பெண் தொழிலாளர்கள் இரவுப் பணிக்கு வருவதைத் தடை செய்யும் தொழிற்சாலைகள் சட்டம் 1948, பிரிவு 66 (1) (b)அய் திருத்தி பெண் தொழிலாளர் இரவுப் பணிக்கு வருவதை உறுதி செய்கிற நடவடிக் கையை மோடி அரசாங்கம் எடுத்துக்கொண்டிருக்கிறது. பெண் தொழிலாளர்களின் சமத்துவத்தை உறுதி செய்வது நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை, இந்திய தொழிலாளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல், தொழிலாளர் நலன்களுக்கு விரோதமாக, அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்புகளை அகற்றும்விதம் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படுவதாகச் சொல்கிறது.
ஜூன் 1990ல் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாடு, பெண் தொழிலாளர் இரவுப் பணிக்கு வருவதற்கு ஏதுவாக, சில எல்லைகளுக்குள், இந்தத் தடைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க 2003ல் இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. 29 ஜூலை 2003 அன்று தேஜமு அரசாங்கமும் 10 ஆகஸ்ட் 2005 அன்று அய்முகூ அரசாங்கமும் இதற்கான தொழிற்சாலை திருத்தச் சட்டங்களை மக்களவையில் அறிமுகப்படுத்தின.
தமிழ்நாடு இந்த விசயத்தில், முன்னோடியாக இருக்கிறது. பெண் தொழிலாளர்கள் இங்கு பல ஆண்டு காலமாக இரவுப் பணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
1997ல் திருப்பூரின் தொழிற்சாலைகள் சங்கங்கள் இந்தச் சட்டப் பிரிவுக்கு தடை கோரி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது.
டிசம்பர் 8, 2000 அன்று சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும், பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்த வேண்டுமானால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் என்ற நீண்ட பட்டியல் ஒன்றை முன்வைத்து, வழக்கு தொடுத்த தனிப்பட்ட நிறுவனங்கள், அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்தலாம் என்றும், இந்த அனுமதி ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் முதலாளிகள் பக்கம் நளினி சிதம்பரம் வாதாடினார். ஜனநாயக மாதர் சங்கம், பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பு என்ற அடிப்படையில், சட்டப் பிரிவு தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது.
சந்துரு ஜனநாயக மாதர் சங்கத்துக்காக வாதாடினார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 16 பிப்ரவரி 2010 அன்று தமிழ்நாடு தலைமை தொழிலக ஆய்வாளர், பஞ்சாப் முதன்மைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்திலோ, மேல் முறையீடு நிலுவையில் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
1997 இடைக்காலத் தடை, 2000 சிறப்பு அனுமதி ஆகியவற்றை பயன்படுத்தி, திருப்பூர் முதலாளிகள் சட்டபூர்வமாக பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்துகின்றனர். இங்குள்ள ஆடை தயாரிக் கும் நிறுவனங்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு பணிமுறை, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு பணி முறை என பெண் தொழிலா ளர்கள் 9 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர்.
நோக்கியா சிறப்பு அனுமதி பெற்றுதான் பெண் தொழிலாளர்களை இரவுப் பணிக்குக் கொண்டு வந்தது. நோக்கியா துணை நிறுவனங்களும் சிறப்பு அனுமதியின் பேரில் பெண்களை இரவுப் பணியில் அமர்த்தின.
மெப்ஸ் ஏற்கனவே சிறப்பு சலுகைகள் பெற்றது; மேலும் சிறப்பு அனுமதி பெற்று இங்குள்ள மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களும் ஆடை உற்பத்தி நிறுவனங்களும் பெண் தொழிலாளர்களை இரவுப் பணி யில் அமர்த்துகின்றன.
கோவையில் வைரம் பட்டைத் தீட்டும் நிறுவனத் தின் பெண் தொழிலாளர்கள் இரண்டு பணிமுறைகளில் இரவு 10 மணி வரை வேலை செய்கின்றனர். ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் இதே முறையில் இரவுப் பணியில் பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றன.
ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங் கள் கொள்கை 2014ல் பெண் தொழிலாளர்களை இரவு நேரப் பணியில் அமர்த்துவது பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொல்கிறார். 2014 ஜூன் 17 தேதிய தொழிலாளர் துறை கடிதம், பெண்கள் தங்கள் குடும்பக் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற உதவும் விதம் அவர்களுக்கு நெளிவுசுளிவான வேலை நேரம் தருவது பற்றிய, ஃப்ளக்சி கேரியர் பிரைவேட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் முன்வைப்பை தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்களின் பரிசீலனைக்கு சுற்றுக்கு விட்டுள்ளது.
2014 ஜனவரி 22 அன்று, தொழிற்சாலைகள் சட்டம் 1948, பிரிவு 84 ஆ என்ற புதிய பிரிவை சேர்த்து சட்ட வரைவு திருத்தம் முன்வைத்துள்ளது. இது, போக்கு வரத்து, பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட, இரவுப் பணியில் பெண்களை அமர்த்தும் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டிய, 14 நிபந்தனை களை முன்வைக்கிறது.
குஜராத் உயர்நீதிமன்றம் 2013 டிசம்பரில் 66 (1)(b) அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது. அதன் மூலம் இரவு நேரப் பணிக்கு இருந்த தடையை நீக்கியது.
தமிழ்நாட்டு நடைமுறையை உதாரணம் காட்டி, அந்தத் தடையை அப்படியே பஞ்சாபில் அமல்படுத்த முடியாது என்பதால், அரசாங்கமே, இரவுப் பணியில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதித்து 2010, அக்டோபர் 25 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது; பின் பஞ்சாப் அரசாங்கம், 2013 நவம்பர் 13 அன்று வெளியிட்ட அரசாணையில், இரவுப் பணியில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதற்கான நிபந்தனைகள் பட்டியலை அறிவித்தது.
மும்பை உயர்நீதிமன்றம், 1999, ஜ÷ன் 10 தேதிய தீர்ப்பொன்றில், சான்டா க்ரூஸ் ஏற்றுமதி மண்டலத்தில் இரவுப் பணிக்கு பெண்கள் வருவதை அனுமதித்தது. ஆந்திரா உயர்நீதி மன்றமும் பிரிவு 66 அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இரவுப் பணி தவிர்க்க முடியாததாகிய போது ஆந்திரா, கர்நாடகா அரசாங்கங்கள், 2007ல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டங்களில் திருத்தங்கள் செய்து பெண் தொழிலாளர்கள் இரவுப் பணிக்கு வருவதில் உள்ள தடையை நீக்கின.
இரவுப் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் அசோசெம் (முதலாளிகள் சங்கம்) உதவியுடன் தேசிய பெண்கள் ஆணையம் நடத்திய ‘பெண்களுக்கு இரவுப் பணி: வளர்ச்சியும் வாய்ப்பும்’ என்ற ஆய்வில், 76.3% பெண் தொழிலாளர்கள், இரவுப் பணியில் வேலை நேரம் கூடுதலாக இருப்பதாகவும், 21% பேர் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் சொல்லியுள்ளனர். இரவுப் பணிக்கு வரும் பெண்களில் 45% பேர் தொடர்ந்து அசதியாக இருப்பதாகவும், 50% பேருக்கு செரிமானப் பிரச்சனை இருப்பதாகவும், 60% பேர் தூக்கமின்மையால் அவதியுறுவதாகவும், 55% பேர் அடிக்கடி காய்ச்சல், ஜலதோசம் ஆகியவற்றுக்கு உட்படுவதாகவும், 10% பேர் மனஅழுத்தத்துக்கு ஆளானதாகவும், 45% பேருக்கு எப்போதும் ஏதாவது உடல்நிலை பிரச்சனை இருப்பதாகவும் ஆய்வு சொல்கிறது.
இரவுப் பணியில் பெண்கள் அமர்த்தப்படுவதற்கு இருக்கும் தடையை நீக்கி பெண்களின் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் இரவுப் பணியில் அவர்களை அமர்த்துவதாக 1997 முதல் 2014 வரை வெவ் வேறு மாநில, மத்திய அரசாங்கங்கள் சொல்லி வந்துள்ளன. இப்போது மோடி அரசாங்கம் அதையே காரணம் காட்டி பெண்களை இரவுப் பணியில் அமர்த்த இருக்கிற சட்டரீதியான தடையை நீக்கவுள்ளது. 1997 முதல் 2014 வரை இரவுப் பணியில் அமர்த்தப்பட்ட பெண்களுக்கு சமத்துவம் நிலைநாட்டப்படவில்லை, கூடுதல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றுதான் தெரிகிறது. ஒரு வேளை மோடி மந்திரம் நிலைநாட்டிவிடுமோ?
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை, இந்திய தொழிலாளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல், தொழிலாளர் நலன்களுக்கு விரோதமாக, அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்புகளை அகற்றும்விதம் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படுவதாகச் சொல்கிறது.
ஜூன் 1990ல் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாடு, பெண் தொழிலாளர் இரவுப் பணிக்கு வருவதற்கு ஏதுவாக, சில எல்லைகளுக்குள், இந்தத் தடைகளுக்கு விலக்கு அளிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க 2003ல் இந்திய அரசாங்கம் முடிவு செய்தது. 29 ஜூலை 2003 அன்று தேஜமு அரசாங்கமும் 10 ஆகஸ்ட் 2005 அன்று அய்முகூ அரசாங்கமும் இதற்கான தொழிற்சாலை திருத்தச் சட்டங்களை மக்களவையில் அறிமுகப்படுத்தின.
தமிழ்நாடு இந்த விசயத்தில், முன்னோடியாக இருக்கிறது. பெண் தொழிலாளர்கள் இங்கு பல ஆண்டு காலமாக இரவுப் பணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
1997ல் திருப்பூரின் தொழிற்சாலைகள் சங்கங்கள் இந்தச் சட்டப் பிரிவுக்கு தடை கோரி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது.
டிசம்பர் 8, 2000 அன்று சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும், பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்த வேண்டுமானால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் என்ற நீண்ட பட்டியல் ஒன்றை முன்வைத்து, வழக்கு தொடுத்த தனிப்பட்ட நிறுவனங்கள், அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்தலாம் என்றும், இந்த அனுமதி ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் முதலாளிகள் பக்கம் நளினி சிதம்பரம் வாதாடினார். ஜனநாயக மாதர் சங்கம், பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பு என்ற அடிப்படையில், சட்டப் பிரிவு தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது.
சந்துரு ஜனநாயக மாதர் சங்கத்துக்காக வாதாடினார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 16 பிப்ரவரி 2010 அன்று தமிழ்நாடு தலைமை தொழிலக ஆய்வாளர், பஞ்சாப் முதன்மைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்திலோ, மேல் முறையீடு நிலுவையில் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
1997 இடைக்காலத் தடை, 2000 சிறப்பு அனுமதி ஆகியவற்றை பயன்படுத்தி, திருப்பூர் முதலாளிகள் சட்டபூர்வமாக பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் அமர்த்துகின்றனர். இங்குள்ள ஆடை தயாரிக் கும் நிறுவனங்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு பணிமுறை, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு பணி முறை என பெண் தொழிலா ளர்கள் 9 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர்.
நோக்கியா சிறப்பு அனுமதி பெற்றுதான் பெண் தொழிலாளர்களை இரவுப் பணிக்குக் கொண்டு வந்தது. நோக்கியா துணை நிறுவனங்களும் சிறப்பு அனுமதியின் பேரில் பெண்களை இரவுப் பணியில் அமர்த்தின.
மெப்ஸ் ஏற்கனவே சிறப்பு சலுகைகள் பெற்றது; மேலும் சிறப்பு அனுமதி பெற்று இங்குள்ள மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களும் ஆடை உற்பத்தி நிறுவனங்களும் பெண் தொழிலாளர்களை இரவுப் பணி யில் அமர்த்துகின்றன.
கோவையில் வைரம் பட்டைத் தீட்டும் நிறுவனத் தின் பெண் தொழிலாளர்கள் இரண்டு பணிமுறைகளில் இரவு 10 மணி வரை வேலை செய்கின்றனர். ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் இதே முறையில் இரவுப் பணியில் பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றன.
ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங் கள் கொள்கை 2014ல் பெண் தொழிலாளர்களை இரவு நேரப் பணியில் அமர்த்துவது பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொல்கிறார். 2014 ஜூன் 17 தேதிய தொழிலாளர் துறை கடிதம், பெண்கள் தங்கள் குடும்பக் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற உதவும் விதம் அவர்களுக்கு நெளிவுசுளிவான வேலை நேரம் தருவது பற்றிய, ஃப்ளக்சி கேரியர் பிரைவேட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் முன்வைப்பை தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்களின் பரிசீலனைக்கு சுற்றுக்கு விட்டுள்ளது.
2014 ஜனவரி 22 அன்று, தொழிற்சாலைகள் சட்டம் 1948, பிரிவு 84 ஆ என்ற புதிய பிரிவை சேர்த்து சட்ட வரைவு திருத்தம் முன்வைத்துள்ளது. இது, போக்கு வரத்து, பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட, இரவுப் பணியில் பெண்களை அமர்த்தும் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டிய, 14 நிபந்தனை களை முன்வைக்கிறது.
குஜராத் உயர்நீதிமன்றம் 2013 டிசம்பரில் 66 (1)(b) அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது. அதன் மூலம் இரவு நேரப் பணிக்கு இருந்த தடையை நீக்கியது.
தமிழ்நாட்டு நடைமுறையை உதாரணம் காட்டி, அந்தத் தடையை அப்படியே பஞ்சாபில் அமல்படுத்த முடியாது என்பதால், அரசாங்கமே, இரவுப் பணியில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதை அனுமதித்து 2010, அக்டோபர் 25 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது; பின் பஞ்சாப் அரசாங்கம், 2013 நவம்பர் 13 அன்று வெளியிட்ட அரசாணையில், இரவுப் பணியில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதற்கான நிபந்தனைகள் பட்டியலை அறிவித்தது.
மும்பை உயர்நீதிமன்றம், 1999, ஜ÷ன் 10 தேதிய தீர்ப்பொன்றில், சான்டா க்ரூஸ் ஏற்றுமதி மண்டலத்தில் இரவுப் பணிக்கு பெண்கள் வருவதை அனுமதித்தது. ஆந்திரா உயர்நீதி மன்றமும் பிரிவு 66 அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இரவுப் பணி தவிர்க்க முடியாததாகிய போது ஆந்திரா, கர்நாடகா அரசாங்கங்கள், 2007ல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டங்களில் திருத்தங்கள் செய்து பெண் தொழிலாளர்கள் இரவுப் பணிக்கு வருவதில் உள்ள தடையை நீக்கின.
இரவுப் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் அசோசெம் (முதலாளிகள் சங்கம்) உதவியுடன் தேசிய பெண்கள் ஆணையம் நடத்திய ‘பெண்களுக்கு இரவுப் பணி: வளர்ச்சியும் வாய்ப்பும்’ என்ற ஆய்வில், 76.3% பெண் தொழிலாளர்கள், இரவுப் பணியில் வேலை நேரம் கூடுதலாக இருப்பதாகவும், 21% பேர் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் சொல்லியுள்ளனர். இரவுப் பணிக்கு வரும் பெண்களில் 45% பேர் தொடர்ந்து அசதியாக இருப்பதாகவும், 50% பேருக்கு செரிமானப் பிரச்சனை இருப்பதாகவும், 60% பேர் தூக்கமின்மையால் அவதியுறுவதாகவும், 55% பேர் அடிக்கடி காய்ச்சல், ஜலதோசம் ஆகியவற்றுக்கு உட்படுவதாகவும், 10% பேர் மனஅழுத்தத்துக்கு ஆளானதாகவும், 45% பேருக்கு எப்போதும் ஏதாவது உடல்நிலை பிரச்சனை இருப்பதாகவும் ஆய்வு சொல்கிறது.
இரவுப் பணியில் பெண்கள் அமர்த்தப்படுவதற்கு இருக்கும் தடையை நீக்கி பெண்களின் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் இரவுப் பணியில் அவர்களை அமர்த்துவதாக 1997 முதல் 2014 வரை வெவ் வேறு மாநில, மத்திய அரசாங்கங்கள் சொல்லி வந்துள்ளன. இப்போது மோடி அரசாங்கம் அதையே காரணம் காட்டி பெண்களை இரவுப் பணியில் அமர்த்த இருக்கிற சட்டரீதியான தடையை நீக்கவுள்ளது. 1997 முதல் 2014 வரை இரவுப் பணியில் அமர்த்தப்பட்ட பெண்களுக்கு சமத்துவம் நிலைநாட்டப்படவில்லை, கூடுதல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றுதான் தெரிகிறது. ஒரு வேளை மோடி மந்திரம் நிலைநாட்டிவிடுமோ?