COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, August 15, 2014

இகக மாலெ கரம்பக்குடி இரண்டாவது ஒன்றிய மாநாடு

இகக மாலெ கரம்பக்குடி இரண்டாவது ஒன்றிய மாநாடு ஆகஸ்ட் 10 அன்று நடத்தப்பட்டது. 10 பெண்கள் உட்பட 45 பேர் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர். 5 பேர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர் துரைசாமி கொடியேற்றினார். தோழர் ராசாங்கம் மாவட்டப் பார்வையாளராகக் கலந்து கொண்டார். ஒன்றியக் குழுச் செயலாளர் தோழர் கலைச்செல்வன் அறிக்கை முன்வைத்தார். தோழர்கள் விஜயன், முருகதாஸ், தங்கப்பா, ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு தலைமை தாங்கியது. மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி வாழ்த்துரையாற்றினார்.

இஸ்ரேலுக்கு எதிராக கண்டனமும் காசாவுக்கு ஒருமைப்பாடும் தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், தலித்துகள், பெண்கள் மீது அதிகரித்து வரும் வன்முறை நிகழ்வுகளை தடுத்த நிறுத்த வேண்டும், வீடற்ற வறியவர் குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மீது இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Search