COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 16, 2014

நாடாளுமன்ற ஜனநாயகமே மக்கள் ஜனநாயகமாகிவிடுமா? பகுதி 3

ஜூலை ஆகஸ்ட், 1920ல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் கூடியது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாடாளுமன்றவாதமும் என்ற தலைப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.    புதிய சகாப்தமும் புதிய வகை நாடாளுமன்றவாதமும் என்ற  துணைத்தலைப்பு, முன்னுரை போல் அமைந்தது.

2.    கம்யூனிசம், பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்துக்கான போராட்டமும் முதலாளித்துவ நாடாளுமன்றங்களை பயன்படுத்துவதும் என்ற துணைத் தலைப்பு 20 அம்சங்களைப் பற்றி பேசியது.

3.    புரட்சிகர நாடாளுமன்றவாதம் என்ற துணைத்தலைப்பு 12 அம்சங்கள் கொண்டதாக அமைந்தது.

அவற்றிலிருந்து, நாடாளுமன்றம் தொடர்பான அணுகுமுறையை, தோழர் லெனின் காலத்திய கம்யூனிஸ்ட்கள் எப்படி வகுத்துக் கொண்டனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

    நாடாளுமன்றம் தொடர்பான மூன்றாவது அகிலத்தின் அணுகுமுறை, புதிய தத்துவ கருத்துக்களால் தீர்மானிக்கப்படவில்லை; அது, நாடாளுமன்றத்தின் மாறிய பாத்திரத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது. முந்தைய வரலாற்று சகாப்தத்தில், நாடாளுமன்றம், வளரும் முதலாளித்துவ அமைப்பின் ஒரு கருவியாக இருந்தது. அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட விதத்தில் முற்போக்கானதாக இருந்தது. கட்டுக்கடங்காத ஏகாதிபத்திய நிலைமைகளில், நாடாளுமன்றம், பொய் - ஏமாற்று - வன்முறை ஆகியவற்றின் ஆயுதமாகவும், அயற்சியடைய வைக்கும் வெற்றுப் பேச்சு சந்தை மடமாகவும் ஆகியுள்ளது.

    தற்போது, கடந்த சகாப்தத்தில் சில குறிப்பிட்ட சமயங்களில் செய்ததைப் போல், தொழிலாளிவர்க்க வாழ்க்கைத்தர முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான ஒரு போராட்ட அரங்காக, கம்யூனிஸ்ட்டுகளால் நாடாளுமன்றத்தை பயன்படுத்த முடியாது. அரசியல் வாழ்க்கையின் கவனப்புள்ளி, முழுமையாகவும் இறுதியாகவும், நாடாளுமன்ற எல்லைகளைத் தாண்டியதாக உள்ளது. அப்படி இருந்தும், முதலாளித்துவம், அதற்கு தொழிலாளி வர்க்கத்தோடு உள்ள உறவுகளால் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துக்குள்ளேயே உள்ள சிக்கலான உறவுகளால், சில நேரங்களில் எப்படியோ சில நடவடிக்கைகளை நாடாளுமன்றம் மூலம் முன்தள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் வேறுவேறு கும்பல்கள் அதிகாரத்திற்காக சண்டையிடும்போது, அவை, தமது பலங்களை வெளிப்படுத்துகின்றன; தமது பலவீனங்களை வெளிக்காட்டிவிடுகின்றன; தமக்குள் சமரசம் செய்து கொள்கின்றன.

    பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை ஆளும் வர்க்கங்களின் கைகளிலிருந்து நாடாளுமன்ற சாதனத்தைப் பறித்தெடுத்து, அதனை உடைத்து தகர்த்து, அதனை பாட்டாளி வர்க்க அதிகாரத்தின் புதிய உறுப்புக்களால் மாற்றீடு செய்வதாகும்.

    உண்மையில் நாடாளுமன்றம் ஆளும் வர்க்கங்களின் கைகளில் உள்ள ஓர் அடக்குமுறை ஒடுக்குமுறை ஆயுதமே என்றபோதும், அது வெளித்தோற்றத்தில், வர்க்கங்களுக்கு மேலே உயர்ந்து நிற்கிற, வெகுமக்கள் விருப்புறுதியின் (டர்ல்ன்ப்ஹழ் ஜ்ண்ப்ப்) அமைப்பாகவே தெரிகிறது. இந்தக் கட்டத்தில், மொத்த மக்கள் தொகையின் விருப்பங்களை பிரதிபலிக்கும் ஒரு ‘வெகுமக்கள் விருப்புறுதி’ இருப்பது போன்ற எந்த பொய்த்தோற்றமும், பாட்டாளி வர்க்கத்துக்கு தீங்கு பயப்பதே ஆகும்.

    முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் பல  சாதனங்களில் ஒரு முக்கிய சாதனமே முதலாளித்துவ நாடாளுமன்றம் ஆகும். பொதுவாக முதலாளித்துவ அரசைப் போல், முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும் பாட்டாளிவர்க்கம் தன் பக்கத்திற்கு வென்றெடுக்க முடியாது. முதலாளித்துவ அரசு எந்திரத்தை, குடியரசு இயல்போ அல்லது அரசியல் அமைப்புச் சட்ட முடியாட்சி இயல்போ கொண்ட நாடாளுமன்றங்களை, தகர்த்து எறிவதே பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

    ஆக, கம்யூனிசம், நாடாளுமன்றம், வருங்கால சமூகத்தின் அரசு வடிவம் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவம் என்பதை நிராகரிக்கிறது. ஒரு நீண்டகால அடிப்படையில், பாட்டாளி வர்க்க லட்சியத்திற்கு, நாடாளுமன்றம் வென்றெடுக்கப்படும் சாத்தியப்பாட்டை, அது நிராகரிக்கிறது. அது, நாடாளுமன்றத்தை நொறுக்கும் கடமையையே கையேற்றுள்ளது.  ஆக, இதிலிருந்து தொடர்வது என்னவெனில், முதலாளித்துவ நிறுவனங்களை அவற்றை அழிப்பதற்காகவே பயன்படுத்த வேண்டும். அவற்றைப் பயன்படுத்துவது என்ற கேள்வியை, மேலே குறிப்பிட்ட ஒரே ஒரு விதத்தில் மட்டுமே, முன் நிறுத்த வேண்டும்.

    புரட்சிகர கருத்துக்களைப் பரப்புவது, நாடாளுமன்ற மேடையிலிருந்து எதிரிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிவது, இன்னமும் நாடாளுமன்றத்தை மதிக்கிற அதன் ஜனநாயகத் தன்மைபால் மாயையைகள் கொண்டுள்ள மக்களின் குறிப்பாக பின்தங்கிய பகுதிகளின் மக்களின் கருத்தியல் ஒத்திசைவை முன்னேற்றுவது என்பதாகவே, பிரதானமாக நாடாளுமன்ற நடவடிக்கை அமைகிறது. நாடாளுமன்றத்திற்கு வெளியேயான வெகுமக்கள் போராட்ட லட்சியங்களுக்கும் கடமைக்கும், முழுமுற்றூடாக கீழ்ப்படுத்தப்பட்டதாக, நாடாளுமன்ற நடவடிக்கை வைக்கப்பட வேண்டும்.

    இதுவரை அரசியல் வாழ்விலிருந்தும் புரட்சிகர இயக்கத்திலிருந்தும் தனித்து நிற்கும் கிராமப்புற உழைக்கும் மக்கள் போன்ற உழைப்பாளிகளை அரசியல்ரீதியாக வென்றெடுக்க, தேர்தல் இயக்கங்களில் பங்கேற்பதும் நாடாளுமன்றத்தை, புரட்சிகர கருத்துக்களுக்கான ஒரு மேடையாக பயன்படுத்துவதும் குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    உள்ளூர் அரசாங்க நிறுவனங்களிலான எல்லா கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளும், முதலாளித்துவ அமைப்பு முறையை உடைத்து நொறுக்கும்  போராட்டத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட வேண்டும் (உள்ளூர் அரசாங்க நிறுவனம் என்பது இங்கு, மாநில அரசு முதல் ஊராட்சி அமைப்பு வரையிலானவற்றை குறிப்பிடும் - கட்டுரையாளர்)

    அதிகபட்ச எண்ணிக்கையிலான நாடாளுமன்ற இடங்களை பெறும் உந்து விசையுடன் தேர்தல் இயக்கத்தை நடத்தாமல், அதனை, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற முழக்கத்தை மய்யப்படுத்தி மக்களை அணி திரட்டவே நடத்தவேண்டும். தேர்தல் போராட்டத்தில் தலைவர்கள் மட்டுமே ஈடுபடுவது என்றில்லாமல், கட்சி உறுப்பினர்களின் பரந்த அணிகளும் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்த இயக்கத்தில், வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஆயுதப் படையினர் மத்தியிலான இயக்கம், இன்னபிற வெகுமக்கள் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், அவற்றோடு தேர்தல் இயக்கத்தை நெருக்கமாக தொடர்புபடுத்துவதும் அத்தியாவசியமானதாகும். பாட்டாளி வர்க்க மக்கள் திரள் அமைப்புக்களும், தேர்தலை மய்யங்கொண்ட செயலூக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

    ஒரு பொதுவான விதியாக, தேசிய நாடாளுமன்றம் மற்றும் உள்ளூர் அரசாங்க உறுப்புக்களுக்கான தேர்தல்களில் பங்கேற்பதின், அந்த நிறுவனங்களில் பணிபுரிவதின் அவசியத்தை ஏற்கிற அதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சி, அந்தக் கணத்தின் குறிப்பான நிலைமைகளை மதிப்பிட்டே ஒவ்வொரு நேர்விலும் (ங்ஹஸ்ரீட் ஸ்ரீஹள்ங்) முடிவெடுக்க வேண்டும். தேர்தல் அல்லது நாடாளுமன்ற புறக்கணிப்பு, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வருவது என்பவை, முதன்மையாக அதிகாரத்திற்கான ஆயுதப் போராட்டத்திற்கு உடனடியாக நகர நிலைமைகள் கனிந்துள்ளபோதே அனுமதிக்கத் தக்கதாகும்.

    இந்தப் பிரச்சனையின் ஒப்பீட்டுரீதியான முக்கியத்துவமின்மை மனதில் கொள்ளப்பட வேண்டும். அரசு அதிகாரத்திற்கான போராட்டத்தின் கவனப்புள்ளி, நாடாளுமன்றத்திற்கு வெளியே இருப்பதால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் அதனைச் சாதிப்பதற்கான மக்கள் போராட்டம் என்ற பிரச்சனைகள், நாடாளுமன்ற முறையை எப்படி பயன்படுத்துவது என்ற விசயத்தைக் காட்டிலும் அளவிட முடியாத முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது கண்கூடு.

இகக(மாலெ) தனது 9ஆவது காங்கிரசில் புரட்சிகர இயக்கப்போக்கு பற்றி சொல்லியுள்ளதை காண்போம்.

புரட்சிகர இயக்கப்போக்கு

     இந்தியா போன்ற ஒரு பரந்த, சிக்கல்கள் நிறைந்த நாட்டில், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, சாத்தியமான ஒவ்வொரு வேலை அரங்கிலும் வேலை செய்வதில், நாடாளுமன்றம் அல்லாத மற்றும் நாடாளுமன்ற போராட்ட வடிவங்களில், வெவ்வேறு வடிவங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு துரிதமாக மாறிச்செல்வதில், குறிப்பாக, தேர்ச்சி பெற்றதாக இருக்க வேண்டும். ஆகவே எல்லா அவசியமான போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்களையும், உயிரார்ந்த விதத்தில் இணைப்பதன் மூலம், ஓர் அனைத்தும் தழுவிய புரட்சிகர நடைமுறையை வளர்த்தெடுக்க கட்சி பாடுபடுகிறது.

    சாதாரண நிலைமைகளில் இந்திய ஆட்சி அமைப்பு முறை, கம்யூனிஸ்ட்களை, வெளிப்படையான சட்டபூர்வமான நாடாளுமன்ற வழிமுறைகளில் செயல்பட அனுமதிக்கிறது. நாடாளுமன்ற அரங்கில், கட்சியின் அடிப்படையான அய்க்கிய முன்னணி வழிக்கு பொருத்தமான உரிய செயல்தந்திரங்களை வளர்த்துக் கொண்டே, நீண்ட காலத்துக்கு ஒரு புரட்சிகர எதிர்க்கட்சி பாத்திரமாற்ற கட்சி தயாராக இருக்க வேண்டும். தேர்தல் போராட்டத்தின் போக்கில் கம்யூனிஸ்ட்கள் உள்ளாட்சி அமைப்புகளில் மாநில சட்டமன்றங்களில் கூட பெரும்பான்மை பெற சாத்தியமுண்டு. நீண்டகால மற்றும் தீவிரமான அரசியல் போராட்டங்கள் மூலமாக, வர்க்க சக்திகளின் சம நிலையில் ஒரு சாய்வு ஏற்படுத்தும் அதே நேரம், வாக்காளர்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் அளவுக்கு கட்சி வலிமையானதாக இருக்கும் பட்சம், இதுபோன்ற சந்தர்ப்பங்களை சுதந்திரமாகவோ அல்லது ஒத்த கருத்து கொண்ட சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்தோ பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறது.

     எப்படியிருப்பினும், அதுபோன்ற உள்ளாட்சி அமைப்புக்களோடும்/அரசாங்கங்களோடும், கட்சி கொண்டிருக்கும் உறவும் பாத்திரமும் பின்வரும் அடிப்படை கோட்பாடுகளால் வழி நடத்தப்படும்.

அ.     கட்சி எப்போதும் என்ன நேரும்போதும் சுதந்திரமான அமைப்பு செயல்பாட்டையும் அரசியல் முன்முயற்சியையும் தக்கவைத்துக் கொண்டே ஆக வேண்டும்.

ஆ. உள்ளாட்சி அமைப்புக்கள்/அரசாங்கங்கள் கொண்டுள்ள அதிகாரம் தீவிரமான ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், மக்கள் உணர்வை, ஒரு புதிய ஜனநாயக மாற்றை உருவாக்குவதை நோக்கி திசைவழிப் படுத்துவதற்கும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

இ. மய்ய அதிகாரம் வரையிலான அடுத்தடுத்த உயர்நிலை கட்ட அதிகாரங்களைப் பொறுத்தவரை, அதுபோன்ற உள்ளாட்சி அமைப்புக்கள்/அரசாங்கங்கள், பரந்ததொரு புரட்சிகர எதிரணியின் பிரிக்கமுடியாத அங்கமாக செயல்பட வேண்டும்.

ஈ.    கட்சியும் அதனால் தலைமை தாங்கப்படும் உள்ளாட்சி அமைப்புக்களும் அரசாங்கங்களும் ஜனநாயக சக்திகளின், ஜனநாயக உணர்வின், ஜனநாயக இயக்கங்களின் சுதந்திரமான வளர்ச்சி எந்த சூழ்நிலையிலும் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

      இந்தியாவின் காலனிய எதிர்ப்புப் போராட்டம், கம்யூனிச இயக்கம் மற்றும் வளர்ந்துவரும் பெருந்தொழில் குழும எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றின் வரலாற்றில், வேர்க்கால் மட்டங்களில் பல்வேறு வகை மக்கள் கமிட்டிகள், தொழிற்சாலைகள் மற்றும்/அல்லது தொழிலாளர் குடியிருப்புகளில் தொழிலாளர்கள் குடிமக்கள் கவுன்சில்கள் முதல் மக்கள் தன்னாட்சியின் வேறு வேறு வடிவங்கள் வரை, வேறுவேறு வடிவங்களில் அளவுகளில் மக்கள் அதிகாரம் அவை குறைந்த காலமே இருந்தவை எனினும் எழுந்த நிகழ்வுகள் பல உண்டு. மக்கள் நலன்களையும் உரிமைகளையும் காப்பதற்கான வெகுமக்கள் போராட்டங்களின் போக்கில், அதுபோன்ற உள்ளூர் அதிகாரங்கள் எழுகின்ற சாத்தியப்பாட்டை அடையவும் ஊக்கப்படுத்தவும் கட்சி விழைகிறது.

      விதிவிலக்கான தேசிய மற்றும் சர்வதேசிய சூழல்களில் - உதாரணமாய் ஒரு தீர்மானகரமான மக்கள் திரள் எழுச்சி நிலைமைகளில் - சமூக அரசியல் சக்திகளின் சமநிலை, ஒப்பீட்டு ரீதியில் அமைதியான வழியில் புரட்சிகர சக்திகளிடம் மய்ய அதிகாரம் மாற்றப்படுவதைக்கூட அனுமதிக்கும் சாத்தியப்பாட்டை கட்சி ஒதுக்கிவிடவில்லை. ஆனால், ஜனநாயக நிறுவனங்கள் சாரம்சத்தில் நொறுங்கிவிடக் கூடிய மற்றும் குறுகிய அடித்தளங்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், வெகுஜன சக்திகளின் சிறிய வெற்றிகளை, ஓரளவான சீர்திருத்தங்களை அடைவதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் கூட மக்களுடைய போர்க்குணத்தின் பலம் தேவைப்படுகிற ஒரு நாட்டில், பாட்டாளி வர்க்கக் கட்சி, அனைத்து சாத்தியமான எதிர்ப்புரட்சி தாக்குதல்கள் முன்னிலையிலும், இறுதியில் தீர்மானகரமான வெற்றியை அடைவது மற்றும் தக்கவைப்பது என்பதன் மூலம் புரட்சியை நிறைவேற்ற தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே, கட்சியின் ஆயுதக் கிடங்கில், ஒரு மக்கள் ஜனநாயக முன்னணியும் ஒரு மக்கள் ராணுவமும் புரட்சியின் இரண்டு மிகவும் அடிப்படையான அங்கங்களாக இருக்கும்.

 - தொடரும்

Search