சட்டமன்ற மேசைகள் தட்டப்படும்
நாட்களின் ஊடே தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது. 110, கூச்சல்,
வெளியேற்றம், வெளிநடப்பு எல்லாம் முன்னர் நடந்தபடியே நடக்கின்றன.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில்லாத பொறியியல் பட்டதாரிகள், பட்டயம் பெற்ற இளைஞர்கள் என 18 முதல் 25 வயதுள்ள 25,000 இளைஞர்களுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய 6 மாத கால பயிற்சி அளிக்கப்படும், இதில் பெண்களுக்கு 30% இடம் ஒதுக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். திட்டத்தின் பெயர் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம்’. அஇஅதிமுககாரர்கள் மேசை தட்டினார்கள்.
இதில் மேசை தட்ட என்ன இருக்கிறது? தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் உயர்படிப்பு படித்தவர் உள்ளிட்ட 25,000 பேருக்கு பயிற்சி, சான்றிதழ், வேலை வாய்ப்பு என்ற திட்டத்தில் பெருமிதத்துக்கு என்ன இருக்கிறது? சமீபத்தில் நடந்த குரூப் 1 தேர்வில் 79 காலியிடங்களுக்கு 70,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். நடப்பாண்டில் 25,000 பேருக்கு பயிற்சி, பின் வேலை வாய்ப்பு என்றால், 31.03.2014 நிலவரப் படி, தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பகங்களின் பதிவேட்டில் காத்திருப்போர் பட்டியலிலுள்ள 84 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பில் லாத தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கதவுகள் எதுவும் இப்போது திறக்கவில்லை.
இந்தப் பயிற்சி தனியார் நிறுவனங்களால் அளிக்கப்படவுள்ளது. அதாவது, தனியார் நிறுவனங்களில் இந்த 25,000 இளைஞர்கள் 6 மாத காலம் பயிற்சியாளர்களாக இருப்பார்கள். இந்த 6 மாத காலத்துக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும். பயிற்சி தரும் தனியார் நிறுவனத்துக்கு அரசு ஒரு பயிற்சியாளருக்கு ரூ.12,000 தரும். தனியார் நிறுவனங்கள் குறைந்த கூலியில் தனது உற்பத்தியை நடத்திக் கொள்ள தொழிலாளர்களைக் கொடுத்து, அவர்களுக்கான கூலியில் ஒரு பங்கையும் அரசு தரும். கரும்பு தின்ன கூலி.
பயிற்சி முடிந்த பிறகு தொழில் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் என்று சொல்கிற அறிவிப்பு, அவர்கள் ஊதியத் தையும் நிர்ணயித்துவிடுகிறது. ரூ.5,000 அல்லது அந்த குறிப்பிட்ட தொழிலில் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றில் எது அதிகமோ அதுவே அவர்கள் பெறவிருக்கும் ஊதியம்.
இந்த வேலை வாய்ப்பு தவிர, திண்டுக்கல், கரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாக 3 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு அங்கு அமையவுள்ள 345 தொழில் நிறுவனங்களில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு என்று அந்த அறிவிப்பில் சொல்லப்படுகிறது. (10,000 பேருக்கு வேலை வாய்ப்பு என்ற பெயரில், தொழில் துவங்குபவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் சலுகைகள் வழங்கப்படும் என்பது அறிவிப்பில் சொல்லப்படவில்லை).
அடுத்த 11 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு பயிற்சி அளித்து அவர்களை திறன் பெற்றவர்களாக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் உயிர் மூச்சான தொலைநோக்குத் திட்டம் 2023 சொல்கிறது. ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு பயிற்சி என்றால்தான் அந்த இலக்கை எட்ட முடியும். இப்போது அவர் அறிவித்துள்ள அம்மா திறன் திட்டம் எந்த விதத்திலும் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு பயிற்சி என்பதற்கு அருகில் வரவில்லை. இது ஜெயலலிதாவின் உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களுக்குள்ளேயே இருக்கிற ஒவ்வாமை.
20 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு பயிற்சி என்றால், ஆண்டுக்கு 20 லட்சம் வேலை வாய்ப் புக்களும் உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால், வேலை வாய்ப்புக்காக ஏற்கனவே காத்திருக்கிற 84 லட்சம் பேருடன் ஆண்டுக்கு இன்னும் 20 லட்சம் பேர் சேர்வார்கள். ஆண்டுக்கு 25,000 மற்றும் 10,000 வேலை வாய்ப்புக் கள் உருவாக்கப்படுவதையே சாதனை என்று சொல்லும் தமிழக அரசு, உலகமயச் சூழலில் ஆண்டுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குவது சாத்தியமா?
2013 - 2014ல் உருவாக்கப் பட்ட வேலை வாய்ப்புக்கள் 17,978. தற்போது மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையே 18,81,500 என்று தமிழக அரசு தரும் விவரம் சொல்லும்போது, ஆண்டுக்கு 20 லட்சம் பயிற்சியாளர்கள் உருவாக்குவது என்ற அறிவிப்பே, கேலிக்குரியது.
வருடாந்திர தொழில் கணக்கெடுப்பின் 2011 - 2012 விவரங்கள்படி தமிழ்நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை 19,40,819. 2014ல் தமிழக அரசு தரும் விவரங்கள்படி தமிழ்நாட்டில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இன்றைய நிலைமை இது என்றால் நாளை, 20 லட்சம் எங்கிருந்து வரும்? அவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது பற்றி 2023 தொலைநோக்குத் திட்டம் எதுவும் சொல்லவில்லை.இந்த அறிவிப்புகள் வெறும் கண்கட்டு வித்தைகள்.
அம்மா திறன் மற்றும் வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே, 25,000 பேருக்கு வேலை நிலைமைகள் எப்படி இருக்கும் என்பதை திட்ட அறிவிப்பு சொல்லும் ஊதியத்தில் இருந்து புரிந்துகொள்ளலாம். இதற்கும் தமிழ்நாட்டி லேயே முன்னுதாரணமும் இருக்கிறது.
2012 நவம்பரில் அறிவிக்கப்பட்டு, 2014 பிப்ரவரியில், காவல்துறையினருக்கு உதவ, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 10,500 பேர் தேர்வுகள் கடந்து மார்ச் மாதம் பணிக்கமர்த்தப்பட்டார்கள். இவர்கள் காவல்துறையினருக்கு உதவி செய்வார்கள், அவர்களைப் போலவே அக்கம்பக்கமாக அவர்கள் ஈடுபடும் அதே பணிகளில் ஈடுபடுவார்கள் என்றாலும் இந்த 10,500 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. காவல்துறையில் அரசே ஏற்பாடு செய்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று இவர்களை அழைக்க முடியும்.
இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,500 என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு இந்த ஊதியம் குறிப்பிட்ட நாளில் முறையாக வழங்கப்படுவதில்லை. வார விடுமுறையோ, மருத்துவ விடுப்போ இல்லை. காவல் துறையினருக்கு கிடைக்கும் வேறெந்த சலுகையும் இவர்களுக்கு இல்லை. இந்தப் பணியாளர்களில் ஒருவர் இரண்டு நாட்கள் பணிக்கு வராததால் ஊதியத்தில் ரூ.500 பிடித்தம் செய்தார்களாம். (தி இந்து, 23.07.2014).
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, காவல்துறையை வலுப்படுத்துவது என்றெல்லாம் சொல்லி இந்த 10,500 இளைஞர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். காவல்துறை, அரசுப் பணி என்ற கனவுகளோடு பணிக்குச் சேர்ந்த அந்த இளைஞர்களில், சென்னையில் மட்டும் 2,000 பேர் இது வரை வேலையை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் பணி நிலைமைகள் இப்படியே தொடர்ந்தால் மீதமிருப்பவர்களும் இதே முடிவுக்குத் தள்ளப்படலாம். வேலை தரப்பட்டாகிவிட்டது என்று தமிழக அரசு கணக்கு காட்டுகிற அந்த 10,500 பேரில் இன்று 2,000 பேர் வேலையில்லா இளைஞர்கள். தமிழக அரசின் மொழியில் சொல்வதானால் வேலை நாடுநர்கள். இந்த வேலை நாடுநர்கள் கணக்கு மீண்டும் வேலை வாய்ப்பக கணக்குகளில் வருமா என்பது கேள்வி.
இவர்கள் நிலைமைகளை, இப்போது அறிவிக்கப்படுகிற 25,000த்துடனும், 10,000த்துடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், 6 மாத காலத்துக்குப் பிறகு அந்த 25,000 இளைஞர்களுக்கும், 10,000 இளைஞர்களுக்கும் எந்த நேரமும் இருட்டு காத்திருக்கும் என்று சொல்லலாம்.
இந்த விசயத்தில் நல்ல காலம் வந்துவிடும் என்று மோடி போல் ஆருடம் சொல்ல முடியாது. நோக்கியா, திருபெரும்புதூரின் பிற ஆலைகளின் தொழிலாளர்கள் தொடர்பான தமிழ்நாட்டின் அனுபவம் நமக்கு அது போன்ற நம்பிக்கை தருவதாக இல்லை. மாயமானைக் காட்டுவதில் பயனில்லை.


தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில்லாத பொறியியல் பட்டதாரிகள், பட்டயம் பெற்ற இளைஞர்கள் என 18 முதல் 25 வயதுள்ள 25,000 இளைஞர்களுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய 6 மாத கால பயிற்சி அளிக்கப்படும், இதில் பெண்களுக்கு 30% இடம் ஒதுக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். திட்டத்தின் பெயர் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டம்’. அஇஅதிமுககாரர்கள் மேசை தட்டினார்கள்.
இதில் மேசை தட்ட என்ன இருக்கிறது? தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் உயர்படிப்பு படித்தவர் உள்ளிட்ட 25,000 பேருக்கு பயிற்சி, சான்றிதழ், வேலை வாய்ப்பு என்ற திட்டத்தில் பெருமிதத்துக்கு என்ன இருக்கிறது? சமீபத்தில் நடந்த குரூப் 1 தேர்வில் 79 காலியிடங்களுக்கு 70,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். நடப்பாண்டில் 25,000 பேருக்கு பயிற்சி, பின் வேலை வாய்ப்பு என்றால், 31.03.2014 நிலவரப் படி, தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பகங்களின் பதிவேட்டில் காத்திருப்போர் பட்டியலிலுள்ள 84 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பில் லாத தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கதவுகள் எதுவும் இப்போது திறக்கவில்லை.
இந்தப் பயிற்சி தனியார் நிறுவனங்களால் அளிக்கப்படவுள்ளது. அதாவது, தனியார் நிறுவனங்களில் இந்த 25,000 இளைஞர்கள் 6 மாத காலம் பயிற்சியாளர்களாக இருப்பார்கள். இந்த 6 மாத காலத்துக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும். பயிற்சி தரும் தனியார் நிறுவனத்துக்கு அரசு ஒரு பயிற்சியாளருக்கு ரூ.12,000 தரும். தனியார் நிறுவனங்கள் குறைந்த கூலியில் தனது உற்பத்தியை நடத்திக் கொள்ள தொழிலாளர்களைக் கொடுத்து, அவர்களுக்கான கூலியில் ஒரு பங்கையும் அரசு தரும். கரும்பு தின்ன கூலி.
பயிற்சி முடிந்த பிறகு தொழில் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் என்று சொல்கிற அறிவிப்பு, அவர்கள் ஊதியத் தையும் நிர்ணயித்துவிடுகிறது. ரூ.5,000 அல்லது அந்த குறிப்பிட்ட தொழிலில் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றில் எது அதிகமோ அதுவே அவர்கள் பெறவிருக்கும் ஊதியம்.
இந்த வேலை வாய்ப்பு தவிர, திண்டுக்கல், கரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாக 3 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு அங்கு அமையவுள்ள 345 தொழில் நிறுவனங்களில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு என்று அந்த அறிவிப்பில் சொல்லப்படுகிறது. (10,000 பேருக்கு வேலை வாய்ப்பு என்ற பெயரில், தொழில் துவங்குபவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் சலுகைகள் வழங்கப்படும் என்பது அறிவிப்பில் சொல்லப்படவில்லை).
அடுத்த 11 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு பயிற்சி அளித்து அவர்களை திறன் பெற்றவர்களாக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் உயிர் மூச்சான தொலைநோக்குத் திட்டம் 2023 சொல்கிறது. ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு பயிற்சி என்றால்தான் அந்த இலக்கை எட்ட முடியும். இப்போது அவர் அறிவித்துள்ள அம்மா திறன் திட்டம் எந்த விதத்திலும் ஆண்டுக்கு 20 லட்சம் பேருக்கு பயிற்சி என்பதற்கு அருகில் வரவில்லை. இது ஜெயலலிதாவின் உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களுக்குள்ளேயே இருக்கிற ஒவ்வாமை.
20 லட்சம் பேருக்கு ஆண்டுக்கு பயிற்சி என்றால், ஆண்டுக்கு 20 லட்சம் வேலை வாய்ப் புக்களும் உருவாக்கப்பட வேண்டும். இல்லை என்றால், வேலை வாய்ப்புக்காக ஏற்கனவே காத்திருக்கிற 84 லட்சம் பேருடன் ஆண்டுக்கு இன்னும் 20 லட்சம் பேர் சேர்வார்கள். ஆண்டுக்கு 25,000 மற்றும் 10,000 வேலை வாய்ப்புக் கள் உருவாக்கப்படுவதையே சாதனை என்று சொல்லும் தமிழக அரசு, உலகமயச் சூழலில் ஆண்டுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குவது சாத்தியமா?
2013 - 2014ல் உருவாக்கப் பட்ட வேலை வாய்ப்புக்கள் 17,978. தற்போது மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையே 18,81,500 என்று தமிழக அரசு தரும் விவரம் சொல்லும்போது, ஆண்டுக்கு 20 லட்சம் பயிற்சியாளர்கள் உருவாக்குவது என்ற அறிவிப்பே, கேலிக்குரியது.
வருடாந்திர தொழில் கணக்கெடுப்பின் 2011 - 2012 விவரங்கள்படி தமிழ்நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை 19,40,819. 2014ல் தமிழக அரசு தரும் விவரங்கள்படி தமிழ்நாட்டில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இன்றைய நிலைமை இது என்றால் நாளை, 20 லட்சம் எங்கிருந்து வரும்? அவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது பற்றி 2023 தொலைநோக்குத் திட்டம் எதுவும் சொல்லவில்லை.இந்த அறிவிப்புகள் வெறும் கண்கட்டு வித்தைகள்.
அம்மா திறன் மற்றும் வேலை வாய்ப்புத் திட்டத்திலேயே, 25,000 பேருக்கு வேலை நிலைமைகள் எப்படி இருக்கும் என்பதை திட்ட அறிவிப்பு சொல்லும் ஊதியத்தில் இருந்து புரிந்துகொள்ளலாம். இதற்கும் தமிழ்நாட்டி லேயே முன்னுதாரணமும் இருக்கிறது.
2012 நவம்பரில் அறிவிக்கப்பட்டு, 2014 பிப்ரவரியில், காவல்துறையினருக்கு உதவ, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 10,500 பேர் தேர்வுகள் கடந்து மார்ச் மாதம் பணிக்கமர்த்தப்பட்டார்கள். இவர்கள் காவல்துறையினருக்கு உதவி செய்வார்கள், அவர்களைப் போலவே அக்கம்பக்கமாக அவர்கள் ஈடுபடும் அதே பணிகளில் ஈடுபடுவார்கள் என்றாலும் இந்த 10,500 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. காவல்துறையில் அரசே ஏற்பாடு செய்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று இவர்களை அழைக்க முடியும்.
இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7,500 என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு இந்த ஊதியம் குறிப்பிட்ட நாளில் முறையாக வழங்கப்படுவதில்லை. வார விடுமுறையோ, மருத்துவ விடுப்போ இல்லை. காவல் துறையினருக்கு கிடைக்கும் வேறெந்த சலுகையும் இவர்களுக்கு இல்லை. இந்தப் பணியாளர்களில் ஒருவர் இரண்டு நாட்கள் பணிக்கு வராததால் ஊதியத்தில் ரூ.500 பிடித்தம் செய்தார்களாம். (தி இந்து, 23.07.2014).
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, காவல்துறையை வலுப்படுத்துவது என்றெல்லாம் சொல்லி இந்த 10,500 இளைஞர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். காவல்துறை, அரசுப் பணி என்ற கனவுகளோடு பணிக்குச் சேர்ந்த அந்த இளைஞர்களில், சென்னையில் மட்டும் 2,000 பேர் இது வரை வேலையை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் பணி நிலைமைகள் இப்படியே தொடர்ந்தால் மீதமிருப்பவர்களும் இதே முடிவுக்குத் தள்ளப்படலாம். வேலை தரப்பட்டாகிவிட்டது என்று தமிழக அரசு கணக்கு காட்டுகிற அந்த 10,500 பேரில் இன்று 2,000 பேர் வேலையில்லா இளைஞர்கள். தமிழக அரசின் மொழியில் சொல்வதானால் வேலை நாடுநர்கள். இந்த வேலை நாடுநர்கள் கணக்கு மீண்டும் வேலை வாய்ப்பக கணக்குகளில் வருமா என்பது கேள்வி.
இவர்கள் நிலைமைகளை, இப்போது அறிவிக்கப்படுகிற 25,000த்துடனும், 10,000த்துடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், 6 மாத காலத்துக்குப் பிறகு அந்த 25,000 இளைஞர்களுக்கும், 10,000 இளைஞர்களுக்கும் எந்த நேரமும் இருட்டு காத்திருக்கும் என்று சொல்லலாம்.
இந்த விசயத்தில் நல்ல காலம் வந்துவிடும் என்று மோடி போல் ஆருடம் சொல்ல முடியாது. நோக்கியா, திருபெரும்புதூரின் பிற ஆலைகளின் தொழிலாளர்கள் தொடர்பான தமிழ்நாட்டின் அனுபவம் நமக்கு அது போன்ற நம்பிக்கை தருவதாக இல்லை. மாயமானைக் காட்டுவதில் பயனில்லை.

