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி இன்னும் தனது கருத்தை வெளியிடவில்லை. அவருடைய மவுனம் பொருள் நிறைந்தது. அவருடைய மவுனம் நிச்சயம் மூன்றாவது அணிக்கானது அல்ல. 2014ல் தனக்கு ஆதாயம் தரக்கூடிய எந்த வாய்ப்பையும் விட்டுவிட, அல்லது கெடுத்துக்கொள்ள அவர் தயாராக இல்லை.
தமிழக மக்களின், ஏற்காடு தொகுதி மக்களின் எந்த வாழ்வாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படாத நிலையில், இந்தத் தளத்தில் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டில் வலுவான எதிர்ப்பும் இல்லாமல் போனதால்தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
ஜெயலலிதா அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லும்போது கூடவே அஇஅதிமுகவுடன் இககவும் இககமாவும் மட்டுமே நின்றன, மற்ற அனைத்து கட்சிகளும் எதிரணியில் இருந்தன, இருந்தபோதும் மகத்தான வெற்றி என்று சொல்லி வெற்றியில் பங்கு பெற தோழர் டி.கே.ரங்கராஜன் முயற்சி செய்கிறார். இந்த வெற்றி 2014 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர வேண்டும் என்ற மதச்சார்பற்ற அணி பற்றிய தனது விருப்பத்தை சுற்றி வளைத்து தெரிவிக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு தனியாக பாஜக தேவையில்லை. ஜெயலலிதாவே அந்தப் பொறுப்பையும் நிறைவேற்றிவிடுவார். இந்த உண்மையை எந்தத் திரைபோட்டும் மறைக்க முடியாது என்பதை இககவும் இககமாவும் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றன.
கூலி கூட கேட்டார்கள், கூடவே சமத்துவமும் சமூகநீதியும் கவுரமும் கேட்டார்கள், கொஞ்சம் போனால் அதிகாரம் கேட்பார்கள், வர்க்கமாக எழுவார்கள் என்பதால் அன்று வெண்மணி எரிந்தது. தலித் மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். அன்று அவர்கள் ஏற்றிய விடுதலை தீ பரவியது. அவர்கள் எரிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தவர்கள் கூட சமத்துவம், சமூகநீதி என்று பேச வேண்டி வந்தது.
அது யதார்த்தமானபோது ஆதிக்கவெறி மீண்டும் தலைதூக்க கொடியன்குளம், தருமபுரி என, ஓரளவு மேல்நிலை எட்டிய தலித் மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எப்படி நீ சமமாவாய் என்று தாக்குதல். அதிகாரம் கேட்டால் தாக்குதல். எட்டிய நிலையை தக்க வைக்க நினைத்தால் தாக்குதல். தலித் மக்கள் மீது தாக்குதல்கள் ஓயவில்லை. வெண்மணி தீ இன்னும் சுடுகிறது.
இககமாவே இன்று வீதிகளில் இறங்கி தலித் மக்கள் பிரச்சனைகள் மீது போராட்டங்கள் நடத்துகிறது. சம்பத் கமிசன் அறிக்கை, மலக்குழி சாவுகள், தலித் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்கள், தமிழ்நாட்டில் எஸ்சி/எஸ்டி ஆணையம் ஆகியவற்றில் (அனுமதி பெற்று) சன்னமான குரல் எழுப்புகிறது.
தேசிய குற்றப்பதிவு அமைப்பு தரும் விவரங்கள்படி 2012ல் தமிழகச் சிறைகளில் தண்டனை அனுபவிப்பவர்கள் 4,678 பேரில் தலித்துகள் 1,748 பேர். பழங்குடியினர் 322 பேர். இசுலாமியர்கள் 642 பேர். கிறித்துவர்கள் 673 பேர். கிட்டத்தட்ட 72% பேர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர்.
மொத்த முள்ள விசாரணைக் கைதிகள் 7,994 பேரில் தலித்துகள் 3,442 பேர். பழங்குடியினர் 898 பேர். இசுலாமியர்கள் 663 பேர். கிறித்துவர்கள் 637 பேர். கிட்டத்தட்ட 70% பேர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர். இந்த இரண்டரை ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி இந்தப் பிரச்சனையில் ஏன் ஏதும் செய்ய வில்லை? அல்லது ஏற்காட்டில் கூட நின்று ஜெயிக்க வைத்ததுபோல், இந்த விசயத்தில் ஏன் எதுவும் செய்ய வைக்க முடியவில்லை?
திண்டுக்கல் அருகில் உள்ள நடுப்பட்டியில் கோயில் திருவிழாவில் தலித் இளைஞர்கள் ஒண்டிவீரன் படம் போட்ட டி சர்ட் போட்டதால் துவங்கிய பிரச்சனை, தலித் மக்கள் வீடுகள் மீது வன்னிய சாதியைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் போடுவது வரை தீவிரமடைந்துள்ளது. தலித் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. பிரச்சனை உண்மையில் தலித் மக்களுக்குச் சொந்தமான நிலம் தொடர்பானது என்றும் சொல்லப்படுகிறது.
சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவதரித்துள்ள ஜெயலலிதா ஏன் இதை முளையிலேயே கிள்ளியெறியவில்லை? கூட இருந்தவர்களும் ஏன் சுட்டிக் காட்டவில்லை? இந்தத் தாக்குதல் நடந்தது அக்டோபர் மாதம். நவம்பரில் முதலமைச்சர் தொகுதியான சிறீரங்கத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல். அதே மாதத்தில் அரக்கோணம் அருகில் ஷோலிங்கூரில் தலித் மக்கள் மீது தாக்குதல். டிசம்பரில் தருமபுரி அருகே வேப்பமருதூர் தலித்துகள் மீது தாக்குதல்.
தமிழ்நாடு தலித் விரோத நாடாகி விட்டதா? பணக்காரர்கள் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று வெண்மணி வழக்கில் தீர்ப்பு வந்ததுபோல் மேல்சாதிக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று ஜெயலலிதா முடிவுக்கு வந்துவிட்டாரா? மோடிக்கு இசுலாமியர்கள் போல் ஜெயலலிதாவுக்கு தலித் மக்கள் மாறி விட்டார்களா?
தமிழ்நாட்டின் இசுலாமியர்களையும் ஜெயலலிதா மோடி மகிழ்ச்சி அடையும் விதத்தில்தான் நடத்துகிறார். தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது, எங்கோ குண்டு வெடித்தால் எங்கிருப்பவரையோ கைது செய்வது, கைது செய்தவுடனேயே, விசாரணை துவங்கும் முன்பே அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிப்பது என தமிழ்நாட்டில் பாசிச நடவடிக்கைகள் தொய்வின்றி நடக்கின்றன.
மதச்சார்பற்ற அணியுடனோ, மதச்சார்பற்ற சக்தி என்றோ எந்த அடிப்படையிலும் ஜெயலலிதாவை அடையாளப்படுத்த முடியாத நிலை தமிழ்நாட்டில் இருக்கும்போது, அவருக்கு வலுக்கட்டாயமாக மதச்சார்பின்மை முகம் தரும் முயற்சிகள் மக்கள் சீற்றத்தில் இருந்து ஜெயலலிதாவைத்தான் பாதுகாக்குமே தவிர, வேறு யாரும் விரும்பும் எந்த விளைவும் ஏற்படாது.
இன்றைய நிலைமைகளில் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் தொடர்புடையது. ஜெயலலிதா ஜனநாயகத்துக்கு ஆதரவானவர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சொல்வார்களானால் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்வதை பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவின் ஜனநாயக விரோத செயல்பாடு, ஏகாதிபத்திய சார்பு என்றும் திருப்பித் தாக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் செல்வது மட்டும் எரிந்து போனவர்களை திருப்திப்படுத்தாது. இறுதி நியாயம் கிடைக்கும்வரை அவர்கள் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.