COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 30, 2014

மோடி, ஜெயலலிதா அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக

மோடி அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை, டீசல், பெட்ரோல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், அதிமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளான நாளொன்றுக்கு 20 லிட்டர் குடிநீர், 3 சென்ட் வீட்டுமனை, பசுமை வீடு ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தியும், கட்டிட விபத்துக்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, கட்டுமானத் தொழிலாளர்கள் உயிர்ப்பலிகளை தடுக்க உரிய நடவடிக்கைகள், பார்வதிபுரத்தில் 50 ஏக்கர் ஆராச்சார் நிலத்தில் வீடற்றவர்களுக்கு வீட்டுமனையும் பசுமை வீடு ஆகியவை கோரியும், குமரி மாவட்ட இகக மாலெ, ஜூலை 11 அன்று 12 மய்யங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் 1100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து, மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள், AICCTU, புரட்சிகர பெண்கள் கழக தலைவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு தரப்பட்டது.
குமரியில் உள்ள அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படாமல் அடிக்கடி விபத்துகள் நடப்பதை தடுக்க வலியுறுத்தி ஜூலை 13 அன்று கள்ளிச்செடி சாத்தும் போராட்டம் நடத்தப்பட்டது. தோழர்கள் எஸ்.எம்.அந்தோணிமுத்து, சுசீலா உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.


Search