COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 30, 2014

கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிராக உறுதியேற்புப் பொதுக் கூட்டம்

மோடி அரசின் கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிராக திறன்மிக்க மக்கள் எதிர்ப்பைக் கட்டமைப்போம், மக்கள் கவலைகளை விருப்பங்களை எதிர்பார்ப்புகளை கண்டுகொள்ளாத, தேர்தல் வாக்குதிகளை நிறைவேற்றாத ஜெ. அரசின் சர்வாதிகார ஒடுக்குமுறைகளை எதிர்த்து சிறைகளை நிரப்புவோம் என்ற முழக்கத்துடன் ஜூலை 18 அன்று அம்பத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி. மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாநகரச் செயலாளர் தோழர்.எஸ்.சேகர் கண்டன உரையாற்றினர்.

AICCTU மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ். ஜவகர் உறுதிமொழியை முன்வைத்தார். AICCTU மாவட்ட தலைவர் தோழர் கே.பழனிவேல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.


Search