COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, January 8, 2013

மாலெ தீப்பொறி, 2013, ஜனவரி 01 - 15 தொகுதி 11 இதழ் 11

அஞ்சலி

தோழர் சங்கர் மித்ராவுக்கு செவ்வஞ்சலி

2012 டிசம்பர் 18 அன்று தோழர் வினோத் மிஸ்ரா 14ஆவது நினைவு தினத்தை கட்சி அனுசரித்துக் கொண்டிருந்த போது, அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தோழர் சங்கர் மித்ரா மறைவுச் செய்தி வந்தது.

…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

தலையங்கம்

பாலியல் வல்லுறவு தேசிய அவமானம்

அச்சமற்ற சுதந்திரத்திற்கான பெண்கள் உரிமையைப் பாதுகாப்போம். பாலியல் வல்லுறவுக் குற்றம் புரிந்தவர் அனைவருக்கும் துரிதமான, நிச்சயமான தண்டனை கோருவோம்.

திருமண உறவு, காவல், சாதிய மதவெறி மற்றும் பாதுகாப்புப் படையினர் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் தாக்குதல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல், கவுரவக் குற்றங்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புத் தொடர் நடத்தப்பட வேண்டும்…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

அறைகூவல்

பிப்ரவரி 2 - 12 பிரச்சாரப் பயணம் வெல்லட்டும்

தீப்பொறி காட்டுத் தீயாகட்டும்

எஸ்.குமாரசாமி

கடந்த இருபதாண்டு காலம். எத்தனை மாற்றங்கள்? என்னென்ன மாற்றங்கள்? கார்ப்பரேட் பெரும் தொழில் குழும முதலாளிகள், இன்றைய ஆட்சிகளை ஆட்டிப் படைப்பவர்கள், எப்படி எல்லாம் மாறி உள்ளனர் எனக் காண, டாடாவின் கதையைப் பார்த்தாலே போதும்…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

மண்ணில் பாதி

அச்சமற்ற சுதந்திரம் வேண்டும்

டெல்லியில் ஒரு பெண் மாணவர் மிருகத்தனமான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதை அடுத்து, டெல்லியிலும் நாடெங்கிலும், அந்தப் பெண்ணுக்கு நீதி கோரியும், கூடுதல் விளைவு தரும் சட்டங்கள், குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கோரி பல போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்களும் மாணவர்களும் 19.12.2012 அன்று டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்சித் வீடு நோக்கிச் சென்ற போது, காவல் துறை அவர்களைத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடிகள் கொண்டு தாக்கியும் விரட்டப் பார்த்தது. அப்போது, அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன், பெண்களின் மோசமான சமூக நிலைக்கு ஷீலா தீக்சித்தும் இன்றைய அரசியல் அமைப்பு முறையும் எப்படி பொறுப்பாகிறார்கள் என்பது பற்றி ஆற்றிய இந்தி உரையின் ஆங்கில வடிவம் தெஹல்கா பத்திரிகையில் வெளியானது. அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

களம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலையில்
கூலி குறைப்புக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்கள் கிளர்ச்சி

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் குட்டலாடம்பட்டி, தொட்டிவலசு ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தினக் கூலியாக ரூ.100 வழங்கி வந்த நிலையில் டிசம்பர் 18 அன்று ரூ.60 ஆக குறைப்பதாக அறிவித்தனர்…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

முன்முயற்சி

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க நடவடிக்கைகள்

நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே எனப் பாடிய புலவர்கள், சிவபெருமாள் சீற்றத்திற்கும் அஞ்சாத தமிழ்ப் புலவர்கள் எனப் பழம் பெருமை பேசுவது ஒரு புறமும், அதிகாரங்கள் முன் மண்டியிடுவது மறுபுறமும் நடப்பது தமிழ் அறிவுலகத்தில் வாடிக்கை. நீதித்துறை, ஆகப் பெரிய புனிதப் பசுவாகும். ஊடகங்கள் கவனமாகக் கட்டமைக்கும் பிம்பங்கள், கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள் இருப்பதாக நம்பிக்கை தருகின்றன. பொதுப்புத்தியும் நம்புகிறது…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

நகல் ஆவணம்

நகல் பொதுத் திட்டம்

(2013, ஏப்ரல் 2 - 6 தேதிகளில் ராஞ்சியில் நடக்கவுள்ள இகக மாலெ (விடுதலை) 9ஆவது கட்சி காங்கிரசில் விவாதிக்கப்படவுள்ள நகல் தீர்மானம் தரப்படுகிறது. வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)…….

மேலும் படிக்க இங்கு CLICK செய்யவும்

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

 

 

Search