போர் வேண்டாம், அமைதி வேண்டும்,
காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும், இந்தியா இஸ்ரேலை
கண்டிக்க வேண்டும், முதலாளித்துவம் வீழட்டும், சோசலிசம் வெல்லட்டும் என்ற
முழக்கங்களுடன் ஜூலை 16 அன்று அம்பத்தூரில் நடைபெற்ற கண்டன
ஆர்ப்பாட்டத்தில் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்
எஸ்.குமாரசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாநிலச் செயலாளர் தோழர்
பாலசுந்தரம், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் கே.பாரதி,
AICCTU மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ்.ஜவகர், மாநிலச் செயலாளர் தோழர்
கே.பழனிவேல், கட்சி மாவட்ட, பகுதி, கிளை தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநகரச்
செயலாளர் தோழர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 16 அன்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இகக மற்றும் AITUC தோழர்களும் கலந்துகொண்டனர்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 16 அன்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இகக மற்றும் AITUC தோழர்களும் கலந்துகொண்டனர்.
