களம்
புரட்சிகர இளைஞர்
கழகத்தின் தேசிய
மாநாட்டு தயாரிப்பு
கூட்டங்கள்
23.10.2012 அன்று தஞ்சை - நாகை மாவட்ட அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகத்தின் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. புரட்சிகர இளைஞர் கழக தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் தோழர் இளவரசன் தலைமை தாங்கினார். மாணவர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கார்த்தி, மாநில அமைப்பாளர் தோழர் பாரதி, மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் டி.கே.எஸ்.ஜனார்தனன், இளங்கோவன் கலந்துகொண்டனர்.
24.10.2012 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாணவர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் பாரதி, மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பழ.ஆசைத்தம்பி, வளத்தான் கலந்துகொண்டனர்.
களச்செய்திகள்
தொகுப்பு: எஸ்.சேகர்