சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு
எதிராக, இன்னும் காலனி ஆதிக்க கட்டுப்பாடுகள் நிலவுவதைக் கண்டித்து, ஜனநாயக
வழக்கறிஞர்கள் சங்கம், ஜிம்கானா தொழிலாளர் சங்கம் ஜூலை 14 அன்று
ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ‘நீதி வழங்குவதாகச் சொல்லும் நீதிபதிக்கே
நீதி இல்லையா?’என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில்
வழக்கறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். ஜனநாயக வழக்கறிஞர்கள்
சங்க அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் கே.பாரதி தலைமை தாங்கினார்.
அதே நாள் மாலை சென்னை ஜிம்கானா கிளப்பில் ஆடை கட்டுப்பாட்டை கண்டித்தும் அங்குள்ள தொழிலாளர்கள் காலனிய அடிமை முறையில் நடத்தப்படுவதையும், வேலை நீக்கம், இடைக்கால வேலை நீக்கம், போனஸ் மறுப்பு போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டித்தும், ஜிம்கானா கிளப்பின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்தும், தொழிலாளர் சட்டங்களை மதிக்காத கிளப் அதிகாரிகளை கைது செய் என்ற முழக்கத்துடன், ஜிம்கானா தொழிலாளர் சங்கமும், ஜனநாயக வழக்கறிஞர் சங்கமும் ஆர்ப்பாட்டம் நடத்தின. வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.
ஜிம்கானா கிளப் வாயிலில் நடந்த AICCTU ஆர்ப்பாட்டத்தில் சங்க முன்னணிகள், ஜனநாயக வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், வேட்டி அணிந்து கலந்துகொண்டனர். AICCTU மாவட்டச் செயலாளர் தோழர் என்.ஜேம்ஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க ஆலோசகரும், வழக்கறிஞருமான தோழர் கே.பாரதி, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதே நாள் மாலை சென்னை ஜிம்கானா கிளப்பில் ஆடை கட்டுப்பாட்டை கண்டித்தும் அங்குள்ள தொழிலாளர்கள் காலனிய அடிமை முறையில் நடத்தப்படுவதையும், வேலை நீக்கம், இடைக்கால வேலை நீக்கம், போனஸ் மறுப்பு போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டித்தும், ஜிம்கானா கிளப்பின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்தும், தொழிலாளர் சட்டங்களை மதிக்காத கிளப் அதிகாரிகளை கைது செய் என்ற முழக்கத்துடன், ஜிம்கானா தொழிலாளர் சங்கமும், ஜனநாயக வழக்கறிஞர் சங்கமும் ஆர்ப்பாட்டம் நடத்தின. வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.
ஜிம்கானா கிளப் வாயிலில் நடந்த AICCTU ஆர்ப்பாட்டத்தில் சங்க முன்னணிகள், ஜனநாயக வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், வேட்டி அணிந்து கலந்துகொண்டனர். AICCTU மாவட்டச் செயலாளர் தோழர் என்.ஜேம்ஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க ஆலோசகரும், வழக்கறிஞருமான தோழர் கே.பாரதி, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
