பகத்சிங் நினைவுதினமான மார்ச் 23 அன்று அதிகாலை இகக மாலெ தோழர்கள், இகக மாலெ சர்போக்ரி ஒன்றியச் செயலாளர் தோழர் புத்ராம் பாஸ்வான் உடலை கண்டெடுத்தனர். இகக மாலெ வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் தொடர்பான வேலைகளுக்காக தனது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டார். அவர் உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவரை கயிற்றில் கட்டி தரையில் இழுத்துக் சென்றிருக்கிறார்கள். அவர் நெஞ்சில் ஏறி மிதித்திருக்கிறார்கள். 1998 நகரி பசார் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ரன்வீர் சேனாவைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட, நன்கறியப்பட்ட பல நிலப்பிரபுத்துவ லும்பன் சக்திகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரன்வீர் சேனா மீதான படுகொலை வழக்குகளில் நிலப்பிரபுத்துவ அச்சுறுத்தலை மீறி சாட்சி சொல்ல சாட்சிகள் துணிச்சலாக சாட்சி சொல்வதில் அவர்களுக்கு பெரிதும் பக்க பலமாக இருந்தவர் தோழர் புத்ராம் பாஸ்வான். மார்ச் 23 அன்று, ரன்வீர் சேனா ஆதரவாளர்கள் வானத்தை நோக்கிச் சுட்டு புத்ராம் படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடினார்கள். புத்ராம் படுகொலை ஓர் அரசியல் படுகொலை என்பதை இந்தக் கொண்டாட்டங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அர்ரா தொகுதியில் இகக மாலெ ஒரு வலுவான போட்டியாளராக உள்ளது. தேர்தல் நேரத்தில் இகக மாலெ ஆதரவாளர்களை அச்சுறுத்தும் நோக்கம் இந்தப் படுகொலைக்குப் பின் உள்ளது.
நிதிஷ் குமாரின் நல்லாட்சிக்குப் பிறகு பீகாரில் நிலப்பிரபுத்துவ வன்முறை கடந்த காலத்ததாகிவிட்டது என்று நிதிஷ் குமார் ஆதரவு கருத்தியலாளர்கள் சொல்லப் பார்க்கிறார்கள். 80களில், தலித் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதைத் தடுக்க முயன்ற நிலப்பிரபுத்துவ சக்திகள், இகக மாலெ பதாகையிலான ஒடுக்கப்பட்ட நிலமற்ற வறிய மக்களின் வெற்றிகரமான போராட்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தப் போராட்டங்களில் மக்கள் தங்கள் வாக்குரிமையை வென்றெடுத்தனர்.
80களின் இறுதிப் பகுதியிலும் 90களின் துவக்க வருடங்களிலும் போஜ்பூரில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் இகக மாலெ வெற்றி பெற்றபோது, அதே சக்திகள் ரன்வீர் சேனாவை உருவாக்கின. வறிய மக்களின் சமூக அரசியல் அறுதியிடலை தடுக்க, அவர்களை அச்சுறுத்த பல படுகொலைகளை நடத்தின. இப்போது, தலைவர்களை, ஊழியர்களை படுகொலை செய்வது என்ற போர்த்தந்திரத்தை கையாளுகின்றன. 2012ல் இககமாலெ ரோதாஸ் மாவட்டச் செயலாளர் தோழர் பய்யா ராம் யாதவ் படுகொலை செய்யப்பட்டார். 2014ல் புத்ராம் பாஸ்வான் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2013 சுதந்திர தினத்தன்று பட்டி பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள், நிலப் பிரபுத்துவ வன்முறைக்கு உள்ளாயினர். ஒருவர் கொல்லப்பட்டார். தலித் மக்கள் வழிபடுகிற கவிஞர் ரவிதாஸ் கோயில் இடிக்கப்பட்டது.
70களிலும் 80களிலும், உரிமைகளுக்காகப் போராடிய மக்களின் தலைவர்களை படுகொலை செய்தபோதும், ஆளும் வர்க்கங்கள் அந்தப் போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை. தோழர் புத்ராம் பாஸ்வானை படுகொலை செய்தவர்களும் இதுபோன்ற படுகொலைகள் மூலம் தங்கள் இலக்கை ஒரு போதும் எட்ட முடியாது.
மார்ச் 24 அன்று நடந்த தோழர் புத்ராம் பாஸ்வான் இறுதி ஊர்வலத்தில் இகக மாலெ தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான வறிய, ஒடுக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
ரன்வீர் சேனா மீதான படுகொலை வழக்குகளில் நிலப்பிரபுத்துவ அச்சுறுத்தலை மீறி சாட்சி சொல்ல சாட்சிகள் துணிச்சலாக சாட்சி சொல்வதில் அவர்களுக்கு பெரிதும் பக்க பலமாக இருந்தவர் தோழர் புத்ராம் பாஸ்வான். மார்ச் 23 அன்று, ரன்வீர் சேனா ஆதரவாளர்கள் வானத்தை நோக்கிச் சுட்டு புத்ராம் படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடினார்கள். புத்ராம் படுகொலை ஓர் அரசியல் படுகொலை என்பதை இந்தக் கொண்டாட்டங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அர்ரா தொகுதியில் இகக மாலெ ஒரு வலுவான போட்டியாளராக உள்ளது. தேர்தல் நேரத்தில் இகக மாலெ ஆதரவாளர்களை அச்சுறுத்தும் நோக்கம் இந்தப் படுகொலைக்குப் பின் உள்ளது.
நிதிஷ் குமாரின் நல்லாட்சிக்குப் பிறகு பீகாரில் நிலப்பிரபுத்துவ வன்முறை கடந்த காலத்ததாகிவிட்டது என்று நிதிஷ் குமார் ஆதரவு கருத்தியலாளர்கள் சொல்லப் பார்க்கிறார்கள். 80களில், தலித் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதைத் தடுக்க முயன்ற நிலப்பிரபுத்துவ சக்திகள், இகக மாலெ பதாகையிலான ஒடுக்கப்பட்ட நிலமற்ற வறிய மக்களின் வெற்றிகரமான போராட்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தப் போராட்டங்களில் மக்கள் தங்கள் வாக்குரிமையை வென்றெடுத்தனர்.
80களின் இறுதிப் பகுதியிலும் 90களின் துவக்க வருடங்களிலும் போஜ்பூரில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் இகக மாலெ வெற்றி பெற்றபோது, அதே சக்திகள் ரன்வீர் சேனாவை உருவாக்கின. வறிய மக்களின் சமூக அரசியல் அறுதியிடலை தடுக்க, அவர்களை அச்சுறுத்த பல படுகொலைகளை நடத்தின. இப்போது, தலைவர்களை, ஊழியர்களை படுகொலை செய்வது என்ற போர்த்தந்திரத்தை கையாளுகின்றன. 2012ல் இககமாலெ ரோதாஸ் மாவட்டச் செயலாளர் தோழர் பய்யா ராம் யாதவ் படுகொலை செய்யப்பட்டார். 2014ல் புத்ராம் பாஸ்வான் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 2013 சுதந்திர தினத்தன்று பட்டி பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள், நிலப் பிரபுத்துவ வன்முறைக்கு உள்ளாயினர். ஒருவர் கொல்லப்பட்டார். தலித் மக்கள் வழிபடுகிற கவிஞர் ரவிதாஸ் கோயில் இடிக்கப்பட்டது.
70களிலும் 80களிலும், உரிமைகளுக்காகப் போராடிய மக்களின் தலைவர்களை படுகொலை செய்தபோதும், ஆளும் வர்க்கங்கள் அந்தப் போராட்டங்களை ஒடுக்க முடியவில்லை. தோழர் புத்ராம் பாஸ்வானை படுகொலை செய்தவர்களும் இதுபோன்ற படுகொலைகள் மூலம் தங்கள் இலக்கை ஒரு போதும் எட்ட முடியாது.
மார்ச் 24 அன்று நடந்த தோழர் புத்ராம் பாஸ்வான் இறுதி ஊர்வலத்தில் இகக மாலெ தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான வறிய, ஒடுக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.