மோடி ஆட்சியின் கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிராக திறன்மிக்க எதிர்ப்பை கட்டமைக்க கட்சியை விரிவாக்குவோம்! வலுப்படுத்துவோம்!
ஜூலை 28, 2014, கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் சாரு மஜூம்தார் தியாகியான 42ஆவது ஆண்டு தினத்தை குறிக்கிறது. 1970களின் துவக்கத்தில் கட்சி சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு, கட்சி புனரமைப்பு செய்யப்பட்டதன் 40ஆவது ஆண்டு தினத்தையும் அது குறிக்கிறது. இந்தியாவில் பாஜக பெரும்பான்மை கொண்ட முதல் ஆட்சி, மத்தியில் அமைந்திருப்பதை நாம் எதிர்கொள்ளும்போது, அதன் முதல் இரண்டு மாத கால ஆட்சியிலேயே, அதன் அனைத்தும் தழுவிய கார்ப்பரேட் நட்பு நிகழ்ச்சிநிரல் மற்றும் எதேச்சதிகார, மதவெறி இயல்பின் நிச்சயமான வெளிப்பாடுகளை நமக்குக் காட்டியிருக்கும்போது, தோழர் சாரு மஜூம்தாரின் இறுதி வார்த்தைகளும் 1970களிலும் 1980களின் துவக்கத்திலும் இந்திரா எதேச்சதிகாரத்துக்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் கற்ற பாடங்களும் நமக்கு நினைவுக்கு வருகின்றன.
வங்கி தேசியமயமாக்கம் மற்றும் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம் ஆகியவற்றின் மீதேறி, 1971ல் காங்கிரசின் பழைய தலைவர்களை தோற்கடித்து இந்திரா காந்தி தெளிவான தேர்தல் வெற்றி பெற்றார். அதன் பிறகு, வங்கதேசப் போரில் பாகிஸ்தானை வெற்றி கொண்டு, தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதில், ஆர்எஸ்எஸ் திகைப்புற்றுப் போனது; வாஜ்பாய், கொடியவர்களை அழிக்கும் கடவுளான துர்கையுடன் இந்திரா காந்தியை ஒப்பிட்டார். ‘வறுமையை ஒழிப்பதற்கான’ அந்த வெற்றியும் தேசியவாத ஈர்ப்பும் மிகவிரைவாகவே, இகக (மாலெ) மீதான மிருகத்தனமான துணை ராணுவ ஒடுக்குமுறையாக மாறியதை, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம், நெருக்கடி நிலையின் இருளால் சூழப்பட்டதை வரலாறு நமக்குச் சொல்கிறது.
தோழர் சாரு மஜூம்தார் இந்த ஆபத்தை மிகத் தெளிவாக அறிந்திருந்தார்; அவர் தியாகியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மக்கள் நலனே கட்சியின் நலன் என்று அறுதியிட்டுச் சொல்லி, மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பரந்த அடிப்படையிலான ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். 1974, ஜூலை 28 அன்று கட்சியின் மத்திய கமிட்டி புனரமைப்பு செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து கட்சி மீட்டெடுக்கப்பட்டதும், விவசாயிகளின் எழுச்சி அலைகள் மூலமும் அனைத்தும் தழுவிய வெகுமக்கள் முன்முயற்சிகள் மூலமும் அடிப்படை சமூக மாற்றம் மற்றும் விடாப்பிடியான ஜனநாயகம் என்ற நிகழ்ச்சிநிரலின் துணிச்சலான அறுதியிடல் மூலமும், தோழர் சாருமஜ÷ம்தாரின் சக்திவாய்ந்த இறுதி வார்த்தைகளை உயர்த்திப் பிடித்தன.
புதுப்பிக்கப்பட்ட இகக (மாலெ), மக்களின் நலன்கள் மற்றும் போராட்டங்களுக்கு அர்ப்பணித்துக் கொள்கிற, கடப்பாடுடனான கம்யூனிஸ்ட் கட்சியை படிப்படியாக கட்டியெழுப்பி, ஆளும் வர்க்கங்களின் எதேச்சதிகார தாக்குதல்களை, வெற்றிகரமாக எதிர்கொண்டது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழல் போலவும், அதுபோல் அல்லாமலும், இன்றைய சூழல் நிலவுகிறது. இந்திரா காந்தி இடதுசாரி பொய்த் தோற்றங்களையும் சோசலிச வாய்வீச்சுக்களையும் கொண்டிருந்தார். நரேந்திர மோடி தனது வலதுசாரி அரசியல் மற்றும் நெருக்கமான கார்ப்பரேட் பிணைப்புக்களை பெருமிதத்துடன் முன்வைக்கிறார். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் இகக (மாலெ)யின் இரங்கல் செய்தியை எழுதுவதில் மும்முரம் காட்டியது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்கிற மோடியின் லட்சியம், பாஜகவின் தனிப்பட்ட தலைமையில் வலதுசாரி மேலாதிக்கத்தை நிறுவ, வலுப்படுத்த முனைகிறது; ஒட்டுமொத்த இடதுசாரி சக்திகளும் துடைத்தெறியப்பட்ட இந்தியாவை அவர் காண விரும்புகிறார்; அந்தப் போக்கில், பல்வேறு இடதுசாரி அல்லாத தாராளவாத சமூக, கலாச்சார விவாதப்போக்கையும் ஓரங்கட்டிவிட விரும்புகிறார்.
இந்திரா காந்தி, நெருக்கமான நபர்கள் கொண்ட குழுவின் ஆதரவுடன், இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்ய விரும்பியது போலவே, மோடி, அவருடைய பக்தர்களின் வெட்கக்கேடான பொய்புகழ்ச்சி மற்றும் அவரது சக அமைச்சர்களின் கூட்டு ஆகியவை கொண்ட மிகப்பெரிய தலைவராக ஆட்சி செய்ய விரும்புகிறார். இரண்டு தலைவர்களுமே, தேசியவாத பொய்யுரையை தங்கள் வாய்வீச்சின் மய்யமாகக் கொண்டிருந்தனர்; ‘தேச ஒற்றுமை மற்றும் ஓர்மை’ இந்திராவின் அழுத்தமாக இருந்தது; அது மதச்சார்பின்மை என்று அதிகாரப் பூர்வமாகச் சொல்லப்பட்டது; மோடியின் தேசியவாதம், வெளிப்படையாகவே பெரும்பான்மைவாதத் தன்மை கொண்டது; ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் சுதந்திரங்களை ஒடுக்கும் ஒரு வலிமையான அரசு, எதிர்ப்புக் குரல் அனைத்தையும் நசுக்கிவிடும், கார்ப்பரேட் வழிநடத்தும், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள், மக்கள் வாழ்வுரிமை அழிக்கப்படுவதை புனிதப்படுத்தும் வளர்ச்சி வாதம் என்பவற்றில் அழுத்தம் கொண்டது.
அதிகரித்து வரும் இந்த வலதுசாரி தாக்குதல் மற்றும் கார்ப்பரேட் - மதவெறி தாக்குதலுக்கு எதிராக எழுவது இன்று நமது பணி. இடதுசாரிகள் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகச் சொல்லும் வெற்றிவாத வலதுசாரி கூக்குரலுக்கு எதிராக நாம் மீண்டும் பாய்ந்து முன்னேற வேண்டியுள்ளது. இந்த சவாலை நாம் கையில் எடுக்கும்போது, நாம் மக்கள் மத்தியில் ஆழமாகச் செல்ல வேண்டும்; அவர்களுடைய அன்றாடப் பிரச்சனைகளில் அவர்களை அமைப்பாக்கி அணிதிரட்ட வேண்டும். ஆட்சியைப் பிடிக்க, தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பயன்படுத்திய மக்கள் விருப்பங்களை, வேகமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பாஜகவின் கார்ப்பரேட் - மதவெறி நிகழ்ச்சிநிரல் மற்றும் விலைஉயர்வு, மக்கள் நல்வாழ்வு மேலும் மேலும் கேலிக்குள்ளாக்கப்படுவது என்ற கடினமான யதார்த்தம் ஆகியவற்றுக்கு எதிராக நிறுத்த வேண்டும். ‘நல்ல காலங்கள்’ பற்றிய வாய்வீச்சு, ‘கசப்பு மருந்து’ என்ற யதார்த்தமாக மாறும்போது, மக்கள் எதிர்த்துப் போராடுவார்கள்; இகக (மாலெ) மக்கள் போராட்டங்களின் முன்னணியில் இருந்து தனது பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும்.
மோடி அரசாங்கம் அதன் எதேச்சதிகார ஆட்சி முறையை கட்டவிழ்த்துவிட்டு, அதன் கார்ப்பரேட் - மதவெறி நிகழ்ச்சிநிரலை திணிக்க முற்படும்போது, நம்மைச் சுற்றிலும், ஏமாற்றம் மற்றும் அதிருப்தி குரல்களை நாம் கேட்க முடிகிறது. விலை உயர்வு பற்றி புகார் செய்யும் சாமான்ய மனிதன் முதல், நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்தை குற்றம் சாட்டும் இந்திய தலைமை நீதிபதி வரை எங்கும் எதிர்ப்புக் குரல்களை கேட்க முடிகிறது. பல்வேறு போராடும் சக்திகளைச் சென்றடைய, சாத்தியப்படும் அளவுக்கான பரந்த போராட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்ப இது சரியான நேரம்.
இன்று, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாகிவிட்டது; மக்கள் உரிமைகளை, வாழ்வாதாரத்தை நாட்டின் பன்மைவாத இழையை, பல்வேறு நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது என்ற பிரச்சனையில், எதிர்க்கட்சிகளின் பல பிரிவினரும் நம்பகத்தன்மை இழந்துவிட்டனர். நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சியின் பாத்திரம், மோடி அரசாங்கத்தால் ஏற்படுகிற சவால்களுக்கு பல்வேறு நிறுவனங்களும் ஆற்றுகிற பதில்வினை ஆகியவற்றுக்கு அப்பால், துணிச்சலாக, வீதிகளில் எதிர்ப்புக் குரல்களை எழுப்ப வேண்டும். பல்வேறு முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் விரிவான ஊடாடல், பல்விதமான மக்கள் போராட்டங்களுடன் திறன்மிக்க ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவையே இப்போது காலத்தின் தேவை.
நிச்சயமாக, முன்னெப்போதும் இருந்ததை விட இப்போது இன்னும் வலுவான கட்சி அமைப்பு நமக்கு தேவை. 1974 ஜூலையில் மத்திய கமிட்டி புனரமைக்கப்பட்டபோது, மேலிருந்து கட்சியை புனரமைப்பது என்று நாம் துவங்க வேண்டியிருந்தது; அன்று நம்மிடம் கிட்டத்தட்ட எதுவும் இல்லை. இன்று, ஒன்பது காங்கிரசுகளுக்குப் பிறகு, ஒரு லட்சத்துக்கும் மேல் உறுப்பினர்கள், 20 மாநிலங்களில், 100 மாவட்டங்களில் கட்சி அமைப்பு என, நாம் ஒரு கூடுதல் வலுவான அமைப்பை கொண்டுள்ளோம். ஆனால், வேர்க்கால் மட்டத்தில் இன்னும் திறன்மிக்க கட்சி அமைப்பு தேவை என்பதை சமீபத்திய தேர்தல்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன. நாம் கிட்டத்தட்ட 30 லட்சம் வெகுமக்கள் உறுப்பினர்கள் கொண்டுள்ளோம்; ஆனால் நமது வாக்குகள் 10 லட்சத்தை மட்டுமே தாண்டியுள்ளன; நமது உறுப்பினர்களை, ஆதரவாளர்களை அரசியல் ரீதியாக, தேர்தல்ரீதியாக அணிதிரட்டுவதில் உள்ள நமது பலவீனத்தை இது காட்டுகிறது.
அனைத்துக்கும் பிறகு, தேர்தல் போராட்டங்களின் மய்ய தலங்கள் வாக்குச் சாவடிகளே. மேலோங்கிய ஆளும் வர்க்கக் கட்சிகளின் பணபலம், ஆள் பலம், ஊடக பலம் மற்றும் சமூக இயக்க சமன்பாடுகள், வாக்காளர்களை வாக்குச் சாவடி மட்டத்தில் அணிதிரட்டுவது என்பதன் மூலம் செயலாற்றுகின்றன. தேர்தல் தளம், சமமான ஆடுகளம் அல்ல எனும்போது, தேர்தல் போராட்டங்களில் அதிகார சமன்பாடு, வறிய மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே சாய்ந்துள்ளபோது, வேர்க்கால் மட்டத்தில் தீவிரமான எதிர் அணிதிரட்டலுடன், ஆளும் வர்க்கங்களின் அரசியலுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் திறன்மிக்க வேர்க்கால் மட்ட எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டியது கூடுதல் அவசியமாகிறது.
நமது கட்சி உருவெடுத்து வந்த காலங்களில், நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் மற்றும் அரசு பயங்கரத்துக்கு எதிரான போராட்டங்களில் பெரிய வெற்றிகள் பெற்ற வேர்க்கால் மட்ட அமைப்புதான், தேர்தல் அரங்கிலும் நமது பிரதானமான ஆயுதம் ஆகும். காங்கிரஸ் மற்றும் பல்வேறு அடையாள அடிப்படையிலான கட்சிகள் போலல்லாது, பாஜக ஓர் ஊழியர் அடிப்படை கொண்ட கட்சி; வேர்க்கால் மட்டத்தில் அமைப்பு, பிரச்சாரம் மற்றும் போதனை ஆகியவற்றுக்கு அது காத்திரமான கவனம் செலுத்துகிறது. எனவே, பாஜகவுக்கு எதிரான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு, வேர்க்கால் மட்டத்தில் அமைப்புரீதியான, கருத்தியல் - அரசியல்ரீதியான அணிதிரட்டல் என்ற தளத்தில் மிகவும் தீர்மானகரமாக கட்டமைக்கப்பட வேண்டும்.
கட்சி புனரமைக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு தினத்தில், வெகுமக்கள் பலம், அரசியல் அணிதிரட்டல், அமைப்பு செயல்பாடு என்ற பொருளில், நமது வேர்க்கால் மட்ட அமைப்பை, இன்னும் கூடுதல் உயரத்துக்கு எடுத்துச் செல்ல நாம் உறுதியேற்போம். உழைக்கும் மக்களின் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் அமைப்பு, மக்கள் போராட்டத்தின் ஒவ்வோர் அரங்கிலும் பரந்த ஜனநாயக சக்திகளுடன் ஒத்திசைவாக செயல்பட்டு, கார்ப்பரேட் - மதவெறி அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி பெற வேண்டும்.
ஜூலை 28, 2014, கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் சாரு மஜூம்தார் தியாகியான 42ஆவது ஆண்டு தினத்தை குறிக்கிறது. 1970களின் துவக்கத்தில் கட்சி சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு, கட்சி புனரமைப்பு செய்யப்பட்டதன் 40ஆவது ஆண்டு தினத்தையும் அது குறிக்கிறது. இந்தியாவில் பாஜக பெரும்பான்மை கொண்ட முதல் ஆட்சி, மத்தியில் அமைந்திருப்பதை நாம் எதிர்கொள்ளும்போது, அதன் முதல் இரண்டு மாத கால ஆட்சியிலேயே, அதன் அனைத்தும் தழுவிய கார்ப்பரேட் நட்பு நிகழ்ச்சிநிரல் மற்றும் எதேச்சதிகார, மதவெறி இயல்பின் நிச்சயமான வெளிப்பாடுகளை நமக்குக் காட்டியிருக்கும்போது, தோழர் சாரு மஜூம்தாரின் இறுதி வார்த்தைகளும் 1970களிலும் 1980களின் துவக்கத்திலும் இந்திரா எதேச்சதிகாரத்துக்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் கற்ற பாடங்களும் நமக்கு நினைவுக்கு வருகின்றன.
வங்கி தேசியமயமாக்கம் மற்றும் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம் ஆகியவற்றின் மீதேறி, 1971ல் காங்கிரசின் பழைய தலைவர்களை தோற்கடித்து இந்திரா காந்தி தெளிவான தேர்தல் வெற்றி பெற்றார். அதன் பிறகு, வங்கதேசப் போரில் பாகிஸ்தானை வெற்றி கொண்டு, தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதில், ஆர்எஸ்எஸ் திகைப்புற்றுப் போனது; வாஜ்பாய், கொடியவர்களை அழிக்கும் கடவுளான துர்கையுடன் இந்திரா காந்தியை ஒப்பிட்டார். ‘வறுமையை ஒழிப்பதற்கான’ அந்த வெற்றியும் தேசியவாத ஈர்ப்பும் மிகவிரைவாகவே, இகக (மாலெ) மீதான மிருகத்தனமான துணை ராணுவ ஒடுக்குமுறையாக மாறியதை, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம், நெருக்கடி நிலையின் இருளால் சூழப்பட்டதை வரலாறு நமக்குச் சொல்கிறது.
தோழர் சாரு மஜூம்தார் இந்த ஆபத்தை மிகத் தெளிவாக அறிந்திருந்தார்; அவர் தியாகியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மக்கள் நலனே கட்சியின் நலன் என்று அறுதியிட்டுச் சொல்லி, மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பரந்த அடிப்படையிலான ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். 1974, ஜூலை 28 அன்று கட்சியின் மத்திய கமிட்டி புனரமைப்பு செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து கட்சி மீட்டெடுக்கப்பட்டதும், விவசாயிகளின் எழுச்சி அலைகள் மூலமும் அனைத்தும் தழுவிய வெகுமக்கள் முன்முயற்சிகள் மூலமும் அடிப்படை சமூக மாற்றம் மற்றும் விடாப்பிடியான ஜனநாயகம் என்ற நிகழ்ச்சிநிரலின் துணிச்சலான அறுதியிடல் மூலமும், தோழர் சாருமஜ÷ம்தாரின் சக்திவாய்ந்த இறுதி வார்த்தைகளை உயர்த்திப் பிடித்தன.
புதுப்பிக்கப்பட்ட இகக (மாலெ), மக்களின் நலன்கள் மற்றும் போராட்டங்களுக்கு அர்ப்பணித்துக் கொள்கிற, கடப்பாடுடனான கம்யூனிஸ்ட் கட்சியை படிப்படியாக கட்டியெழுப்பி, ஆளும் வர்க்கங்களின் எதேச்சதிகார தாக்குதல்களை, வெற்றிகரமாக எதிர்கொண்டது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழல் போலவும், அதுபோல் அல்லாமலும், இன்றைய சூழல் நிலவுகிறது. இந்திரா காந்தி இடதுசாரி பொய்த் தோற்றங்களையும் சோசலிச வாய்வீச்சுக்களையும் கொண்டிருந்தார். நரேந்திர மோடி தனது வலதுசாரி அரசியல் மற்றும் நெருக்கமான கார்ப்பரேட் பிணைப்புக்களை பெருமிதத்துடன் முன்வைக்கிறார். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் இகக (மாலெ)யின் இரங்கல் செய்தியை எழுதுவதில் மும்முரம் காட்டியது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்கிற மோடியின் லட்சியம், பாஜகவின் தனிப்பட்ட தலைமையில் வலதுசாரி மேலாதிக்கத்தை நிறுவ, வலுப்படுத்த முனைகிறது; ஒட்டுமொத்த இடதுசாரி சக்திகளும் துடைத்தெறியப்பட்ட இந்தியாவை அவர் காண விரும்புகிறார்; அந்தப் போக்கில், பல்வேறு இடதுசாரி அல்லாத தாராளவாத சமூக, கலாச்சார விவாதப்போக்கையும் ஓரங்கட்டிவிட விரும்புகிறார்.
இந்திரா காந்தி, நெருக்கமான நபர்கள் கொண்ட குழுவின் ஆதரவுடன், இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்ய விரும்பியது போலவே, மோடி, அவருடைய பக்தர்களின் வெட்கக்கேடான பொய்புகழ்ச்சி மற்றும் அவரது சக அமைச்சர்களின் கூட்டு ஆகியவை கொண்ட மிகப்பெரிய தலைவராக ஆட்சி செய்ய விரும்புகிறார். இரண்டு தலைவர்களுமே, தேசியவாத பொய்யுரையை தங்கள் வாய்வீச்சின் மய்யமாகக் கொண்டிருந்தனர்; ‘தேச ஒற்றுமை மற்றும் ஓர்மை’ இந்திராவின் அழுத்தமாக இருந்தது; அது மதச்சார்பின்மை என்று அதிகாரப் பூர்வமாகச் சொல்லப்பட்டது; மோடியின் தேசியவாதம், வெளிப்படையாகவே பெரும்பான்மைவாதத் தன்மை கொண்டது; ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் சுதந்திரங்களை ஒடுக்கும் ஒரு வலிமையான அரசு, எதிர்ப்புக் குரல் அனைத்தையும் நசுக்கிவிடும், கார்ப்பரேட் வழிநடத்தும், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள், மக்கள் வாழ்வுரிமை அழிக்கப்படுவதை புனிதப்படுத்தும் வளர்ச்சி வாதம் என்பவற்றில் அழுத்தம் கொண்டது.
அதிகரித்து வரும் இந்த வலதுசாரி தாக்குதல் மற்றும் கார்ப்பரேட் - மதவெறி தாக்குதலுக்கு எதிராக எழுவது இன்று நமது பணி. இடதுசாரிகள் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகச் சொல்லும் வெற்றிவாத வலதுசாரி கூக்குரலுக்கு எதிராக நாம் மீண்டும் பாய்ந்து முன்னேற வேண்டியுள்ளது. இந்த சவாலை நாம் கையில் எடுக்கும்போது, நாம் மக்கள் மத்தியில் ஆழமாகச் செல்ல வேண்டும்; அவர்களுடைய அன்றாடப் பிரச்சனைகளில் அவர்களை அமைப்பாக்கி அணிதிரட்ட வேண்டும். ஆட்சியைப் பிடிக்க, தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பயன்படுத்திய மக்கள் விருப்பங்களை, வேகமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பாஜகவின் கார்ப்பரேட் - மதவெறி நிகழ்ச்சிநிரல் மற்றும் விலைஉயர்வு, மக்கள் நல்வாழ்வு மேலும் மேலும் கேலிக்குள்ளாக்கப்படுவது என்ற கடினமான யதார்த்தம் ஆகியவற்றுக்கு எதிராக நிறுத்த வேண்டும். ‘நல்ல காலங்கள்’ பற்றிய வாய்வீச்சு, ‘கசப்பு மருந்து’ என்ற யதார்த்தமாக மாறும்போது, மக்கள் எதிர்த்துப் போராடுவார்கள்; இகக (மாலெ) மக்கள் போராட்டங்களின் முன்னணியில் இருந்து தனது பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும்.
மோடி அரசாங்கம் அதன் எதேச்சதிகார ஆட்சி முறையை கட்டவிழ்த்துவிட்டு, அதன் கார்ப்பரேட் - மதவெறி நிகழ்ச்சிநிரலை திணிக்க முற்படும்போது, நம்மைச் சுற்றிலும், ஏமாற்றம் மற்றும் அதிருப்தி குரல்களை நாம் கேட்க முடிகிறது. விலை உயர்வு பற்றி புகார் செய்யும் சாமான்ய மனிதன் முதல், நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்தை குற்றம் சாட்டும் இந்திய தலைமை நீதிபதி வரை எங்கும் எதிர்ப்புக் குரல்களை கேட்க முடிகிறது. பல்வேறு போராடும் சக்திகளைச் சென்றடைய, சாத்தியப்படும் அளவுக்கான பரந்த போராட்ட ஒற்றுமையைக் கட்டியெழுப்ப இது சரியான நேரம்.
இன்று, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாகிவிட்டது; மக்கள் உரிமைகளை, வாழ்வாதாரத்தை நாட்டின் பன்மைவாத இழையை, பல்வேறு நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது என்ற பிரச்சனையில், எதிர்க்கட்சிகளின் பல பிரிவினரும் நம்பகத்தன்மை இழந்துவிட்டனர். நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சியின் பாத்திரம், மோடி அரசாங்கத்தால் ஏற்படுகிற சவால்களுக்கு பல்வேறு நிறுவனங்களும் ஆற்றுகிற பதில்வினை ஆகியவற்றுக்கு அப்பால், துணிச்சலாக, வீதிகளில் எதிர்ப்புக் குரல்களை எழுப்ப வேண்டும். பல்வேறு முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் விரிவான ஊடாடல், பல்விதமான மக்கள் போராட்டங்களுடன் திறன்மிக்க ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவையே இப்போது காலத்தின் தேவை.
நிச்சயமாக, முன்னெப்போதும் இருந்ததை விட இப்போது இன்னும் வலுவான கட்சி அமைப்பு நமக்கு தேவை. 1974 ஜூலையில் மத்திய கமிட்டி புனரமைக்கப்பட்டபோது, மேலிருந்து கட்சியை புனரமைப்பது என்று நாம் துவங்க வேண்டியிருந்தது; அன்று நம்மிடம் கிட்டத்தட்ட எதுவும் இல்லை. இன்று, ஒன்பது காங்கிரசுகளுக்குப் பிறகு, ஒரு லட்சத்துக்கும் மேல் உறுப்பினர்கள், 20 மாநிலங்களில், 100 மாவட்டங்களில் கட்சி அமைப்பு என, நாம் ஒரு கூடுதல் வலுவான அமைப்பை கொண்டுள்ளோம். ஆனால், வேர்க்கால் மட்டத்தில் இன்னும் திறன்மிக்க கட்சி அமைப்பு தேவை என்பதை சமீபத்திய தேர்தல்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன. நாம் கிட்டத்தட்ட 30 லட்சம் வெகுமக்கள் உறுப்பினர்கள் கொண்டுள்ளோம்; ஆனால் நமது வாக்குகள் 10 லட்சத்தை மட்டுமே தாண்டியுள்ளன; நமது உறுப்பினர்களை, ஆதரவாளர்களை அரசியல் ரீதியாக, தேர்தல்ரீதியாக அணிதிரட்டுவதில் உள்ள நமது பலவீனத்தை இது காட்டுகிறது.
அனைத்துக்கும் பிறகு, தேர்தல் போராட்டங்களின் மய்ய தலங்கள் வாக்குச் சாவடிகளே. மேலோங்கிய ஆளும் வர்க்கக் கட்சிகளின் பணபலம், ஆள் பலம், ஊடக பலம் மற்றும் சமூக இயக்க சமன்பாடுகள், வாக்காளர்களை வாக்குச் சாவடி மட்டத்தில் அணிதிரட்டுவது என்பதன் மூலம் செயலாற்றுகின்றன. தேர்தல் தளம், சமமான ஆடுகளம் அல்ல எனும்போது, தேர்தல் போராட்டங்களில் அதிகார சமன்பாடு, வறிய மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே சாய்ந்துள்ளபோது, வேர்க்கால் மட்டத்தில் தீவிரமான எதிர் அணிதிரட்டலுடன், ஆளும் வர்க்கங்களின் அரசியலுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் திறன்மிக்க வேர்க்கால் மட்ட எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டியது கூடுதல் அவசியமாகிறது.
நமது கட்சி உருவெடுத்து வந்த காலங்களில், நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் மற்றும் அரசு பயங்கரத்துக்கு எதிரான போராட்டங்களில் பெரிய வெற்றிகள் பெற்ற வேர்க்கால் மட்ட அமைப்புதான், தேர்தல் அரங்கிலும் நமது பிரதானமான ஆயுதம் ஆகும். காங்கிரஸ் மற்றும் பல்வேறு அடையாள அடிப்படையிலான கட்சிகள் போலல்லாது, பாஜக ஓர் ஊழியர் அடிப்படை கொண்ட கட்சி; வேர்க்கால் மட்டத்தில் அமைப்பு, பிரச்சாரம் மற்றும் போதனை ஆகியவற்றுக்கு அது காத்திரமான கவனம் செலுத்துகிறது. எனவே, பாஜகவுக்கு எதிரான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு, வேர்க்கால் மட்டத்தில் அமைப்புரீதியான, கருத்தியல் - அரசியல்ரீதியான அணிதிரட்டல் என்ற தளத்தில் மிகவும் தீர்மானகரமாக கட்டமைக்கப்பட வேண்டும்.
கட்சி புனரமைக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு தினத்தில், வெகுமக்கள் பலம், அரசியல் அணிதிரட்டல், அமைப்பு செயல்பாடு என்ற பொருளில், நமது வேர்க்கால் மட்ட அமைப்பை, இன்னும் கூடுதல் உயரத்துக்கு எடுத்துச் செல்ல நாம் உறுதியேற்போம். உழைக்கும் மக்களின் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் அமைப்பு, மக்கள் போராட்டத்தின் ஒவ்வோர் அரங்கிலும் பரந்த ஜனநாயக சக்திகளுடன் ஒத்திசைவாக செயல்பட்டு, கார்ப்பரேட் - மதவெறி அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி பெற வேண்டும்.