இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா பங்கேற்பு
28 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் சந்திர ராஜேஸ்வர ராவ் (சிஆர் என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர்) பிறந்த நூற்றாண்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 11 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அங்கு குழுமியிருந்த வெகுமக்கள் முன் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் செஞ்சட்டை அணிந்த 1500 தொண்டர்கள் இருந்தார்கள். மேடையில் இகக பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, இகக(மா) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், மூத்த ஆர்எஸ்பி தலைவர் தோழர் அபானி ராய், ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநில இகக செயலாளர்கள், நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் வீற்றிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, 1992 பிப்ரவரி மாதம் விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் தோழர் சிஆர் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்து, போர்க்குணமிக்க விவசாயப் போராட்டங்களுக்கு அவர் அழுத்தம் கொடுத்ததையும், இயக்கங்களைச் சார்ந்து இடதுசாரி ஒற்றுமையைப் பற்றி பேசியதையும் குறிப்பிட்டார். கூட்டத்தில் பேசிய அனைத்து இடதுசாரி தலைவர்களும் தோழர் சிஆர்ரின் தெலுங்கானா மரபையும், மதவெறிக்கு எதிராக அவர் மக்களை அணி திரட்டியதையும் குறிப்பிட்டனர். தற்போதைய மோடி அரசாங்கத்தின் அதிகரித்துவரும் பெருந்தொழில் குழும - மதவெறி தாக்குதலுக்கு எதிராக கூட்டுப் போராட்டங்களில் அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் பரந்த ஒற்றுமையை வலியுறுத்தினர்.
ஆகஸ்ட் 10 அன்று நூற்றாண்டு நிகழ்வின் ஒரு பகுதியாக ‘சமூக இயக்கங்களும், இடதுசாரிகளின் செயல்பாடும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கியூபா, வியட்நாம் மற்றும் வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இகக தலைவர் ஏபி பரதன் துவக்கி வைத்த இந்த கருத்தரங்கில் பிரபாத் பட்நாயக் உரையாற்றினார். இகக (மாலெ) விடுதலையின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் என்.மூர்த்தியும் கருத்தரங்கில் உரையாற்றினார்.

28 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் சந்திர ராஜேஸ்வர ராவ் (சிஆர் என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர்) பிறந்த நூற்றாண்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 11 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அங்கு குழுமியிருந்த வெகுமக்கள் முன் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் செஞ்சட்டை அணிந்த 1500 தொண்டர்கள் இருந்தார்கள். மேடையில் இகக பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, இகக(மா) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், மூத்த ஆர்எஸ்பி தலைவர் தோழர் அபானி ராய், ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநில இகக செயலாளர்கள், நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் வீற்றிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, 1992 பிப்ரவரி மாதம் விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் தோழர் சிஆர் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்து, போர்க்குணமிக்க விவசாயப் போராட்டங்களுக்கு அவர் அழுத்தம் கொடுத்ததையும், இயக்கங்களைச் சார்ந்து இடதுசாரி ஒற்றுமையைப் பற்றி பேசியதையும் குறிப்பிட்டார். கூட்டத்தில் பேசிய அனைத்து இடதுசாரி தலைவர்களும் தோழர் சிஆர்ரின் தெலுங்கானா மரபையும், மதவெறிக்கு எதிராக அவர் மக்களை அணி திரட்டியதையும் குறிப்பிட்டனர். தற்போதைய மோடி அரசாங்கத்தின் அதிகரித்துவரும் பெருந்தொழில் குழும - மதவெறி தாக்குதலுக்கு எதிராக கூட்டுப் போராட்டங்களில் அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் பரந்த ஒற்றுமையை வலியுறுத்தினர்.
ஆகஸ்ட் 10 அன்று நூற்றாண்டு நிகழ்வின் ஒரு பகுதியாக ‘சமூக இயக்கங்களும், இடதுசாரிகளின் செயல்பாடும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கியூபா, வியட்நாம் மற்றும் வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இகக தலைவர் ஏபி பரதன் துவக்கி வைத்த இந்த கருத்தரங்கில் பிரபாத் பட்நாயக் உரையாற்றினார். இகக (மாலெ) விடுதலையின் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் என்.மூர்த்தியும் கருத்தரங்கில் உரையாற்றினார்.
